Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இல்லானை.. இல்லாளும் வேண்டாள்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1536632_569943286420764_1009843206_n.jpg

 

காதல் கடவுள் போல

அன்பு கடல் போல

நெஞ்சில்..

கருணை அள்ள அள்ள

இருந்தும் என்ன பயன்..

கடனட்டையில் டொலரும்

களுசான் பையில் பவுன்ஸும்

பாண்டு பொக்கட்டில் ரூபாயும்

மாடிமனையொடு

நல்ல காரும் இல்லையேல்...

இல்லானை

இல்லாளும் வேண்டாள்

இதுதான்

மானுட உலகம் இன்று..!

 

நோயென்று

பசியென்று

புசித்தலுக்கு உணவின்றி

ஒரு பாதி உலகில்...

மானுடர் பதை பதைக்கையில்

மறுபாதி உலகில்..

பகட்டுக்கு செய்யும் செலவில்

பாதி என்ன.. பருப்பளவு போதும்

உண்டி சுருங்கிய வயிறுகள்

கொஞ்சம் நிரம்ப...!

இருந்தும் இல்லை என்று

சொல்லும் உலகில்..

இல்லானை

இல்லாளும் வேண்டாள்..!

இதுதான்

மானுட உலகம் இன்று.

 

கத்தர் என்றும்

அல்லா என்றும்

சிவன் என்றும்

விஷ்னு என்றும்

சிலைக்கும்

சிலுவைக்கும்

பிறைக்கும்..

செலவழிக்க

கோடி கோடியாய்

கொட்டிக் கொடுப்பார்

இல்லானை கண்டால்

இல்லை என்று துரத்தி அடிப்பார்..!

இல்லானை

இல்லாளும் வேண்டாள்

இதுதான்

மானுட உலகம் இன்று.

 

இந்த நிலை

என்று மாறும்..

பசிக்கு புசிக்க

பால் கொடுக்கும் மாடு மேய்ப்பவன்

இல்லான்..

அள்ள அள்ள கக்கா போகும்

அல்சேஷன் நாய் மேய்ப்பவன்

உள்ளான்..

இந்த மூடநிலை

என்று மாறும்..

அன்று

இல்லாமை

உதைந்து தள்ள

இல்லாளும்

கட்டிப் புரள்வாள்

கட்டிலில்..!

அதுவரை...

இதுதான்

மானுட உலகம் இங்கு.!!
 

ஆக்கம்: நெடுக்ஸ்.

 

Edited by nedukkalapoovan

அன்று

இல்லாமை

உதைந்து தள்ள

இல்லாளும்

கட்டிப் புரள்வாள்

கட்டிலில்..!

அதுவரை...

இதுதான்

மானுட உலகம் இங்கு.!! ///// சீராகச் சென்ற கவிதையில் இறுதி வரிகள் முதல் சொல்ல வந்த செய்திகளை இருட்டடிப்பு செய்கின்றன . படைப்புக்குப் பாராட்டுக்கள் நெடுக்கர் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்று

இல்லாமை

உதைந்து தள்ள

இல்லாளும்

கட்டிப் புரள்வாள்

கட்டிலில்..!

அதுவரை...

இதுதான்

மானுட உலகம் இங்கு.!! ///// சீராகச் சென்ற கவிதையில் இறுதி வரிகள் முதல் சொல்ல வந்த செய்திகளை இருட்டடிப்பு செய்கின்றன . படைப்புக்குப் பாராட்டுக்கள் நெடுக்கர் .

 

காசு உழைக்கிறவன் மட்டும் மனம் மாறினதா இருக்கப்படாது. அவன் மனம் மாறனுன்னா பல இல்லாள்களும் மாற வேண்டி இருக்கே. அதுதான். :)

 

நன்றி கோம்ஸ் அண்ணா. வரவிற்கும்.. கருத்திற்கும்..! :)

 

இல்லானை

இல்லாளும் வேண்டாள்...

 

எல்லாம் பணம் தீர்மானிக்கும் என்று சொல்லுறியள் :(

 

வாழ்த்துக்கள் கவிக்கு .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இல்லானை

இல்லாளும் வேண்டாள்...

 

எல்லாம் பணம் தீர்மானிக்கும் என்று சொல்லுறியள் :(

 

வாழ்த்துக்கள் கவிக்கு .

 

உ+ம்:- இங்கிலாந்தில் ஒரு சம்பவம். பெண்ணோ.. இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த ஈழத்தமிழ். பையனும் அதே. இருவருக்கும் இடையே நட்பு.. காதல் அப்படி இப்படின்னு போய் கலியாணமும் ஆகிடிச்சு. அவர்.. ஒரு மென்பொருள் பொறியலாளர். அவா.. ஒரு 5 ஸ்ரார் ஹொட்டேல்.. முதலாளி. ஆரம்பிச்சிச்சுட்டு சண்டை. இறுதியில் கலியாணம் ஆகி ஒரு வருசம் சொச்சத்தில் விவாகரத்து. அவர் எனி நமக்கு தமிழ் பொண்ணுங்க வேண்டாவே வேண்டான்னு.. சொல்லிட்டு.. முகநூலில்.. ஒரு சிங்களத்தி கூட காதலில் வீழ்ந்தாரு. அவளும்.. இங்கிலாந்து வரும் ஆசையில் அவருக்கு பச்சைக்கொடி காட்ட.. மீண்டும்..டும் டும் டும் கலியாணம். இப்ப அதுகூட வண்டி ஓட்டிக்கிட்டு இருக்காரு. இத்தனைக்கும் அவர் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். அந்த விவாகரத்துப் பெற்ற.. பொண்ணும் அதே குடும்பப் பின்னணியில் இருந்து உயர்ந்தவர். அவ்வளவும் தான் வித்தியாசம். இடையில சிங்களத்திக்கு அடிச்சுது யோகம்..! :lol::D

(மேலே சொன்னது கற்பனைக் கதையல்ல. உண்மையில் நடந்த கதை.) 

 

நன்றி உங்கள் வரவிற்கும் கருத்துக்கும் அஞ்சரன். :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நன்றாக இருக்கு நெடுக்ஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சுமே அக்கா. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒண்டுமே இல்லாதவனை ‘இல்லாள்!! வேண்டாள்!

 

அதில் என்ன தவறு?!!...சொல்லுங்கோ நெடுக்ஸ் அண்ணை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒண்டுமே இல்லாதவனை ‘இல்லாள்!! வேண்டாள்!

 

அதில் என்ன தவறு?!!...சொல்லுங்கோ நெடுக்ஸ் அண்ணை.

 

பூமிக்கு வரும் போது எல்லா உயிரினமும் ஒன்றுமில்லாமல் தான் வருகின்றன. அப்புறம் பல உயிரினங்கள் தாங்கள் தாங்கள் வாழ உழைக்கின்றன. ஆண்.. பெண் என்ற வேற்றுமைகள் அங்கில்லை. ஆனால் மனிதரிடத்தில் மட்டும்.. பெண்களுக்கு உள்ளான் அவசியம்.. வாழ. இல்லான் அவசியமில்லை என்ற கருத்து நிலை. இதுதான் தவறு. பெண்களும்.. தனியங்களே. தனி உயிரிகளே. வெறும் இல்லாள் என்ற தகுதி நிலைக்கு அப்பால் அவர்கள் வாழ..அவர்களே உழைக்க வேண்டும். தேவையான வசதி வாய்ப்புக்களை அவர்களே தேடிக்கொள்ள வேண்டும். அதனை ஒரு ஆணிடம் எதிர்பார்ப்பது தவறு. உயிரின அடிப்படைகளுக்கு அப்பாற்பட்டது. அதுமட்டுமன்றி.. மனித சமூக வாழ்வில் உள்ளவன்.. இல்லாதவர்களுக்கு பகிர்ந்துண்ணும் பண்பை மாண்பாக்கி வளர்த்துக்கனும். வளங்களின் சீரற்ற பரம்பல் என்பது மனித வாழ்க்கையில்.. திணிக்கப்படுவதால்.. உள்ளான்.. இல்லான் நிலைமை உருவாகிறது. இதுவே மற்றைய உயிரினங்களில் அரிது. அந்த வகையில்.. நாங்கள் பிறரிடம் அதிகம் சுரண்டி வாழ நினைக்காமல்.. நாமாக.. உழைத்து.. மேலதிகமானவற்றைப் பகிர்ந்து வாழப் பழகிக் கொண்டால்.. இந்த உள்ளான்... இல்லான் மனோ நிலைகளில் இருந்து மனிதர்கள் வெளிவர முடியும். மனிதனின் தகுதி.. சிறப்பு என்பது அவன் எப்படி சமூகமாக வாழ்கிறான் என்பதில் இருக்க வேண்டுமே தவிர.. தனி மாட மாளிகையில்... மற்றவர்கள் பட்டினியில் வாடி வதங்க அதைப் பார்த்து ரசித்து அதில் தன் தகுதி காண்பவன் நிச்சயம் மனிதனாக.. ஏன் ஒரு உயிரினமாகக் கூட இந்தப் பூமியில் வாழத் தகுதி அற்றவன் ஆகிறான்.இது இல்லானை நிராகரிக்க விளையும்.. இல்லாள்களுக்கும் பொருந்தும். :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி

 

வழமைபோல் இந்த கருத்தியலில் எனக்கு நம்பிக்கையில்லை

 

ஏனெனில்

இது உண்மையென்றால்

நான் பலமுறை  றோட்டில் நின்றிருக்கணும்........... :(  :(  :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி

 

வழமைபோல் இந்த கருத்தியலில் எனக்கு நம்பிக்கையில்லை

 

ஏனெனில்

இது உண்மையென்றால்

நான் பலமுறை  றோட்டில் நின்றிருக்கணும்........... :(  :(  :(

 

நீங்க நிற்கல்ல.. காரணம்.. உங்கள் இல்லாளிடமும்.. இல்லாமை இருந்திருக்கிறது. அவாவிட்ட உள்ளாமை இருந்திருந்தால்.. நிச்சயம் நீங்க..நின்றிருப்பீங்க. :lol::D

Edited by nedukkalapoovan

கொழும்பு வீடு, கார், 100 பவுண் நகை, 100 இலட்டம் காசு வேண்டிக் கல்யாணம் கட்டேலையோ தமிழ் ஆண்கள்???  உதுகளை உங்களுக்கு நினைவிருக்காது! :lol:  :icon_idea:


எப்பவுமே பணம் தான் தீர்மானிக்கும்!!!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு வீடு, கார், 100 பவுண் நகை, 100 இலட்டம் காசு வேண்டிக் கல்யாணம் கட்டேலையோ தமிழ் ஆண்கள்???  உதுகளை உங்களுக்கு நினைவிருக்காது! :lol:  :icon_idea:

எப்பவுமே பணம் தான் தீர்மானிக்கும்!!!!!

 

ஏன் அலையக்கா.. உங்களுக்கு மனச்சாட்சியே இல்லையா..??1 கொழும்பில வீடு.. கார் வாங்கி என்ன அடுத்தவன் பொண்டாட்டி கூடவா வாழந்துகிட்டு இருக்கிறாங்க.. 100 பவுன் நகை வாங்கி.. ஆம்பிளைங்க என்ன கழுத்தில.. காதில.. கையில.. காலில.. தொப்புளில.. மாட்டிக்கிட்டா திரியுறாங்க. 100 இலச்சம் வாங்கி.. என்ன தனக்கா செலவழிக்கிறாங்க. நீங்க பொம்பிளைங்க.. உங்க பிறந்த வீட்டோடு செய்து கொள்ளுற கொடுக்கல் வாங்கலுக்கு கட்டிக்கிற ஆம்பிளைகளைப் பயன்படுத்திக்கிறீங்க. நீங்க சொல்லுங்க.. எனக்கு நகையும் வேணாம்.. காரும் வேணாம்.. வீடு வேணாம்.. கஞ்சியும்.. குடிசையும் போதுமுன்னு. அப்ப எந்த தமிழ் ஆண் சீதனம் என்றதை கேட்கிறானுன்னு பார்க்கலாம்..???! 

 

சீதனம் வாங்கப்படுவது என்னவோ ஆண்களின் பெயரால் தான். ஆனால் அனுபவிப்பது.. கொடுக்கிறவங்களே தான். இதில கூப்பாடு வேற. :):lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை நெடுக்ஸ் ...!

 

எல்லா இல்லாளும் தொல்லையாய் இருக்காள் !

 

உடுத்த ஒரு துணியும், ஒரு வாய் கஞ்சியும், ஒரு ஓலைப் பாயும் போதும்  அவளுக்கு......  !    உன் அன்பும், பாசமும் அவளைச் சுற்றி இருந்தால் ...!

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சுவி அண்ணா தங்கள் கருத்திற்கு. :)

ஏன் அலையக்கா.. உங்களுக்கு மனச்சாட்சியே இல்லையா..??1 கொழும்பில வீடு.. கார் வாங்கி என்ன அடுத்தவன் பொண்டாட்டி கூடவா வாழந்துகிட்டு இருக்கிறாங்க.. 100 பவுன் நகை வாங்கி.. ஆம்பிளைங்க என்ன கழுத்தில.. காதில.. கையில.. காலில.. தொப்புளில.. மாட்டிக்கிட்டா திரியுறாங்க. 100 இலச்சம் வாங்கி.. என்ன தனக்கா செலவழிக்கிறாங்க. நீங்க பொம்பிளைங்க.. உங்க பிறந்த வீட்டோடு செய்து கொள்ளுற கொடுக்கல் வாங்கலுக்கு கட்டிக்கிற ஆம்பிளைகளைப் பயன்படுத்திக்கிறீங்க. நீங்க சொல்லுங்க.. எனக்கு நகையும் வேணாம்.. காரும் வேணாம்.. வீடு வேணாம்.. கஞ்சியும்.. குடிசையும் போதுமுன்னு. அப்ப எந்த தமிழ் ஆண் சீதனம் என்றதை கேட்கிறானுன்னு பார்க்கலாம்..???! 

 

சீதனம் வாங்கப்படுவது என்னவோ ஆண்களின் பெயரால் தான். ஆனால் அனுபவிப்பது.. கொடுக்கிறவங்களே தான். இதில கூப்பாடு வேற. :):lol:

 

டொனேஷன் / இனாம் எண்டும் மாப்பிளை வீட்டுக்காரர் பிச்சை வாங்குவினம் பொம்பிளை வீட்டிடம். .... முதுகெலும்பில்லாத தமிழ் ஆண்கள் ( விதிவிலக்குகளும் உண்டு) . இதுகளைப் பற்றி எல்லாம் நெடுக்கருக்குத் தெரிந்திராது  :lol:

நெடுக்கு உண்மைச் சொல்ல/ ஒத்துக் கொள்ளப் பழகுங்கோ ( பெண்கள் விடயத்தில்)  :D  :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேண்டி என்ன அக்கா செய்யினம். உங்களுக்கு சீலை.. நகை வேண்டித் தந்தே போண்டி ஆகி இருப்பினம். :D:icon_idea:

நெடுக்ஸ்......  இருக்குதோ இல்லையோ.....    அதெல்லாம் ஒண்ணுமே இல்ல.

But,எதுவுமே  எங்கட 'கையில' இல்ல.... :unsure::rolleyes::lol:

 

( அப்புறம்.... எதில இருக்கு என்று என்னிடம் கேட்கக்கூடாது :lol:)

 

Anyway....  கவிதை நல்லாருக்கு நெடுக்ஸ்   :)

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கவிதையார் உங்கள் வரவிற்கும் கருத்திற்கும். :)

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'இல்லானை இல்லாளும் வேண்டாள்..ஈன்றெடுத்த தாயும் வேண்டாள்' என்று அன்றே ஒரு புலவன் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறான். புலவன் சொன்னான் என்பதற்காக அது நூறு சத விகிதம் உண்மையாக இருக்க வேண்டுமென்பதில்லை.

 

எனினும்,

 

பெரும்பாலான பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் இல்லாதவனை ஒதுக்கியே வைத்திருக்கிறார்கள். பணம் பந்தியில் அரசோச்ச, குணம் இன்றைய உலகில் குப்பையில்தான் வீசப்படுகிறது.

 

குசேலனை நேசித்த கண்ணனும் கோவலனை விரும்பிய கண்ணகியும் இங்கே விதிவிலக்கனவர்கள்.

Edited by எஸ். ஹமீத்

  • கருத்துக்கள உறவுகள்

கதைச்சு,கதைச்சு தீர்வு இல்லாமல் போகும் விடையத்தில் இதுவும் ஒன்று..இருப்பவர்கள் குடுத்துக் கொண்டே இருப்பார்கள்,வாங்குபவர்கள் வாங்கிக் கொண்டே இருப்பார்கள்...

கதைச்சு,கதைச்சு தீர்வு இல்லாமல் போகும் விடையத்தில் இதுவும் ஒன்று..இருப்பவர்கள் குடுத்துக் கொண்டே இருப்பார்கள்,வாங்குபவர்கள் வாங்கிக் கொண்டே இருப்பார்கள்...

 

 

இருப்பவர்கள் குடுத்துக் கொண்டே இருப்பார் வாங்குபவர்கள் வாங்கிக் கொண்டே இருப்பார்கள்... அது அன்பு ஆகினும் சரி... செல்வமாகினும் சரி ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.