Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக காங்கிரசுக்கு என்ன ஆச்சுது...?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

newsflash.gif

 

 

தேர்தலில் போட்டியிட தமிழக காங்., தலைவர்கள் தயக்கம்!

 

சிதம்பரம், ஜெயந்தி நடராஜன், இளங்கோவன், தங்கபாலு போட்டியில்லை! :lol:

 

 

http://www.dinamalar.com/index.asp (தினமலரில் ஓடும் செய்தி)

 

 

 

மக்கள் தீர்ப்பை சந்திக்க அவ்வளவு தைரியமற்ற கோழைகளா இவர்கள்? :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

vil-effraye.gif     .          mummy.gif

 

சென்னை: வரும் லோக்சபா தேர்தலில், காங்கிரஸுடன் எந்த கட்சியும் கூட்டணி வைக்க விரும்பவில்லை. தனித்து விடப்பட்ட காங்கிரஸ், தனியாக போட்டியிட முடிவு செய்துள்ளது. இந்த முடிவை அறிவித்த மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தான் இந்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என நேற்று அறிவித்தார்.

 

இதையடுத்து, பல முக்கிய தலைவர்களும் தாங்கள் இந்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளனர். ஜெயந்தி நடராஜன், சிதம்பரம், இளங்கோவன், தங்கபாலு உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=931654

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

valaimanai3.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  சீமானுக்கும்

மாணவர்களுக்கும் மற்றும் அனைத்து உறவுகளுக்கும்..................

  • கருத்துக்கள உறவுகள்

அலறி ஓடும் மூத்த தலைவர்கள்...அதிர்ந்து நிற்கும் ராகுல் காந்தி!

 

புதுடெல்லி: வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜன், மணிஷ் திவாரி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் போட்டியிட விரும்பாத நிலையில், அவர்கள் போட்டியிட வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மணிஷ் திவாரி லூதியானா தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அதில் ஆர்வம் காட்டாமல் உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேப்போன்று நிதியமைச்சரான ப.சிதம்பரம், தனது பழைய சிவகங்கை தொகுதியில் பல இடங்களில் உள்ளூர் தலைவர்களை சந்தித்து, சிறிய கூட்டங்களை நடத்தி வருகிறார். இதனால் அவர் தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனது மகன் கார்த்தியை களமிறக்கவே சிதம்பரம் இந்த அளவுக்கு மெனக்கிட்டுள்ளதாகவும், அதே சமயம் மாநிலங்களவை மூலம் நாடாளுமன்றத்திற்கு செல்ல அவர் விரும்புவதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேப்போன்றுதான் ஜெயந்தி நடராஜனும் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை. கடந்த செவ்வாய்க்கிழமையன்று தமிழக காங்கிரஸ் கட்சியின் வேட்பு மனு ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றபோது, ஜெயந்தி நடராஜனிடம் போட்டியிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் அவர் தனக்கு விருப்பம் இல்லை எனக் கூறிவிட்டதாகவும் சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள் கூறுகின்றன.

இன்னொரு மத்திய அமைச்சரான ஜி.கே. வாசன் தான் போட்டியிடப்போவதில்லை என நேற்றே செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிவித்துவிட்டார்.

இதுதவிர கே.வி. தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன் போன்ற தலைவர்களும் போட்டியிடுவதில்லை என முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுமட்டுமல்லாது ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் ரயில்வே அமைச்சர் பவன் பன்சால், மகாராஷ்ட்ரா முன்னாள் முதல்வர் அசோக் சவாண் மற்றும் சுரேஷ் கல்மாடி ஆகியோர் கூட அலறி ஓடும் தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தனது இரண்டாவது வேட்பாளர் பட்டியலை வெளியிட தயாராகி வருகிறது காங்கிரஸ் கட்சி. இந்நிலையில் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள கட்சியின் துணைத் தலைவரான ராகுல் காந்தி, மூத்த தலைவர்களே தோல்வி பயத்தில் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து ஓட்டம் பிடிப்பதால், அதிர்ச்சியடைந்துள்ளார்.

இருப்பினும் அவர்கள்  கண்டிப்பாக இந்த தேர்தலில் போட்டியிட வேண்டும் என ராகுல் கூறி வருவதால், காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பமும், சிக்கலும் உருவாகி உள்ளது.

 
http://news.vikatan.com/article.php?module=news&aid=25613

  • கருத்துக்கள உறவுகள்

கனபேர்

ஓடினான்

ஓடினான்

வாழ்வின் இறுதிக்கே  ஓடினான் என்ற  நிலைதான்...........

 

ஓட்டம் ஆரம்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

xrahulcartoon_1783358f.jpg.pagespeed.ic.
 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழக காங்கிரஸ் கலைக்கபட வேண்டும்...அதன் மூலம் தமிழர்களை கிள்ளுக்கீரை ஆக நினைக்கும் மன நிலை மாறும்...

  • கருத்துக்கள உறவுகள்
 
தமிழகத்தில் தனித்து விடப்பட்டதால் போட்டியிடப் பயந்து தறிகெட்டு ஓடும் காங்கிரஸ் தலைவர்கள்! 
[Thursday, 2014-03-13 17:42:05]
congress-130314-150.jpg

தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனித்து விடப்பட்டதால் அந்த கட்சி தலைவர்கள் தேர்தலை சந்திக்க தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய மந்திரி ஜி.கே. வாசன் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதால் தமிழ் நாடு முழுவதும் வேட்பாளர்கள் வெற்றிக்கு பிரசாரம் செய்வேன் என்று பகிரங்கமாக அறிவித்து விட்டார்.இதேபோல் முன்னாள் தலைவர் தங்கபாலுவும் போட்டியிட மறுத்து விட்டார். மற்ற முக்கிய தலைவர்களும் போட்டியிட தயங்குவதாக கூறப்படுகிறது.

  

மத்திய மந்திரி ப.சிதம்பரம் கடந்த முறை சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் கண்ணப்பனை, 3,825 ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் ப.சிதம்பரம் வெற்றி பெற்றார். எனவே இந்த முறை சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவார் என்று தகவல் வெளியானது.

ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறும் போது, சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரத்துக்கு பதில் கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக நிறுத்தப்படுவாரா? என்பது பற்றி கட்சி இன்னும் முடிவு- செய்யவில்லை என்றார்.

மணிசங்கர் அய்யர் மயிலாடுதுறைக்குப் பதிலாக டெல்லியைத் தேர்ந்தெடுப்பதாகக் கூறுகிறது காங்கிரஸ் வட்டாரம். கிருஷ்ணசாமி, சித்தன், ஆருண் உள்ளிட்டோர் வயதைக் காரணம் காட்டி ஒதுங்குவதாகக் கூறப்படுகிறது.ஞானதேசிகன் டெல்லியில் முகாமிட்டு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தொடர்பாக மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். நாளை வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதால் பலர் தேர்தலில் போட்டியிட தயங்குவதை அறிந்த காங்கிரஸ் மேலிடம் மூத்த தலைவர்கள் கண்டிப்பாக மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கூறிவிட்டது.இதுவரை எம்.பி. பதவியை அனுபவித்தவர்கள் இக்கட்டான நேரத்தில் தேர்தலில் இருந்து ஒதுங்குவதை கட்சி மேலிடம் விரும்ப வில்லை. மூத்த தலைவர்கள் போட்டியிடாமல் ஒதுங்கிவிட்டால் அது காங்கிரசை தேர்தலுக்கு முன்பே பலவீனப்படுத்தி விடும் என்றும் கருதுகிறது.

இதைத் தொடர்ந்து தான் கடந்த முறை ஈரோடு தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்த இளங்கோவன் மீண்டும் போட்டியிடுவேன் என்று அறிவித்துள்ளார்.நாளை வெளிவரும் காங்கிரஸ் பட்டியலில் தற்போதைய எம்.பி.க் களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும், மற்ற தொகுதிகளில் புதுமுகங்கள், இளைஞர்கள், பெண்கள் அதிக அளவில் வேட்பாளர் பட்டியலில் இடம் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து அரசியல் விமர்சகரான ரவீந்திரன் துரைசாமி கூறியதாவது: தமிழகத்தில் காங்கிரஸுக்கு 10 சதவீதம் ஓட்டு இருப்பதாக வாசன் கூறுவது தவறு. 1999 தேர்தலின்போது புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளும் த.மா.க கூட்டணியில் இருந்தும் காங்கிரஸ் 6 சதவீதம் ஓட்டுகள்தான் பெற்றன. 2001-ல் நடந்த விரிவுப்படுத்தப்படாத சென்னை நகராட்சி மேயர் தேர்தலில் வசந்தகுமார் பெற்ற ஓட்டுக்களில் பாதி அளவுகூட, விரிவுப்படுத்தப்பட்ட சென்னையில் 2011 மேயர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சைதை ரவி பெறவில்லை. எனவே, காங்கிரஸின் ஓட்டு 6 சதவீதத்துக்கும் கீழ்தான்” என்றார்.

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணியிலிருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழகத்தில் திமுக கூட்டணியில் உள்ளது. இந்திய யூனியன் காயிதே மில்லத் லீக் உட்படச் சில முஸ்லிம் அமைப்புகள் அதிமுக-வு அணியில் உள்ளன. இதனால், காங்கிரஸுக்கு முஸ்லிம் ஓட்டுகள் கிடைப்பதும் சந்தேகமே.

எண்ணூர் துறைமுகத்துக்குக் காமராஜர் பெயரை வைத்தது நாடார் ஓட்டுகளை வசப்படுத்தும் என்று வாசன் நம்புகிறார். ஆனால், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு கொள்கை, இலங்கை விவகாரம் போன்ற காரணங்களால் தமிழகத்தில் நாடார் சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்தும் இரண்டு வணிகர் அமைப்புகளும் காங்கிரஸ் மீது கோபத்தில் உள்ளன. சமீபத்தில் நாடார் சமூகத்தினர் மோடியை சந்தித்து, இந்தியா முழுவதும் மதிய உணவுத் திட்டத்துக்கு காமராஜரின் பெயரை வைக்கும் கோரிக்கையை வைத்துள்ளனர். அவர்களின் கோரிக்கையைப் பரிசீலிப்பதாக உறுதி கொடுத்திருக்கிறார் மோடி.

இவை எல்லாவற்றையும் விட, தேர்தல் செலவுக்கு கட்சி மேலிடம் கொடுக்கும் தொகையைத் தாண்டி, சொந்த பெட்டியிலிருந்து எத்தனை கோடி செலவளிக்க வேண்டியிருக்குமோ என்கிற கணக்கையும் போடுகிறார்களாம் சில காங்கிரஸ் தலைவர்கள். முதலைத் தூக்கி முதலை வாயில் போட்டதுபோல் ஆகிவிடுமோ என்பது அவர்கள் அச்சமாம்!

 

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=105582&category=IndianNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.