Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் ஈச்சம்பழம்...

Featured Replies

DSC09725.JPG
மன்னார் மாவட்டத்தில் தற்போது ஈச்சம்பழத்தின் உற்பத்தி அதிகரித்துள்ளது. வருடா வருடம் ஏப்ரல் மாதம் தொடக்கம் மே மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் மன்னாரில் ஈச்சம்பழத்தின் உற்பத்தி அதிகரித்து காணப்படுகின்றது. சுமார் 2 மாதங்களில் அதன் உற்பத்தியை மக்கள் பெற்றக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த யுத்த காலத்தில் அதிகளவான ஈச்ச மரங்கள் அழிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அவை துளிர் விட்டு வளர்ந்து காய்க்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். (படங்கள்:எஸ்.றொசேரியன் லெம்பேட்)
DSC09728.JPG
DSC09739.JPG
 
 
 

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

ஈச்சம் பழத்தைப் பார்க்க... வாயூறுது.
ஊரில் இருக்கும் போது, நண்பர்களுடன்... சைக்கிளில், பண்ணைப் பாலத்து எதிர்க்காற்றையும் சமாளித்து... மண்டைதீவு வரை போய் ஈச்சம் குலைகளை வெட்டி வந்து, உப்புத் தண்ணீர் தெளித்து... பழுக்க வைத்துச் சாப்பிடும் சுவையும், அந்த இனிமையான நினைவுகளும் என்றும்... மறக்க முடியாதவை. :)

  • கருத்துக்கள உறவுகள்

Flags.jpg

 

Flags2.jpg

 

20144304_216138_670.jpg

 

 

uae-51661.jpg

 

 

இங்கே ரோட்டில் பொறுக்க ஆளில்லாமல் இந்த பேரீச்சம் பழங்கள் சீரழிகின்றன!

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் ஒரு காலம். வெளிநாட்டின் சுவைகள் அறிய முதல் எல்லாம் எமக்குச் சுவைத்தனதான். நான் தாயகம் சென்றிருந்தபோது உண்ண வேண்டும் என்று கூறி எடுத்துச் சாப்பிட்டால் சாப்பிட முடியவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முள்ளு குத்தக்குத்த ஈச்சம்பழம் புடுங்குறதும் ஒரு திரில்தான்  :D

  • கருத்துக்கள உறவுகள்

காட்டுக்குள்ள கறுப்பியும் சிவப்பியும் கள்ளச் சிரிப்புச் சிரிக்கினம்...! :)

  • கருத்துக்கள உறவுகள்

 

DSC09725.JPG

மன்னார் மாவட்டத்தில் தற்போது ஈச்சம்பழத்தின் உற்பத்தி அதிகரித்துள்ளது. வருடா வருடம் ஏப்ரல் மாதம் தொடக்கம் மே மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் மன்னாரில் ஈச்சம்பழத்தின் உற்பத்தி அதிகரித்து காணப்படுகின்றது. சுமார் 2 மாதங்களில் அதன் உற்பத்தியை மக்கள் பெற்றக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த யுத்த காலத்தில் அதிகளவான ஈச்ச மரங்கள் அழிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அவை துளிர் விட்டு வளர்ந்து காய்க்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். (படங்கள்:எஸ்.றொசேரியன் லெம்பேட்)

DSC09728.JPG

 

 

 

கனகாலத்துக்குப்பின்......

கண்டதால் பெரும் ஆவலாகவும் அதிசயமாகவும்  இருக்கு...

 

Flags.jpg

 

Flags2.jpg

 

20144304_216138_670.jpg

 

 

uae-51661.jpg

 

 

இங்கே ரோட்டில் பொறுக்க ஆளில்லாமல் இந்த பேரீச்சம் பழங்கள் சீரழிகின்றன!

 

 

ராசவன்னியன்,

 

மத்திய கிழக்கில் விளையும் ஈச்சம்பழத்துக்கும் (பேரீச்சம் பழம்) இலங்கை வடக்கில் விளையும் ஈச்சம்பழத்துக்கும் இடையில் வேறுபாடு இருக்கு. வடக்கில் விளையும் ஈச்சம்பழம் முள்ளு நிறைந்த செடியில் வளர்ந்து, பச்சை நிறத்தில் காய்த்து சிவப்பு நிறமாக பழுத்து கருப்பு நிறத்தில் கனியும் பழம். பொதுவாக உப்பு / கடல் பிரதேசங்களில் தான் வளரும். ஊரில் மண்டை தீவு, அனலை தீவு பக்கம் போகின்ற போது ஒரே காடாக வளர்ந்து நிற்கும். வெட்டி கொண்டு வந்து கனிய வைச்சு சாப்பிடும் போது அந்த மாதிரி இருக்கும்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ராசவன்னியன்,

 

மத்திய கிழக்கில் விளையும் ஈச்சம்பழத்துக்கும் (பேரீச்சம் பழம்) இலங்கை வடக்கில் விளையும் ஈச்சம்பழத்துக்கும் இடையில் வேறுபாடு இருக்கு. வடக்கில் விளையும் ஈச்சம்பழம் முள்ளு நிறைந்த செடியில் வளர்ந்து, பச்சை நிறத்தில் காய்த்து சிவப்பு நிறமாக பழுத்து கருப்பு நிறத்தில் கனியும் பழம். பொதுவாக உப்பு / கடல் பிரதேசங்களில் தான் வளரும். ஊரில் மண்டை தீவு, அனலை தீவு பக்கம் போகின்ற போது ஒரே காடாக வளர்ந்து நிற்கும். வெட்டி கொண்டு வந்து கனிய வைச்சு சாப்பிடும் போது அந்த மாதிரி இருக்கும்.

அப்படியா..? ஈழத்தில் விளையும் இப்பயிர் பற்றி தெரியாது.

இரு நாடுகளிலும் பயிரைப் பார்த்தால் இரண்டுமே ஒன்றாக தோன்றுகிறது.

விளக்கத்திற்கு நன்றி நிழலி!

  • கருத்துக்கள உறவுகள்

வல்லிபுரக்கோயில் தாண்டிப் போனால் தென்னை, மாமரம், ஈச்சைமரப் பற்றைகள் என்று கேட்பாரற்று இருக்கும். மறக்க முடியாத காலங்கள் அவை.

வல்லிபுரக்கோயில் தாண்டிப் போனால் தென்னை, மாமரம், ஈச்சைமரப் பற்றைகள் என்று கேட்பாரற்று இருக்கும். மறக்க முடியாத காலங்கள் அவை.

சோனப்பு சுடலை, யாக்கரு பக்கமும் நிறைய பத்தைகள்.

ஈச்சம்பழ சீசனில வல்லிபுர கோவிலுக்கு அடிக்கடி போவோம். ஆன்மீக ஈர்ப்பு அப்படி :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.