Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காதலின் பெயரால்...

Featured Replies

kadhalin+peyaraal.jpg

 

நம்பிக்கைகள் கைகோர்த்து நடக்க
எண்ணங்கள் இணையாக பிறக்க
பல வண்ணங்கள் இழையோடிச் சிறக்க
இரு உள்ளங்கள் உறவாடிப் பழகும்
இனிமையான காலத்தின் பெயர்தான் 'காதல்'


அப்படியான  இனிதான பொழுதுகளை
முன்னொரு நாளில்....
நீயும் நானும் பகிர்ந்திருந்தோம்!


காதலையும் அன்பையும்
அள்ளிக்கொடுத்த நீயேதான்,
பின்னொரு நாளில்....
பிரிவையும் வலியையும்
வாரியிறைத்துவிட்டுப் போனாய்!
நீ தந்துவிட்டுப்போன
அந்த வலிகளைத் தாண்டி வெளியேவர...
நான் பல  ஜென்மங்கள்
எடுக்க வேண்டியிருந்தது!


இன்னும் என் இரவுகள்...
என் தூக்கத்தை திருப்பித்தரவில்லை!
இன்னும் உன் ஞாபகங்கள்...
எனைத் தீயால் தீண்டுவதை நிறுத்தவில்லை!


வலிகள் ஒருவனை வலிமையாக்கும்!
எப்படியான துன்பத்தையும்...
புன்னகையோடு வரவேற்கும் வல்லமையை,
உன் துரோகம் தந்துவிட்டுப் போயிருக்கிறது!
இப்பொழுதெல்லாம் நான்...
கண்ணீரை வீணாக்குவதில்லை!!


கடந்து வந்த பாதைகள்...
எப்பொழுதும் நினைவில் இருக்கு!
நடந்து முடிந்த நாடகங்கள்...
இப்பொழுதும் மனதில் இருக்கு!


துரோகங்கள் மறக்கப்பட்டுவிடுமென
அதைச் செய்தவர்கள் நினைக்கலாம்!?
ஆனால்...ஏனோ தெரியவில்லை,
துரோகங்களை மட்டும்
இலகுவில் மறக்கமுடிவதில்லை..!
மன்னிக்கவும் முடிவதில்லை!!
'மன்னித்து விடலாம்' எனச் சொல்லும்
அதே மனதுதான்.... மறக்கவும் மறுக்கிறது!


ஒரு சாதாரண மனிதனின் வாழ்வை...
சதா   ரணமாக்கி இருக்கிறாய்!
உயிரோடு வாழும்...
பிணமாக்கி இருக்கிறாய்!
உன் துரோகங்களுக்குத் தண்டனையை
நான் கொடுக்கப்போவதில்லை
அதை உன் மனச்சாட்சியே பார்த்துக்கொள்ளட்டும்!


ஆனால்....
எனக்கென்று ஒருநாள் வரும்
உனைக் காண!
நிச்சயமாக.... அந்தநாள்,
உனக்கானதாக இருக்காது!


********   ********   ********   ********   ********

கவிதை இன்னுமா???

  • தொடங்கியவர்

கவிதை இன்னுமா???

 

 

இப்பிடி ஃபீலிங்கா எழுதி ரொம்ப நாளாச்சே...அதான்! :D இதையெல்லாம் சீரியஸாக எடுக்கதையுங்கோ அக்கா! :)

நான் ரொம்ப ஜாலியா இருக்கிறன். :wub::lol: சுதந்திரக்காற்றில் சுற்றிக்கொண்டிருக்கிறேன்! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடி ஃபீலிங்கா எழுதி ரொம்ப நாளாச்சே...அதான்! :D இதையெல்லாம் சீரியஸாக எடுக்கதையுங்கோ அக்கா! :)

நான் ரொம்ப ஜாலியா இருக்கிறன். :wub::lol:சுதந்திரக்காற்றில் சுற்றிக்கொண்டிருக்கிறேன்! :lol:

 

தோல்வியுறும் காதலே அதிகம் காவியமாகிறது. அதில் ஒரு துளி கவிதைமூலம் யாழில் வீழ்ந்துள்ளது. 
 
காதலித்து ஏமாற்றியது ஆணா? பெண்ணா? அறிய மனம் விழைந்தது. வரி வரியாகத் தேடினேன்... :rolleyes:  
 
'ஒரு சாதாரண மனிதனின் வாழ்வை...
சதா ரணமாக்கி இருக்கிறாய்!'    .................இந்த வரிகள் பெண் என்றது. :wub:  
 
'இப்பொழுதெல்லாம் நான்...
கண்ணீரை வீணாக்குவதில்லை!!'    ..................இந்த வரிகள் ஆண் என்றது. :blink:   
 
குழம்பியபோது கவிதையின் பின்னூட்டம் வந்தது.
இப்போது குழப்பமில்லை! ஏமாற்றியது ஆண்தான்!! :D  :lol:
  • கருத்துக்கள உறவுகள்

என்ன  தம்பி  கலர் கலரா லொள்ளு விடுகுது

ஏதோ

நடக்கட்டும்  நடக்கட்டும்

முத்தினால் சந்தைக்கு வரும் தானே :lol:  :D

  • தொடங்கியவர்

 

தோல்வியுறும் காதலே அதிகம் காவியமாகிறது. அதில் ஒரு துளி கவிதைமூலம் யாழில் வீழ்ந்துள்ளது. 
 
காதலித்து ஏமாற்றியது ஆணா? பெண்ணா? அறிய மனம் விழைந்தது. வரி வரியாகத் தேடினேன்... :rolleyes:  
 
'ஒரு சாதாரண மனிதனின் வாழ்வை...
சதா ரணமாக்கி இருக்கிறாய்!'    .................இந்த வரிகள் பெண் என்றது. :wub:  
 
'இப்பொழுதெல்லாம் நான்...
கண்ணீரை வீணாக்குவதில்லை!!'    ..................இந்த வரிகள் ஆண் என்றது. :blink:   
 
குழம்பியபோது கவிதையின் பின்னூட்டம் வந்தது.
இப்போது குழப்பமில்லை! ஏமாற்றியது ஆண்தான்!! :D  :lol:

 

 

பாஞ்ச்... என் பாசக்கார அக்காக்களுக்கு நான் சோகமாக இருப்பது பிடிக்கவே பிடிக்காது.  அதற்காக கொஞ்சம் சமாளிப்போம் எனச் சொன்னதை வைத்து.... இப்பிடி ஆண் இனத்தின் மீதே ஒரு மாபெரும் பழியைத் தூக்கிப் போடலாமா? :o:lol:  இது தகுமா???? :rolleyes::lol:

 

கருத்துக்கு மிக்க நன்றி பாஞ்ச்! :)

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை, என்னப்பு திரும்பவும்......?  :o

 

வாழ்க்கையில் பெரும்பாலான பகுதி, வீணான போராட்டங்களிலேயே கழிந்து போகின்றது!

 

கோபங்கள், பிடிவாதங்கள், அழுங்குப் பிடித்தனம் என்பவையே இவற்றிற்குக் காரணம்!

 

ஒன்றில் நான் காதலை, முற்றாகப் புரிந்து கொள்ளவில்லை, அல்லது உண்மையான காதல், எனக்கு ஒருவர் மீதும் ஏற்படவில்லை என்று தான், உங்கள் கவிதை எனக்குச் செல்கின்றது!

 

என்னால் எனது பிரச்சனைகளை, ஒரு மூன்றாம் மனிதன் நிலையிலிருந்து, எப்போதுமே பார்க்க முடிகின்றது...!

 

ஒரு வேளை, அளவுக்கதிகமான பற்றுக்களை, பொருட்கள் மீதும், நாம் விரும்புபவர்கள் மீதும் வைப்பது தவறு போலவே உள்ளது!

 

கவிதை, அளவுக்குகதிகமாகவே 'சோகம்' சுமக்கின்றது! நன்றிகள்!

  • தொடங்கியவர்

என்ன  தம்பி  கலர் கலரா லொள்ளு விடுகுது

ஏதோ

நடக்கட்டும்  நடக்கட்டும்

முத்தினால் சந்தைக்கு வரும் தானே :lol:  :D

 

அண்ணை... இது பழைய கதை (Black & white). நீங்கள் கலரை மட்டும் பாத்திருக்கிறியள் எண்டு நினைக்கிறன். :rolleyes:

அழுகிப்போன கத்தரிக்காயெல்லாம் சந்தைக்கு வராது அண்ணை! :D

என்ன செய்ய நம்ம நிலைமை அப்பிடி இருக்கு!??? :rolleyes::lol:

  • தொடங்கியவர்

கவிதை, என்னப்பு திரும்பவும்......?  :o

 

வாழ்க்கையில் பெரும்பாலான பகுதி, வீணான போராட்டங்களிலேயே கழிந்து போகின்றது!

 

கோபங்கள், பிடிவாதங்கள், அழுங்குப் பிடித்தனம் என்பவையே இவற்றிற்குக் காரணம்!

 

ஒன்றில் நான் காதலை, முற்றாகப் புரிந்து கொள்ளவில்லை, அல்லது உண்மையான காதல், எனக்கு ஒருவர் மீதும் ஏற்படவில்லை என்று தான், உங்கள் கவிதை எனக்குச் செல்கின்றது!

 

என்னால் எனது பிரச்சனைகளை, ஒரு மூன்றாம் மனிதன் நிலையிலிருந்து, எப்போதுமே பார்க்க முடிகின்றது...!

 

ஒரு வேளை, அளவுக்கதிகமான பற்றுக்களை, பொருட்கள் மீதும், நாம் விரும்புபவர்கள் மீதும் வைப்பது தவறு போலவே உள்ளது!

 

கவிதை, அளவுக்குகதிகமாகவே 'சோகம்' சுமக்கின்றது! நன்றிகள்!

 

திரும்பவும் சிந்திக்க, கவலைப்பட ஒன்றுமில்லை புங்கை!

காதலுக்காக வாழ்க்கையை தொலைத்த பலரில் ஒருவனாக நிச்சயமாக நான் இருக்கமாட்டேன்!

ஒரு விடயத்தில் நாம் (திட்டமிட்டு) தோற்கடிக்கப்படும்பொழுதுதான்... அந்த விடயத்தினை முற்றாக புரிந்துகொள்ள விளைகிறோம்.  அதைப் புரிந்துகொண்ட பின்னர்... எதுவுமே பிரச்சினையில்லை.

 

அந்த நிலையில்தான் நானும்.... மிகத் தெளிவாக இருக்கின்றேன்!

சோகம் எதுவுமில்லை!

மனதில் தோன்றும் அழுத்தங்களை... எழுதிக் குறைப்பவன் நான்!

அவ்வளவுதான்....!

 

எது என்னவோ... நீங்கள் கூறிய....

 

அளவுக்கதிகமான பற்றுக்களை, பொருட்கள் மீதும், நாம் விரும்புபவர்கள் மீதும் வைப்பது தவறு

 

 

இது  100% உண்மை.... புங்கை!

 

கருத்துக்கும் அன்புகும் மிக்க நன்றி!  :)

Edited by கவிதை

நம்ம கிட்டயும் கைவசம் இப்படி ஒரு சோகக் கவிதை இருக்கு....  :lol:  கவிதை அண்ணனுக்கே இவ்வளவு திட்டு விழுகுது.... :D  நான் அதை பதிஞ்சா அடியல்லோ விழும் போல கிடக்கு  :icon_idea:   இந்த மிஸ்ரர் புங்கை அண்ணனை நினைச்சு தான் பயமா இருக்கு  :icon_mrgreen:

 

 

ஒரு சாதாரண மனிதனின் வாழ்வை...
சதா   ரணமாக்கி இருக்கிறாய்!
உயிரோடு வாழும்...
பிணமாக்கி இருக்கிறாய்!
உன் துரோகங்களுக்குத் தண்டனையை
நான் கொடுக்கப்போவதில்லை
அதை உன் மனச்சாட்சியே பார்த்துக்கொள்ளட்டும்!

 

 

ஹ்ம்ம்ம்... மனசாட்சி இருந்தால் உங்களுக்கு இந்த நிலைமை இல்லையே அண்ணா....  :(

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை... இது பழைய கதை (Black & white). நீங்கள் கலரை மட்டும் பாத்திருக்கிறியள் எண்டு நினைக்கிறன். :rolleyes:

அழுகிப்போன கத்தரிக்காயெல்லாம் சந்தைக்கு வராது அண்ணை! :D

என்ன செய்ய நம்ம நிலைமை அப்பிடி இருக்கு!??? :rolleyes::lol:

 

நீங்கள் பகிடிக்கு  கூட  இவ்வாறு எழுதாதீர்கள்

இந்த வரிகள் என்னை மிகவும் பாதித்தன......... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

பிறர் அனுபவத்திலிருந்து கவிதை வந்தால் சும்மா சோகம் ...!

 

சொந்த அனுபவத்தில் இருந்து வந்தால்  செம சோகம்...!!

  • தொடங்கியவர்

நீங்கள் பகிடிக்கு  கூட  இவ்வாறு எழுதாதீர்கள்

இந்த வரிகள் என்னை மிகவும் பாதித்தன......... :(  :(  :(

 

மனதில் எதையும் வைத்து எழுதவில்லை...... மன்னித்துக்கொள்ளுங்கள் அண்ணை!

  • தொடங்கியவர்

 

உன் துரோகங்களுக்குத் தண்டனையை

நான் கொடுக்கப்போவதில்லை

அதை உன் மனச்சாட்சியே பார்த்துக்கொள்ளட்டும்!

 

 

ஹ்ம்ம்ம்... மனசாட்சி இருந்தால் உங்களுக்கு இந்த நிலைமை இல்லையே அண்ணா....  :(

 

மனச்சாட்சி எப்பொழுதும் மெளனமாக இருக்காது.

ஒருநாள் இல்லை ஒருநாள்.... அது நாம் செய்த செயல்கள் குறித்து கேள்வி கேட்கும்.

அப்பொழுது அதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும். அந்த நிலை எனபது.... மரணதண்டனையைவிடக்  கொடியது.

 

கருத்துக்கு மிக்க நன்றி ராஜன் விஷ்வா! :)

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையண்ணாவிடமும்,கவிதையிடமும்  நிறைய விடையங்களை நல்ல வார்த்தைகளை கொள்ளையிட வேண்டி இருக்கு..

காதல் சம்பந்மான விடையங்களுக்குள் நான் வருவதில்லை...ஒரு சிலரின் எழுத்துக்களுக்கு எத்தனை விமர்சனங்கள் எழுதினாலும் எழுதிக் கொண்டே இருக்கலாம்..

ஏதோ ஒரு வகையில் அவர்களின் எழுத்துக்கள் எங்கள்  மனங்களையும் தொட்டு செல்கிறது.காதல் என்ற ஒன்றுக்குள் தான் வகைப்படுத்தனும் என்று இல்லை..

அசாதரணமாக பேசிக் கொண்டு இருக்கும் போது புரிந்து கொள்ளாமையினால் ஏற்படும் மனத் தாங்கல்களுக்களுக்கும் கவிதையின்  அனேகமான  வரிகள்  பொருந்தும்.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி தமிழ்ப்பொடியா எடுடா அந்த பிரப்பங்கட்டையை !!! :wub:   எல்லாம் மறந்திட்டனக்கா நான் சந்தோசமா இருக்கிறனெண்டெல்லாம் தமிழ்ப்பொடி சாட்சியாய் சொன்னதையெல்லாம் மறந்து கவிதையே என்னடாப்பா உங்களை செய்யலாம் ? :mellow:

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

அருமையாக மனதில் வந்ததை எழுதியுள்ளீர்கள். எழுதுபவர்கள் எல்லாம் மனதில் வரும் உணர்வை வடிகாலாக்கி எழுதும் போது மனது இலகுவாகிவிடும்.

நீங்கள் தொடர்ந்தும் எழுதுங்கள் கவிதை :lol:

 


நீங்கள் காதலை முற்றாகப் புரிந்து கொண்டிருக்காத  ஆள் தான் புங்கை :lol:


ராஜன் விஷ்வா புங்கைக்குப் பயந்தா நீங்கள் எழுதாமல் விடுவது???? எழுதுங்கள் உங்கள் காதலையும்

  • கருத்துக்கள உறவுகள்

அருமையாக மனதில் வந்ததை எழுதியுள்ளீர்கள். எழுதுபவர்கள் எல்லாம் மனதில் வரும் உணர்வை வடிகாலாக்கி எழுதும் போது மனது இலகுவாகிவிடும்.

நீங்கள் தொடர்ந்தும் எழுதுங்கள் கவிதை :lol:

 

நீங்கள் காதலை முற்றாகப் புரிந்து கொண்டிருக்காத  ஆள் தான் புங்கை :lol:

ராஜன் விஷ்வா புங்கைக்குப் பயந்தா நீங்கள் எழுதாமல் விடுவது???? எழுதுங்கள் உங்கள் காதலையும்

அனுபவங்களைக் கூச்சப்படாமல் எழுதுங்கள், ராஜன் விஷ்வா ! :D

 

விமோசனங்கள் கிடைத்தால் நல்லதே....அதே வேளை , கிடைக்கப்போகும் விமரிசனங்களை ஏற்கும் பக்குவமும் இருந்தால் பிரச்சனையில்லை என்றே நினைக்கிறேன்!

 

சில வேளைகளில்..!

 

word-of-mouth-gossip.jpg

 

இப்படியும் நடப்பதுண்டு....! :icon_idea:

காதல் காற்றை சுவாசிக்காமல் எவரும் வாழ்த்ததா சரித்திரம் இல்லை இதில் கவிதை மட்டும் தப்ப முடியுமா என்ன ..,,?

 

அதனால் வந்த கவிதைதானே நடக்கட்டும் ..;)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.