Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனதின் ஒசைகள்

Featured Replies

2512190_orig.jpg?340
 
ஆயிரம் கால்களுடன் மரஅட்டையொன்று,
 
மனதினுள் ஊர்ந்து கொண்டிருக்கிறது சில காலங்களாக....!!!
 
பரந்த வெளிப்பரப்பின் சன நெரிசலின் எதோவொரு மூலையில்
 
முகமறியாத முகமொன்றின் புன்னகைக்காக தவமிருக்கிறது.....!!!
 
தாழ்வாரத்தை  நோக்கி பாய்ந்து முடிந்த, 
 
மழை வெள்ளத்தின் ஈரலிப்பை நோக்கி கால்கள் நகர்கின்றன.....!!!
 
பாதையில்லாப் பயணமொன்றின் நடுவில்,
 
வழிதவறிய பாதையின் பாதச்சுவடுகளை தேடி 
 
கண்கள் பணித்து கலங்குகின்றன....!!!
 
பாலைவனப் பாறையொன்றின் அடியில்,
 
இதிகாசங்களாய் கிடந்தது போல் இதயம் கணக்கிறது....!!!
 
தேடிக் கிடைத்த பொருளை தொலைத்து விட்ட 
 
இயலாமையின் வலியை  இன்றியமையாததாக்கி கொள்கிறது காலம்....!!
 
மகரந்த தேனை உண்டு புசித்த வண்டை,
 
பூக்கள் இல்லாத தேசத்தில் பறக்க விட்ட வெறுமை...!!!
 
எதிர்காலத்தின் இறந்த காலத்தை எண்ணி,
 
திருத்துவதற்குள் இறந்த காலமாகி விட்டது நிகழ்காலம்...!!!
 
புறத்தை தைத்த அம்பை பிடுங்கி,
 
வழியும் குருதியை மசியாக்கி கையொப்பமிட்டு,
 
எய்தவனுக்கே பரிசளிக்கும் கருணையை யாசிக்கிறேன்..,
 
பாதையில் வருவோர் போவோரிடத்தில்.....!!!
 
தாயின் அனைப்பு...,
 
பூவின் மலர்ச்சி..,
 
மழலையின் சிரிப்பு...,
 
பெண்மையின் பரிசம் யென
 
இந்த கணப் பொழுதில் கிடைக்கும் மிகச்சிறிய
 
இன்பத்திற்காக ஏக்கம் கொள்கிறது உள்ளம்.....!
 
வானவில் இரவில் நிலவின் நிழலில்
 
வசந்தத்தின் வாசலில் நினைவின் மொழி மீளும் நாளொன்றில் 
 
குரலறுந்த குயிலொன்று பாடும் ராகமதில் 
 
என் மன்தின் ஒசைகளை கேட்கலாம்........!
 
 
 
 
 
#30-04-14
 
ஆக்கம் : ராஜன் விஷ்வா
  • கருத்துக்கள உறவுகள்

வைரமுத்து வின் வாசம் தெரிகிறது இந்த ராஜனிடம் :D

கவிதை நன்றாக உள்ளது. பாராட்டுக்கள் விஷ்வா!!

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நன்றாக உள்ளது ... ரா . வி..!

 

"வானவில் இரவில்" தான் கொஞ்சம் முட்டுதுபோல் இருக்கு...!!

  • கருத்துக்கள உறவுகள்

"

மகரந்த தேனை உண்டு புசித்த வண்டை,
 
பூக்கள் இல்லாத தேசத்தில் பறக்க விட்ட வெறுமை...!!!"
 
அழகான வரிகள் விஷ்வா...தொடர்ந்தும் எழுதுங்கள்..
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த இளம் வயதிலை ஒரு கனமான கவிதை.நாங்களும் ஒருகாலத்திலை இப்பிடித்தான் எழுதினாங்கள்
தம்பி விஸ்வா வாழ்த்துக்கள்

மிக அருமை ராஜன் விஷ்வா...! அருமையான கவிவளம் உங்களுக்கு! வார்த்தைகளின் கோர்ப்பு மிக மிக அருமை!

தொடர்ந்து எழுதுங்கள் ! வாழ்த்துக்கள்! :)

  • கருத்துக்கள உறவுகள்
மகரந்த தேனை உண்டு புசித்த வண்டை,
 
பூக்கள் இல்லாத தேசத்தில் பறக்க விட்ட வெறுமை...!!!
 
எதிர்காலத்தின் இறந்த காலத்தை எண்ணி,
 
திருத்துவதற்குள் இறந்த காலமாகி விட்டது நிகழ்காலம்...!!!

 

அதீதமான கற்பனைவளம் உங்களிடம் உள்ளது!

 

தொடர்ந்து எழுதுங்கள் , தம்பி!

  • தொடங்கியவர்

வைரமுத்து வின் வாசம் தெரிகிறது இந்த ராஜனிடம் :D

அடடடடா..... எதற்கிந்த பீடிகை??? சிரிப்பு வருதில்லே.... 

 

கருத்திற்கு நன்றிகள்.... :)

கவிதை நன்றாக உள்ளது. பாராட்டுக்கள் விஷ்வா!!

நன்றிகள் அக்கா.... உங்கள் பெயர் இனிமையாக உள்ளது :)

  • தொடங்கியவர்

கவிதை நன்றாக உள்ளது ... ரா . வி..!

 

"வானவில் இரவில்" தான் கொஞ்சம் முட்டுதுபோல் இருக்கு...!!

நினைச்சேன் சுவியண்ணா இல்லை சகரா அக்காவிடம் மாட்டுவேன் என்டு..... :D

 

என்ன சொல்லுரது.......... ஹ்ம்ம்ம்.....

 

வண்ணங்களால் நிறைந்த ரம்மியமான ஒரு இரவை பற்றி சொல்லுவதற்கு எளிதாகவும் நயம்படவும் இருந்தது "வானவில் இரவில்" ... 

 

 

டிஸ்கி :  சிறு வயதில் வானவில் ஏன் இரவில் வருவதில்லை என்ற சந்தேகம் தான் இந்த வார்த்தை வர காரணகர்த்தா :)

 

"

மகரந்த தேனை உண்டு புசித்த வண்டை,
 
பூக்கள் இல்லாத தேசத்தில் பறக்க விட்ட வெறுமை...!!!"
 
அழகான வரிகள் விஷ்வா...தொடர்ந்தும் எழுதுங்கள்..

 

 

நன்றிகள் சசியண்ணா......

 

 

அந்த தேசம் வேறு என்னவாக இருக்க முடியும்...!

இந்த இளம் வயதிலை ஒரு கனமான கவிதை.நாங்களும் ஒருகாலத்திலை இப்பிடித்தான் எழுதினாங்கள்

தம்பி விஸ்வா வாழ்த்துக்கள்

 

வரவிற்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் அண்ணா :)  பெயர் விளக்கம் தாங்கோவேன்...

மிக அருமை ராஜன் விஷ்வா...! அருமையான கவிவளம் உங்களுக்கு! வார்த்தைகளின் கோர்ப்பு மிக மிக அருமை!

தொடர்ந்து எழுதுங்கள் ! வாழ்த்துக்கள்! :)

 

அன்பிற்கு நன்றிகள் சகோ :) 

 

 

அதீதமான கற்பனைவளம் உங்களிடம் உள்ளது!

 

தொடர்ந்து எழுதுங்கள் , தம்பி!

 

யாழ் வந்த முதல் என்னை ஊக்குவிப்பவர் நீங்களும், திரு.கோமகன் அவர்களும்....

 

கோமகன் அவர்கள் யாழை தொடர முடியவில்லை என்பது வருத்தமளிக்கிறது... 

 

உங்கள் பேரன்பிற்கு நன்றிகள் புங்கை அண்ணா :) 

  • கருத்துக்கள உறவுகள்

 தயக்கத்துடந்தான் எழுதினேன் , விமர்சனத்தை சரியாகப் புரிந்து கொண்டதற்கு நன்றி  ரா . வி...!  :)

  • தொடங்கியவர்

 தயக்கத்துடந்தான் எழுதினேன் , விமர்சனத்தை சரியாகப் புரிந்து கொண்டதற்கு நன்றி  ரா . வி...!  :)

தம்பியிடம் தயக்கமென்ன சுவியண்ணா.... :)

Edited by ராஜன் விஷ்வா

  • 7 months later...
  • கருத்துக்கள உறவுகள்

மிக அருமையான கவிதையும் படமும். வாழ்த்துக்கள் விஷ்வா

  • தொடங்கியவர்

மிக அருமையான கவிதையும் படமும். வாழ்த்துக்கள் விஷ்வா

 

 ஆஹா தேடி எடுத்து வாழ்த்து சொன்ன அக்காவிற்கு என் அன்பு கலந்த நன்றிகள் :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.