Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூச்சடங்கிப்போன இறுதிப்பொழுதுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மூச்சடங்கிப்போன இறுதிப்பொழுதுகள் 
 
ஆண்டுகள் ஐந்தாகிப் போனதுவோ- எங்கள் உறவுகள் 
அணுஅணுவாய் வதைபட்டு
அல்லல்கள் பலபட்டு
துடிதுடித்து மரணித்து
ஆண்டுகள் ஐந்தானதோ
 
இரசாயன நெருப்புக்குள்
உறவுகள் வெந்து துடித்து
கருகி மடிந்த போது
இங்கிருந்து நாம் கதறி அழுதோம்
அவர்களைக் காப்பாற்ற முடியாமல் போய்
ஆண்டுகள் ஐந்தானதோ இன்று 
 
பாழும் குண்டு மழைக்குள் 
எங்கள் பச்சிளங்குழந்தைகள் 
பதைபதைத்து துடித்து மரணித்து
ஆண்டுகள் ஐந்தானதுவோ
 
சதிவலைகள் பின்னிய நாடுகள்
என்று தெரியாமல் அந்த நாடுகள்
ஓடிவந்து உதவாதோ என்று
இறுதிவரை நம்பிக்கையோடு காத்திருந்து
அன்று எங்கள் உறவுகள் உயிர்கள் 
ஊமையாய் அடங்கிப்போயின. 
அதனை எண்ணி எண்ணி நாம்
அழுது அரற்ற ஆரம்பித்து
ஆண்டுகள் ஐந்து ஓடியே போனது
 
பதுங்குகுழிகள் வெட்டி -உயிர்
பாதுகாக்கமுடியாத சாவு வலயத்துள்
பல்லாயிரம் எறிகணைகள் வீழ்ந்து
பதைபதைத்து உறவுகள் 
துடிதுடித்து உயிர்கருகி
ஆண்டுகள் ஐந்து மறைந்தே போனது
 
நம்பிக்கை வைத்த நாடுகள் தான்
கூடிச் சேர்த்து தம்மை கொன்றழித்தனர் என்ற
உண்மையை அறியாமலே 
எங்கள் உறவுகள் அன்று மடிந்தனர்
 
அயல்நாட்டின் ஆசியுடன்தான்
சிங்கள இனவாதம் தம்மை 
அழித்தது என அறியாமலே
அன்று அவர்கள் மூச்சடங்கிப்போனது
 
 
 
காட்டிக்கொடுப்பும் 
கூடியிருந்து குழிபறிப்பும்
நம்பிக்கைத் துரோகமும்
நயவஞ்சகச் செயல்களும்
கூடிக்கூத்தடித்து கொக்கரித்து-அன்று
எம் உறவுகளை கொன்றழித்தனர் 
 
இனியும் அந்த சதிவலைகளை 
இனங்கண்டு கீறிக்கிழிக்க
எம்மால் முடியாது போனால்
எங்கள் இனத்தின் அழிவுக்கு
நாம்தான் பொறுப்பாளர் ஆவோம் என்பதை
உணர்ந்து உறுதியோடு பயணிப்போம்
எம்மக்களைக் காத்திட இணைவோம்
 
 
மந்தாகினி 
 
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
இனியும் அந்த சதிவலைகளை 
இனங்கண்டு கீறிக்கிழிக்க
எம்மால் முடியாது போனால்
எங்கள் இனத்தின் அழிவுக்கு
நாம்தான் பொறுப்பாளர் ஆவோம் என்பதை
உணர்ந்து உறுதியோடு பயணிப்போம்
எம்மக்களைக் காத்திட இணைவோம்
 
நன்றி  கவிக்கு..
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மந்தாகினி, நீங்கள் இன்னும் எழுத வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை, ஒரு பெரும் சுமையாகிக் கனக்கின்றது!

 

எதையும் தாங்கும் வலுவில்லாத, சுமை தாங்கிகளாய், ஏதிலிகளாய், இன்னும் கூட எமது வாழ்வு நகர்வதை நினைக்கையில், வெறுமை மட்டும் மிஞ்சிப்போய் நிற்கின்றது!

 

ஏதோ உலகத்தின் தலைவிதியையே நிர்ணயிக்கும் மக்களாக எம்மை உருவகப்படுத்தி, அழித்து ஒழித்துவிட்டு, உலகம், எக்காளமிட்டுச் சிரிப்பது போல ஒரு பிரமை!

 

மனித நேயங்களுக்கு வடிகாலமைத்த, புத்தனின் பெயரால் நாம் அழிக்கப்படுவதை நினைக்க, மதங்கள் கூட, எமக்கெதிரான போரில், ஆயுதங்களுக்கு நிகராகப் போரிட்டன... போரிடுகின்றன!

 

சதிவலைகள் பின்னிய நாடுகள்
என்று தெரியாமல் அந்த நாடுகள்
ஓடிவந்து உதவாதோ என்று
இறுதிவரை நம்பிக்கையோடு காத்திருந்து
அன்று எங்கள் உறவுகள் உயிர்கள் 
ஊமையாய் அடங்கிப்போயின. 
அதனை எண்ணி எண்ணி நாம்
அழுது அரற்ற ஆரம்பித்து
ஆண்டுகள் ஐந்து ஓடியே போனது

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதயம் கனக்கின்றது.இமைகள் நனைகின்றன.இன்னும் நம்பிக்கைகளுடன் நாம்

  • கருத்துக்கள உறவுகள்

இதயம் கனக்கின்றது.இமைகள் நனைகின்றன.இன்னும் நம்பிக்கைகளுடன் நாம்

 

கனவுகள் ஒருநாள் மெய்ப்படும் மந்தாகினி.

கனத்த இதயத்துடன் பதிலிட வைக்கிறது உங்கள் கவிதை... 

 

ஆண்டுகள் ஐந்து உருண்டோடி விட்டது..  

 

அழிவிலிருந்து மீண்டும் அவலங்கள் முடியவில்லை... 

 

விட்ட தவ்றுகளையும், களைகளையும் சரி செய்ய ஐந்தாண்டுகள் போதவில்லையா ?

 

இல்லை மீட்பர் வருவார் எல்லாவற்றையும் ச்ரி செய்வார் என்று பொறுத்து கொண்டிருக்கிறோமா தெரியவில்லை.. 

 

சதி செய்த சதிகாரர்கள் ஒன்றினைந்து தண்டனையை பெற்றுத் தருவார்களா ?

 

மறப்பதும் மன்னிப்பதும் தானே தமிழர் மாண்பு, இதுவும் கடந்து போகக்கூடும் என்று நம்மை பார்த்து எண்ணுகிறார்களோ?

 

விடை தெரியாத கேள்விகள் கண்முன்னே ஆயிரமாயிரம்   :(

அருமை ...விடுதலையை அனைவரும் சேர்த்தே சுமக்க வேணும் ஆழமான வரிகள் வாழ்த்துக்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கவிதை மந்தாகினி... ”மீண்டெழுவோம் ஓர்நாள் அன்று வையம் வியக்கும் தமிழனின் நெருப்புக்குள் முழ்கியெழுந்த வரலாற்றை”

  • கருத்துக்கள உறவுகள்

காட்டிக்கொடுப்பும்
கூடியிருந்து குழிபறிப்பும்
நம்பிக்கைத் துரோகமும்
நயவஞ்சகச் செயல்களும்
கூடிக்கூத்தடித்து கொக்கரித்து-அன்று
எம் உறவுகளை கொன்றழித்தனர்

உறவுகளை கொன்றழித்ததோடு மீதம் இருப்பவர்களையும் கொன்று தின்று நாங்கள் தமிழர் என இன்று கொக்கரிப்போர் பற்றியும் எழுதுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.