Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
665_countrypp_sri_lanka_construction_hou
 
என் வீடும் அயலும் என் நினைவில் வந்து போனது
பக்கத்து வீட்டு பாட்டியும் பாட்டனும்
பொக்குவாய் கொண்டு சிரிக்கும் சிரிப்பும்
பாக்கு வெற்றிலை இடிக்கும் சத்தமும்
பழைய நினைவாய் வந்து போனது


எதிர் வீட்டு அக்காள் எமக்குத் தெரியாமல்
எம்வீட்டுப் பூக்களை பறித்து வந்ததும்
எதுவும் கூறாமல் கொடுப்புள் சிரித்து
எதிரி வேறென எமக்கே சொன்னதும்
இன்று நினைப்பினும் சிரிப்பு வருகுது
 
எங்கள் துலாவில் ஏக்கங்கள் அற்று
எவ்வளவு தண்ணியும் அள்ள முடித்ததும்
வாக்கால் வழிந்தோட கால்கள் நனைத்து
வரம்புடைந்து வளவு நனைந்ததும்
வீட்டுக்காரரின் வசைகள் கடந்து
வசந்தமாய் சிரித்ததும் நினைவில் நிக்குது

கிட்டிப் புள்ளும் கிளித்தட்டும்
கீரைக் கறியும் கிழங்குகளும்
பக்கத்து வீட்டில் பறித்த மாங்காய்
பருவம் தப்பிப் பழுத்த பலா
முறிந்து விழுந்த வாழைக்குலை
முற்றாது பறித்த மாவின் காய்
மூலையில் பூத்த முருக்கம் பூ
கோடியில் படர்ந்த முசுட்டை என
முழுவதும் நினைவில் நிற்கிறது

தொடருந்தின் தடம் பார்த்து
தொலைவுவரை தொடர்ந்ததுவும்
தூரத்தில் தெரிந்த பனந்தோப்பை
தாண்ட முடியாது  தயங்கியதும் 
தெரிந்த முகங்கள் தொலைவாய்ப் போக
தோப்புக்குள் இருந்த தோடம்பழத்தை
தொப்பியால் மூடிக் கடத்தியதும் ...

காலம் எங்கள் கனவு சிதைத்து
கோலங்கள் பல காட்டியே நிற்க
கனவுகள் கடந்து நாம் கண்விரிய
வடைக்காற்றில் அகப்பட்ட வள்ளமாய் 
வேர்கள் அறுத்து வெளிநாடு வந்தோம்
கோடை இடி என் தேசம் சிதைக்க
கொண்ட கொள்கை கோட்பாடிழந்து
காலத்தின் வசத்தில் கேள்விகளாகி
எத்திசையும் எம் திசையாக்கி
எல்லை மறந்து வாழ்கின்றோம்

ஏனோ எம் மண்ணின் நினைவு
எப்போதும் எம்முடனே இருக்கின்றது
ஆனாலும் எந்தையர் எமக்காய் வாழ
ஏதுமற்று ஏதிலியாய் இருக்கின்றது
காய்ந்து போன காட்சிகள் மட்டும்
கனவுகளின் மீட்டல்களோடு
கந்தலாகிப் போன சுற்றங்களுடன்
காற்றில் மட்டுமே கேட்கும் கானமாய்
கைவிட்டுப் போன எம் கனவுகள் போல
எப்போதாவது வரும் ஏக்கங்கள் தாங்கி
நிலையான நினைவாகி நிலைத்துப் போனது

 

  • கருத்துக்கள உறவுகள்

பிறகென்ன அக்காள் பூப் பறிக்க , தங்கச்சி மாங்காய் பறித்திருக்கிறியள் , யாருக்கும் சேதாரமில்லை...! :lol:

 

கவிதை நன்று சுமே...!  :D 

  • கருத்துக்கள உறவுகள்

எப்ப கவிதை தொகுதி வெளியீடு.... :D

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கவிதையை வாசிக்க, நான் அனுபவித்த ஒரு 'சம்பவம்' நினைவில் வருகின்றது!

 

ஒரு வெளிநாடொன்றில், ஒரு பெரிய பதவியிலுள்ள, அந்த உள்ளூர் அதிகாரியுடன் சென்று, ஒரு கட்டிடத்துக்காக 'அத்திவாரம்' வெட்டப்படும் இடத்தைப் பார்வையிட வேண்டி ஏற்பட்டது!

 

கொட்டு, சூட்டு, ரை எல்லாம் கட்டி, அவரும் வடிவா வெளிக்கிட்டுத் தான் வந்தார்!

 

அப்போது, அந்த அத்திவாரக் கிடங்கிலிருந்து, ஒரு பெரிய ;அகழான்' ஒன்று வெளியே பாய்ந்து ஓடியது!

 

அவ்வளவு தான்..! 

 

தனது பதவி, போட்டிருக்கும் உடுப்பு, எல்லாவற்றையும் மறந்து, அவர் அந்த அகழானைத் துரத்திய வேகம் இன்னும் மனதில் நிற்கின்றது!

 

அவ்வளவு வலிமை வாய்ந்தவை, இளமைக்காலத்து நினைவுகளும், அந்தச் சூழல்களும்!

 

நன்றிகள், சுமே!

  • கருத்துக்கள உறவுகள்

படத்தில் உள்ள கட்டுமானம் சிமெந்துக்கல் அரிந்து கட்டியதுபோல் உள்ளது. மிகவும் விரயமான கட்டுமான வகை இது.

 

கவிதை நன்று சுமோ அக்கா.. :D

கவிதைக்கு நன்றி சுமோக்கா...நன்றாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
படைப்புக்குப் பாராட்டுகள்!
 
என்வீடும் அயலும் ஏன் எம்மரங்களும் தோப்பும் துலாவும் நிலவும் மீண்டும் எப்போது எம்வசமாகும் என்ற ஏக்கமே எம்மை துரத்திவருகிறது.
  • கருத்துக்கள உறவுகள்

பழைய நினைவுகள் எப்போதும் இனிமையாகத்தான் இருக்கும். இப்போதெல்லாம் இப்படியான நினைவுகள் வராமல் தடுக்க எந்த நேரமும் பிஸியாக இருப்பேன்!

இந்த கவிதை மட்டுமல்ல அண்மையில் சுமோ எழுதிய அனைத்து கவிதைகளுமே மிக அருமை .நான் முகபுத்தகத்தில் தான் அனைத்தையும் வாசித்தேன் .

இடையில் மேசொவிற்கு என்ன நடந்தது. ஒரே கவிதை மழை பொழிகின்றார். எல்லாம் அருமையிலும் அருமை .

தொடருங்கள் புத்தகமாக்கி வெளியிடுங்கள் .

முற்கூட்டிய வாழ்த்துக்கள் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பகிர்ந்த சுவி அண்ணா, புத்தன், புங்கை, இசை, தமிழினி, நொச்சி,கிருபன், அர்ஜுன், நிழலி, நந்தன், நிலா அக்கா,அஞ்சரன் ஆகிய உறவுகளுக்கு நன்றி.


பிறகென்ன அக்காள் பூப் பறிக்க , தங்கச்சி மாங்காய் பறித்திருக்கிறியள் , யாருக்கும் சேதாரமில்லை...! :lol:

 

கவிதை நன்று சுமே...!  :D

 

அதுகும் செய்யாட்டி பிறகென்ன அண்ணா

 


எப்ப கவிதை தொகுதி வெளியீடு.... :D

 

இந்த வருடம் இல்லை :D
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கவிதையை வாசிக்க, நான் அனுபவித்த ஒரு 'சம்பவம்' நினைவில் வருகின்றது!

 

ஒரு வெளிநாடொன்றில், ஒரு பெரிய பதவியிலுள்ள, அந்த உள்ளூர் அதிகாரியுடன் சென்று, ஒரு கட்டிடத்துக்காக 'அத்திவாரம்' வெட்டப்படும் இடத்தைப் பார்வையிட வேண்டி ஏற்பட்டது!

 

கொட்டு, சூட்டு, ரை எல்லாம் கட்டி, அவரும் வடிவா வெளிக்கிட்டுத் தான் வந்தார்!

 

அப்போது, அந்த அத்திவாரக் கிடங்கிலிருந்து, ஒரு பெரிய ;அகழான்' ஒன்று வெளியே பாய்ந்து ஓடியது!

 

அவ்வளவு தான்..! 

 

தனது பதவி, போட்டிருக்கும் உடுப்பு, எல்லாவற்றையும் மறந்து, அவர் அந்த அகழானைத் துரத்திய வேகம் இன்னும் மனதில் நிற்கின்றது!

 

அவ்வளவு வலிமை வாய்ந்தவை, இளமைக்காலத்து நினைவுகளும், அந்தச் சூழல்களும்!

 

நன்றிகள், சுமே!

 

உண்மைதான் ஆழ்மனதில் பதிந்து போயுள்ள எம் நினைவுகள் சாகும் வரையும் இருந்துகொண்டேதான் இருக்கும்

படத்தில் உள்ள கட்டுமானம் சிமெந்துக்கல் அரிந்து கட்டியதுபோல் உள்ளது. மிகவும் விரயமான கட்டுமான வகை இது.

 

கவிதை நன்று சுமோ அக்கா.. :D

 

என் வீடு இல்லையப்பா இசை

 

கவிதைக்கு நன்றி சுமோக்கா...நன்றாக உள்ளது.

 

நன்றி தமிழினி

 

படைப்புக்குப் பாராட்டுகள்!
 
என்வீடும் அயலும் ஏன் எம்மரங்களும் தோப்பும் துலாவும் நிலவும் மீண்டும் எப்போது எம்வசமாகும் என்ற ஏக்கமே எம்மை துரத்திவருகிறது.

 

 

எம் ஊரின் விடயங்கள் சொல்ல எத்தனை எத்தனையோ இருக்கே ஏக்கங்களாக.

 

பழைய நினைவுகள் எப்போதும் இனிமையாகத்தான் இருக்கும். இப்போதெல்லாம் இப்படியான நினைவுகள் வராமல் தடுக்க எந்த நேரமும் பிஸியாக இருப்பேன்!

 

எந்த நேரமும் நாமும் தான் பிசி. அதையும் மீறி வந்துவிடுகிறது ஞாபகங்கள்

இந்த கவிதை மட்டுமல்ல அண்மையில் சுமோ எழுதிய அனைத்து கவிதைகளுமே மிக அருமை .நான் முகபுத்தகத்தில் தான் அனைத்தையும் வாசித்தேன் .

இடையில் மேசொவிற்கு என்ன நடந்தது. ஒரே கவிதை மழை பொழிகின்றார். எல்லாம் அருமையிலும் அருமை .

தொடருங்கள் புத்தகமாக்கி வெளியிடுங்கள் .

முற்கூட்டிய வாழ்த்துக்கள் .

 

எல்லோரும் ஒரேபோல் இருப்பதில்லை. கதை எழுதுவதற்கு தற்காலிகமாக ஓய்வு கொடுத்துவிட்டு கவிதை எழுதிப் பழகுகிறேன் அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

இளமைக்கால நினைவுகள் பசுமையாக மனதில் எப்போதும் அழியாமற் பதிந்திருக்கும். 

கவிதைக்கு நன்றிகள் சுமேரியர்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாத்தியார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.