Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

' கமகமக்கும் எலிப் பொரியல்'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆ, இந்த தலைப்பை நான் நான் பார்க்கவில்லையே இவ்வளவு நாளும்....

சா நேற்றும் 2 எலி அம்புட்டுது, செய்முறை தெரியாததால விட்டுட்டன்....:D... ஆமா சிக்கன் 65 மாதிரி, ரட் 65 ஏதாச்சும் இருக்கா?? :lol:

அ வயித்தை பிறட்டுதே

அய்யோ.. நல்ல டக்டரா போய் பாருங்கம்மா... யாழ் உறுப்பினர்களுக்கு நல்ல செய்தி கிடைத்தாலும் கிடைக்கும்... :P :lol::lol: அதுசரி இப்ப என்னமாதிரி? பையனா பொண்ணா? 10 மாதத்துக்கு முதல் எழுதிய தலைப்பு அதுதான்.... :lol::o:D

  • Replies 77
  • Views 13.5k
  • Created
  • Last Reply

ஆ, இந்த தலைப்பை நான் நான் பார்க்கவில்லையே இவ்வளவு நாளும்....

சா நேற்றும் 2 எலி அம்புட்டுது, செய்முறை தெரியாததால விட்டுட்டன்....:D... ஆமா சிக்கன் 65 மாதிரி, ரட் 65 ஏதாச்சும் இருக்கா?? :lol:

அய்யோ.. நல்ல டக்டரா போய் பாருங்கம்மா... யாழ் உறுப்பினர்களுக்கு நல்ல செய்தி கிடைத்தாலும் கிடைக்கும்... :P :lol::lol: அதுசரி இப்ப என்னமாதிரி? பையனா பொண்ணா? 10 மாதத்துக்கு முதல் எழுதிய தலைப்பு அதுதான்.... :o:D:D

காப்பியம்மா.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எனன தான் இங்கு நடக்குதோ?

  • கருத்துக்கள உறவுகள்

காப்பியம்மா.. :lol:

ஓய் குட்டித்தம்பி, இன்னா லொள்ளா? இப்படி சந்தேக கண்ணோட பார்த்தால் நான் எழுதிய கருத்து தப்பா தான் தெரியும். நான் சொன்ன கருத்தை உற்றுப்பாருங்க.. பார்த்தாச்சா, அதன் அர்த்தம் என்னவெனில்....

கறுப்பியம்மா நல்ல டக்டரா பாருங்கம்மா என்று சொன்னது, கறுப்பி வயிற்றை பிரட்டுது எண்டு சொன்னதால, அதனால் யாழ்கள உறுப்பினர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும் என்று எதற்காக சொன்னேன் என்றால், கறுப்பி பூரண குணமடைந்தால், யாருக்கு லாபம்? யாழ்கள உறுப்பினர்களுக்குத்தானே? ஏனெனில் யாழில் அன்றாடம் செய்திகளை சுட சுட ஒட்டுறவர் யார்? கறுப்பிதானே?

ஆ அதுக்கப்புறம், ஆணா பெண்ணா என்று கேட்டேன் தானே? அது எதற்காகவெனில்,ஏனக்கு, கறுப்பி ஆணா? இல்லை பெண்ணா என்ற சந்தேகம், 10, 11 மாதங்களுக்கு மேலாக எனக்கு இருக்கின்றது, அதனால் தான். :lol:

ஆகமொத்தம், நான் கேட்ட கேள்விகள் புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன். எனிவே. எலிப்பொரியலை சுவைத்து சுவைத்து சாப்பிடுங்கள்... :P

சோமாலியாவி எருமை மாடு சைசில எலிகள் நிறைய இருக்கப்பு.. ஒன்றபிடிச்சல் டிபன், லன்ஞ், டின்னர் எண்டு வெட்டலாம்.. ஜம் ஜம்.... :o

இன்னா யமுனா வையித்தை பிரட்டுதோ?? :lol::lol: :angry:

Edited by Danklas

டங்கு பாவம் சோமாலியாவில உது தான் சாப்பாடோ அப்ப நான் வரக்க இதை தான் தருவீங்களோ

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

டங்கு பாவம் சோமாலியாவில உது தான் சாப்பாடோ அப்ப நான் வரக்க இதை தான் தருவீங்களோ

:lol:

றோயல் பமிலியை பற்றி புரிந்து கொண்டது இதுதானா?? நேக்கு அழுகை அழுகையா வருதோ என்னோ? எப்படி இப்படி ஒரு வார்த்தையை கேட்க மனசு வந்திச்சு நோக்கு?? தனிய எலிப்பொரியளோட விட்டுவனா?? பாம்பு, தவளை பல்லி, ஓணான், எண்டு ஜாமாய்ச்சிடமாட்டன்,,, யூ டோன்ற் வெறி ஜம்மு. :lol::lol:

பூனை ஒன்று திரியுது, அதை பிடித்து நாரதர் ஸ்டைலில பொரியல் பண்ணிடுவம் :P :lol::lol:

றோயல் பமிலியை பற்றி புரிந்து கொண்டது இதுதானா?? நேக்கு அழுகை அழுகையா வருதோ என்னோ? எப்படி இப்படி ஒரு வார்த்தையை கேட்க மனசு வந்திச்சு நோக்கு?? தனிய எலிப்பொரியளோட விட்டுவனா?? பாம்பு, தவளை பல்லி, ஓணான், எண்டு ஜாமாய்ச்சிடமாட்டன்,,, யூ டோன்ற் வெறி ஜம்மு. :lol::lol:

நேக்கு உங்களை நினைகும் போது புல்லரிகுது ஆற்றில எல்லாரும் செளக்கியம் தானே மாமியை கேட்டதா சொல்லுங்கோ

:P

பூனை ஒன்று திரியுது, அதை பிடித்து நாரதர் ஸ்டைலில பொரியல் பண்ணிடுவம் :P :lol::lol:

:P

  • 5 years later...
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில் பொரியலைப் பற்றித் தேடியபோது இந்த எலிப் பொரியல் தட்டுப்பட்டது. அதிகளவு எலிகள் இருந்தும் அதை ஏன் உணவுப் பண்டமாக தமிழர்கள் பாவிப்பதில்லை என்ற கேள்வியும் வந்தது!

யாழ் களத்தில் பொரியலைப் பற்றித் தேடியபோது இந்த எலிப் பொரியல் தட்டுப்பட்டது. அதிகளவு எலிகள் இருந்தும் அதை ஏன் உணவுப் பண்டமாக தமிழர்கள் பாவிப்பதில்லை என்ற கேள்வியும் வந்தது!

 

தமிழர்களுக்கு இருக்கும் நல்ல குணம் தமக்கு உதவும் உயிர்களை மட்டும் கொன்று சாப்பிடுவது. பால் தரும் ஆடு, மாடு, முட்டை இடும் கோழி போன்றவற்றைத் தான் சாப்பிடுவினம். எலி விவாசாயிகளுக்கு அதிகம் தொல்லை கொடுக்கும் பிராணி என்பதால் அதனுடன் கோபித்து கொண்டு அதைச் சாப்பிடுவது இல்லை,

இண்டைக்கு சாப்பிட்ட மாதிரித்தான் .

இளையபாரதியின் வானொலியில் ஒருவர் வந்து ஒரு பகிடி சொல்லி கேட்டவர் பலர் சத்திஎடுத்தார்கள்.

(3) ஒவ்வொன்றாக எடுத்து லேசான சூட்டில் சிறிது வாட்டவும்.

image006vf6.jpg

மச்சம் சமைத்தும் பொறிமுறையில் தவறே. :( 

 

இது மென்மையாக வாட்டுவதில்லை. இது எலியின் தோலின் மயிரை கருக்கும் வழி. இது அடர் மயிர் இல்லாத எலி என்பதால் தோலையும் தவறவிடவில்லை.  :D

மச்சம் சமைத்தும் பொறிமுறையில் தவறே. :(

 

இது மென்மையாக வாட்டுவதில்லை. இது எலியின் தோலின் மயிரை கருக்கும் வழி. இது அடர் மயிர் இல்லாத எலி என்பதால் தோலையும் தவறவிடவில்லை.  :D

 

பிறகு. பிடிச்சுக் கொண்டு இருக்கின்ற வாலை என்ன செய்வினம்?

 

பொரியலில் ஆண் எலிப் பொரியலா பெண் எலிப் பொரியலா டேஸ்டாக இருக்கும்?

அப்படியே பொரிச்சு சாப்பிடும் போது வீட்டில் இருக்கும் பூனைக்கு கொடுப்பினமா இல்லையா?

பிறகு. பிடிச்சுக் கொண்டு இருக்கின்ற வாலை என்ன செய்வினம்?

 

பொரியலில் ஆண் எலிப் பொரியலா பெண் எலிப் பொரியலா டேஸ்டாக இருக்கும்?

அப்படியே பொரிச்சு சாப்பிடும் போது வீட்டில் இருக்கும் பூனைக்கு கொடுப்பினமா இல்லையா?

பெண் என்னு ஒரு பெயர் கேட்டால்  செத்தாலும் விடாமல் வாலைப் பிடியுங்க.  ஆணுன்னா வாலை அந்த இடத்திலேயே ஒட்ட நறுக்கிடுங்க. 

 

இறைச்சி என்டால் கறுப்புக் கிடாய் தான் நல்லது என்று சொல்லுவாங்க. இது வெள்ளையாயிற்றே. ஒப்பசிட்தனுங்க நல்லது. அப்புறம் என்ன அது பெண்தான்  ஆனாலும் பெண்பக்கம் என்றால் முட்டை போட்டதென்னா பொரிக்கவே விட்டுடுங்கா.  இட்டெலின்ன தொட்ட கொஞ்சம் சாம்பார் தேடிக்கொள்ளுங்க. சுவையாய் இருக்கும்.

 

வேட்டை நாயுக்கு முயலிலை பங்கு கிடைக்காது. நீங்க கேட்பதை பார்த்தால் விரதம் பூசை பற்றி பேசுறீங்க போலிருக்கு.  விரதமாக காய்கறி சமையல் என்றால் காகத்துக்குதான் பங்கு. பார்த்து செய்யுங்க.  விரத்துக்கு பசி எடுத்தால் பூனை வரும் வரை பார்த்துகொண்டு இருக்க முடியாது. நாளை கறியுக்கு பாம்பு ஒன்று பிடித்து பெட்டியில்  வைத்திருக்கிறீரகளானால் அதுக்கு கொஞ்சம் போட்டுட்டு சாப்பிடுங்க.  :D

Edited by மல்லையூரான்

ஊரில் வயல் எலிகளை பிடித்து, முதலில் பண்ணாடை போட்டு சுட்டபின் தோலை இலகுவாக உரிக்கலாம், உரித்தபின் மசாலாக்களை போட்டு பிரட்டி எடுத்து கள்ளுடன் சாப்பிட என்ன ஒரு சுவை. வயலில் எலிப்பொத்துகளை மாரிகாலங்கள்ளிலும் அறுவடை நேரத்திலும் இலகுவாக கண்டுபிடிக்கலாம்.

 



அணிலின் சுவையும் அந்த மாதிரி

 

ஊரில் வயல் எலிகளை பிடித்து, முதலில் பண்ணாடை போட்டு சுட்டபின் தோலை இலகுவாக உரிக்கலாம், உரித்தபின் மசாலாக்களை போட்டு பிரட்டி எடுத்து கள்ளுடன் சாப்பிட என்ன ஒரு சுவை. வயலில் எலிப்பொத்துகளை மாரிகாலங்கள்ளிலும் அறுவடை நேரத்திலும் இலகுவாக கண்டுபிடிக்கலாம்.

 

அணிலின் சுவையும் அந்த மாதிரி

சரியாகத்தான் சொல்கிறீர்களா?

 

அகழான் என்பது எலி மாதிரி இருக்கும்(பெரியது) விவாசிகள் விரும்பி சாப்பிடும் இன்னொரு பிராணி.

 

http://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D

இப்பத்தான் தெரியுது எலி சாப்பிடுவதாக பலர் அகழானை தான் கூறியிருக்கிறார்கள்?

 

எலி இயல்பாக ஊத்தை மிருகமாக கொள்ளப்படுவது. அகழான் சுத்தமானதாக கொள்ளப்படுவது.  ஒன்று பன்றி போன்ற வாழ்க்கை நடத்துவது. சாகடை நீரை விரும்புவது. மற்றயது பசு போல சுத்தமான தாவர பட்சனி.

 

இதுவும் ஒரு எலிதான். 

http://www.google.com/search?q=capybara&hl=en&source=lnms&tbm=isch&sa=X&ei=7_GGUc-sEOvi4AOvk4HIAw&sqi=2&ved=0CAcQ_AUoAQ&biw=1280&bih=899

 

 

:lol:

Edited by மல்லையூரான்

ஆமா அகழான்தான்

 

நிறைவெறியில் யாருக்கு தெரியும் எலி எது அகழான் எதுவென்று :lol:

 

 

  ஒன்று பன்றி போன்ற வாழ்க்கை நடத்துவது. சாகடை நீரை விரும்புவது. மற்றயது பசு போல சுத்தமான தாவர பட்சனி.

 

 

பன்றியும் 99 வீதமான சைவ (மரக்கறி) விலங்குதான். ஏன் அதனை முஸ்லிம்களும், பலரும் வெறுக்கினம்  என்று தெரியுமா? 

 

வெக்கை தாங்க முடியாது பன்றி மலத்தில் குளித்தாலும் கோழி மாதிரி மலத்தை உண்பதில்லை என்பதாவது தெரியுமா?

பன்றியும் 99 வீதமான சைவ (மரக்கறி) விலங்குதான். ஏன் அதனை முஸ்லிம்களும், பலரும் வெறுக்கினம்  என்று தெரியுமா? 

 

வெக்கை தாங்க முடியாது பன்றி மலத்தில் குளித்தாலும் கோழி மாதிரி மலத்தை உண்பதில்லை என்பதாவது தெரியுமா?

கோழி சுத்தம் என்று நான் சொல்ல வில்லை. பன்றி அசுத்த விலங்கு என்பதால் சாப்பிட வேண்டாம் என்று சொல்லவிலை. பசுவைச் சுத்தம் என்பதால் சாப்பிடலாம் என்று சொல்ல வில்லை.

 

சாக்கடை மிருகங்கள் கூர்ப்பின் இயல்பால் தம்மைத்தாம் பாதுகாகின்றனவாக இருக்கலாம். ஆனால் சாக்டையில்  தவழும் மிருகங்கள் ஒட்டுணிகள் காவிகளாக இருக்கின்றன. சாக்கடை சாதரண கிருமிகளின் விளைநிலம் மட்டும் அல்ல, ஒட்டுண்ணிகளின் விளை நிலமுமாகும். கோழி சாக்கடைக்குள் காணப்படத்தக்க மலம் எல்லாவற்றயும் உண்ணாது. தெரிந்துதான் உண்ணும். அது சாப்பிடுவதில் சத்துப்பொருள்களதான் உறிஞ்சப்படுகிறது. கூர்பால் மலத்து கிருமிகள் அதில் பரவாது தடுக்கப்படுகிறது. அது சாப்பிடும் உணவு உணவுக் கால்வாய்க்குள்தான் பிரயாணம் செய்யும்.  இதனால் சாக்கடைக்குள் தவழாத கோழி பன்றியை விட சுத்தமானது.

 

மனிதர்கள் சாப்பிடும் மிருகங்கள் சைவமாகத்தான்(தவர பட்சணிகளாகத்தான்) இருக்கின்றன. எலிவகை (Rodents) எல்லாமே தாவர பட்சணிகள்.  ஆனால் பறவைகளும் மீன் இனங்களும் இந்த பொதுவிதிக்குள் வருவதிலை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு இருக்கும் நல்ல குணம் தமக்கு உதவும் உயிர்களை மட்டும் கொன்று சாப்பிடுவது. பால் தரும் ஆடு, மாடு, முட்டை இடும் கோழி போன்றவற்றைத் தான் சாப்பிடுவினம். எலி விவாசாயிகளுக்கு அதிகம் தொல்லை கொடுக்கும் பிராணி என்பதால் அதனுடன் கோபித்து கொண்டு அதைச் சாப்பிடுவது இல்லை,

 

6.jpg

 

எலி, பிள்ளையாரின் வாகனம் என்பதால்... சாமிக்குத்தம் வந்திடுமென்று தான்... தமிழர் எலியை, சமையலில் சேர்ப்பதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பொறிவைத்து எலி பிடிப்பது வழக்கம். இங்கு எலிவைத்து சீனத்துச் சொந்தங்களை இனங்காட்டியுள்ளார் நாரதர். சீனத்துச் சொந்தங்கள்தானே என்று ஏமாந்துவிடாதீர்கள் யாழ்கள வீரத் தளபதிகளே, இவர்கள் அனைவரும் சீனத்து உளவாளிகள், ஜாக்கிரதை.

 

  • கருத்துக்கள உறவுகள்

சரியாகத்தான் சொல்கிறீர்களா?

 

அகழான் என்பது எலி மாதிரி இருக்கும்(பெரியது) விவாசிகள் விரும்பி சாப்பிடும் இன்னொரு பிராணி.

 

இதுவும் ஒரு எலிதான். 

 

 

அகழான் விவாசிகள் (விவசாயிகள்) விரும்பி சாப்பிடும் பிராணி அல்ல. புளிச்ச கள்ளின் விசுவாசிகள் களிக்க உண்ணும் பிராணிகளில் ஒன்று.

  • கருத்துக்கள உறவுகள்

பன்றியும் 99 வீதமான சைவ (மரக்கறி) விலங்குதான். ஏன் அதனை முஸ்லிம்களும், பலரும் வெறுக்கினம்  என்று தெரியுமா? 

 

வெக்கை தாங்க முடியாது பன்றி மலத்தில் குளித்தாலும் கோழி மாதிரி மலத்தை உண்பதில்லை என்பதாவது தெரியுமா?

 

சார்.. நீங்கள் பன்றியைப் போற்றியதால் இரண்டு செய்தி சொல்ல வேணும்.. :D

 

இந்தியாவில் நகர்ப்புறங்களில் இருக்கும் கறுப்பு பன்றிகளின் சிறப்பு உணவு என்ன? :rolleyes: (நினைக்கவே வயித்தைப் புடுங்குது.. ஆனால் இந்தப் பன்றியை ஒரு சிறு தொகுதியினர்தான் அங்கே உண்பார்கள். :unsure:

 

இரண்டாவது இங்கே சைவமாக வளரும் வெள்ளைப் பன்றிகள் பற்றியது.. வான்கூவரில் Robert Picton பல விலைமாதர்களை பல ஆண்டுகளாக கொன்று வந்தான்.. பண்ணையில்தான் வைத்துக் கொல்வார். அந்த விலை மாதர்களின் ஒரு சில எலும்புகளைத் தவிர பெருமளவில் ஒன்றும் கிடைக்கவில்லை. பன்றிகளுக்கு நல்ல உணவாம். :(:unsure:

அகழான் விவாசிகள் (விவசாயிகள்) விரும்பி சாப்பிடும் பிராணி அல்ல. புளிச்ச கள்ளின் விசுவாசிகள் களிக்க உண்ணும் பிராணிகளில் ஒன்று.

 

நானும் அந்த பக்கம்தான். வயலில் பிடிக்கும் அகழானை சுட்டு சிறுவர்கள் வரை சாப்பிட்டதை கண்டிருக்கிறேன். நன்றாக இருக்கிறது என்று சுவைத்துத்தான் சாப்பிடுவார்கள். நான் சிறுவனாக இருந்தபோது சாப்பிட என்னைக் கூட அழைத்து இருக்கிரார். எனது பல விவசாய நண்பர்கள் கள்ளுக் குடியாதவர்கள். ஆனால் நெல்லுவெட்டுக்கு பிறகு பிடிபடும் அகழானை சுட்டு சாப்பிடும் போது எங்களுடன் இருந்த பெண்பிள்ளைகளைக் கூட  ஒதுக்கிவைப்பதில்லை.  நான் காண வயலில் பொந்து வெட்டி பிடித்து அகழான் சுட்ட இடங்களில்  கள்ளுப் பிழா கொண்டுவரப்பட்டதை கண்ட ஞாபகம் இல்லை.  ஒரு வேளை சிலரால் அது கள்ளுக்கு சுவையானதாக கொள்ளப்படலாம். நான் அவர்கள் பிடித்த அகழானை வயலை விட்டு எடுத்துபோனால்  என்ன செய்கிறார்கள் என்பதை அறிந்து வைத்திருக்கவில்லை.

 

பெருந்தன்மையுடன் எழுத்து பிழையை சுட்டிக்கட்டியதற்கு நன்றி.

சார்.. நீங்கள் பன்றியைப் போற்றியதால் இரண்டு செய்தி சொல்ல வேணும்.. :D

 

இந்தியாவில் நகர்ப்புறங்களில் இருக்கும் கறுப்பு பன்றிகளின் சிறப்பு உணவு என்ன? :rolleyes: (நினைக்கவே வயித்தைப் புடுங்குது.. ஆனால் இந்தப் பன்றியை ஒரு சிறு தொகுதியினர்தான் அங்கே உண்பார்கள். :unsure:

 

இரண்டாவது இங்கே சைவமாக வளரும் வெள்ளைப் பன்றிகள் பற்றியது.. வான்கூவரில் Robert Picton பல விலைமாதர்களை பல ஆண்டுகளாக கொன்று வந்தான்.. பண்ணையில்தான் வைத்துக் கொல்வார். அந்த விலை மாதர்களின் ஒரு சில எலும்புகளைத் தவிர பெருமளவில் ஒன்றும் கிடைக்கவில்லை. பன்றிகளுக்கு நல்ல உணவாம். :(:unsure:

 

பன்றி யோடு சேர்ந்த கன்றும்... என்பது பழமொழி. இது பன்றியின் சாதாரண நடத்தையை சுட்டுகிறது. பண்ணையில் பன்றி எப்படி வளர்க்கப்படுகிறது என்பது பண்ணையாரின் விருப்பு வெறுப்புடன் சம்பந்தப்பட்டது.

 

மேற்கு நாடுகளில் பசுக்களுக்கு கோழி இறைச்சி உணவுடன் கலக்கப்படுவதும் ஒரு விவாதப்பொருள்.  அந்த நிலையில் பசுக்கள் தவர பட்சணி இல்லை என்றும் சொல்ல முடியாது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.