Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த வேலூர் வீரர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1406535696-4192.jpg
 

 

ஸ்காட்லாந்து கிளாஸ்கோவில் நடந்து வரும் காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்று வேலூர் வீரர் சதீஷ்குமார் சாதனை படைத்துள்ளார்.

71 நாடுகள் கலந்து கொண்ட 20 ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஸ்காட்லாந்து கிளாஸ்கோவில் நடந்து வருகிறன.

இதில் வேலூர் சத்துவாச்சாரி புது தெருவைச் சேர்ந்த இந்திய வீரர் சதீஷ் குமார் சிவலிங்கம் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.

சதீஷ்குமாரின் தந்தை சிவலிங்கம் முன்னாள் ராணுவ வீரர். இவர் தற்போது விஐடி பல்கலைக்கழகத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். தாய் தெய்வானை.

சதீஷ்குமாரின் தந்தை சிவலிங்கமும் பளுதூக்கும் வீரர். இவர் 1985 முதல் 87 வரை நடந்த தேசிய பளுதூக்கும் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இவர் ஜெபல்பூரில் நடந்த போட்டியில் தங்க பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தந்தை சிவலிங்கத்தை ரோல்மாடலாகக் கொண்டு தானும் ஒரு பளு தூக்கும் வீரராக வரவேண்டும் என்பதில் சதீஷ்குமார் உறுதியாக இருந்தாகக் கூறப்படுகிறது.

சதீஷ் குமார் 10ஆம் வகுப்பு படித்த போது அந்த பகுதியில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பளுதூக்க ஆரம்பித்தார்.

இந்நிலையில் அவரது திறமையைக் கண்டு வியந்த உடற்பயிற்சி கூட நிர்வாகிகள் சதீஷ் குமாரை வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பளுதூக்கும் பயிற்சிக் கூடத்தில் சேர்த்தனர்.

1406535890-1942.jpg
அங்கிருந்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றார். பள்ளி மாணவர்கள் அளவிலான தேசிய பளுதூக்கும் போட்டியில் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

இந்நிலையில் தென்னக ரயில்வேயில் அவருக்கு வேலை கிடைத்தது. தென்னக ரயில்வே அணி வீரராக களத்தில் இறங்கி, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றார். இதன் மூலம் இந்தியா சார்பில் வெளிநாடுகளில் நடந்த போட்டிகளில் பங்கேற்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

2010 ஆம் ஆண்டு பல்கோரியாவிலும், 2011 ஆம் ஆண்டு தென் கொரியாவிலும் நடந்த ஆசிய போட்டிகளில் கலந்து கொண்டார். 2012 ஆம் ஆண்டு அபியாவில் நடந்த பளுதூக்கும் போட்டியிலும், 2013 ஆம் ஆண்டு நடந்த பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்றார்.

இந்த சாதனையாளர் சதீஷ்குமார் காமன்வெல்த் போட்டியில் 77 கிலோ எடை பிரிவில் 149 கிலோ எடை தூக்கி தங்க பதக்கம் வென்று மேலும் ஒரு சாதனை படைத்துள்ளார்.

காமன்வெல்த் போட்டிகளில் இந்த பிரிவில் 148 எடை இதுவரை தூக்கியுள்ளனர். ஆனால் சதீஷ்குமார் 149 கிலோ தூக்கி சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்காட்லாண்ட்: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தமிழக வீரர் சதீஸ் சிவலிங்கம் தங்க பதக்கம் வென்றுள்ளார்.

காமன்வெல்த் 4 வது நாள், விளையாட்டுப் போட்டிகளில், 77 கிலோ எடைப்பிரிவு பளுதூக்கும் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த சதீஸ் சிவலிங்கம் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதே எடைப்பிரிவில் இந்தியாவின் ரவி கட்லு இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.

22 வயதான சதீஸ் சிவலிங்கம் 149 மற்றும் 179 ஆகிய எடைகளை தூக்கி முதலிடத்தைப் பிடித்தார். கடந்த 2010 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியிலும் இவர் தங்கப் பதக்கம் பெற்றிருந்தார். அதேபோல் ரவி கட்லு 142 மற்றும் 175 கிலோ எடைகளை தூக்கி வெள்ளிப் பதக்கத்திற்கு முன்னேறினார்.

முன்னதாக நடைபெற்ற மகளிர் 63 கிலோ எடைப்பிரிவில், இந்தியாவின் பூனம் யாதவ் வெண்கலப்பதக்கம் வென்றார். ஸ்நாட்ஜ் மற்றும் க்ளீன் அண்ட் ஜெர்க் பிரிவுகளில் மொத்தம் 202 எடையைத் தூக்கி பூனம் யாதவ் வெண்கலம் வென்றார். இந்தப்பிரிவில் சிறப்பாக செயல்பட்ட நைஜீரிய வீராங்கனைகளான ஏடென்ஸ்மி தங்கப் பதக்கத்தை வென்றார்.

சதீஷ் பெருமிதம்...

காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதலில் 77 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்ற வேலூரை சேர்ந்த சதீஷ் சிவலிங்கம் பெருமிதத்துடன் கூறும்போது, ''காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதலில் தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. தங்கம் வெல்வதற்காக இரண்டரை ஆண்டுகளாக தீவிர பயிற்சி எடுத்து வந்தேன். ஆசிய விளையாட்டுப் போட்டி, ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே எனது அடுத்த லட்சியம். அரசின் உதவி, ஊக்கம் இருந்தால் பல திறமையான வீரர்கள் உருவாகுவார்கள். பயிற்சியாளர் உதவியுடன் முறையாக பயிற்சி எடுத்தால் வெற்றி பெறலாம்" என்றார்.

சதீஷ் பெற்றோர் மகிழ்ச்சி...

மகன் சதீஷ் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிப்பதாக வேலூர் சத்துவாச்சாரியில் வசிக்கும் சதீஷின் பெற்றோர் சிவலிங்கம்-தெய்வானை தெரிவித்துள்ளனர். மேலும், சதீஷுக்கு, அர்ஜுனா விருது கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க சதீஷ் தேர்வு பெற்றுள்ளதாக கூறிய அவரது பெற்றோர், ஒலிம்பிக்கிலும் சதீஷ் தங்கம் வெல்வார் என நம்பிக்கை உள்ளது என்றனர்.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=30659

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொப்புள்கொடி உறவு சதீஷ் குமார் சிவலிங்கம் அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் மேலும் சாதனைகள் புரிந்திடவும் வாழ்த்துக்கள் !

  • கருத்துக்கள உறவுகள்

சதீஷ்குமாருக்கு வாழ்த்துக்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

தொப்புள்கொடி உறவு சதீஷ் குமார் சிவலிங்கம் அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் மேலும் சாதனைகள் புரிந்திடவும் வாழ்த்துக்கள் !

 
  • கருத்துக்கள உறவுகள்

சதீஷ்குமாருக்கு வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சதீஷ்குமார்!

 

வியாபார ஸ்தாபனங்களில் 'ஆதரவு' அதிகமில்லாத போதும், உங்கள் சொந்த முயற்சியால் ஈட்டிய வெற்றி, உண்மையில் மிகவும் மெச்சத்தக்கது! 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் சதீஷ்....

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தைச் சேர்ந்த சதீஸ் இந்தியாவுக்காக பதக்கம் பெற்றால் வாழ்த்துவது போன்று தமிழீழத்தைச் சேர்ந்த தமிழர் எவராவது சிறிலங்காவுக்காக விளையாட்டு உட்பட அனைத்துத் துறைகளிலும் சாதித்தால் வாழ்த்துவதில் என்ன தவறு இருக்கின்றது?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தைச் சேர்ந்த சதீஸ் இந்தியாவுக்காக பதக்கம் பெற்றால் வாழ்த்துவது போன்று தமிழீழத்தைச் சேர்ந்த தமிழர் எவராவது சிறிலங்காவுக்காக விளையாட்டு உட்பட அனைத்துத் துறைகளிலும் சாதித்தால் வாழ்த்துவதில் என்ன தவறு இருக்கின்றது?

தமிழகம் இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட ஒரு 'மாநிலம்' !

 

தமிழீழம் சிறிலங்காவின் ஒரு மாநிலமல்ல..! :o

 

அவ்வாறு அங்கீகரிக்கப்படுமிடத்து வாழ்த்துவதில் தவறேதும் இல்லை!

 

உங்கள் கேள்வி வடமாகாண அல்லது கீழ் மாகாணம் என்று குறிப்பிட்டிருந்தால், வாழ்த்துவதில் தவறேதுமில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

 

1406535696-4192.jpg
 

 

ஸ்காட்லாந்து கிளாஸ்கோவில் நடந்து வரும் காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்று வேலூர் வீரர் சதீஷ்குமார் சாதனை படைத்துள்ளார்.

-----

இவர் தற்போது விஐடி பல்கலைக்கழகத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
------

 

வாழ்த்துக்கள் சதீஷ்குமார்.

தமிழன் என்னும் முறையில்... பெருமையடைகின்றேன்.

 

சாதாரண ஒரு வேலை பார்த்துக் கொண்டு..... சர்வதேசப் போட்டி ஒன்றில் தங்கப் பதக்கம் பெற அவர் எத்தனை சிரமங்களையும், தியாகங்களையும் செய்திருப்பார்.

 

இதனை கருத்தில் கொண்டு, அவரின் சாதனையை.... ஊக்குவிக்கும் முகமாக அவருக்கு விளையாட்டுடன் சம்பந்தப் பட்ட அரச வேலை ஒன்றை வழங்க, தமிழக அரசு முன் வரவேண்டும்.

 

இப்படி ஊக்குவித்தால் தான்..... மற்றையவர்களுக்கும் விளையாட்டில் சாதனை படைப்பார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்

தங்கம் வென்ற தமிழக வீரருக்கு 50 லட்சம் பரிசு: ஜெ., அறிவிப்பு.
 
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தமிழக பளுதூக்கும் வீரர் சதீஷ் சிவலிங்கம் தங்கம் வென்று சாதனை படைத்தார். அவருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

அதில்,  ‘’காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் நாட்டிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்திருக்கிறீர்கள். இந்த அற்புதமான சாதனையை செய்ததற்காக உங்களுக்கு தமிழக மக்கள் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
 

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வெல்லும் விளையாட்டு வீரர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என 2011ல் அறிவித்திருந்தேன். இப்போது அந்த பரிசுத்தொகையை பெறுவதற்கு தாங்கள் தகுதி பெற்றுள்ளீர்கள். எதிர்காலத்தில் இதுபோன்று மேலும் பல பதக்கங்களை பெறவும் வாழ்த்து கிறேன்’’என்று குறிப்பிட்டுள்ளார்.

 

நக்கீரன்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சதீஷ்குமார்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.