Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏழை யாழ்பாண பெண்களை தாங்கள் சல்லாபம் அனுபவிக்க பயன்படுத்திக் கொள்ளும் கனடா, லண்டன் மாப்பிள்ளைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண மக்கள் எச்சரிக்கப்படுகின்றனர். காரணம் திருமணம் செய்கின்றோம் என்று கனடா மற்றும் லண்டன் போன்ற நாடுகளில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் மாப்பிள்ளைமார்கள் உண்மையாகவே திருமணம் செய்ய செல்லவில்லை. தங்கள் உல்லாச களியாட்ட தேவைகளிற்கு அப்பாவி பெண்களை பலியாக்கும் நோக்குடன் திருமணம் என்ற பந்தத்தை கொச்சைப்படுத்தி தங்கள் பசிகளை தீர்த்துக்கொள்ள சில தமிழ் இளைஞரகள் புறப்பட்டுள்ளனர்.

கடந்த 6-மாதங்களில் மட்டும் சுமார் 8 இவ்வாறான போலி பதிவுத் திருமணங்கள் இடம்பெற்றமை பலர் அறிந்த விடயம். வெளி உலகிற்கு தெரியாமல் மேலும் பல நடந்திருக்கலாம் என ஊகிக்கப்படுகின்றது.
கனடா மற்றும் லண்டன் போன்ற இடங்களில் இருந்து வெளியாகும் பல இலவச பத்திரிகைகளில் மணமகள் மணமகன் தேவை என்ற விளம்பர பக்கம் உள்ளது. இதில் வெளியாகும் விளம்பரங்களை மேற்குறிப்பிட்ட நாடுகளில் வசிக்கும் துணிச்சலான இளைஞர்கள் சிலர்  பார்த்து ஏமாற்று வேலைகளில் ஈடுபடுவதோடு அப்பாவிப் பெண்களை ஏமாற்றி தங்களது காமப் பசியை தீர்த்துக் கொள்கின்றனரெனவும்  அறியப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் வசிக்கும் பெண்களிற்கு மணமகன்கள் தேவை என்ற விளம்பரத்தை பார்க்கும் சில இளைஞர்கள் அங்குள்ள நபர் ஒருவரின் உதவியுடன் பெண்ணின் பெற்றோரை தொடர்புகொள்ள செய்கின்றனர். பின்னர் பெண்ணின் பெற்றோருடன் பேசி யாழ்ப்பாணம் வந்து பெண் பார்ப்பதாக பெற்றோரை சம்மதிக்க வைக்கின்றனர். வெளிநாட்டு மாப்பிள்ளை என்ற பேராசையில் பெற்றோரும் தீர விசாரிக்காது சம்மதிக்கின்றனர்.
இதன் பின்னர் நடப்பவைகள் தான் அதிர்ச்சியான இரத்தத்தை உறையவைக்கும் சம்பவங்கள். யாழ்ப்பாணம் செல்லும் வெளிநாட்டு மாப்பிளை பெண்ணின் பெற்றோருடன் நல்ல விதமாக பேசி பெண்பார்க்கும் படலம் இடம்பெறும். பின்னர் வெளிநாட்டு மாப்பிள்ளைகள் தங்களது தந்திரங்களை பிரயோகிக்க ஆரம்பிக்கின்றனர். தங்களது பெற்றோர்களிற்கு பெண்ணை பிடிக்கவில்லை இருந்தாலும் தனக்கு பெண்ணை பிடித்து விட்டது திருமணம் செய்து கொள்கின்றேன் என்ற ஆசை வார்த்தைகளை அள்ளி வீசுகின்றனர். சில பெற்றோர்கள் இதை அப்படியே நம்பி விடுகின்றனர்.

வெகு தூரத்தில் இருந்து வந்துள்ளதால் யாழ்ப்பாணத்தில் பதிவுத் திருமணத்தை செய்து விட்டு தான் வெளிநாடு திரும்ப நினைப்பதாக மாப்பிள்ளை கூறுவார். அதுமட்டுமின்றி கலியாணத்தை பிரமாண்டமாக நிகழ்த்தலாம் பதிவை அதிக கூட்டமின்றி செய்யும் படியும் சொல்வார். வெளிநாட்டு மாப்பிளைக்கு ஆசைப்பட்ட பெற்றோர் அவரின் விருப்பத்தின் படி பதிவுத்திருமணத்தை முடித்து விடுகின்றனர். மாப்பிள்ளை சார்பில் எவரும், மாப்பிள்ளையின் நண்பர்கள் கூட பதிவுத்திருமணத்தில் கலந்து கொள்ள மாட்டார்கள்.
பதிவுத் திருமணம் இவ்வாறு நடந்து முடிந்தவுடன் தான் சில நாட்கள் தான் யாழ்ப்பாணத்தில் இருப்பேன் அதனால் சில இடங்களை சுற்றிப்பார்க்க விரும்புகின்றேன் என கூறி பெண்ணையும் அழைத்துக் கொண்டு மாப்பிள்ளை சுற்றுலா சென்று விடுவார். இவர்களிற்கு வசதியாக சில விடுதிகளும் யாழ்ப்பாணத்தில் இருக்கின்றன.
அந்த விடுதிகளில் தங்கி தங்களது ஆசைகள் உடற்பசிகளை எல்லாம் அவர்களை நம்பி வந்த பெண் மூலம் தீர்த்து விட்டு வெளிநாடு திரும்பி விடுகின்றனர். மாப்பிள்ளை வருவார் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுவார் என பெண்கள் காத்திருந்து ஏமாற்றம் அடைகின்றனர்.

 

ஆனால் மாப்பிள்ளை வெளிநாடு திரும்பி வந்து தனது சக நண்பர்களிடம் தாங்கள் செய்துவிட்ட இந்த வெட்க கேடான அருவருப்பான கொடிய சம்பவம் பற்றி பெருமை பேச அந்த கூட்டத்தில் இருக்கும் வேறு சிலரும் ஏன் நாமும் இதை பின்பற்ற கூடாதென நினைக்க ஆரம்பித்து விடுகின்றனர்.

நண்பன் செய்தது தவறு அவர்களுக்கு ஒரு பெண் சகோதரி இருந்து அவளுக்கும் இவ்வாறு நடந்திருந்தால்…என சிந்தித்துப் பாராது தாங்களும் இவ்வாறு தவறு செய்ய நினைப்பது வழக்கமாகி விட்டுள்ளது.
பெண்களின் பெற்றோர்களும் சிந்திக்க தவறி விடுகின்றனர். வெளிநாட்டு மாப்பிளை சீதனம் எதுவும் கேட்கவில்லை என்றதும் கொஞ்சம் கூட சிந்திக்காது பெற்றோர்களும் சம்மதிக்கின்றனர்.

வெளிநாட்டு மாப்பிளை என்ற பேராசையில் தீர விசாரிக்காது தங்கள் சொந்த பெண் பிள்ளைகளின் வாழ்க்கையை நாசமாக்க துணியும் பெற்றோர்களை என்ன சொல்வது?

இனிமேலாவது தங்கள் பெண்பிள்ளைகளை இவ்வாறு தீர விசாரிக்காது வெளிநாட்டு மோசடி மாப்பிளைகளின் கைகளில் ஒப்படைத்து ஏமாறாது இருக்கும் படி யாழ் பெற்றோர்கள் எச்சரிக்கப்படுகின்றனர்.

 

 http://www.canadamirror.com

Edited by colomban

  • கருத்துக்கள உறவுகள்

கனடா.. லண்டன் மாப்பிள்ளைகள் மட்டும் தான் இப்படியா இல்ல.. அவுஸி.. நியூஸி.. பாரிஸ்.. பேர்ளின்.. ஆஸ்லோ.. நியோர்க்.. இப்படி.. தமிழர்கள் அகதி அந்தஸ்துக்கோரிய நாடுகளின் தலைநகர்களில் வாழும் எல்லாம் மாப்பிள்ளைகளும் இப்படித்தானா..???!

 

கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை.. தமிழர்களின் வாழ்க்கை வழக்கு அப்படி. :D:lol:


இடையில.. கொழும்பு மாப்பிள்ளையள்.. திறமோ..?????! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

முன்பின் தெரியாத மாப்பிளைகள் என்றால் ஒரு வருடம் பெரிய ஆமைப் பூட்டா போட்டுவிட வேண்டும்.. :huh: திறப்பை அம்மாவிடம் கொடுத்துவிடலாம்.. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

முன்பின் தெரியாத மாப்பிளைகள் என்றால் ஒரு வருடம் பெரிய ஆமைப் பூட்டா போட்டுவிட வேண்டும்.. :huh: திறப்பை அம்மாவிடம் கொடுத்துவிடலாம்.. :icon_idea:

வெளிநாட்டு மாப்பிள்ளையல் மரத்தில ஏறி கொப்பால இறங்ககூடியவர்கள் கவனம்.
  • கருத்துக்கள உறவுகள்

ஆமைப் பூட்டாஙக இருந்தாலும் இந்த வயது இருக்கே அது எல்லாப் பூட்டையும் உடைக்கும்.திறப்பைக் கண்டதும் பூட்டுத் தானாக திறந்து கொள்ளும்.பூட்டுக்குரிய திறப்புதானே என்ற நம்பிக்கை.நம்பிக்கைதானே வாழ்க்கை.எதையும் தீர விசாரித்துச் செய்ய வேண்டும்.அதுவும் முன்பின் தெரியாத ஆட்கள் பேப்பர் விளம்பரம் பார்த்து வாற ஆட்கள் என்றால் கட்டாயம் தீர விசாரித்த பின்பே திருமணத்துக்கு சம்மதிக்க வேண்டும்.திருமணம் நடந்த பின் தடைபோடுவது அழகல்ல.உண்மையானவர்கள் கூட இதனால் பாதிக்கப்பட வேண்டி வரும். உங்களுக்குப் பூட்டுப் போட்டிருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப்பாருங்கள் இசை????நன்கு தெரிந்தவர்களே ஏமாற்றும் காலம் இது. தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பைத் தரும். குறள்.

Edited by புலவர்

கனடா, இங்கிலாந்து மாப்புள்ளைகள்.என்றால் யார்? லண்டனிலேயோ கனடாவிலேயோ பிறந்து அங்கே ஆரம்ப கல்வி தொடக்கம் படித்து மேற்படிப்பை அல்லது தொழிற்கல்வியை முடித்தவர்களா அல்லது இலங்கையில் பிறந்து வளந்த பின்னர் லண்டன். அல்லது கனடாவிற்கு குடிபெயர்ந்தவர்களா? இலங்கையில் பிறந்து வளர்ந்தவர்களாயின் அவர்கள் கனடா மாப்பிள்ளைகளோ லண்டன் மாப்பிள்ளைகளோ இல்லை. அவர்கள் இலங்கை மாப்பிள்ளைகளோ என்பது எனது அபிப்பிராயம். ஜதார்த்தத்தில் இங்கு பிறந்த பிள்ளைகளுக்கு இந்த ஐடியா வராது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரி பெரிய தீச்சுவாலை விட்டு எரியப்போகிறது .....  :o  :D

 

முன்பின் தெரியாதவர்களை திருமணம் செய்யும்போது அவர்களைப் பற்றி தீர விசாரித்து திருமணம் செய்வதுதான் எமது நாட்டு பெண்களின் வழக்கம். வெளிநாடு என்றதும் கண்ணை மூடிக்கொண்டு வழக்கத்துக்கு மாறாக செய்தால் ஆணுபவிக்கட்டும்.. 

வெளிநாட்டு மோகம் இருக்கும் வரைக்கும் இப்படியான அவலங்களும் தொடரவே செய்யும்.
வெளிநாட்டு வாழ்கையை காட்டிலும் எம் தேசத்தில் வாழ்க்கை சிறப்பாக இருபதாக அண்மையில் சென்று வந்த எனது பல நண்பர்கள் கூறினார்கள்.
ஆக்கிரமிப்பும் , திட்டமிட்ட முறையில் ஏனையோரில் தங்கி வாழும் கலாச்சாரம் ஊக்குவிக்க படுதலுமே அங்கு பெரும் பிரச்சனையாக உள்ளதாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாப்பிளையின் படத்தை வெளிநாட்டு  நெட்  பத்திரிகைகளில்  போட்டுவிடுங்கள்  இந்த மிருகங்கள் தனா அடங்குங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டு மோகம் இருக்கும் வரைக்கும் இப்படியான அவலங்களும் தொடரவே செய்யும்.

வெளிநாட்டு வாழ்கையை காட்டிலும் எம் தேசத்தில் வாழ்க்கை சிறப்பாக இருபதாக அண்மையில் சென்று வந்த எனது பல நண்பர்கள் கூறினார்கள்.

ஆக்கிரமிப்பும் , திட்டமிட்ட முறையில் ஏனையோரில் தங்கி வாழும் கலாச்சாரம் ஊக்குவிக்க படுதலுமே அங்கு பெரும் பிரச்சனையாக உள்ளதாம்.

 

உங்களுக்கும் உங்கள் நன்பர்களுக்கும் காலக்கிரமத்தில் துரோகிப்பட்டம் அனுப்பி வைக்கப்படும்.  :lol:

 

  • கருத்துக்கள உறவுகள்

பெண்பாவம் பொல்லாதது.

 

காலக்கிரமத்தில்.... அதன் வேதனையை, அனுபவிப்பார்கள்.
 

அதைப்போல... ஆண் பாவமும், பொல்லாதது. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இந்த செய்தியில் எந்தளவிற்கு உண்மை இருக்கிறதென்று தெரியவில்லை.
இருந்தாலும் யாழ் பெற்றோர்கள் தங்கள் பெண்பிள்ளைகளை கடமை முடிந்ததென்று அறிமுகமில்லாத ஒருவனுக்கு கட்டிக்கொடுக்கின்றார்களா? <_<
 
யாரோ ஒருசில ஓடுகாலிகள் கூட்டாக செய்த செயலுக்கு ஒட்டுமொத்த யாழ் சமுதாயத்தையும் கூவி விற்கின்றார்கள்.
 
மழைக்கால இருட்டென்றாலும் மந்தி கொப்பிழக்கப் பாயாது. :icon_idea:
  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்குப் பூட்டுப் போட்டிருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப்பாருங்கள் இசை????நன்கு தெரிந்தவர்களே ஏமாற்றும் காலம் இது. தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்தீரா இடும்பைத் தரும். குறள்.

நான் முன்னை பின்னை தெரியாத லேடீசை டச்சிங் டச்சிங் பண்ணமாட்டன் புலவர்.. :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

 

இந்த செய்தியில் எந்தளவிற்கு உண்மை இருக்கிறதென்று தெரியவில்லை.
இருந்தாலும் யாழ் பெற்றோர்கள் தங்கள் பெண்பிள்ளைகளை கடமை முடிந்ததென்று அறிமுகமில்லாத ஒருவனுக்கு கட்டிக்கொடுக்கின்றார்களா? <_<
 
யாரோ ஒருசில ஓடுகாலிகள் கூட்டாக செய்த செயலுக்கு ஒட்டுமொத்த யாழ் சமுதாயத்தையும் கூவி விற்கின்றார்கள்.
 
மழைக்கால இருட்டென்றாலும் மந்தி கொப்பிழக்கப் பாயாது. :icon_idea:

 

 

அதானே..... யாழ்ப்பாணத்தான், மயிரை விட்டான்.

ஓடுகாலி, ஒட்டுக்குழு செய்த வேலையளுக்கு... முழு சனத்தையும் அப்பிடி நினைக்கப் படாது. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நோமலாய் யாழ்ப்பாணத்து மாப்பிளை,பொம்புளைக்கு மவுசு எக்கச்சக்கம். அதிலையும் கண்டவன் கிண்டவனுக்கெல்லாம் லேசுப்பட்ட வேலையில்லை. :)

  • கருத்துக்கள உறவுகள்

கனடா, லண்டன்..... சனம் செய்த வேலையாலை.....
வெளிநாட்டு மாப்பிளையின்ரை மவுசு குறைஞ்சு போட்டுது.
நல்ல காலம்......  ஜேர்மன் பெடியள் இப்பிடியான வேலையளுக்கு போகாதது சந்தோசம். :)  :)  :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
எண்டாலும் அங்கையிருக்கிற சனத்துக்கு லண்டன் கனடா எண்டால் ஒரு மயக்கம்....... :icon_idea:
எல்லாம் இங்கிலிசு மோகம்... :D
அடி நாக்காலை இல்லாட்டி நுனி நாக்காலை இங்கிலிசு கதைக்கிறமாதிரி ஜேர்மன் பாசை சரிப்பட்டுவராது :lol:
  • கருத்துக்கள உறவுகள்

அதுகளின்ரை.... அறிவு, அவ்வளவுதான்... அண்ணை :rolleyes: .
ஜேர்மன்காரன் குந்தி இருந்து கொண்டு, ஆயிரம் அலுவல் பார்ப்பான் :) .
இதுக்குத் தானே... சனம் எல்லாம் " மேட் இன் ஜேர்மனி"   லேபிளை பார்த்து வாங்குது. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடா அவுஸ்ரேலியா தமிழர்கள் பரவாயில்லை.லண்டனில் இருக்கும் ஆதிமேட்டுக்குடி தமிழர்கள் ஆக மோசம்.1983 முதல் வந்தவர்கள். :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.