Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்றுடன் ஓய்வு பெறுகிறார் நவநீதம்பிள்ளை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

  இன்றுடன் ஓய்வு பெறுகிறார் நவநீதம்பிள்ளை! 

[sunday 2014-08-31 08:00]
navi-ban-150-news.jpg

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பதவியில் இருந்து நவநீதம்பிள்ளை இன்றுடன் ஓய்வுபெறவுள்ளார். இவர் கடந்த ஆறு ஆண்டுகளாக ஐ.நா மனித உரிமை ஆணையாளராகப் பணியாற்றி வந்தார். ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பதவியில் இருந்து ஓய்வுபெறும் நவநீதம்பிள்ளை, சர்வதேச அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றின் பிரதானியாக நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

நன்றி - செய்தியிணையம்

  • கருத்துக்கள உறவுகள்

ஓய்வு நாட்களை அமைதியுடன் கழிக்கட்டும்..!

  • கருத்துக்கள உறவுகள்

அமைதியான வாழ்விற்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களால் முடிந்ததை செய்துள்ளீர்கள்.நன்றி சகோதரி

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது பதவிக்காலம்

தமிழருக்கான  மிகமுக்கிய  காலகட்டம்

கடவுள் அனுப்பியது போலிருந்தது தமிழருக்கு..

 

தாயே

உங்களது கருணை  தொடர்ந்து எம்மேல் இருக்கட்டும்

கடவுள் உங்களுடன் இருக்கட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தமிழராக சிந்தித்து நடக்காமல் ஒரு மனிதாபிமானியாக பிரச்சினைகளை அணுகி, புலிகளையும் அரசையும் சமனாக விமர்சித்த ஒரு நடுநிலைவாதி.

இவர் இலங்கையில் பிறந்திருந்தால் எதோ ஒரு தமிழ் குழு இவரை காதுக்க சுட்டிருக்கவும் கூடும்.

அடுத்து ICC யின் நீதிபதியாகி, இவரை பழித்தவர்களை தண்டிக்கும் காலமும் வரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவிற்கு வந்து பல ஆண்டுகளாக மறைக்கப்பட்டு வந்த.. உண்மை நிலவரங்களை நேரில் கண்டு மக்கள் படும் அவலங்களை உலக அரங்கில் ஓரளவாவது எடுத்துச் சொன்ன ஒருவர்.

 

சிறீலங்கா சிங்களப் பேரினவாத அரசின் கொடுமைகளை மரணித்த தமிழ் மக்களுக்கு போராளிகளுக்கு அஞ்சலி செய்யக் கூட உள்ள தடைகளை உலகின் முன் இனங்காட்டியவர்.

 

சிறீலங்காவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட எல்லா தரப்பையும்.. சிங்கள அரசு.. விடுதலைப்புலிகள் மட்டுமல்ல.. அரச ஒட்டுக்குழுக்கள்.. மிதவாதிகள் என்ற போர்வைக்குள் ஒளிந்திருந்து கொண்டு சிங்கள அரசின் பயங்கர மனித உரிமை மீறல்களுக்கு உதவக் கூடிய சட்டங்களுக்கு பாராளுமன்றிலும்.. வெளியிலும் வக்காளத்து வாங்கியோர் என்று எல்லோர் மீதும்.. ஒரு நடுநிலையான.. பார்வையை பதித்தவர்.

 

ஆனாலும்.. சிறீலங்காவில் இன்னும் தொடரும் இனரீதியான மனித  உரிமை மீறல்கள்.. தமிழ் பெண்கள் மீதான கொடுமைகள் அடக்குமுறைகள்.. இளைஞர்கள் மீதான துன்புறுத்தல்களை நிறுத்தவோ தடுக்கவோ தவறிவிட்டார். அதே.. சிரியா.. ஈராக்.. லிபியா.. எகிப்த்.. உக்ரைன் என்று பல இடங்களிலும்.. இன்னும் மனித உரிமைகள் மிக மோசமாக மீறப்பட்டு வருகின்றன. அதேபோல்.. சவுதி.. அமெரிக்கா.. போன்ற நாடுகளில் நிகழ்த்தப்படும் குற்றவாளிகள் மீதான வன்கொடுமைக் கொலைகள் தொடர்பிலும் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கத் தவறிவிட்டார்.

 

இந்தியா போன்ற நாடுகளில் பெண்கள் மீதான வன்கொடுமைகள்.. மற்றும் இடதுசாரிகள்.. மாவோஸிட்டுக்கள் மீதான.. மிக மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்து பெரிதும் கவனம் செலுத்த தவறிவிட்டார்.

 

மேலும்.. பயங்கரவாதத்திற்கு என்று ஒரு தெளிவான வரையறை இல்லாமல்.. அமெரிக்க சார்பு மேற்கு நாடுகள் மேற்கொள்ளும் போர் மற்றும்.. உளவு விமானத்தாக்குதல்களால்.. ஆளில்லா விமானத் தாக்குதல்களால்.. அப்பாவி மனித உயிர்கள் பலியிடப்படுவதும்.. பாதிக்கப்படுவதும் குறித்து கடும் நடவடிக்கைகளை பிரேரிக்கவும் தவறிவிட்டார்.

 

இவரின் நடவடிக்கைகள் பதவிக் காலத்தில் 50% பயனுள்ளதாகவும் மிகுதி 50% செயற்திறன் அற்றும்.. அல்லது முடக்கப்பட்டும்.. முடிவடைந்துள்ளது. இந்த நிலை எனியும் தொடரக் கூடிய வகைக்கு ஐநா மனித உரிமைகள் அமைப்பு செயற்படாமல் இருக்க ஓய்வுபெறும் அம்மையார் நல்ல ஆலோசனைகளை வெளியில் இருந்து தொடர்ந்து நல்க வேண்டும் என்பதே எங்கள் பெரு விருப்பாகும்..!! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண்ணாக இருந்தும், எமது பிரச்சினைகளை ஓரளவுக்காவதும்.... உலகத்திற்கு தெரியபடுத்தியவர்.
இவரை சிறிலங்காவில் மேர்வின் சில்வா, போன்றவர்கள் அவமானப் படுத்திய போதும்.... அதற்கு அஞ்சாமல், தன்னால் முடிந்ததை செய்த நவநீதம் பிள்ளை அம்மையார், ஒய்வுகாலத்தின் பின்னரும்....

தமக்குரிய உயர் தொடர்புகளை பயன்படுத்தி.... எமக்கொரு நீதி பெற்றுத் தர வேண்டும்.

இவரளவுக்கு மற்றொறுவர் தமிழினித்திற்காக குரல் தருவார் என்று நம்பிக்கையில்லை... இவரது மிகுதியான நாட்கள் இனிமையாக இருக்க வேண்டி கொள்வோம்... நன்றி நவி அம்மையாரின் பணிக்கு...

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் பேரழிவு இவரது பதவிக்காலத்திலேயே நடந்தேறியது . காலதாமதமாக விசாரணைகளை ஆரம்பித்தாலும் தீர்ப்பு வருவதற்குள் ஓய்வு பெறுவது சங்கமாக இருக் எனது.புதிதாக வருபவர் குட்டைக் குழப்பாமல் இருந்தால் சரி. தமிழின் அழிப்பை உலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டியதுக்கு நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.