Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு இராட்சசியின் இரவுகள்...!

Featured Replies

%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%
 

உன் இருளுக்குள் என்னை இழுத்தெடுக்கிறாய்...!
மூச்சு முட்டும்வரை...

என்னை இழுத்தணைக்கிறது உன் வெறி...!!
உன் பசிக்காக... என்னைப் பிய்த்துத் தின்னுகிறாய்!
என்னை வெறியேற்றி...
உன் வெறியை தீர்த்துக்கொள்ள  முனைகிறாய்!!!


அந்த ஆரவாரத்துக்குள்ளே....
என் அவலக்குரலும் அடங்கிப்போய்விடுகிறது!
சத்தமின்றித் தொடங்கி... பேரொலியோடு ஆர்ப்பரித்து,
சத்தமின்றியே அடங்கிப்போகும் சத்தங்கள்....
அப்படியே காணாமல் போய்விடுகின்றன...!!!
அது மயக்கமா....? அல்லது மரணமா....??
புரியவில்லை... புரிந்துகொள்ள அனுமதியுமில்லை!!!


எச்சங்கள் மிச்சங்களை  கொஞ்சங் கொஞ்சமாய்...
சத்தமின்றி அழித்துவிட்டு,
மீண்டுமொரு இரவுக்காய் அலையும்...
இராக்கால ராட்சசியே!
உன் சிற்றின்பத்துக்காய்,
என் குருதி குடிப்பதை...
எப்பொழுது நிறுத்தப் போகிறாய் ???
இந்த இரவு உனக்கானதாய் இருக்கலாம்!?
ஆனால்,
நாளைய விடியல் எனக்காக  மட்டுமே!!


விடியும்போது....
இருளின் கனவுச்சுவர்களும் இடிந்துபோகும் !
உன் இராட்சச  வெறியும் கூட !!

*********     *********     **********      **********       **********

 

Edited by கவிதை

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதெல்லாம் யாழில் எழுதும் கவிஞர்கள் நிறையவே பூடகமாக எழுதுகிறார்கள்.... இவர்களின் மூலத்தை அறிவதற்கு பெரு முயற்சி தேவைப்படுகிறது. சில சமயங்களில் முயற்சிகள்கூட தோற்றுப் போகின்றன அக்கவிஞன் வந'து விளக்கம் சொல்லும்வரைக்கும் காத்திருந்தே ஆகவேண்டி இருக்கிறது. பின் நவீனத்துவம் புதுக்கவிதைகள் புரிதலுக்குக் கடினமாகத்தான் இருக்கிறது. வாசிப்பின் பலம் குறைகின்றபோது புரிதலும் குன்றத்தான் செய்கிறதோ?

 

இந்த ரோமியோவும் , அன்புத்தம்பியும் பச்சை புள்ளி போட்டிருக்கிறார்கள்..... இவர்களுக்குப் புரிந்த விடயம் கூடவா நமக்குப் புரியவில்லை.

ஐயா கவிஞரே கொஞ்சம் விளக்கம் கொடுங்களேன். :blink:

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி கவிதை... சொல்ல வாற விசயம் மிகவும் சிம்பிள்!

 

இதுக்கு ஒரு பி.எச். டி தேவையில்லை!

 

அவன் சொல்வது... ஒவ்வொரு முறையும் உனக்குப் பசியெடுக்கும் போது... என்னைக் கசக்கிப் பிழிகிறாய்!!

 

நீ செய்கின்ற ஆரவாரங்களினால்.. எனது அழுகுரலும் உலகுக்குக் கேட்காமல்... உனது ஆரவாரங்களுக்குள் அமிழ்ந்து போய் விடுகின்றது!

 

பூ, பிஞ்சு, குருத்து என்று பார்க்காமல் மரத்தையும், அதன் இளங் கன்றுகளையும் அழித்துக்கொண்டு வருகிறாய்! நாளைய பொழுதொன்றில் உனக்கு மரங்களே இல்லாமல் போய்விடும்!

 

அதாவது மாட்டிலிருந்து பாலைக்கறக்கும் போது... கொஞ்சத்தையாவது கன்றுக்கும் விட்டு விடு! இல்லாவிட்டால் நாளைக்கு மாடே இல்லாத நிலைமை வந்து விடும் என்கிறான்!

 

இறுதியில் கவிதையில், 'நம்பிக்கையையும்' தூவிச் செல்வது தான்... இந்தக் கவிதையின் பொருள் என நான் விளங்கிக் கொண்டேன்!

 

எச்சங்கள் மிச்சங்களை  கொஞ்சங் கொஞ்சமாய்...
சத்தமின்றி அழித்துவிட்டு,
மீண்டுமொரு இரவுக்காய் அலையும்...
இராக்கால ராட்சசியே!
உன் சிற்றின்பத்துக்காய்,
என் குருதி குடிப்பதை...
எப்பொழுது நிறுத்தப் போகிறாய் ???
இந்த இரவு உனக்கானதாய் இருக்கலாம்!?
ஆனால்,
நாளைய விடியல் எனக்காக  மட்டுமே!!

 

நான் என்ன நினைக்கிறேன் எனில்...நீங்கள் உங்கள் 'முயங்கல்.. மயங்கல்' கவிதையுடனும்... கவிதையின் முன்னைய கவிதையான.. கரையில் ஒதுங்கும் கப்பல்' கவிதையுடனும் தொடர்பு படுத்தி விளங்க முயல்கிறீர்கள் என்று! :D  

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி கவிதை... சொல்ல வாற விசயம் மிகவும் சிம்பிள்!

 

இதுக்கு ஒரு பி.எச். டி தேவையில்லை!

 

அவன் சொல்வது... ஒவ்வொரு முறையும் உனக்குப் பசியெடுக்கும் போது... என்னைக் கசக்கிப் பிழிகிறாய்!!

 

நீ செய்கின்ற ஆரவாரங்களினால்.. எனது அழுகுரலும் உலகுக்குக் கேட்காமல்... உனது ஆரவாரங்களுக்குள் அமிழ்ந்து போய் விடுகின்றது!

 

பூ, பிஞ்சு, குருத்து என்று பார்க்காமல் மரத்தையும், அதன் இளங் கன்றுகளையும் அழித்துக்கொண்டு வருகிறாய்! நாளைய பொழுதொன்றில் உனக்கு மரங்களே இல்லாமல் போய்விடும்!

 

அதாவது மாட்டிலிருந்து பாலைக்கறக்கும் போது... கொஞ்சத்தையாவது கன்றுக்கும் விட்டு விடு! இல்லாவிட்டால் நாளைக்கு மாடே இல்லாத நிலைமை வந்து விடும் என்கிறான்!

 

இறுதியில் கவிதையில், 'நம்பிக்கையையும்' தூவிச் செல்வது தான்... இந்தக் கவிதையின் பொருள் என நான் விளங்கிக் கொண்டேன்!

 

எச்சங்கள் மிச்சங்களை  கொஞ்சங் கொஞ்சமாய்...

சத்தமின்றி அழித்துவிட்டு,

மீண்டுமொரு இரவுக்காய் அலையும்...

இராக்கால ராட்சசியே!

உன் சிற்றின்பத்துக்காய்,

என் குருதி குடிப்பதை...

எப்பொழுது நிறுத்தப் போகிறாய் ???

இந்த இரவு உனக்கானதாய் இருக்கலாம்!?

ஆனால்,

நாளைய விடியல் எனக்காக  மட்டுமே!!

 

நான் என்ன நினைக்கிறேன் எனில்...நீங்கள் உங்கள் 'முயங்கல்.. மயங்கல்' கவிதையுடனும்... கவிதையின் முன்னைய கவிதையான.. கரையில் ஒதுங்கும் கப்பல்' கவிதையுடனும் தொடர்பு படுத்தி விளங்க முயல்கிறீர்கள் என்று! :D  

 

ரோமியோ எப்படி இப்படி????!!!!

 

உங்களுக்கு மட்டும் இவ்வளவு இலகுவாக விளங்குகிறது....

 

மவனே இந்தக்கருத்தையும் கவிதையையும் திரும்ப வாசித்தேன் இப்ப எனக்கு கொலைவெறி வந்திடுச்சு....பட் கைக்கெட்டம் தூரத்தில் ரோமியோ இல்லை ஆதலால் இந்த விசரன் இந்த விசரியின் தாக்குதலில் இருந்து தப்பிக் கொண்டார் :icon_mrgreen:

 

வரிகளில் இயல்பாக எழுகிற சந்தம் கவிதைக்கு அழகு கவிதை. 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு நான் எழுதுற கவிதையே விளங்குதில்லை இதில இதை என்னெண்டு விளங்கிக் கொள்ளுறது :lol:

  • தொடங்கியவர்

இக்கவிதையை நான் எழுதும் போது  'இராட்சசி' என நான் புனைந்த விடயம்... வல்லாதிக்கம்.
பலவீனமான ஒன்றின்மேல் 'வல்லாதிக்கம்' என்பது  எப்படி தன் ஆதிக்கத்தினைச் செலுத்த முனைகின்றது என்பதையும் அவ்வாறான வல்லாதிக்கத்துக்கெதிரான ஏக்கக் குரலினையும்  அவ்வல்லாதிக்க சக்தி என்றைக்கும் நிலையானதில்லை, என்றாவது ஒரு நாள் அது நிலைகுலைந்து போகும் என்பதையுமே என் புனைவுகளால் பூடகமாகச் சொல்லியிருந்தேன்.
உதாரணமாக... சிங்கள வல்லாதிக்கத்தினையும்  நம் தமிழினைத்தினையும் வைத்துப் பார்த்தால் கூட இவ்வரிகள் பொருந்திப்போகும்.

 

இக்கவிதை...  வாசிப்பவர்களில் பார்வைக் கோணங்களைப் பொறுத்து வேறுவேறு அர்த்தத்தினைக் கொடுக்கக்கூடியது. ஆனால் இக்கவிதையைப் பொறுத்தமட்டில் அதுவும் தப்பில்லை. எவ்வாறு விளங்கிக் கொள்ளினும் தகுமே!

எனது முகப்புத்தகத்தில்... இக்கவிதையினுடைய அர்த்தம் என்னவென்ற வினவலுடனேயே இக்கவிதையை இணைத்திருந்தேன்.
அதற்கு அவர்கள் சொன்னவற்றில் இருவேறு விடயங்கள் கூட இதனோடு பொருந்தித்தான் போகிறது என்பது எழுதிய என்னையே ஆச்சரியப்பட வைத்தது.
நான் 'இராட்சசி' எனக் குறிப்பிட்டது....   1. நுளம்பு       2. நித்திரை என அவர்கள் கருத்துச் சொல்லியிருந்தார்கள்.
இவை இரண்டை வைத்துப் பார்த்தால் கூட வரிகள் பொருந்துகின்றனதானே!? :rolleyes:

 

சில படைப்புக்களில் சொல்ல வந்த விடயம்  வாசிப்பவர்களை சரியாகச் சென்று சேர வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும். ஆனால் சில படைப்புக்களில் அதற்கு அவசியம் இருக்காது.
அவர்களில் எந்தக்  கோணத்தில் விளங்கிக்கொள்கிறார்களோ ... அவ்வாறே விளங்கிக்கொள்ளட்டும் என  விட்டுவிடலாம். எனது இக்கவிதையும் அப்படியானதே.


புங்கை... உங்களின் பார்வைக்கோணமும்  மிகச் சரியானதே. ஒரு படைப்பை எழுதுபவனைவிட அதனை சரியாக புரிந்துகொள்ளும் வாசகன் மிகத் திறமைசாலி. அத்திறமை உங்களிடம் தாரளமாகவே இருக்கிறது. நன்றிகளும் பாராட்டுக்களும்.

சகாறா அக்கா... எனது இந்த விளக்கம் போதுமா ? :unsure:
விளங்காவிட்டாலும் விளங்கினமாதிரிக் காட்டிக்கொள்ளும் அதிமேதாவிகள் உலவும் இன்றைய  எழுத்துலகில்... என்னால் புரிந்துகொள்ள முடியவில்லையே என திறந்தமனதுடன்  உண்மைத்தன்மையுடன் வினவிய உங்களை    எவ்வளவு பாராட்டினாலும் தகும். :wub:
மனமார்ந்த நன்றிகள் அக்கா.
:)

அத்துடன்... அன்புத்தம்பி, நேற்கொழுதாசன், சுமே அக்கா அனவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

மீண்டும்... இவ்வாறில்லாமல்,  இன்னொரு புரியும் படியான கவிதையுடன் விரைவில் சந்திக்கிறேன்! நன்றி... வணக்கம்! :)

 

பி.கு:

கணவனை மிரட்டி ஆளும் மனைவியே அந்த இராட்சசி என நினைத்து இக்கவிதையப் படித்தாலும் பொருந்தும். பாதிக்கப்பட்ட உறவுகள் அவ்வாறு நினைத்து படித்து தாராளமாக ஆறுதலடையலாம்... ஆனந்தமடையலாம் :lol::D:icon_idea:

Edited by கவிதை

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை அருமை

நான் ஒரு கோணத்தில் வாசித்தேன்

இறுதியில் ஏமாற்றம்...

 

அத்துடன் 'முயங்கல்.. மயங்கல்' கவிதையுடன் ஒருவர் எண்ணெய் ஊற்றி குளிர் காய்கிறார்..

எல்லாம் முடிந்துவிடவில்லை

தொடர வழி  இருக்கிறது

தொடர்வோம் :icon_mrgreen: 

நாளைய விடியல் எனக்காக மட்டுமே!!

விடியும்போது....

இருளின் கனவுச்சுவர்களும் இடிந்துபோகும் !

உன் இராட்சச வெறியும் கூட !

இந்த வரிகளிலே புரிந்து கொண்டேன் இது பெண்ணுக்கானதோ இல்லை நுளம்பிற்கானதோ இல்லை ஒடுக்கப்பட்டு கொண்டிருப்பவனுக்கானது என்று.

பல கோணங்களில் பார்த்தாலும் கவிதை பொருள்படுகிறது கவிதையண்ணே ! இந்தபக்கம் அடிக்கடி வாங்கோ :)

இப்போதெல்லாம் யாழில் எழுதும் கவிஞர்கள் நிறையவே பூடகமாக எழுதுகிறார்கள்.... இவர்களின் மூலத்தை அறிவதற்கு பெரு முயற்சி தேவைப்படுகிறது. சில சமயங்களில் முயற்சிகள்கூட தோற்றுப் போகின்றன அக்கவிஞன் வந'து விளக்கம் சொல்லும்வரைக்கும் காத்திருந்தே ஆகவேண்டி இருக்கிறது. பின் நவீனத்துவம் புதுக்கவிதைகள் புரிதலுக்குக் கடினமாகத்தான் இருக்கிறது. வாசிப்பின் பலம் குறைகின்றபோது புரிதலும் குன்றத்தான் செய்கிறதோ?

இந்த ரோமியோவும் , அன்புத்தம்பியும் பச்சை புள்ளி போட்டிருக்கிறார்கள்..... இவர்களுக்குப் புரிந்த விடயம் கூடவா நமக்குப் புரியவில்லை.

ஐயா கவிஞரே கொஞ்சம் விளக்கம் கொடுங்களேன். :blink:

காம்ப்ளான் குடியுங்கோ. வளரும் குழைந்தைகளுக்கு அத்தியாவசியமானது :D

எனக்கு நான் எழுதுற கவிதையே விளங்குதில்லை இதில இதை என்னெண்டு விளங்கிக் கொள்ளுறது :lol:

இவாவும் என்னைபோலவே இருக்கிறா :)

Edited by ராஜன் விஷ்வா

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையின் கவிதை ப+டகமாக எழுதியிருந்தாலும் ஓரளவு விடயத்தை ஊகித்து அறியக்கூடியதாக இருந்தது. சில கவிதைகள் எத்தனை முறை வாசித்தாலும் எம்மால் புரிந்து கொள்வதற்கு கடினமாக இருக்கும். நல்ல சொல்லாடல் கவிதை பல கோணங்களிலும் தன் ஆளுமையை வெளிப்படுத்தி நிற்கிறது. முதல்முறை படித்தபோதே எனக்கு முள்ளிவாய்க்கால்தான் நினைவில் வந்தது. ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு பார்வை. பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் சுனாமி போன்ற பேரழிவையும் , அதனின்று மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்பும் மனித இனத்தையுமே நினைத்தேன்...!

 

எதுவாயினும் நன்றாக இருக்கின்றது கவிதை...!!

இவ் கவிதை சொல்லும் அரசியலுக்குள் போகாமல் அழகியலுக்குள் நிற்கும் போது, சிற்றின்ப ஆதிக்கத்தில் இருக்கும் பெண் முன்னால் ஒரு சிறு வண்டாக நாம் ஆகி அடங்கிப் போதலும் கூட சுகமே என்றுதான் நினைக்க் தோன்றுகின்றது.

 

ஆண் எனும் செருக்கு ஒரு பெண்ணின் கிளர்ந்தெழும் காமத்தின் போது அழியும் போது பிறப்பதன் பெயரும் ஞானமே. அங்கு ஆண்ணும் பெண்ணும் அழிந்து காமம் மட்டுமே மிதக்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.