Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவில் பணியாற்றும் தமிழருக்கு அமெரிக்க இராணுவ பொறியல் துறையின் உயரிய விருது கிடைத்தது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
usa-tamil-got-awads-171114-200-seithy-wo

அமெரிக்க இராணுவத்தின் மூத்த ஆராய்ச்சி விஞ்ஞானியாகப் பணியாற்றிவரும் மருத்துவர், பரஞ்சோதி ஜெயக்குமார் என்ற தமிழருக்கு, உலக அளவில் மதிப்புமிக்க பொறியியல் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டாக்டர் பரஞ்சோதி ஜெயக்குமார் அவர்கள் அமெரிக்க இராணுவத்தின் பீரங்கி வடிவமைப்பு ஆராய்ச்சி மற்றும் பொறியியல் நிலையத்தில், மூத்த விஞ்ஞானியாகப் பணியாற்றி வருகிறார் இவர், இலங்கையின் பேராதனை பல்கலைக்கழகத்தில் பயின்று, 1982-83 காலப்பகுதியில், அதே பல்கலைகழகத்தில் கணிதவியல் உதவி விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார்.

   

இவருக்கு SAE International என்ற அனைத்துலக பொறியியலாளர் அமைப்பு ஆண்டுதோறும் வழங்கி வரும், ஆர்ச் டி கொல்வெல் ஒத்துழைப்பு பொறியியல் பதக்கத்தை (Arch T. Colwell Cooperative Engineering Medal) வழங்கவுள்ளது. Society of Automotive Engineers International என்ற அமெரிக்காவை மையாமாகக் கொண்டு இயங்கி வரும் இந்த அமைப்பு உலகெங்கும் உள்ள 138 ஆயிரம் பொறியியல் வல்லுனர்களை உறுப்பினராக கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள இந்த அமைப்பின் சிறப்பு நிகழ்ச்சியில் இந்த விருது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

http://seithy.com/breifNews.php?newsID=120947&category=WorldNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இவர் மருத்துவர் இல்லை - கலாநிதி - senior research scientist

  • கருத்துக்கள உறவுகள்

இவர் மருத்துவர் இல்லை - கலாநிதி - senior research scientist

 

Dr. பரஞ்சோதி ஜெயக்குமார் என்பதை.... மொழிமாற்றம் செய்யும் போது,

மருத்துவர் என்று, செய்தி இணையத்தளம் மொழிபெயர்ப்பு செய்து விட்டது. :D

 

பரஞ்சோதி ஜெயக்குமார்,  இந்த உயரிய விருதை பெற்றதையிட்டு... பெருமையடைகின்றேன். :)

Edited by தமிழ் சிறி

வாழ்த்துக்கள் , பெருமையாக இருக்கிறது , எமது தாய்நாட்டுக்கு பயன்பட்டால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் . ஆனால்  போர் உலக நாடுகளால் தோட்கடிக்கபட்டுவிட்டது  

  • கருத்துக்கள உறவுகள்

SAE இன் பதக்கத்தை வெல்வது மகிழ்ச்சி..! வாழ்த்துக்கள்..!!

தமிழ் சிறிக்கு இவரை தெரிந்திருக்கும் என நினைக்கின்றேன் .திருநீறு பூசியபடி பாடசாலைக்கு வருபவர் .

என்னைவிட இரு வகுப்புகள் குறையப்படித்தவர் . GCE O/L  இல் 7D 1C ,GCE A/L இல் 3A 1B இவரது ரிசல்ட்ஸ் .

(படத்தில் வயது போனவர் போலிருக்கு )

இரு வருடங்களுக்கு முதல்  கனடா பழைய மாணவர் டின்னருக்கு பிரதம விருந்தினாராக வந்திருந்தார் .

 

இவருடன் எனக்கான  ஒரு சம்பவம் இன்னமும் நினைவு இருக்கு .மேல் வகுப்பு மாணவர் பொது அறிவு போட்டியில் எனக்கு முதலிடமும் இவருக்கு இரண்டாவது இடமும் என்று அறிவிப்பு வந்து  இருவரையும் அழைத்து மறுமொழி பேப்பரை சரிபார்க்க சொன்னார்கள் .என்னைவிட அவருக்கு ஒரு மார்க் தான் குறைவு .அதில் வந்த ஒரு கேள்வி -யாழ் பஸ் நிலையத்தையும் யாழ் கோட்டையையும் இணைக்கும் வீதியின் பெயர் என்ன ?

நான் முனியப்பர் வீதி என்று பதில் எழுதியிருந்தேன் .அதற்கு அவர்கள் சரி போட்டு இரண்டு மார்க்குகள் தந்திருந்தார்கள் .இந்த காய் எனது பேப்பரை வாங்கி பார்த்துவிட்டு வாத்தியிடம் அந்த வீதியின் பெயர் முனீஸ்வரன் வீதி அதுதான் சரி என்று சொல்லி எனது இரண்டு மார்க்கை குறைத்து தான் முதலாவதாக வந்துவிட்டார் .எனக்கு இரண்டாம் பரிசு. ஒரு திருக்குறளும் எ.ஸ்.போவின் "சடங்கு " நூலும் பரிசாக கிடைத்தது .எங்களுக்கு படிப்பு ஓடாது ஆனால் பொது அறிவு அப்பவே கொஞ்சம் இருந்தது .

 

கனடா டின்னரில் வைத்து உந்த நிகழ்வை நினவு படுத்தினேன் ,இப்ப திருப்பி தரட்டோ என்று நக்கலாக கேட்டார் .

 

வாழ்த்துக்கள் ஜெயக்குமார். 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஜெயக்குமார். 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறிக்கு இவரை தெரிந்திருக்கும் என நினைக்கின்றேன் .திருநீறு பூசியபடி பாடசாலைக்கு வருபவர் .

என்னைவிட இரு வகுப்புகள் குறையப்படித்தவர் . GCE O/L  இல் 7D 1C ,GCE A/L இல் 3A 1B இவரது ரிசல்ட்ஸ் .

(படத்தில் வயது போனவர் போலிருக்கு )

இரு வருடங்களுக்கு முதல்  கனடா பழைய மாணவர் டின்னருக்கு பிரதம விருந்தினாராக வந்திருந்தார் .

 

இவருடன் எனக்கான  ஒரு சம்பவம் இன்னமும் நினைவு இருக்கு .மேல் வகுப்பு மாணவர் பொது அறிவு போட்டியில் எனக்கு முதலிடமும் இவருக்கு இரண்டாவது இடமும் என்று அறிவிப்பு வந்து  இருவரையும் அழைத்து மறுமொழி பேப்பரை சரிபார்க்க சொன்னார்கள் .என்னைவிட அவருக்கு ஒரு மார்க் தான் குறைவு .அதில் வந்த ஒரு கேள்வி -யாழ் பஸ் நிலையத்தையும் யாழ் கோட்டையையும் இணைக்கும் வீதியின் பெயர் என்ன ?

நான் முனியப்பர் வீதி என்று பதில் எழுதியிருந்தேன் .அதற்கு அவர்கள் சரி போட்டு இரண்டு மார்க்குகள் தந்திருந்தார்கள் .இந்த காய் எனது பேப்பரை வாங்கி பார்த்துவிட்டு வாத்தியிடம் அந்த வீதியின் பெயர் முனீஸ்வரன் வீதி அதுதான் சரி என்று சொல்லி எனது இரண்டு மார்க்கை குறைத்து தான் முதலாவதாக வந்துவிட்டார் .எனக்கு இரண்டாம் பரிசு. ஒரு திருக்குறளும் எ.ஸ்.போவின் "சடங்கு " நூலும் பரிசாக கிடைத்தது .எங்களுக்கு படிப்பு ஓடாது ஆனால் பொது அறிவு அப்பவே கொஞ்சம் இருந்தது .

 

கனடா டின்னரில் வைத்து உந்த நிகழ்வை நினவு படுத்தினேன் ,இப்ப திருப்பி தரட்டோ என்று நக்கலாக கேட்டார் .

 

வாழ்த்துக்கள் ஜெயக்குமார். 

எனக்கும் இவரைத் தெரியும் அர்ஜுன்!

 

ஆனால் யாழ் கோட்டையையும், முனியப்பர் கோவிலையையும் இணைக்கும் வீதியின் பெயர்... இரண்டு பேருமே 'பிழை'! :D

 

சரியான விடை.... மூத்திர ஒழுங்கை! :o

 

நம்பினால் நம்புங்கள்... அந்தப் பெயரில் ஒரு பெயர்ப் பலகையும் இருந்ததாக ஞாபகம்! :icon_idea:

எனக்கும் இவரைத் தெரியும் அர்ஜுன்!

 

ஆனால் யாழ் கோட்டையையும், முனியப்பர் கோவிலையையும் இணைக்கும் வீதியின் பெயர்... இரண்டு பேருமே 'பிழை'! :D

 

சரியான விடை.... மூத்திர ஒழுங்கை! :o

 

நம்பினால் நம்புங்கள்... அந்தப் பெயரில் ஒரு பெயர்ப் பலகையும் இருந்ததாக ஞாபகம்! :icon_idea:

புங்கை ஆயிரம் பச்சை .

இந்த பதிலைத்தான் நானும் அந்த நேரம் எழுத நினைத்தேன் .அடிக்கடி ரீகலில் படம் பார்க்க சென்றதால் முனியப்பர் என்ற பெயர் வாசித்த ஞாபகம் .

இந்து கல்லூரி பொது அறிவு போட்டி நடாத்தும் விதமே தனி .மகாதேவா மாஸ்டர் (ஸ்கோடா ) எல்லோருக்கும் கேள்வித்தாளை தந்துவிட்டு யாரும் யாரையும் பார்த்தும் கேட்டும் விடையை எழுதலாம் ஏனெனில் இரண்டு பேருக்குத்தான் பரிசு .மற்றவனுக்கு சொல்லிகொடுத்தால் உங்கள் பரிசு போய்விடும் என்றார் .

  • கருத்துக்கள உறவுகள்

பொறியாளருக்கு வாழ்த்துக்கள்..!

 

தமிழ்சிறிக்கு க்ளாஸ்மேட்டா இருப்பாரோ..? ' :o :o :o  :o  :o :o'

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறிக்கு இவரை தெரிந்திருக்கும் என நினைக்கின்றேன் .திருநீறு பூசியபடி பாடசாலைக்கு வருபவர் .

என்னைவிட இரு வகுப்புகள் குறையப்படித்தவர் . GCE O/L  இல் 7D 1C ,GCE A/L இல் 3A 1B இவரது ரிசல்ட்ஸ் .

(படத்தில் வயது போனவர் போலிருக்கு )

இரு வருடங்களுக்கு முதல்  கனடா பழைய மாணவர் டின்னருக்கு பிரதம விருந்தினாராக வந்திருந்தார் .

 

இவருடன் எனக்கான  ஒரு சம்பவம் இன்னமும் நினைவு இருக்கு .மேல் வகுப்பு மாணவர் பொது அறிவு போட்டியில் எனக்கு முதலிடமும் இவருக்கு இரண்டாவது இடமும் என்று அறிவிப்பு வந்து  இருவரையும் அழைத்து மறுமொழி பேப்பரை சரிபார்க்க சொன்னார்கள் .என்னைவிட அவருக்கு ஒரு மார்க் தான் குறைவு .அதில் வந்த ஒரு கேள்வி -யாழ் பஸ் நிலையத்தையும் யாழ் கோட்டையையும் இணைக்கும் வீதியின் பெயர் என்ன ?

நான் முனியப்பர் வீதி என்று பதில் எழுதியிருந்தேன் .அதற்கு அவர்கள் சரி போட்டு இரண்டு மார்க்குகள் தந்திருந்தார்கள் .இந்த காய் எனது பேப்பரை வாங்கி பார்த்துவிட்டு வாத்தியிடம் அந்த வீதியின் பெயர் முனீஸ்வரன் வீதி அதுதான் சரி என்று சொல்லி எனது இரண்டு மார்க்கை குறைத்து தான் முதலாவதாக வந்துவிட்டார் .எனக்கு இரண்டாம் பரிசு. ஒரு திருக்குறளும் எ.ஸ்.போவின் "சடங்கு " நூலும் பரிசாக கிடைத்தது .எங்களுக்கு படிப்பு ஓடாது ஆனால் பொது அறிவு அப்பவே கொஞ்சம் இருந்தது .

 

கனடா டின்னரில் வைத்து உந்த நிகழ்வை நினவு படுத்தினேன் ,இப்ப திருப்பி தரட்டோ என்று நக்கலாக கேட்டார் .

 

வாழ்த்துக்கள் ஜெயக்குமார். 

 

பொறியாளருக்கு வாழ்த்துக்கள்..!

 

தமிழ்சிறிக்கு க்ளாஸ்மேட்டா இருப்பாரோ..? ' :o :o :o  :o  :o :o'

 

usa-tamil-got-awads-171114-200-seithy-wo

 

ஆம்.... அர்ஜுன், ராஜவன்னியன்.

இவர் எனது வகுப்பில் ஒன்றாகப் படித்த, சக மாணவர்.

அனலைதீவை பிறப்பிடமாகக் கொண்டவர்.

 

ஆரம்பத்தில், செய்தியை வாசித்த போது.....

யாரோ ஒரு தமிழனுக்கு, உயரிய விருது கிடைத்துள்ளதாகத் தான் நினைத்து... மகிழ்ச்சி அடைந்திருந்தேன்.

பின்பு அர்ஜுனின் பதிவையும், அவரின் படத்தையும் ஒப்பிட்டுப் பார்த்த போது...  நல்ல ஞாபகம் வந்தது.

 

சில காலங்களுக்கு முன்பு கூட....

நன்றாக படிக்கும் இவர், இப்போ இலங்கையில் ஏதாவது அரச உத்தியோகத்தில் இருப்பாரோ,

போரில் ஏதாவது நடந்திருக்குமோ... என்று யோசித்தேன்.

 

தகுதியான நாட்டுக்குச் சென்று.... தகுதியான  வேலையில் சேர்ந்து,

உலகின் மிகப் பெரிய  விருதுகளில் ஒன்றை, பெறுவதையிட்டு... அளவில்லாத மகிழ்ச்சி அடைகின்றேன்.

 

வாழ்த்துக்கள்... ஜெயக்குமார். :wub:  :)  

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.