Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்சில் eiffel tower க்கு அருகில் தேசிய தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜவானே சொல்லீட்டார் பிறகேன் குத்தி முறியிறீயள்?

 

இந்தியனாமி.. ஜவான் .. .

  • Replies 130
  • Views 8.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

போராளிகள் இரத்தம் ..சிந்தி கட்டி எழுப்பிய போராட்டம் இன்று கவாலி ..கூத்தாடி கைகளில் அகப்பட்டு சாகிறது .

அண்ணா எங்கிருக்கிறாய் :( :(

அஞ்சரனுக்கு Eiffel tower இல தான் முழிப்பு வந்திருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

குடிப்பது (அல்லது புகை பிடிப்பது) அநாகரீகமானதல்ல என்று எழுதியுள்ளேன்.  வாசிக்கவில்லை போலுள்ளது.

 

தலைவர் காலத்தில் Eiffel Tower இங்கேதான் இருந்தது. அப்போது இப்படியானவர்கள் கொடியைப் போர்த்துக் கொண்டு செய்தி வெளியிட்டதாக நான் அறியவில்லை.

ஒருவேளை போராட்டம் 2009 க்குப் பின் இளைஞர் கைகளில் ஒப்படைக்கப் பட்டதால் நிலமை மாறிவிட்டதோ தெரியவில்லை.

இவர்கள் வயதை பார்க்கும்போது அப்போது வளர்ந்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
 
அப்படி இல்லை என்று அவர்கள் பிடித்திருந்தாலும் யாருக்கு தெரிய போகிறது?
10தோடு 11ஆக இருந்திருக்கும்.
 
இப்போ புனிதமானவர்கள் களத்திலே இறங்கியதால்தானே.
கலங்கமான இவர்கள் கதை விவாதம் ஆகிறது.
 
முன்பு 
புலிகள் 
மக்கள் 
இப்படி இருந்தது. இப்போ புலிகளை விட மேன்மையாக புலிகளில் இருந்து உண்டு கொளுத்து வந்தவர்கள் அல்லவா இருக்கிறார்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை ஜவானை நல்லா தெரியும். பாடசாலை நாட்களில் அவருடன் வாக்குவாதப்பட்டிருக்கிறேன் பிரச்சாரத்திற்கும் ஆட்களை சேர்க்வும் வந்த போது

  • கருத்துக்கள உறவுகள்

இணையவன் அண்ணா.. 

usainbolt_2300716b.jpg

 

இதனை எப்படி எடுப்பீங்க..??! போல்ட் ஜமேக்கா கொடியை அவமதித்து.. ஜமேக்காவை அவமதிப்பதாகவா..??!

 

எல்லா தேசியக் கொடிகளுக்கும் ஒரு பொது ஒழுங்குவிதி உண்டு. அது தமிழீழத் தேசியக் கொடிக்கும் அதன் கோவையில் சொல்லப்பட்டுள்ளது. அதற்கு அமையவே தான் அது உத்தியோகபூர்வ நிகழ்வுகளில்.. தேசிய பொது நிகழ்வுகளில்.. சம்பிரதாய நிகழ்வுகளில் பாவிக்கப்படும். ஆனால் தேசியக் கொடி அதற்காக மட்டும் அமைக்கப்படவில்லை. அது தேச அடையாளமாகவும் உள்ளது.

 

இதில் வரவேற்கத்தக்க விடயம் என்ன என்றால்.. புலிக் கொடியை.. தேசியக் கொடியை அடிப்பெட்டிக்குள் கட்டிப் போடு என்று 2009 க்குப் பின்.. கட்டுரை.. கதை எழுதியவர்கள் எல்லாம்.. இப்போ அதன் கோவையை புரட்டிப்பார்ப்பது தான். அந்த வகையில்... இந்த இளைஞர்களை இன்னும் ஒரு தடவை பாராட்டலாம்.

 

பிரான்ஸ் தேசியக் கொடியை உள்ளாடையாக தைச்சு ஒருத்தரும் போடேல்லையா..??! ரீசேட்டா தைச்சு விபச்சாரிகள் அணியவில்லையா..??! அமெரிக்கக் கொடிக்கே இந்தக் கதிகள் எல்லாம் நடந்துள்ளது. அந்தளவுக்கு தமிழீழக் கொடி கேவலப்படவில்லை.

 

மேலும்.. மேலே தமிழீழத் தேசியக் கொடியோடு அந்த இளைஞர்கள்.. தண்ணி அடிக்கவோ.. நடுவிரலைக் காட்டவோ இல்லை. மிகவும் மரியாதையாகத்தான் நடந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தமிழீழ தேசியக் கொடியை ஒரு அடையாளமாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். உத்தியோகப்பூர்வமாக அல்ல. இதனை நீங்கள் தெரிந்து கொள்ளவில்லையா.. அல்லது தெரிந்து கொண்டு.. குறைபிடிக்கனுமா..??!

 

மேலும் பரிதி அண்ணாவின் படுகொலையில்.. இவர்கள் சம்பந்தப்பட்டிருந்தால்.. அதனை அறிந்திருப்பவர்கள்.. அதில் சம்பந்தப்பட்டவர்களை நீதியின் முன் நிறுத்தி விட்டு இங்கு வந்து குற்றச்சாட்டுக்களை முன் வைக்கட்டும். அதைச் செய்யாமல்.. தங்களின்.. சுய விளம்பரத்துக்கு.. சும்மா சகட்டு மேனிக்கு எழுதித் தள்ளுவதை வைச்சு.. ஒருவரை அல்லது ஒரு குழுவினரை  குற்றவாளியாக்க வேண்டிய தேவை இல்லை. அதன் அடிப்படையில் அவர்கள் தேசியக் கொடியை பாவிப்பதில் குற்றம் காண முடியாது.

 

ஒருவேளை அவர்கள் பரிதி அண்ணன் படுகொலையில் சம்பந்தப்பட்டிருந்தாலும் கூட தேசியக் கொடியை பிடிக்காதே என்று சொல்ல முடியாது. தமிழீழ தேசத்தவர்கள் என்ற வகையில்.. எல்லோருக்கும் உரிய உரிமை அவர்களுக்கும் உண்டு. தேசிய தலைவர் இருந்தாலும்.. நிச்சயம் இதனை தடுக்க முடியாது... காரணம்.. தேசிய தலைவரைக் கேட்டு தான் கொடி பிடிக்கனும்.. தூக்கனும் என்று ஒரு விதியை இயக்கம் அமைத்திருந்ததாகத் தெரியவில்லை. தேசியக் கொடியை... தன்னை தமிழீழ தேசத்தவன் என்று நினைக்கிறவன்.. தமிழீழ தேசத்தை ஆதரிக்கிறவன் என்று..  யாரும் பிடிக்கலாம். ஆனால்.. உத்தியோகபூர்வமாக அதனை பாவிக்கும் போதே அதனை உரிய முறையில் கையாள வேண்டும்.  :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

அருவருக்கத்தக்கவாறு நடுவிரலைக் காட்டுதலும்

சாத்திரி அண்ணாவுக்கு எழுதிய பதில் இது. நீங்களும் வாசிக்கவும்.

"நீங்கள் சுட்டிக்காட்டிய படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட விரல்களையே அனைவரும் நீட்டியுள்ளார்கள். நடுவிரல் மட்டும் காட்டப்பட்டது போல் தென்படும் படத்தில் பெருவிரலும் நீட்டப்பட்டது என் கண்ணுக்கு தெரிகிறது. படத்தை உற்று பார்க்கவும் அல்லது பெரிதாக்கி பார்க்கவும்."

  • தொடங்கியவர்

தலைவரால் தேசியக் கொடி பற்றிய கையேடு ஒன்று வெளியிடப்பட்டது. அது என்னிடம் இபோது இல்லை. அதில் தேசியக் கொடிக்கு எவ்வாறு மரியாதை செய்யப்பட வேண்டும் எவ்வாறு பிடிக்கப்பட வேண்டும் என்றெல்லாம் விரிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

.

Doha Qatar இல் முன்னாள் போராளிகள் தேசிய கொடியை T-Shirt ஆக அணிந்துள்ளார்கள்.

http://www.yarl.com/forum3/index.php?/topic/149550-2014-மாவீரர்-நாள்-நிகழ்வுகளின்-தொக/?p=1061194

இப்படி நிறைய திரிகள் இதுவரை காலமும் யாழில் இணைக்கப்படும் போது தூங்கிக்கொண்டிருந்தவர்கள் இத்திரியில் மட்டும் கண்விழித்து எழுந்தது ஆச்சர்யம்.

Edited by துளசி

  • தொடங்கியவர்

ஜஸ்டின் அண்ணே..... பரிதி அவர்களின் கொலையை நாம் தான் புலி உறுப்பினர் கொலையா பார்க்கிறம் போலிஸ் இரண்டு கோஷ்டி சண்டையாத்தான் பார்க்குது பகை தீர்க்க பட்டது அவ்வளவுதான் இதுக்கு ஆதாரம் அவனுக்கு தேவை இல்லை பாருங்கோ செய்தவன் இல்லை பிடிபட்டவன் நேரடி தொடர்பு இல்லை எவனை விசாரிப்பது ...

கோஷ்டி மோதல் என்று சொல்லி நீங்கள் இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றுவது எதற்கு? போலிஸ் என்ன கூறியுள்ளது என்று இதில் பார்க்கவும்.

http://www.tamilguardian.com/article.asp?articleid=6286

கொலை செய்தவர்கள் யாரோவாக இருக்க இங்கு ஆதாரமில்லாமல் வேறு யாரையும் குற்றம் சாட்டும் உங்கள் பணி மெய் சிலிர்க்க வைக்கிறது.

Edited by துளசி

  • தொடங்கியவர்

எல்லோரும் கேக் வெட்டினார்கள் ஆனால் பாம்பின் கேக்கு தான் துளசிக்கு தெரிந்ச்சது .........ஒருவேளை உறுபினர் போல :o

மற்றவர்களின் facebook இணைப்பு இருந்தால் எனக்கு தாருங்கள். facebook இல் add பண்ணுகிறேன். :D

அதை விட்டு நானும் குறூப்பில் உள்ளேனோ என்று கற்பனையில் கருத்து கூற வேண்டாம். :D

கற்பனையில் குற்றச்சாட்டுகள் வைத்து பழகிய உங்களுக்கு இலகுவில் பழக்கதோஷம் மாறாது என்று தெரியும். :lol:

Edited by துளசி

  • தொடங்கியவர்

நிழலி... அதை,

மீள இணைக்கும்,போது....

அதில் எழுதிய, எனது கருத்தையும் இணைப்பது தானே.... நியாயம்.

எனது கருத்தை, ஏன் மீண்டும் இணைக்கவில்லை?

நாங்கள், என்ன... வேலை, வெட்டி, குடும்பம், குட்டி இல்லாமலா....

இங்கு, கருத்து.... எழுத வாறம்.

திரி மீள ஆரம்பிக்கப்பட்டதால் நீங்கள் முதல் திரியில் என்ன எழுதினீர்கள் என்பதை இங்கு திரும்ப எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கோஷ்டி மோதல் என்று சொல்லி நீங்கள் இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றுவது எதற்கு? போலிஸ் என்ன கூறியுள்ளது என்று இதில் பார்க்கவும்.

http://www.tamilguardian.com/article.asp?articleid=6286

கொலை செய்தவர்கள் யாரோவாக இருக்க இங்கு ஆதாரமில்லாமல் வேறு யாரையும் குற்றம் சாட்டும் உங்கள் பணி மெய் சிலிர்க்க வைக்கிறது.

கூட்டிபோனவர்கள் சொல்லும்போது 
நீங்கள் இப்படி தட்டி கழிக்க கூடாது. 
  • தொடங்கியவர்

மற்றைய நாளில் தங்கள் அலுவல்களைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள் என்றுதான் சொல்லியுள்ளேன். எதுவும் செய்வதில்லை என்று சொல்லவில்லையே லோயர் டுல்ஸி.

அவர்களோடு முகநூலினூடாகத் தொடர்பில் இருக்கும் உங்களுக்கு (படங்களை இணைத்ததால் சொல்லுகின்றேன்) அவர்கள் மற்ற நாட்களில் என்ன செய்கின்றார்கள் என்பது தெரியலாம். ஏதாவது பிரயோசனமானது என்று நீங்கள் நினைத்தால் வழக்கம் போல இணைத்துவிடுங்கள்.

"ஒருநாள் மட்டும் கொடியைத் தூக்கிப் பிடித்து தங்களைப் பிரபல்யத்தைத் தேடிவிட்டு மற்றைய நாட்களில் எதுவுமே செய்யாமல்....." என்ற வரியை நீங்கள் தான் பயன்படுத்தியிருந்தீர்கள்.

முகநூல் பதிவுகளை யாழில் இனி இணைப்பதில்லை என்று நான் முடிவெடுத்து இன்னொரு திரியில் கூறிய பின்னரும் நீங்கள் அவர்கள் மற்ற நாட்களில் என்ன செய்துள்ளார்கள் என்று கேட்பதால் இத்திரியில் மட்டும் சிலவற்றை நேரமிருக்கும் போது இணைக்கிறேன்.

ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்கிறார்கள் என்று கூறியிருந்தேன்.

Edited by துளசி

  • தொடங்கியவர்

தேசிய தலைவரின் 60 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இவர்களால் வெளிவிடப்பட்டது.

26.11.2014

தேசிய தலைவரின் 60 வது பிறந்த தினத்தை முன்னிட்டு EeLam MPK BoYs இனரால் வெளிவிடப்பட்டது !!

ஆண்ட பரம்பரை

காலமெல்லாம் கைகட்டி

ஆள வழியின்றி வாய் பொத்தி,

தலைகுனிந்து அடிபணிந்து-எம்

ஈழ மண்ணையும் விலைபேசி -சேற்றில்

உழும் எருமை மாடுகளாய் -எதிரிமுன்

மண்டியிட்ட தமிழருக்கு

வாழ நெறிகாட்டி-அவன் மாண்புதனை

நிலைநாட்ட வந்துதித்த

ஆண்டவனின் அவதார நாள் இன்நாள்..

1490623_738265652931222_3936829751693864

https://m.facebook.com/photo.php?fbid=738265652931222&id=100002433837826&set=a.111652152259245.21197.100002433837826&source=57&refid=52&__tn__=E

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

திரி மீள ஆரம்பிக்கப்பட்டதால் நீங்கள் முதல் திரியில் என்ன எழுதினீர்கள் என்பதை இங்கு திரும்ப எழுதுங்கள்.

 

t2629.gifநோ,நோ.நோ ....t2615.gif

அந்த விளையாட்டெல்லாம்.... நமக்கு சரிப்பட்டு வராது.

கருத்து களத்திலோ, சாப்பாட்டு பந்தியிலோ... தமிழ்சிறி முதல் இடத்தில் தான்... குந்தியிருப்பான்.

கடைசி பந்தியில்... குந்தியிருக்க, என்னை கூப்பிடாதிங்க ப்ளீஸ்.

எனக்கும்.... ரோசம் இருக்கு. ஒருக்கா... வெட்டியதை, திரும்ப பதிய... நான் என்ன, பைத்தியக்காரனா?

ஆங்..............அவ்...........  அது.................

கி....கீ..... கீய்.............        

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்

t2629.gifநோ,நோ.நோ ....t2615.gif

அந்த விளையாட்டெல்லாம்.... நமக்கு சரிப்பட்டு வராது.

கருத்து களத்திலோ, சாப்பாட்டு பந்தியிலோ... தமிழ்சிறி முதல் இடத்தில் தான்... குந்தியிருப்பான்.

கடைசி பந்தியில்... குந்தியிருக்க, என்னை கூப்பிடாதிங்க ப்ளீஸ்.

எனக்கும்.... ரோசம் இருக்கு. ஒருக்கா... வெட்டியதை, திரும்ப பதிய... நான் என்ன, பைத்தியக்காரனா?

ஆங்..............அவ்........... அது.................

கி....கீ..... கீய்.............

:lol: :lol:

நீங்களும் அஞ்சரன் அண்ணா மாதிரி எதிர் கருத்து வைத்திருந்தால் அதையும் நிழலி அண்ணா இத்திரியில் செருகியிருப்பார். நீங்கள் எழுதியது நிழலி அண்ணாவையும் சுட்டு விட்டதோ தெரியவில்லை. அதுதான் இணைக்கவில்லை போலிருக்கிறது. :D

  • தொடங்கியவர்

2012 march ஜெனீவா பேரணியில் கலந்து கொண்ட போது...

473193_246511462106646_2136407242_o.jpg

467247_246115522146240_114996984_o.jpg

https://m.facebook.com/photo.php?fbid=246115522146240&id=100002433837826&set=a.196135237144269.45139.100002433837826&source=48#!/photo.php?fbid=246115522146240&id=100002433837826&set=a.196135237144269.45139.100002433837826&source=48

பி.கு: ஆண்டுகள் மாறி மாறி இணைப்பேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இணையவன் அண்ணா.. 

usainbolt_2300716b.jpg

 

இதனை எப்படி எடுப்பீங்க..??! போல்ட் ஜமேக்கா கொடியை அவமதித்து.. ஜமேக்காவை அவமதிப்பதாகவா..??!

 

எல்லா தேசியக் கொடிகளுக்கும் ஒரு பொது ஒழுங்குவிதி உண்டு. அது தமிழீழத் தேசியக் கொடிக்கும் அதன் கோவையில் சொல்லப்பட்டுள்ளது. அதற்கு அமையவே தான் அது உத்தியோகபூர்வ நிகழ்வுகளில்.. தேசிய பொது நிகழ்வுகளில்.. சம்பிரதாய நிகழ்வுகளில் பாவிக்கப்படும். ஆனால் தேசியக் கொடி அதற்காக மட்டும் அமைக்கப்படவில்லை. அது தேச அடையாளமாகவும் உள்ளது.

 

இதில் வரவேற்கத்தக்க விடயம் என்ன என்றால்.. புலிக் கொடியை.. தேசியக் கொடியை அடிப்பெட்டிக்குள் கட்டிப் போடு என்று 2009 க்குப் பின்.. கட்டுரை.. கதை எழுதியவர்கள் எல்லாம்.. இப்போ அதன் கோவையை புரட்டிப்பார்ப்பது தான். அந்த வகையில்... இந்த இளைஞர்களை இன்னும் ஒரு தடவை பாராட்டலாம்.

 

பிரான்ஸ் தேசியக் கொடியை உள்ளாடையாக தைச்சு ஒருத்தரும் போடேல்லையா..??! ரீசேட்டா தைச்சு விபச்சாரிகள் அணியவில்லையா..??! அமெரிக்கக் கொடிக்கே இந்தக் கதிகள் எல்லாம் நடந்துள்ளது. அந்தளவுக்கு தமிழீழக் கொடி கேவலப்படவில்லை.

 

மேலும்.. மேலே தமிழீழத் தேசியக் கொடியோடு அந்த இளைஞர்கள்.. தண்ணி அடிக்கவோ.. நடுவிரலைக் காட்டவோ இல்லை. மிகவும் மரியாதையாகத்தான் நடந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தமிழீழ தேசியக் கொடியை ஒரு அடையாளமாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். உத்தியோகப்பூர்வமாக அல்ல. இதனை நீங்கள் தெரிந்து கொள்ளவில்லையா.. அல்லது தெரிந்து கொண்டு.. குறைபிடிக்கனுமா..??!

 

மேலும் பரிதி அண்ணாவின் படுகொலையில்.. இவர்கள் சம்பந்தப்பட்டிருந்தால்.. அதனை அறிந்திருப்பவர்கள்.. அதில் சம்பந்தப்பட்டவர்களை நீதியின் முன் நிறுத்தி விட்டு இங்கு வந்து குற்றச்சாட்டுக்களை முன் வைக்கட்டும். அதைச் செய்யாமல்.. தங்களின்.. சுய விளம்பரத்துக்கு.. சும்மா சகட்டு மேனிக்கு எழுதித் தள்ளுவதை வைச்சு.. ஒருவரை அல்லது ஒரு குழுவினரை  குற்றவாளியாக்க வேண்டிய தேவை இல்லை. அதன் அடிப்படையில் அவர்கள் தேசியக் கொடியை பாவிப்பதில் குற்றம் காண முடியாது.

 

ஒருவேளை அவர்கள் பரிதி அண்ணன் படுகொலையில் சம்பந்தப்பட்டிருந்தாலும் கூட தேசியக் கொடியை பிடிக்காதே என்று சொல்ல முடியாது. தமிழீழ தேசத்தவர்கள் என்ற வகையில்.. எல்லோருக்கும் உரிய உரிமை அவர்களுக்கும் உண்டு. தேசிய தலைவர் இருந்தாலும்.. நிச்சயம் இதனை தடுக்க முடியாது... காரணம்.. தேசிய தலைவரைக் கேட்டு தான் கொடி பிடிக்கனும்.. தூக்கனும் என்று ஒரு விதியை இயக்கம் அமைத்திருந்ததாகத் தெரியவில்லை. தேசியக் கொடியை... தன்னை தமிழீழ தேசத்தவன் என்று நினைக்கிறவன்.. தமிழீழ தேசத்தை ஆதரிக்கிறவன் என்று..  யாரும் பிடிக்கலாம். ஆனால்.. உத்தியோகபூர்வமாக அதனை பாவிக்கும் போதே அதனை உரிய முறையில் கையாள வேண்டும்.  :icon_idea::)

 

இங்கு  நடப்பது கருவறுத்தல்

ஓட ஓட துரத்துதல்...

 

கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்

இங்கு கருத்து எழுதிய  சிலரைப்போல

நானும் இவர்கள் தேசியக்கொடியை  தூக்கியது பிழை என எழுதியிருந்தால்....

திரி  மாறியிருக்கும்

தேசியத்தையும் கொடியையும் குத்தகைக்கு எடுத்துவிட்டார் அண்ணர் என...

 

40 வருடங்களுக்கு  மேலாக

இலங்கையிலும் (சீங்களவனுடன்  சேர்ந்தும்)

பிரான்சிலும் தேசிய விழாக்களுக்கும் 

ஊர்வலங்களுக்கும்  சென்று பங்கெடுத்திருக்கின்றேன்

 

அங்கு சிங்களவரும்

பிரெஞ்சுக்காறரும்  சிகரெட்டுடனும்  மதுப்போத்தலுடனும் தேசியக்கொடியைப்பிடித்தபடி ஊர்வலங்களில் வருவார்கள்.  அவர்களை  காவல்த்துறை  உட்பட எவரும் தள்ளி  வைத்ததைக்கண்டதில்லை..

 

 

ஆனால் தேசியக்கொடியை  ஏற்றுபவராகவும் இறக்குபவராகவும் இருந்திருக்கின்றேன்

ஏற்றும் போதும் இறக்கும் போதும் ஒவ்வொரு அங்குலமும் கவனமாக இருக்கணும்

சறுக்கக்கூடாது என்பதில் ஏற்றுபவரும் செயற்பாட்டாளர்களும் மிகமிகக்கவனமாக இருப்பார்கள்.

 

உணர்வு என்பது எல்லோருக்கும் பொதுவானது

ஒருவன் இவ்வாறு தான் தேசியக்கொடியை  தூக்கணும் என்ற வரம்பு கிடையாது

அப்படிப்பார்த்தால்

மதுவைத்தொடாத தலைவர்

புகை பிடிக்காத தலைவர்

ஏன் ஒரு திருமணம் செய்த தலைவர் ...

இப்படியானவர்  தான் கொடி பிடிக்கணும் என்று வரம்பு வைத்தால்

நான் மட்டுமல்ல

அமெரிக்க பிரெஞ்சு ஐனாதிபதிகளே கொடியைத்தொடமுடியாது............

  • தொடங்கியவர்

கேணல் பரிதி அவர்களுடைய 2 வது ஆண்டு நினைவேந்தல் நினைவுகூரப்பட்டதும், கேணல் பருதி அவர்களின் படுகொலைக்கு நீதி கேட்டு இடம்பெற்ற பேரணியும் !! ( 8 - 11 - 2014 ) !!

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளராக இருந்து 08.11.2012 ல் சிங்கள கைக்கூலிகளின் துப்பாக்கி வேட்டில் பாரிசு மண்ணில் வீரமரணத்தை தழுவிக்கொண்டார். அவரின் 2 ஆம் ஆண்டு நினைவு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சின் புறநகர் பகுதியில் ஒன்றான ஒபவில்லியே என்னும் இடத்தில் அமைந்துள்ள துயிலும் இல்லத்தில் இன்று காலை பிரான்சு வாழ் தமிழீழ மக்களால் நினைவுகூரப்பட்டது.

காலை 11.00 மணிக்கு அவரின் துயிலும் இல்லத்தில் பொதுச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு துணைப் பொறுப்பாளர் திரு. அலெக்ஸ் அவர்கள் ஏற்றி வைக்க அவரின் துயிலும் இல்லத்திற்கு தமிழீழ தேசியக்கொடி போர்த்தப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.

துயிலும் இல்லப்பாடல் ஒலிக்கப்பட்டு கேணல். பரிதியின் பெற்றோர் ஈகைச்சுடரினை ஏற்றி வைத்தனர். கேணல் பரிதியின் திருவுருவப்படத்திற்கு துணைவியாரும், புதல்வியும் மலர்மாலை அணிவித்தனர். அதனைத் தொடர்ந்து மக்கள் சுடர் ஏற்றி மலர் கொண்டு வணக்கம் செலுத்தினர்.

தாய்தமிழ்நாட்டில் இருந்து வந்த பேராசிரியர் அறிவரசன் ஐயா அவர்களின் மாவீரர் கேணல் பரிதி நினைவுக்கவிதை இடம்பெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் திரு. சத்தியதாசன் அவர்கள் உரை இடம் பெற்றது. தேசியத் தலைவரின் கட்டளைகளை சிரமேற் கொண்டு பிரான்சை மிகவும் திறம்பட நடாத்திச்சென்றவரே கேணல் பரிதி அவர்கள் என்றும் அவரை படுகொலை செய்தவர்கள் எந்த நோக்கத்தோடு செய்தார்களோ அது என்றும் நிறைவேறப்போவது கிடையாது என்றும். பிரான்சு காவல்துறைதான் இந்த கொலையாளிகளை நீதியின் முன்நிறுத்த வேண்டும். அதுவரை எமது நீதிக்கான இந்த போராட்டம் தொடரும் என்றும் இதற்கு எமது மக்கள் மிகவும் பலமாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து அவரின் கல்லறைமீது எத்தனை தடைகள், துயர்கள் வந்தாலும் அவற்றை எதிர்கொண்டு தொடர்ந்து நாம் அனைவரும் போராடுவோம் என்று அனைவரும் உறுதிப்பிரமாணம் எடுத்து நினைவேந்தல் நிகழ்வு நிறைவு பெற்றது.

--------------------------------------------------------------------------------------------

கேணல் பருதியின் படுகொலைக்கு நீதி கேட்டு இடம்பெற்ற பேரணி !!

கேணல் பருதியின் படுகொலைக்கு நீதி கேட்டு இடம்பெற்ற பேரணி ஒன்று முன்னெடுக்கபட்டுள்ளது. இன்று சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு நீதிக்கான பேரணி கம்பர்த்தா என்னும் இடத்தில் ஆரம்பித்து 08.11.2012ல் அவர் வீரமரணம் அடைந்த இடத்தில் சென்று முடிவடைந்து.

அங்கு சுடர் ஏற்றி மலர் கொண்டு மக்கள் வணக்கம் செலுத்தினர். நினைவு உரையினை அவருடைய மகள் சாரா பிரெஞ்சு மொழியில் வழங்கியிருந்தார். கேணல் பரிதி அவர்களின் 2-ஆம் ஆண்டு நினைவு அறிக்கை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பரப்புரைப் பொறுப்பாளர் வாசித்தார்.

அதன் பின்னர் அத்திடலில் பேராசிரியர் முருகர் குணசிங்கம் அவர்கள் எழுதிய புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் என்ற நூல் அறிமுகத்தை திரு. சத்தியதாசன் அவர்களால் செய்து வைக்கப்பட்டு போராசிரியர் முருகர் குணசிங்கம் அவர்கள் வழங்க பேராசிரியர் அறிவரசன் அவர்கள் அதனைப் பெற்றுக்கொள்ள அதனைத் தொடர்ந்து கட்டமைப்பைச் சேர்ந்தவர்களும், மக்களும் பெற்றுக்கொண்டனர்.

நம்புங்கள் தமிழீழம் பாடலுடனும் தமிழரின் தாகம் தமிழீழத்தாகம் உறுதியுரையுடன் நினைவேந்தல் நிகழ்வு நிறைவு பெற்றது.

EeLam MPK BoYs !!

7587_731032090321245_1584067589288333500

https://m.facebook.com/photo.php?fbid=245955292162263&id=100002433837826&set=a.196135237144269.45139.100002433837826&source=48&refid=13#!/photo.php?fbid=731032090321245&id=100002433837826&set=a.196135237144269.45139.100002433837826&source=48

Edited by துளசி

  • தொடங்கியவர்

Geneva Urvalam ( ஜெனிவா ஆர்பாட்டம் ) - Tamil's Manifestation // 15.09.2014 // ( By - EeLam MPK BoYs )

\\ ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபை முன்பாக மகிந்தவின் கொடும்பாவி எரிப்பும், இனப்படுகொலைக்கு நீதி கோரி வரலாறு காணாத ஆர்ப்பட்டப் பேரணியும் ..!!

10679690_701264866631301_772659612831839

காணொளி

http://youtu.be/skRV59W6z1A

EeLam MPK BoYs

https://m.facebook.com/photo.php?fbid=731032090321245&id=100002433837826&set=a.196135237144269.45139.100002433837826&source=48#!/photo.php?fbid=701264866631301&id=100002433837826&set=a.196135237144269.45139.100002433837826&source=48

இந்த இளைஞர்களின் தேவையை துளசி இணைத்த படங்களும், இங்கே தெரிவிக்கப்பட்ட கருத்துக்களும் உறுதிப்படுத்துகின்றன. இவர்கள் கொடியும் பிடித்து, பரிதி கொலைக்கு நீதி கேட்டும் ஊர்வலமும் போவதனால் பரிதி கொலையில் இவர்களுக்கு சம்பந்தம் இருக்காது என்பதே என்னுடைய ஆணித்தரமான வாதம்.

பச்சைமிளகாய் உப்பு எல்லாம் கொண்டுவந்து செருகினால்தான் ..... வசதியாய் பரோட்டா போடலாம்.
இதைத்தானே திரிக்கு திரி செய்கிறார்கள். 

 

அருமை !!!! பச்சை புள்ளி எல்லாம் தீர போகுது

புற்று நோய் வந்தால் சத்திர சிகிச்சை முடிந்த பின்னர் கதிர் வீச்சை கொண்டு அந்த வளர்ச்சி மீண்டும் வராமால் இருக்க கதிர்வீச்சின் சிகிச்சை(Chemotherapy) செய்வார்கள், அதே போல தான் இந்த தேசிய கொடி பிடித்த இளைஞ்னர் மீதான தாக்குதலும், தாயகத்தில் போராட்டம் அழிக்கப்பட்ட பின்னர் அது மீண்டும் தலை தூக்க வண்ணம் தடுக்க பாடுபடுபவர்களின் முயற்சியே இது அதாவது கதிர்வீச்சு சிகிச்சை செய்யீனம். அடிக்கடி சீமானுக்கும் செய்வீனம் புலம் பெயர்ந்தவர்களுக்கும் செய்யீனம்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இளைஞர்களின் தேவையை துளசி இணைத்த படங்களும், இங்கே தெரிவிக்கப்பட்ட கருத்துக்களும் உறுதிப்படுத்துகின்றன. இவர்கள் கொடியும் பிடித்து, பரிதி கொலைக்கு நீதி கேட்டும் ஊர்வலமும் போவதனால் பரிதி கொலையில் இவர்களுக்கு சம்பந்தம் இருக்காது என்பதே என்னுடைய ஆணித்தரமான வாதம்.

 

 

இதை  வைத்து

இவ்வாறான ஒரு முடிவுக்கு நீங்கள் வருவதையிட்டு மிகுந்த நன்றி...

 

இந்த திரியில் பிரிதி  அண்ணா பற்றியும்

இந்த இளசுகள் பற்றி  எழுதியிருப்பதையும் பார்த்தால்  உங்களுக்கு  இவ்வாறு  தீர்மானம் வருகிறது

ஏனெனில் பொது நன்மை சாராது

உங்களுக்கு பிடிக்காத தமிழர் ஒருங்கமைப்புக்குழு மீதான தங்களது வர்மத்தை இதன் மூலமும் தீர்த்துக்கொள்கின்றீர்கள். இது பற்றி  யாழ் உறவுகளுக்கத்தெரியாது என கண்ணை மூடி பால் குடிக்கின்றீர்கள்...

 

ஆனால் இந்த திரியில்

பிரிதி  அண்ணா பற்றியும்

இந்த இளசுகள் பற்றி  எழுதியிருப்பதையும் பார்த்தால்  எனக்கு  இவ்வாறு  தீர்மானம் வருகிறது

பருதி  அண்ணா

எல்லோரையும் இணைத்துச்செல்ல  எவ்வாறெல்லாம் முயன்றிருக்கிறார்

இந்த இளசுகளையும் தேடிச்சென்று அவர்கள் மனதையும் தொட்டிருக்கின்றார்.

அவரது ஆளுமையை நேரில் பார்த்தவன் என்ற ரீதியில்

இந்த திரியும்அவரது திறமைக்கு ஒரு சான்று....

விடுதலை  புலிகளின்  விஷேட  படையணியா  இனி  பாம்பு  குறுப்  செயல்ப்படும் .....இவர்கள்  ஊர்வலத்தை  குழப்ப  போனவர்களா  அல்லது  நடத்த  போனவர்களா  ஒரே   வன்முறையா  இருக்கு ... :)

 

பாரிஸில்  உள்ளவர்களுக்கு  பாம்பு  முக்கியமா  வேணும்  இங்க  பலபேர்  எதிர்க்காமல்  இருக்க  காரணம்  அதுதான்  ..வட்டிக்காசு ...சிட்டுக்காசு ...கட்டை  பஞ்சாயத்து  எல்லாம்  இங்க  உள்ள  முதலாளிமாருக்கு  பாம்புதான்  செய்யுது  பாருங்கோ .. :icon_idea:

 

பலரின்  நிஜமுகம்  தேசியத்தில்  புலித்தோல்  போர்த்தி  இருக்கு  அவ்வளவுத்தான்  :D

இதுவும்  பிரான்ஸின்  ஒரு  பகுதியில் நடந்த  பிறத்தநாள்  விழா  இது  துளசி  கண்ணுக்கு  படவில்லை ஏன் ..இதுவும்  பேஸ்புகில் தான்  இருக்கு ..

10393893_1012571235425289_76979821540318

1940028_1012571292091950_762495593620131

 

10644681_1012571398758606_55634470124038

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.