Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெரினா கடற்கரையில் பாஸ்போர்ட்டுகளை தொலைத்து விட்டு வெளிநாட்டினர் 14 பேர் தவிப்பு திருமணத்திற்கு வந்தவர்களின் பரிதாப கதை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
201412110023523904_MarinaAt-the-beachPas

சென்னை,

சென்னை மெரினா கடற்கரையில் பாஸ்போர்ட்டுகளை தொலைத்து விட்டு, வெளிநாட்டினர் 14 பேர் தவித்த நிலையில் உள்ளனர்.

திருமண நிகழ்ச்சி

சென்னை மதுரவாயலில் கடந்த 7–ந் தேதி அன்று இலங்கையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரின் குடும்ப திருமண நிகழ்ச்சி நடந்தது. இந்த திருமண நிகழ்ச்சியில் இலங்கை, ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளில் இருந்து ஏராளமான பேர் வந்து கலந்து கொண்டனர். திருமணத்திற்கு வந்தவர்கள், சென்னையில் தங்கி இருந்து பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தனர்.

நேற்று முன்தினம் இந்த திருமண நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் மெரினா கடற்கரையை சுற்றி பார்த்தனர். பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரில், மெரினா கடற்கரை புல் தரையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் அவர்கள் புறப்பட்டுச் சென்று விட்டனர். அவர்கள் கொண்டு வந்த பை ஒன்றை புல்தரையில் தவறுதலாக விட்டுச்சென்று விட்டனர்.

பாஸ்போர்ட்டுகள் பறிபோனது

தவற விட்ட பையை யாரோ எடுத்துச் சென்று விட்டனர். அந்த பைக்குள் 14 பாஸ்போர்ட்டுகள், ரூ.30 ஆயிரம் ரொக்கப்பணம், கேமரா மற்றும் வங்கி ஏ.டி.எம்.கார்டு, கிரெடிட்கார்டு ஆகியவை இருந்தன. இலங்கை பாஸ்போர்ட்டுகள் 12, ஜெர்மனி பாஸ்போர்ட்டு ஒன்று, இங்கிலாந்து பாஸ்போர்ட்டு ஒன்றும் பையுடன் பறிபோய் விட்டது. இது தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த தம்பன் சின்னராஜா, ஜெர்மனியைச் சேர்ந்த கந்தையா கஜேந்திரன் ஆகியோர் அண்ணாசதுக்கம் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறர்கள்.

பாஸ்போர்ட்டுகளை பறிகொடுத்தவர்கள், சொந்த நாட்டுக்கு திரும்பி போக முடியாமல் தவித்த நிலையில் உள்ளனர்.

 

http://www.dailythanthi.com/News/Districts/Chennai/2014/12/11002400/MarinaAt-the-beachPassportsLostForeigners14-peopleHelplessness.vpf

 

  • கருத்துக்கள உறவுகள்

பாஸ்போர்ட் எல்லாம் ஒரு பிரச்சினையா?? :D

  • கருத்துக்கள உறவுகள்

பாஸ்போர்ட் எல்லாம் ஒரு பிரச்சினையா?? :D

 

இல்லை இசை....
 
விஷயம் தெரியாதவர்களுக்கு வரும் பரிதவிப்பு, அனுபவித்தால் தான் தெரியும்.... பயணமே நாசம்..... :o
 
மனைவி / கணவன் குளற, அடுத்தது என்ன செய்வது என்று தெரியா மலைப்பு.
 
தமிழ் நாடு கோவில் ஒன்றில், எனது உறவுக்கார அக்கா கைப்பை பாக்குடன் வெட்டிக் கொண்டு போய் விட்டார்கள்.
 
அவர் குளறத் தொடங்கி விட்டார். கணவரோ மலைத்துப் போய் உக்காந்து விட்டார். போலீஸ் ஸ்டேஷன் போய் முறைப்பாடு செய்து, அவர்கள் விசாரித்து தரும் ஆவணத்துடன் தான் எம்பசி போக முடியும்.
 
நல்ல வேலையாக அவர்களுடன் இருந்த ஒருவர் ஊரை திண்ட காய், இருங்க வாறன் எண்டு, அங்க நிண்ட போலீஸ் காரரிடம் போய், பாஸ்போர்ட் கையில வந்தால் 10,000 ரூபாய் கொடுக்கிறேன். விசயத்த காதும், காதும் வைச்ச மாதிரி முடிசிடல்லாம் எண்டு சொல்ல, சார் அந்த ஓட்டல் கடைல கொஞ்சம் இருங்க. கடைக்காரரே, சாருக்கு ஸ்ட்ரோங்க ஒரு காப்பி கொடுப்பா என்று சொல்லி போய், 15 நிமிடத்தில பாஸ்போர்ட் உடன் வந்து சேர்ந்து, பார்த்துக் கொடுங்க சார் எண்டு 15,000 வாங்கிக் கொண்டு போனாராம்.
 
யாரு என்ன திகதியில் கோவில் டுயட்டி என்று அவர்களுக்கு தெரியும். அப்பப்ப மாமூல வாங்கிட்டு கண்டுக்க மாட்டார்கள். இந்த பக்கம் பணம் வரும் எண்டால், விசயத்தினை சத்தமில்லாமல் முடிப்பார்கள்.
 
இதுக்கு போய், போலீஸ் என்ட்ரி, எம்பசி, நடக்கிற வேலையா: ஹொலிடே போன இடத்தில....
 
ம்... படிப்பினை. :D  :icon_idea:

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

பாஸ்போர்ட் எல்லாம் ஒரு பிரச்சினையா?? :D

 

தம்பி

கனக்க பாஸ்போர்ட்கிழிச்சு போட்டு தண்ணி  இழுத்துவிட்டவரோ...?? :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

புகுந்த நாட்டைப் பொறுத்தும் இருக்கு கடவுச்சீட்டு தொலைவதன் பின்விளைவு. சில வருடங்கள் முன்பு இலங்கைக்குப் போய் கொட்டாஞ்சேனையில் தங்கி நின்ற நோர்வே, பிரெஞ்சுப் பிரஜைகளான சகோதரர்களின் கடவுச் சீட்டை நம்பர் பிளேட் இல்லாத வாகனத்தில் வந்து பறித்துச் சென்று விட்டார்கள். பொலிஸிடம் போகவும் இயலாது. எம்பசிகளுக்கு அறிவித்தார்கள். நோர்வே எம்பசி தங்கள் வாகனத்தை அனுப்பி தன் பிரஜையை கூட்டிச் சென்று தற்காலிக பயணப் பத்திரம் மாதிரி ஒன்று கொடுத்து எம்பசி உதவியோடு விமான நிலையத்தூடாக அனுப்பி வைத்தார்கள். பிரெஞ்சுக் காரன் பொலிஸ் ரிப்போர்ட் கேட்டு, அது லஞ்சம் கொடுத்து எடுத்துக் கொடுத்த பின்னர் தான் புதிய பாஸ்போட் கொடுத்தார்கள். அமெரிக்காவில் நீங்கள் பயணம் ஆரம்பிக்க முதல் State department  இல் உங்கள் பயண விபரங்களைப் பதிவு செய்து வைத்தால் இது போன்ற சம்பவங்கள் நடந்தால் உதவி விரைவாகக் கிடைக்கும். மற்ற நாடுகளிலும் இந்த முறைமை இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

பாஸ்ப்போட்டுக்களை யாராவது மற்றவர்களிடம் கொடுப்பார்களா ????அதுவும் பதின் நான்கு பாஸ்போர்ட் உம ஒரு பையுள் இருந்தது என்பதை நம்ப முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கடற்கரையில் குளிக்கும்போது எல்லோரும் தங்கள் பெறுமதியான பொருட்களை ஒருவரிடம் பாதுகாப்பாகக் கொடுப்பது தானே வழமை. பைக்குக் காவல் இருந்தவர் மறந்து விட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் மெரீனாவில் காணாமல்போன வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் கடவுச்சீட்டுகள் மீட்கப்பட்டன.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

ஜெர்மனியைச் சேர்ந்த கந்தையா கஜேந்திரன் தனது குடும்பத்தினரோடு சென்னை மதுரவாயலில் தனது உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சில நாள்களுக்கு முன்பு இங்கு வந்திருந்தார். திருமண நிகழ்ச்சிக்கு பின்னர், அவர் குடும்பத்தினரோடு சென்னையில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து வந்தார்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை கந்தையா, தனது குடும்பத்தினரோடு மெரீனா கடற்கரைக்கு வந்தார். அங்கு கந்தையா குடுóம்பத்தினர் ஒரு பையில் அனைவரது உடமைகளையும் வைத்துவிட்டு, கடற்கரையில் அனைவரும் விளையாடினராம். சிறிது நேரத்துக்கு பின்னர், அவர்கள் திரும்பி வந்தனர்.

அப்போது அங்கு வைத்துச் சென்ற பையை காணாமல் போயிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதில் கந்தையா குடும்பத்தினரின் 2 கடவுசீட்டுகள், அவர் உறவினர் இலங்கையைச் சேர்ந்த தம்பன் சின்னராஜா குடும்பத்தினரின் 12 கடவுசீட்டுகள், ரூ. 30 ஆயிரம் பணம் ஆகியவை அந்த பையில் இருந்ததாம்.

இது குறித்து கந்தையா கஜேந்திரனும், சின்னராஜாவும் அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர்.

போலீஸôர் விசாரணையில் அந்த பகுதியில் பொம்மை கடை வைத்து நடத்தும் ஐஸ்ஹவுûஸச் சேர்ந்த சர்மிளா என்ற பெண், கடற்கரையில் அந்த பை கேட்பாரற்று கிடந்ததால் எடுத்து வைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸார், அந்த பையை அவரிடமிருந்து மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

 

http://www.dinamani.com/latest_news/2014/12/11/மெரீனாவில்-காணாமல்போன-வெளி/article2566558.ece

 

 நன்றி சமிர்ளா, நல்ல உள்ளம்

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் மெரீனாவில் காணாமல்போன வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் கடவுச்சீட்டுகள் மீட்கப்பட்டன.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

ஜெர்மனியைச் சேர்ந்த கந்தையா கஜேந்திரன் தனது குடும்பத்தினரோடு சென்னை மதுரவாயலில் தனது உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சில நாள்களுக்கு முன்பு இங்கு வந்திருந்தார். திருமண நிகழ்ச்சிக்கு பின்னர், அவர் குடும்பத்தினரோடு சென்னையில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து வந்தார்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை கந்தையா, தனது குடும்பத்தினரோடு மெரீனா கடற்கரைக்கு வந்தார். அங்கு கந்தையா குடுóம்பத்தினர் ஒரு பையில் அனைவரது உடமைகளையும் வைத்துவிட்டு, கடற்கரையில் அனைவரும் விளையாடினராம். சிறிது நேரத்துக்கு பின்னர், அவர்கள் திரும்பி வந்தனர்.

அப்போது அங்கு வைத்துச் சென்ற பையை காணாமல் போயிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதில் கந்தையா குடும்பத்தினரின் 2 கடவுசீட்டுகள், அவர் உறவினர் இலங்கையைச் சேர்ந்த தம்பன் சின்னராஜா குடும்பத்தினரின் 12 கடவுசீட்டுகள், ரூ. 30 ஆயிரம் பணம் ஆகியவை அந்த பையில் இருந்ததாம்.

இது குறித்து கந்தையா கஜேந்திரனும், சின்னராஜாவும் அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர்.

போலீஸôர் விசாரணையில் அந்த பகுதியில் பொம்மை கடை வைத்து நடத்தும் ஐஸ்ஹவுûஸச் சேர்ந்த சர்மிளா என்ற பெண், கடற்கரையில் அந்த பை கேட்பாரற்று கிடந்ததால் எடுத்து வைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸார், அந்த பையை அவரிடமிருந்து மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

 

http://www.dinamani.com/latest_news/2014/12/11/மெரீனாவில்-காணாமல்போன-வெளி/article2566558.ece

 

 நன்றி சமிர்ளா, நல்ல உள்ளம்

 

கந்தையா குடும்பத்துக்கு, இந்தப் பை... ஒரு கிழமை கழித்து கிடைத்திருக்க  வேண்டும்.

அப்ப தான்.... புத்தி வரும். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.