Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்துவாகமாற கிறிஸ்துவருக்கு ரூ.2 லட்சம், முஸ்லீம்க்கு ரூ.5 லட்சம் இந்து அமைப்பு நோட்டீஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

201412121132059454_Christian--become-a-H
லக்னோ

உத்தரப்பிரதேசத்தின் மேற்கு பகுதியில் ’தரம் ஜக்ரன் சமிதி’ என்ற இந்து அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட கடிதம் உத்தரப்பிரதேச மாநிலத் தின் பல இடங்களில் வினியோகிக்கப்பட்டது. அதில் இந்துவாக மாறும் கிறிஸ்தவருக்கு ரூ.2 லட்சமும், முஸ்லீம்க்கு ரூ. 5 லட்சமும் அன்பளிப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடிதத்தில் தேதி இல்லை. இந்து அமைப்பின் நிர்வாகி ராஜேஸ்வர் சிங் பெயரும், செல்போன் எண்ணும் இருந் தது. அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது அது செயல்படாமல் ’சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந் தது.

இந்துக்களாக இருந்து பிற மதத்திற்கு சென்றவர்கள் மீண்டும் தங்கள் சொந்த மதத்துக்கு திரும்பும் நிகழ்ச்சி அலிகாரில் நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது. இதில் மாநிலத்தின் 20 மாவட்டங்க ளில் இருந்து 40,000 பேர் இந்து மதத்துக்கு திரும்பும் நிகழ்ச்சி நடைபெறும் என் றும் குறிப்பிடப்பட்டு இருந் தது. இந்த கடிதம் மேற்கு உத்தரபிரதேசம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது. மேலும் மத கலவரத்தால் பாதிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பிய முசாபர் நகரிலும் விநியோகிக்கப் பட்டது.

இதுபற்றி ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரிடம் கேட்ட«போது, ’நாங்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஆண்டு தோறும் நடத்தி வருகிறோம். தற்போது மீடி யாக்கள் தான் ஆக்ராவில் நடந்த நிகழ்ச்சியைப் போல் இந்த கடிதத்தையும் பெரிதுப் படுத்துகின்றன. நாங்கள் இதுபோன்ற முகாம்களை வெளியே தெரியாமல் நடத்தி வருகிறோம் என்றனர்.

இந்த கடிதம் உ.பி.யில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுக்கு உள்ளூர் முஸ்லிம் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அதில் மத்திய அரசு இதை மத திட்டமா? அல்லது வளர்ச்சி திட்டமா? என விளக்க வேண்டும், இது போன்ற நிகழ்ச்சிகளை முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும். ஜனவரி 18-ந்தேதி விஸ்வ இந்து அமைப்பு ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியையும் தடை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளன.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
இதைவிட பிச்சை எடுக்கலாம்.
 
இப்பிடியே போய் இது இங்கதான் வந்து நிற்கும் என்று அப்பவே சொன்னேன். 
  • கருத்துக்கள உறவுகள்

இந்துவாகமாற கிறிஸ்துவருக்கு ரூ.2 லட்சம், முஸ்லீம்க்கு ரூ.5 லட்சம் இந்து அமைப்பு நோட்டீஸ்

 

ஒரு  காலத்தில் இவ்வாறு தான் இந்துக்களை ஆசை காட்டி மோசம் செய்தார்கள்...

அதே வழியோ....??? :(

  • கருத்துக்கள உறவுகள்

இந்துவாகமாற கிறிஸ்துவருக்கு ரூ.2 லட்சம், முஸ்லீம்க்கு ரூ.5 லட்சம் இந்து அமைப்பு நோட்டீஸ்

 

ஒரு  காலத்தில் இவ்வாறு தான் இந்துக்களை ஆசை காட்டி மோசம் செய்தார்கள்...

அதே வழியோ....??? :(

 

[இப்பிடியே இங்கே இருக்கிற ஆட்களை மாறி மாறி மற்றிகொண்டிருக்க வேண்டியதுதான்.
 
கிறிஸ்துவும் வந்த பாடில்லை 
கிறிஸ்ணாவும் வந்த பாடில்லை.
 
இந்த குழப்பத்தில் மேலே அவையளும் குழம்பித்தான் யார் வரத்து என்று ஒருத்தரும் வராம இருக்கினம்போல 
  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்தவருக்கு ஏன் முஸ்லிமை விடக் குறைஞ்ச ரேட்? இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்! :D

  • கருத்துக்கள உறவுகள்

மதம் மாறிய இந்துக்கள் கேவலமானவர்களா? அல்லது அவர்கள் விட்டுவிட்டுப் போன இந்துமதம் கேவலமானதா?

கிருஷ்ணாவும் வரத்தேவையில்லை கிறிஸ்துவிம் வரத்தேவையில்லை நான் வந்திட்டன் தானே? :D

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மதத்தை பின்பற்றுவது விடுவது தனிமனித சுதந்திரம்.

 

இந்த உலகில் அந்தச் சுதந்திரத்தை மனிதர்கள் அனுபவிக்க.. இன்னொரு பகுதி மதவெறி மனிதர்கள் அனுமதிப்பதில்லை.

 

காலணித்துவ காலத்தில் மேற்குலகம் ஆயுத ஆக்கிரமிப்பு ரீதியில் கிறிஸ்தவத்தை திணித்தது.

 

இன்று கூட பல உள்நாட்டுப் போர்களை ஆரம்பத்திலேயே நிறுத்தக் கூடிய வாய்ப்பிருந்தும் அவற்றை பாவிக்காமல்.. பேரழிவுகளை மக்கள் மத்தியில் உண்டு பண்ணி அவர்களை ஏதிலிகளாக்கி.. அதன் பின் அவர்களின் கஸ்டத்தை தீர்க்க வருகிறோம் என்ற போர்வையில்.. மத அடையாளங்களோடு அந்த நலிந்து போயுள்ள மக்களிடம்.. மதத்தை திணிக்கும் செயலை மேற்குலகம் இன்றும் செய்து வருகிறது. இதனை தாயகத்திலும் கண்கூடாக காண முடிந்தது.

 

ஈழத்தில்..இந்துக்களை குண்டு போட்டு அழித்த சிங்கள பெளத்தர்களை நண்பர்களாக்கிக் கொண்டாடும்.. ஹிந்தியாவும் சரி.. கிறீஸ்தவ தமிழ் மக்களை தேவாலயங்களோடு குண்டு போட்டு அழித்த சிங்கள பெளத்தர்களின் அழைப்பை ஏற்று எந்த தேவாலயத்தில் மக்கள் மடிந்தார்களோ அந்தத் தேவாலயத்துக்கு பரிசுத்தம் பண்ண வரும் பாப்பரசர் வரை மத வியாபாரிகளே.

 

அதேபோல.. ஜிகாத்.. புனிதப் போர் என்று எல்லா மதங்களையும் மனிதர்களையும் அடக்கி ஆழ நினைக்கும் இஸ்லாமிய மதப் பயங்கரவாதம் என்பதும்.. இன்று மனித இனம் எதிர்கொள்ளும் சவால்களில் முக்கியமானது.

 

கடந்த நவம்பரில் மட்டும்.. இந்த ஜிகாத்தின் செயலில் 5000 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 50 பேரை மதமாற்றம் செய்யப்படுகிறார்கள் என்ற செய்திக்குள்ள தாக்கம்.. அந்த 5000 பேரின் மரணத்துக்கு இல்லை. காரணம்.. அவை மறைக்கப்பட்ட செய்திகளாகிவிட்டன. இதனை இஸ்லாமிய ஊடகங்களும் நாடுகளும்... திட்டமிட்டே செய்து வருகின்றன.

 

அடிப்படையில்.. இன்றைய மதங்கள் எவையும் மனிதத்தை உண்மையாக மதிப்பனவாக இல்லை. அந்த வகையில்.. மதமற்ற ஒரு உலகை புதிய இளைய சமூகம் உருவாக்க முனைய வேண்டும். மதவெறியர்கள் மக்களின் முன் அடையாளம் காணப்பட்டு ஒதுக்கப்படும் நிலை தோன்ற வேண்டும். அதுவே இவை எல்லாவற்றிற்கும் முடிவாக முடியும். மனிதப் பேரழிவுகள் இன்றும்.. மதத்தால்.. மதம் சார் கொள்கைகளால்.. நிகழ்வதே அதிகமாக உள்ளது...!!! :icon_idea:

இதைத்தான் ஆரம்பத்தில் உலகளாவிய ரீதியில்  கிறிஸ்தவ அமைப்புகளும் பின்னர் ஆபிரிக்காவில் பட்டிணியால் வாடிய சோமாலியா,கொங்கோ போன்ற நாடுகளிலும், மத்தியகிழக்கில் தொழில் தேடிச்சென்றவர்களிடமும்.முஸ்லீம்களும் தங்கள் கை வரிசையைக்காட்டினார்கள்.இன்றும் நடக்கின்றது.ஒரு இந்து அமைப்புஇப்படிச் செய்வது சரியோ தவறோ ஆனால் சைவம் வளர்கின்றது என்பது பெருமையாகவுள்ளது.அண்மையில் ஐ எஸ் தீவிரவாதிகள் உலகளாவிய ரீதியில் வாழும் படித்த  இளைஞர்களைக் குறிவைத்து மதம் மாற்றி  போராளிகளாக்குகின்றது.அதனுடன் ஒப்பிடும் போது இது மேல்

 

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கும் மதங்களை மூட்டைகட்டி வைத்துவிட்டு புதிய மதம் ஒன்று ஆரம்பிக்க வேணும்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ தமிழர்கள் பெரும்பான்மையாக சைவர்களாக இல்லாமல், ஒரு வேளை கிறிஸ்தவர்களாகவோ அல்லது முஸ்லிம்களாகவோ இருந்திருந்தால் நிச்சயம் இந்தியா சிங்கள கொலைகாரர்களுக்கு உதவி செய்திராது. முஸ்லிம் அல்லது கிறிஸ்தவ நாடுகள் தமிழர்களுக்கு உதவி செய்யுமுன் இந்தியா முந்தியடித்து கொண்டு வந்து நின்றிருக்கும். இதுதான் இப்போது ஸ்ரீ லங்கா மேல் உள்ள இந்திய வெளிநாட்டுக் கொள்கை. சீனாவும் பாகிஸ்தானும் வந்து விடும் என்றுதான் முந்தியடித்துக் கொண்டு ஸ்ரீ லங்காவுக்கு சகல வசதிகளையும் செய்து கொடுக்கிறது. ஈழ தமிழரை இந்து மத அடையாளமும் பாதுகாக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இந்து, இந்துவாககே இருப்பதற்கு எவ்வளவு கிடைக்கும், ப்ளீஸ்...!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இந்து, இந்துவாககே இருப்பதற்கு எவ்வளவு கிடைக்கும், ப்ளீஸ்...!

 

தீண்டாமை என்னும் சீரிய பண்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.