Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஞ்சள், பால் 15 நன்மைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

bo752.jpgtblfpnnews_47365534306.jpg

 

மஞ்சள் உலகின் மிகச் சக்தி வாய்ந்த மற்றும் இயற்கையாகவே மருத்துவ குணம் நிறைந்துள்ள பொருட்களில் ஒன்றாகும். குறிப்பாக, மஞ்சளானது நோய் எதிர்ப்பு அமைப்புக்கு ஆதரவு மற்றும் அழற்சி குறைபாடுகள் (அதாவது கீல் வாதம்) சிகிச்சையில் பயன்ப டுத்தப்படுகிறது.

ஆனால் அத்தோடு அதன் நன்மை நின்று விடுவதில்லை. மேலும் மஞ்சள் மற்றும் பால் இயற்கையான ஆன்டிபயாடிக் பண்புகளை கொண்டுள்ளன. உங்களுடைய அன்றாட உணவில் இந்த இரண்டு இயற்கை பொருட்களையும் சேர்த்துக் கொள்வதால், பல்வேறு நோய்கள் மற்றும் நோய்த் தொற்றுகளைத் தடுக்கலாம்.

அதிலும் மஞ்சள் தூளை சற்றே சூடான பாலுடன் கலக்கப்படும் போது, எண்ணிலடங்கா பலவித சுகாதார பிரச்சனைகளுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. அதுமட்டுமின்றி இது சுற்றுச் சூழலிலுள்ள அபாயகரமான நச்சுகள் மற்றும் தீங்கு விளை விக்கும் நுண்ணுயிரிகளுடன் போராட ஒரு பயனுள்ள தீர் வாகவும் உள்ளது.

மஞ்சள் பால் செய்முறை:

1 அங்குல மஞ்சள் துண்டை எடுத்துக் கொள்ளவும். அதை பாலில் போட்டு 15 நிமிடங்கள் கொதிக்கவிடவும். பின் பாலை வடிகட்டி மஞ்சளை எடுத்துவிடவும். பின்பு குளிர வைத்து, இந்த பாலைக் குடிக்கவும். இப்போது இயற்கை நமக்கு தந்த இந்த அற்புதமான அன்பளிப்பின் முக்கியமான 15 நன்மைகளைப் பார்ப்போம்.

 

1.சுவாசக் கோளாறு :

மஞ்சள் பால், பாக்டீரியா நோய்த்தொற்றுகள் மற்றும் நச்சுயிரி சார்ந்த நோய்த் தொற்றுகளைத் தாக்கும் நுண்ணுயிர் ஆகும். இந்த மசாலாப் பொருள் உடலை வெப்பப்படுத்தும் என்பதால் நுரையீரலின் சளித் தேக்கம் மற்றும் சைனஸ் பிரச்சனைக்கு விரைவான நிவாரணம் வழங்குகிறது. அதுமட்டுமின்றி சுவாச அமைப்பு தொடர்பான நோய்களான ஆஸ்துமா மற்றும் மூச்சு குழாய் அழற்சி போன்றவற்றிற்கு சிகிச்சை அளிப்பதில் பயனுள்ளதாகவும் இருக்கிறது.

 

 

2.புற்றுநோய் :

மஞ்சள் பால் நோயெதிர்ப்பு அழற்சி பண்புகளைக் கொண்டுள்ளதால், இது மார்பகம், சரும, நுரையீரல், புரோஸ்டேட் மற்றும் பெருங்குடல் புற்று நோயின் வளர்ச்சியை தடுக்கிறது மற்றும் நிறுத்தவும் செய்கிறது.

 

 

3.தூக்கமின்மை :

வெதுவெதுப்பான மஞ்சள் பால் அமினோ அமிலம், டிரிப்தோபன் போன்றவற்றை உற்பத்தி செய்து அமைதியான மற்றும் பேரின்ப தூக்கத்தைத் தூண்டும் என்று கூறப்படுகிறது.

 

 

4.ஜலதோஷம் மற்றும் இருமல் :

மஞ்சள் பால் ஜலதோஷம் மற்றும் இருமலுக்கு ஒரு சிறந்த தீர்வாக கருதப்படக் காரணம், அதன் நச்சுயிரிக்கு எதிரான குணமும் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் ஆகும். இது தொண்டைப் புண், இருமல் மற்றும் சளிக்கு உடனடி நிவாரணம் அளிக்கிறது.

 

 

5.கீல்வாதம் :

மஞ்சள் பால், கீல்வாதத்தை குணப்படுத்த மற்றும் நாள்பட்ட மூட்டு வலிகளின் காரணமாக ஏற்படும் வீக்கத்திற்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது வலியை குறைத்து நெகிழ்தன்மையுள்ள மூட்டுக்கள் மற்றும் தசைகள் உருவாக்க உதவுகிறது.

 

 

6.வேதனை மற்றும் வலிகள் :

மஞ்சள் தூள் கலந்த பொன்னான பால், வேதனை மற்றும் வலிகளிலிருந்து சிறந்த நிவாரணம் அளிக்கிறது. இதனால் உடலில் உள்ள முதுகெலும்பு மற்றும் மூட்டுகளையும் வலுப்படுத்த முடியும்.

 

 

7.ஆன்டிஆக்ஸிடன்ட் :

மஞ்சள் பால் ஒரு தடையற்ற முழுமையான எதிர் ஆக்ஸிகரணிகளுக்கு ஒரு சிறந்த ஆதாரமாக உள்ளது. இதனால் பல வியாதிகளை குணப்படுத்தவும் முடியும்.

 

 

8.ரத்தத்தை சுத்தப்படுத்தும் :

மஞ்சள் பால் ஆயுர்வேத பாரம்பரியத்தில் ரத்தத்தை தூய்மைப்படுத்தும் ஒரு சிறந்த பொருளாகவும் மற்றும் சுத்தப்படுத்தியாகவும் கருதப்படுகிறது. இது உடலில் உள்ள ரத்த ஓட்டத்திற்கு உயிர்ப் பூட்டு பொருளாகவும் மற்றும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யவும் உதவுகிறது. மேலும் இது நிணநீர் அமைப்பு மற்றும் இரத்த குழாய்களில் இருக்கும் அனைத்து நச்சுக்களையும் நீக்கி, ரத்த மெலிவூட்டியாக வேலை செய்கிறது

 

 

9.கல்லீரல் நச்சு நீக்கி :

மஞ்சள் பால் ஒரு இயற்கையான கல்லீரல் நச்சு நீக்கியாக விளங்குகிறது. இது ரத்தத்தை தூய்மைப்படுத்தி, இதனால் கல்லீரல் நன்றாக செயல்பட உதவும் ஒரு ஊக்கியாகவும் இருக்கிறது. இதன் தூய்மைப்படுத்தும் குணத்தினால், இது கல்லீரலுக்கு ஆதரவாகவும் மற்றும் நிணநீர் மண்டலத்தையும் சுத்தமாக்குகிறது.

 

 

10.எலும்பு சுகாதாரம் :

மஞ்சள் பாலில் கால்சியம் நிறைந்து காணப்படுவதால், அவை எலும்புகள் ஆரோக்கியமாக மற்றும் வலுவாக வைத்திருக்கவும் உதவுகிறது. இந்தியாவில் தலைச்சிறந்த கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர், நல்ல ஆரோக்கியமான எலும்பைப் பெற, இந்த மஞ்சள் பாலை தினசரி குடிக்கிறார். மஞ்சள் பால் எலும்பு தேய்மானத்தையும் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸையும் குறைக்கிறது.

 

 

11.செரிமான நலம் :

இது ஒரு சக்தி வாய்ந்த கிருமி நாசினியாக இருப்பதால், குடல் சுகாதாரத்தை ஊக்கு விக்கிறது. மேலும் வயிற்று புண்களையும் மற்றும் பெருங்குடல் அழற்சியையும் கட்டுப்படுத்துகிறது. அது மட்டுமின்றி இது சிறந்த செரிமான சுகாதாரத்திற்கும் மற்றும் வயிற்றுப்புண்கள், வயிற்றுப் போக்கு மற்றும் அஜீரணத்தையும் தடுக்கிறது.

 

 

12.மாதவிடாய் தசைப் பிடிப்புகள் :

இது வலிப்பு நோயைக் குறைக்கும் மருந்தாக இருப்பதால், மாதவிடாய் காலத்தில் உண்டாகும் தசைப்பிடிப்புகள் மற்றும் வலியையும் போக்குகின்றது. கர்ப்பிணிப் பெண்களுக்கு எளிதாக பிரசவம் நடைப்பெற, குழந்தைப் பேற்றுக்குப் பின் நலம் பெற, அதிகமான தாய்ப்பால் சுரத்தலுக்கு மற்றும் கருப்பைகள் வேகமாக சுருங்குதலுக்கும் மஞ்சள் தூள் கலந்த பொன்னான பாலை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

 

13.சொறி மற்றும் சருமம் சிவத்தல் :

கிளியோபாட்ரா, மென்மையான மிருதுவான மற்றும் ஒளிரும் சருமத்தைப் பெற மஞ்சள் பாலில் குளித்தார். இதே போல், ஒளிரும் சருமத்தைப் பெற வேண்டுமானால் மஞ்சள் பாலை குடிக்க வேண்டும்.

மேலும் சருமம் சிவத்தல் மற்றும் கரும்புள்ளிகளின் தோற்றத்தைக் குறைக்க, ஒரு பஞ்சுருண்டையை மஞ்சள் பாலில் ஊற வைத்து, பின் அந்த பாலில் நனைத்த பஞ்சினைக் கொண்டு பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இதனால் சருமமானது முன்பை விட இன்னும் பிரகாசமாகவும் மற்றும் ஜொலிக்கவும் செய்யும்.

 

 

14.எடை குறைப்பு :

மஞ்சள் பால் உணவில் இருக்கும் கொழுப்பை முறிக்க உதவுகிறது. இதனால் இது உடல் எடையைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கிறது.

 

 

15.எக்ஸிமா/சிரங்கு எக்ஸிமா (கை, கால்களில் தோல் உறிதல்) :

சிகிச்சைக்கு தினமும் ஒரு டம்ளர் மஞ்சள் பால் குடிக்க வேண்டும். இதனால் நாளடைவில் அந்த பிரச்சினை குணமாகும். அதிநவீன மருத்துவம் ஆயிரமாயிரம் வந்துவிட்டாலும் மஞ்சளுக்கு உள்ள மகிமையை எவ்வளவு எடுத்துக்கூறினால் மிகையாகாது.

ஆன்மிகத்திலும் மஞ்சளின் பெருமை போற்றப்படும் வகையில் அன்று முதல் இன்று வரை தொடர்ந்து வருகிறது. உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பது போல மஞ்சள் இல்லா மனித சரீரம் மாசு படிந்தே காணப்படும் எனலாம்.

அந்த அளவுக்கு நச்சுத்தன்மையை வேறோடு அறுக்கும் மஞ்சளை நாமும் நமது பயன்பாட்டில் அதிகமாகவே எடுத்துக்கொண்டு மேற்கூறிய நோய்கள் இன்றி வாழ்வோம்

 

நன்றி மூலம் :- https://www.facebook.com/pages/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/614397141936975

மஞ்ஞள்,  ஞாபக சக்தி, மூளையின் இயக்கம் போன்றவற்றிற்கு சிறந்த மருந்து. மஞ்ச‌ளை உண‌வில் சேர்ப்பதன் மூலம் மூளை நன்றாக இயங்கும். ஞாபகமும் அதிகரிக்கும்.   வயதானவர்களின் அறளை பெயர்தல் பல ஆண்டுகள் தள்ளிப் போகும். நாம் கறிகளில் தற்போது சேர்பதை விட சற்று அதிகம் சேர்க்க வேண்டும்.
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கு நன்றி சகாறா........ :) 

 
ஈசனாரே! மஞ்சள் கூடினால் ஆண்மைக்கு பங்கம் என்கிறார்களே உண்மையா??  :unsure:

 

 
ஈசனாரே! மஞ்சள் கூடினால் ஆண்மைக்கு பங்கம் என்கிறார்களே உண்மையா??  :unsure:

 

 

 

இனி அத வச்சு என்ன செய்யப் போறீங்க ??  :D  :D
 
சரும ரோமங்களை அகற்றும் என்று நம்பினார்கள். மற்றப்படி ஆண்மைக்கு சம்பந்த மில்லை.
  • கருத்துக்கள உறவுகள்

 

 

இனி அத வச்சு என்ன செய்யப் போறீங்க ??  :D  :D
 
சரும ரோமங்களை அகற்றும் என்று நம்பினார்கள். மற்றப்படி ஆண்மைக்கு சம்பந்த மில்லை.

 

 

பாவம்.... குசா.அண்ணை.

அவரின் சந்தேகம் தீர, ஈசன்.... விரிவான விளக்கம் கொடுத்திருக்கலாம். :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி சகாறா........ :) 

 

ஈசனாரே! மஞ்சள் கூடினால் ஆண்மைக்கு பங்கம் என்கிறார்களே உண்மையா??  :unsure:

கு.சா, இது மாதிரிக் கேள்விகளை மாட்டு வைத்தியரிட்டத் தான் கேட்க வேணும் (படிப்பில பாதியே எப்பிடி மாட்டுக்கு சினைபிடிக்க வைக்கிறது, கோழிய முட்டை போட வைக்கிறது எண்டதைப் பற்றித் தான்! :icon_mrgreen:). பதில் இது தான்:

மஞ்சள் மனித விந்தின் முன்னோக்கி நீந்தும் சக்தியைக் குறைக்கிறது (இது கருக்கட்டலுக்கு அவசியம்!) . இந்தக் கண்டு பிடிப்பு விந்தை வெளியே எடுத்து சோதனைக் குழாயில் செய்த ஆய்வு மூலம் கண்டறிந்தது. ஆனால், எலிகளில் செய்த ஆய்வுகளிலும் மஞ்சள் ஆண் எலிகளின் கருத்தரிக்கச் செய்யும் இயலுமையைக் குறைப்பதாக அறியப் பட்டிருக்கிறது.

ஆனால் ,விந்தின் நீந்தும் சக்தியோடு ஆண்மைக்குத் தொடர்பில்லை (ரஜனியின் எஜமான் படத்தில் சரியாகத் தான் சொல்லியிருக்கிறார்கள்). அதனால், ஆணமைக்குப் பங்கமில்லை! :D

இதோ ஆதாரம்:

Eur J Obstet Gynecol Reprod Biol. 2014 May;176:142-8. doi: 10.1016/j.ejogrb.2014.01.024. Epub 2014 Apr

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி சகாரா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

இனி அத வச்சு என்ன செய்யப் போறீங்க ??  :D  :D
 
சரும ரோமங்களை அகற்றும் என்று நம்பினார்கள். மற்றப்படி ஆண்மைக்கு சம்பந்த மில்லை.

 

 

ச்சீச்சீ...நான் அந்தமாதிரி நோக்கத்திலை கேக்கேல்லை.....எல்லாத்தையும் தெரிஞ்சு வைச்சிருக்கிறதிலை பிழையில்லைத்தானே.. :D  :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவம்.... குசா.அண்ணை.

அவரின் சந்தேகம் தீர, ஈசன்.... விரிவான விளக்கம் கொடுத்திருக்கலாம். :D  :lol:

 

என்ன சிறித்தம்பியர்????? பக்கத்து இலைக்கு பாயாசம் கேக்கிறியளாக்கும்.. :lol:  :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ச்சீச்சீ...நான் அந்தமாதிரி நோக்கத்திலை கேக்கேல்லை.....எல்லாத்தையும் தெரிஞ்சு வைச்சிருக்கிறதிலை பிழையில்லைத்தானே.. :D  :lol:

 

என்ர ஆத்துக்காறி

எதை சமைச்சு தந்தாலும் மஞ்சல் தூக்கலாக நிற்குதண்ணை...

சும்மா தெரிஞ்சு வைச்சுக்கொள்ளத்தான்....... :icon_mrgreen:  :D

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.