Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தரைவழி போரை நானே வடிவமைத்து திட்டமிட்டேன் - மனித படுகொலைகள் இடம்பெறவில்லை - சரத் பொன்சேகா

Featured Replies

வடக்கு மாகாண முதலமைச்சர் இனவாதத்தை தூண்டி அதன் ஊடாக அரசியல் நன்மைகளை  பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

வட மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி, இனவாதத்தை தூண்டி அரசியல் லாபங்களைப் பெற்றுக்கொள்ள முயற்சித்தால் அதனை ஏற்றுக்கொள்ளவும் முடியாது. அவர் அவ்வாறு செய்வது நியாயமற்றது.

தரைவழி போரை நானே வடிவமைத்து திட்டமிட்டேன், படையணிகளுக்கு நானே உத்தரவு பிறப்பித்தேன். கீழ் மட்ட உறுப்பினர்களுக்கு நானே ஆணை வழங்கினேன். இந்த போராட்டத்தை நன்றாக கண்காணித்தேன். எனவே, மனித படுகொலைகள் இடம்பெறவில்லை என்பது எனக்குத் தெரியும்.

சிவில் மக்களை பாதுகாக்க நாம் முன்னின்று செயற்பட்டோம். 275,000 மக்களை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுத்தோம்.

சிவில் போர்களின் போது பொதுமக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படுவதனை தவிர்க்க முடியாது என்ற போதிலும் எல்லா காரணிகளையும் கருத்திற் கொண்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்நோக்கில் போர் செய்தோம்.

ஆனால் மக்களுக்கு பிழையான தகவல்களை வழங்கி அரசியல் லாபங்களைப் பெற்றுக்கொள்ள முயற்சித்தால் அது பிழை. நான் அதனை அவருக்கு ஞாபகப்படுத்துகின்றேன்.அவர் வடக்கு மக்களின் நலனில் கரிசனை கொண்டிருந்தால், தெற்கு மக்களின் மனதில் சந்தேகம் எழுக்கூடிய வகையில் செயற்படக் கூடாது என தெரிவித்துள்ளார்.

 

http://www.pathivu.com/news/37743/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

250px-2010_Sri_Lankan_Presidential_Elect

 

2010´ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில்... வடக்கு, கிழக்கு, மலையகம் முழுக்க வாழும் தமிழர்கள்,

பொன்சேகாவுக்கே... வாக்கு அளித்து, அவரின் மானத்தை கொஞ்சமாவது காப்பாற்றினார்கள்.
அதற்க்கு கூட, நன்றி இல்லாத ஜென்மம் இந்த ஆள்.
 

அவர் கூறியது அவர் மட்டில் சரியானதே. மனித படுகொலைகள் எதுவும் நடைபெறவில்லை. அவரைப் பொறுத்தவரை தமிழ் மக்களை அவர் மனிதர்களாக நினைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இனவாதியிடம் இருந்து வேறு என்ன கருத்தை எதிர்பார்க்கிறோம்??

ஏனப்பு செய்த கொலைகளுக்கு நீர் தானே பொறுப்பு சொல்லவேண்டியவர் . நீர் இனவாதம்  கதைப்பதை நிறுத்தும் . மாட்ட போரம் என்ற பயமோ கொலைகார பயலே .  இப்பவும் செய்த பாவத்திக்கு புண்ணியம் தேட ஏதும் செய்யோணும் என்று நினைக்காமல் இனவாதம் என்கிறீரோ .

  • கருத்துக்கள உறவுகள்
இதுவரை சிங்களத்தின் இன அழிப்புக்கு எதிராகப் போராடிய அரசர்கள் முதல், தலைவன் பிரபாகரன் வரையில் இன அழிப்பு மிருகத்தின் வாலை ஒட்ட வெட்ட முயன்றதில்லை. வெட்டி அதனைக் காயப்படுத்த விரும்பாமல், அந்த வாலை நிமிர்த்தித் தங்கள் இரக்கத்தையும், வீரத்தையும் காட்டவே முயன்றுள்ளனர். அதனால் வந்த வினைதான் இந்தப் பொன்சேகா போன்றவர்களும் உருவாக வழிசெய்துள்ளது. ஈவு இரக்கம் பாராது, சிங்களத் திமிரின் வாலை ஒட்ட வெட்டியிருந்தால், மனதுக்குள் கொண்டாட்டம் இருந்தாலும், அதனை வெளிப்படுத்த அந்த மிருகத்திற்கு வழியில்லாது போயிருக்கும்.   
 
  • கருத்துக்கள உறவுகள்

அவர் வடக்கு மக்களின் நலனில் கரிசனை கொண்டிருந்தால், தெற்கு மக்களின் மனதில் சந்தேகம் எழுக்கூடிய வகையில் செயற்படக் கூடாது என தெரிவித்துள்ளார்.

 

ஊரை காலி பண்ணிட்டு போக சொல்றாரு..

  • கருத்துக்கள உறவுகள்

பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேணும். அப்ப முள்ளி வாய்க்காலில் நீங்கள் 150,000 புலிகளை கொன்றீர்கள். என்னா தமாஸ்.

  • கருத்துக்கள உறவுகள்

இவரு எங்க போர் நடத்தினார். இந்தியாவுக்கும்.. சீனாவுக்கும்.. பாகிஸ்தானுக்கும் அடிக்கடி ஓடவே நேரம் காணாமல் செய்தார்கள் புலிகள். இறுதியில்.. 7 நாட்டு இராணுவ வல்லுனர்கள் வந்து தான்... புலிகளின் முன்னரங்க நிலைகளில் பலவீனமான நிலைகளை உடைக்க முடிஞ்சது. அதுவும் கிளிநொச்சி விழும் வரை இராணுவம் பின்வாங்கி ஓடும் மனநிலையில் இருந்தது என்று இவரே தன் வாயால் சொன்னவர்.. மகிந்த - கோத்தா காலத்தில். இப்ப இப்படி தனக்கு வசதியா வாசிக்கிறார். :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

விஷத்தை கக்கத்தொடங்கிவிட்டார் சரத்பொன்சேகா ..... மகிந்தர் கெட்டவராக இருந்தாலும் சரத்பொன்சேகாவின் குடி உரிமையை பறித்து சிறையில் அடைத்து நல்லதும் செய்திருக்கின்றார் 

  • கருத்துக்கள உறவுகள்
sarath-fonseka-200-news2.jpg

வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், இனவாதத்தை தூண்டி நன்மை பெற்றுக்கொள்ள முயற்சிப்பது தவறானது என முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வட மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

   

வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி, இனவாதத்தை தூண்டி அரசியல் லாபங்களைப் பெற்றுக்கொள்ள முயற்சித்தால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.விக்னேஸ்வரன் அவ்வாறு செய்வது நியாயமற்றது.

தரைவழி போரை நானே வடிவமைத்து திட்டமிட்டேன், படையணிகளுக்கு நானே உத்தரவு பிறப்பித்தேன். கீழ் மட்ட உறுப்பினர்களுக்கு நானே ஆணை வழங்கினேன். இந்த போராட்டத்தை நன்றாக கண்காணித்தேன். எனவே, மனித படுகொலைகள் இடம்பெறவில்லை என்பது எனக்குத் தெரியும். சிவில் மக்களை பாதுகாக்க நாம் முன்னின்று செயற்பட்டோம். 275,000 மக்களை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுத்தோம். சிவில் போர்களின் போது பொதுமக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படுவதனை தவிர்க்க முடியாது என்ற போதிலும் எல்லா காரணிகளையும் கருத்திற் கொண்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்நோக்கில் போர் செய்தோம்.

விக்னேஸ்வரன் மீண்டும் இனவாதத்தை தூண்ட முயற்சித்தால் அதனையிட்டு நான் வருந்துகின்றேன். வடக்கு மக்களின் நலனில் விக்னேஸ்வரன் கரிசனை கொண்டிருந்தால், தெற்கு மக்களின் மனதில் சந்தேகம் எழக்கூடிய வகையில் செயற்படக் கூடாது என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

http://seithy.com/breifNews.php?newsID=126467&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

 மகிந்தா  திரும்பி ஆட்சிக்கு  வந்தா, இவரது இந்த நோய் குணமாகும்.

இவருக்கு தான் ஜனாதிபதி ஆக முடியேலையே என்ற கவலை.

நன்றி  கெட்டஜென்மம்.

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கு மக்கள் எதுக்கு சிங்களவனை திருப்திப்படுத்திக்கிட்டு வாழனும். அவர்கள் இப்படித்தான் வாழ்வார்கள். பிடிக்கல்லைன்னா..பேசாம பிரிஞ்சு போக விடுங்களன். எதுக்கு இராணுவத்தை ஏவி.. வற்புறுத்தி ஒன்றாக இருப்பதாக காட்டிக் கொள்ள முனைகிறீர்கள்.. மிஸ்டர் பொன்சு. ஒரு வீட்டுக்குள் கணவன் மனைவி கூட.. சுதந்திரமாக வாழ விரும்பிற உலகம் இது. நீங்க என்னடான்னா.. கணவனை திருப்திப்படுத்திக்கிட்டு ஏதோ.. வாழுறதே மனைவியின் வாழ்க்கை என்று வரையறுப்பது அடக்குமுறையாகும். இதனை எதிர்த்தே தமிழ் மக்கள் மட்டுமல்ல.. உலகில் அனைத்து விடுதலை விரும்பிய இனங்களும் போராடின. சிங்கள மக்களின் இந்த அடுத்த மனிதனின் சுதந்திரத்தை மதிக்கத்தெரியாத மனநிலை.. அதிக காலம் எனி இந்த உலகில் அவர்களை நிம்மதியா வாழவிடாது. மாறி ஆகனும்.. மனநிலையில்.. மிஸ்டர் பொன்சு. அதனை முதலில் நீங்களே உங்களிடத்தில் ஆரம்பியுங்கள். :icon_idea::)

இது உண்மையோ?, பொய்மையோ ?       சர்வதேசம் உன்மையறிய "no fire zone"  உடன் கை கோருங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.