Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அது ..அவனில்லை (சிறுகதை)

Featured Replies

தோ ஒரு சத்தம் காது செவிப்பட்டறை வந்து அழுத்தியது .திடுக்கிட்டு எழுந்தாள் .சத்தம் வந்த திசையை அனுமானிக்க முடியாமால் அதிர்ந்ததுடன் அரண்டு இருந்தாள்,சுவரில் இருந்த மணிக்கூடு இது எழும்பும் நேரமல்ல அதையும் தாண்டியும் என உணர்த்தியது.யன்னலூடு நோட்டமிட்டாள் வெண்பனி கொட்டியிருந்தது .வந்து ஊரில் இருந்து புலத்துக்கு வந்து நாலு நாளாகியும் இரவு பகலும் மாறி இருந்தாலும் வெளி குளிரும் உள் வெப்பமும்  கூடி இறங்கினாலும் இந்த உலகத்தோடு ஒன்று இணைய முடியாமால் தவித்தாள் ,தனிமையும் விரக்தியும் குற்ற உணர்வும் இயலாமையும் ஒன்றுக்கு ஒன்று போட்டி போட்டு கொண்டு அழுத்தியது.

 

நாலு நாள் முதல் தான் கண்டவன் நானூறு நாள் தேக்கி வைத்த வெறியை தணிக்க முயன்றது உடலிலும் மனதிலும் தெறிக்க கட்டில் இருந்திருந்து எழும்ப மறுத்தது.கலைந்த ஒழுங்கற்று இருந்த உடையினூடாக  வலித்த தெரிந்த பற்குறியும் நகக்குறியும் இவளை கேலிசெய்தது,என்னவெல்லாம் பேசி எங்கையெல்லாம் வாதிட்டு முன்னோக்கிய பார்வை கொண்டவளாக முகம் காட்டி  இவ்வளவு காலமும்  முகம் தெரியாதவனுடன் இந்த கணத்தில் எல்லாம் கரைந்துவிட்ட கோபத்தை மறைக்க மீண்டும் வலிந்து யன்னலூடாக நோட்டமிட்டாள்.

 

ஒருத்தி நாயுடன் சென்று கொண்டிருந்தாள் .அவள் பாசையில் ஏதோ சொல்ல அது திரும்பி அவதானித்து கேட்டது ,பிறகும் ஏதோ சொல்ல தூரத்தில் ஓடியது .திரும்ப வந்து காலடியில் விளையாடியது மீண்டும் ஓடியது,,,அங்கும் இங்கும் ஓடிய மனதை இந்த காட்சி இந்த கணங்களில் நிற்க வைத்து சந்தோசம் கொடுத்தது, அதுவும் நீர்குமிழி மாதிரி உடைந்த்து ....இரவு தொழிலை முடித்தவன் பகல் தொழிலை முடித்து வர முன்  செய்யவேண்டிய காரியங்கள் என்னவோ எல்லாம் இருக்கு என்று சிந்தனை பட்டு அவசரப்பட்டு கட்டிலில் இருந்து துரத்தியது ..ஊர் ஞாபகங்கள் சூழ்ந்து கும்மாளமடிக்க அந்த நாளை தொடங்கினாள் ..அந்த கும்மாளத்தில் ஆமிக்காரன் முதல் கொண்டு ஊரில் தனது மனதை முதலில் பூக்கவைத்த  அவனும் அடிக்கடி பங்கு கொண்டிருந்தான்.

 

தூரத்தில் கேட்கும் ரயில் சத்தத்தின் அருகாமையில் இருந்த பழைய கைவிடப்பட்ட வீடொன்றில் தான் அவனும் இருக்கிறாள் என்பது அவளுக்கு தெரியாது ,ஒரு தசாப்தத்துக்கு முன்னர் அநேகர் நாட்டை விட்டு வெளியேறிய பொழுது பத்தோடு பத்தாக அவனும் போனதாக ஒரு கொசுறு செய்தி மட்டும் அறிந்திருந்தாள் அவ்வளவே ,,,எந்த நாட்டில் எந்த ஊரில் தெரியாது ..ஆனால்  அவள் வந்த நாட்டில் அந்த ஊரில்  நாலு கூப்பிடு தூரத்தில் அவன்.மூடிய கண்ணை கஸ்டப்பட்டு திறந்தான் ..அவனைப்போல சிதறிய பொருட்கள்  பல நாட்கள் சுத்தம் செய்த தளபாடங்கள் காலிபட்டில்கள் சூழ்ந்திருக்க அங்கும் இங்குமாக தங்களை மறந்து தூங்கி கொண்டிருந்தார்கள்.

 

 

வேலையா வெட்டியா இவர்களுக்கு அவசரப்பட்டு எழும்புவதற்கு .இவர்களை நாடோடி கூட்டம் என்றும் சொல்லலாமா என்றால் அப்படியும் சொல்ல இயலாது,,வீடற்றவர்கள்  ஒரு ஒழுங்குக்குள் வாழ விரும்பாதவர்கள் நாடோடிகள்  ,வாழ்க்கையை வெறுத்தவர்கள் ,நாட்டில் அரசே இருக்க கூடாது என்ற தத்துவவாதிகள் ,குடிகாரர்கள்  மருந்துக்கு அடிமையானவர்கள் சமூகத்தால் வெறுக்கப்பட்டவர்கள் என்ற பல வகையானவர்கள் .பத்து பதினைந்து பேர் வரை அங்கு ..ஜந்து ஆறு பேர் வெளியில் சென்றிருக்காலம் ...இப்படியான இடத்தில் ஏன் தான்  என்று எப்பவும் நினைத்து பார்ப்பதில்லை ..

 

அப்படி நினைத்தாலும் இங்கு வந்து சேர்ந்த  அன்று அந்த நாள்  அவள் தான் நினைவுக்கு வரும் ...அவள் தான் அந்த ரூமேனியாக்காரி இலியானா  .கொஞ்ச நாள் காணவில்லை ,,,இன்று யாருடன் படுத்து கிடக்கிறாளோ  ..அதை பற்றியும் அவனுக்கு கவலையில்லை  இப்ப இவனுக்கு பக்கத்தில் மூச்ச முட்ட கிடக்கிறாளே சூர்னாம்காரி அவள் தான் கொஞ்சநாளாக இவனின் அரவணைப்புக்குள்

 

 

அகதி முகாமிலிருந்து  ஊர் ஊராக  நாலு ஜந்து பேராக சேர்த்து ஊர் ஊரா வீடுகள் வழங்கியிருந்தது.  அப்பிடி அந்த இந்த ஊரில் இருந்த இரண்டு வீடுகளில் ஒருவீட்டில் இவனும் இவனுக்கு முன் பின் தெரியாத நண்பர்களும். என்றாலும் அதில் ஒருவன்  இவனை பற்றி அரசல் புரசலாக கொஞ்சம் கேள்வி பட்டிருந்தான். . அவன் யாழில் உள்ள பிரபல பாடசாலையில் பிரபல கிரிக்கட் வீரன் என்பது மட்டுமே ..அவனின் வித்தியாசமான சைட் கட்டும் வித்தியாசமான பூனை கண் மாதிரியாக இருந்தாலும்  அது அவனுக்கு பொருந்தி கவர்ச்சியூட்டுவதால் ஆண் சரி பெண் சரி இன்னொரு முறை பார்க்க  தூண்டுவதாக இருந்தான் .

 

 ஆனால் யாருடன் பேசாமால் அவன் அந்த மெளனத்தோடை எழும்பி ,திரிந்து மெளனத்தோடை உறங்குவது மற்றவர்களுக்கு எரிச்சலூட்டவதாய்இருந்தது...அவர்கள் அவர்கள் தங்கள் தங்கள் நினைத்தபடி அவனை பற்றி கதையை உருவாக்கினார்கள்.அதில் சிலரின் கதைகளில் அவனின் அழகுக்கு ஊரில் அவள்கள் காதல்கள் செய்யமாலாக இருந்திருப்பாகாகள்  ,அப்பிடி ஒருத்தி காதல் செய்து அவள் ஏமாத்தி அல்லது அவளால் ஏமாத்தப்பட்டு பெற்றாரால் பிரிக்கபட்ட பின் இப்படி ஆயிற்றான் என்பது. .அவர்களின் கற்பனை திறன் குதிரை வேகத்தில் பறந்தாலும்   சில நடந்திருந்தது என்பது  என்னவோ உண்மை தான்....ஆனால் இவனது இந்த போக்குக்கு  அது தான் காரணமென்று யாராலும் உறுதியாக சொல்ல முடியவில்லை.

 

 

பகல் பொழுது எப்பொழுதும்  திசை தெரியாமால் நோக்கமின்றி நடந்து செல்வான் . சில நாள்  வீடு திரும்ப மாட்டான் .எங்கு உண்டான் எங்கு உறங்கினான் என்பது வீட்டில் உள்ளவர்களின் கேள்வி இருந்தாலும் அவர் அவர்களுக்கு இருந்த சோலியில் முக்கியம் பெறாமால் இருந்தது .அல்டி போன்ற மார்க்கட்டுகளில் குறைந்த மலிவு விலை குடிவகைகளை  வாங்கி குடித்தாலும் பிரச்சனை இல்லாமால் இருந்தான் .ஒரு நாள் என்றுமில்லாதவாறு சத்தமிட்டான் .பொருள்களை அடித்து உடைத்தான் .கட்டுபடுத்த முடியாத ஒரு விசுவரூபம் எடுத்தான் .அம்புலன்ஸ் கொண்டு சென்றது .சென்ற வேகத்திலையே திரும்பி வந்தான் உளவியல் மருத்துவமனையிலிருந்து  அவனுக்கு ஒன்றுமில்லை என்று .

.

 

நினைத்து நினைத்து குடித்தான் .என்ன நினைத்து குடித்தது என்று யோசித்தான் .பிறகு அந்த காதலா என்று மண்டையில் அளவெடுத்து பார்த்தான் .சீ  ஸ்டுப்பீட் என்று துப்பினான் ..மீண்டும் ஒரு முரடு குடித்தான்  அது காரணமில்லை என்று  முழுமையாக நம்பினான் ..விளக்கமாக இவ்வளவு தெளிவாக இருக்கும் பொழுது எதுக்கு ஏன்  இந்த தேவதாஸ் கோலம்  தன்னை திருப்பி கேட்டான். .நாய் ஒன்று இல்லையே தவிர  மற்ற எல்லாம் அப்படியே இருப்பது போல் பிரமை கொண்டான். அந்த பாட்டு காட்சி மண்டையில் ஓட அந்த பாட்டை பாடிப்பார்த்தான்.  இரண்டு வரிக்கு மேல் வர மறுக்க மீண்டும் குடித்தான். அன்றைக்கு அந்த சிறுமி அவனை கண்டு வீறிட்டு அலறியது ஞாபகத்தில் வர ஒட்டு மொத்த போத்தலை உறிஞ்சி எறிந்த பின்  தெருவில் அரை குறை  உடுப்புடன்  நான் அவனில்லை ..நான் அவனில்லை  கூக்குரலிட்டு கொண்டு ஓடினான் .ஓடினான் .எவ்வளவு தூரம்  இப்பிடி ஓடி கொண்டிருந்தான் என்பது  அவனது நினைவில் இல்லாமால் இருந்தது.

 

சத்தம் கேட்டு அரண்டு பார்த்தான் .ஒரு பாழடைந்த வீட்டில் அழுக்கு பெட்சீட்டால போர்த்தியபடி  சிறிய விரிப்பில் கிடந்திருக்க கண்டான் .அதுவும் மிகுந்த அழுக்கானது ..அவனே பல நாள் குளிக்காதவனாக இருந்தும் கூட அங்கு இருந்த கெட்ட மணமும்  அந்த சூழ்நிலையும்  என்னவோ செய்தது. .எங்கே இருக்கிறேன் என்ற கேள்வி குறியுடன் முகத்தை வைப்பதை  கண்ட  அவள் தனது பெயர் இலியானா என்று அறிமுகம் செய்தாள் ..கட்டிடத்துக்கு அண்மையில் தான்   நட்ட ராத்திரியில் உங்களை மறந்து கிடந்தீங்கள் நானும்  நண்பர்களும் இங்கு வந்து சூடாக்கி  உறங்கி வைத்தோம் என்றாள் .

 

அலட்டிக்காமால் தூங்குங்க என்று அங்கங்கு சுற்றி இருந்த  தாடியுடனும் விகாரமான முகங்களுடனும் இருக்கும் ஆண்களும் .அரை குறை ஆடையுடனுமான பெண்களும் கூறினர்,

 

அங்கு எந்த வித ஹீட்டர் வசதிகளோ இருக்கவில்லை  .ஓரேயொரு சிறிய குமிழினூடாக தான் வெளிச்சம் வந்து கொண்டிருந்தது. பட்டரிகளினூடக  இயக்க பட்டிருக்கவேணும் . தூரத்தில் நடு ஹாலில் சில சுள்ளிகளை வைத்து எரித்து கொண்டிருந்தான் ஒருவன்..அப்படியிருந்தும் குளிர் அவனுள் நுழைந்து விறாண்டியது .அங்கங்கு ஜோடியாக குளிரூட்டி கொண்டிருந்தார்கள் ,

 

அவர்கள் அவர்களுக்கு சொந்தமான அங்கங்கள் மற்றவர்களின் கையிலும் வாயிலும் உரிமை கொண்டாடி கொண்டிருந்தன..

 இலியானா இவனை  பார்த்து கனிவாக சிரித்தாள் .முதலில் அவளது அசைவு அவனில் பரிவு போல் தோன்றியது .அது  தேவை போல தோன்றியது .அவளது இன்னோரு அணைப்பும் இன்னொரு முத்தமும் குளிரின் கதகதப்பை குறைத்தது ..அங்கங்கை முயங்கிய சத்தங்கள் கேட்டு கொண்டிருந்தின ..இவனால்  இவளில் உருவாகிய  கீதமும்  அதனுடன் சங்கமித்தது

 

இவர்களோடு  இவன்  ஜக்கியமாகி நாளாகி விட்டது , இவன்  வைன் கோஸ்டிகளோடை திரிகிறானாம்  என்ற செய்தி  ஆங்கில கால்வாய் கடந்து  லண்டன் வரை  பரந்து விரிந்தது ,

 

 இவனோடு படித்த எப்போதும் ஊரில் திரியும் ஒருவன்  பெயர்  சங்கர்  அவனுக்கு கெளவர பிரச்சனை ஆனது .

 உதுகள் திருந்திற கேசுகளில்லை ...உப்படி  கனபேர் தம்பி  ஊரில் அப்படி அப்படி இருந்ததுகள் எல்லாம் இங்கால் பக்கம் வந்து  இப்படி இப்படியாகி  கோலம் மாறி திரியுதுகள்   என்று அங்கால் பக்கம் இருந்து இங்கால் பக்கம்  கிட்டடியில் வந்த அந்த பெரிசு ஒன்று சொல்லுறது கூட கேட்காமால்  கடந்து வந்தான் சங்கர்,

 

 

ஒழுங்கு செய்யப்பட்ட திருமணத்தின் பலனை கொஞ்ச நாளிலே புலத்தில் அனுபவிக்க தொடங்கினாள் அவள் .அந்த பந்த்ததின் விரும்பாத பக்கங்கள் தொடர்ந்து அழுத்த விட்டு விட்டு ஓடிவிடுவமோ என்று கூட யோசித்தாள். எங்கை ஓடுவது  மூன்று வருடத்துக்கு  முந்தி பிரிந்தால்  ஊருக்குத்தான் போக வேண்டும்  ஆட்கள் பயம் காட்டுவதை நினைத்து பார்த்தாள். ஊருக்கு போகவே போக முடியாது என்ற தெரிந்த உண்மையை தன்னை தவிர வேற யாருக்கும் இதுவரை தெரிய விட்டதில்லை ... செய்வதறியா  தவித்து கொண்டிருந்தாள்.

 

.எல்லா புலத்தின் விரும்பாத பக்கங்ளின் பாரம் ஒரு புறமும் வாங்கிய  பொருட்கள் பாரமும் மறுபுறமும் அழுத்த அந்த சுப்பர் மார்க்கட்டில்  வெளியில் வரும் பொழுது தான் சங்கரை சந்தித்தாள்.

 

 

அவன் இங்கிருக்கிறான்  அதுவும் பக்கதில் தான் அதற்கு மேல் இப்பிடி இருக்கிறான் என்று சொன்னது  ஆச்சரியமாய் இருந்தது.

 

 

அவன் அந்த கோலத்தில் இருப்பதுக்கு அவள் நினைப்பு தான் என்றது அதிர்ச்சியாய் இருந்தது...

அந்த நிலையிலும் தன்னை மறந்து சிரித்தாள் ...வெறும் பருவ சம்பவத்துக்காக இப்படி இருக்காமாட்டன் உறுதியாக நம்பினாள் , இது சங்கரின் முட்டாள தனமான் நினைப்பு மனதில் திட்டி கொண்டாள் .

 

அது உண்மையானால் எனது இக்காட்டான நிலையில் உதவியாக இருக்கும் என்று சுய நல நப்பாசை கொண்டாள்

 

அவன் வாய் விட்டு  ஆக்கோரசமாக சிரித்தான் .

 

எனக்கா பைத்தியம் உங்களுக்கா பைத்தியம் என்றான்

   இது சொல்லவா இவ்வளவு தூரம் லண்டனில் வந்தனி என்று துப்பினான்

 

எந்த உறவுகளை புதிப்பித்து கொள்ள தயாரில்லை  நான் வாழும் உலகம் வேறு உங்கள் முட்டாள்கள் உலகம் வேறு என்றான்

 

வாதங்கள் முத்தின பிரதி வாதங்கள் நடந்தன .ஆக்கிரமோசானான் .

 

..சங்கர்

நின்ற இடம் தெரியாமால் மாறினான்

 

 

எனக்கும் உனக்கும் எந்த உறவு இல்லை சொல்வதை  ஒரு கதைக்கு வைத்து கொள்ளுவம் ..இந்த கூட்டத்திலாவது என்னை சேர்த்து கொள்ளு  என்று அடம் பிடித்து அந்த இடத்தை போகாமால் நின்று கொண்டிருந்தாள்.

 

 

கோபத்தை தணித்தவன் இது எல்லாம் நடக்க கூடியதா ,என்று நல்லாய் யோசிச்சு சொல் என்று கேட்டான் ,

 

நான் ஒரு ஆண் என்ற படியால் ஏதோ தொலைஞ்சு போ என்று சும்மா விட்டிட்டினம்

 

 

ஒரு தமிழ் பெண்  நீ புலத்தில் இப்படி இருக்க நடக்க நம்ம சமூகம் விடுமா  அது தனது கெளவர பிரச்சனை பார்த்து உனக்கு வெடி வைத்துடும்.

 

  நல்லாய் யோசித்து பார் என்று நிதானமாக கூறினான்

 

 

அவள் தனது கருத்தில் உறுதியாக இருந்தாள் . ஏதாவது சுற்றிலாவது உன்னிடம் இருப்பேன் தானே  என்று கெஞ்சினாள்

 

 

மொழி ஒரு தடையாக இருக்கவில்லை  போலும்     எப்படியோ ஏதோ  புரிந்த  அந்த கூட்டத்தில் இருந்த ஹிப்பி  தலையன் ஒருவன்

 

அவன் கிடக்கிறான்  ,,கம்மோன் பேபி  யூ ஆர் வெல்கம் என்று ஆங்கிலத்தில் கூறி அவளை அணைத்தான்

 

தீடிரென்று அவனுக்கே   தெரியாதது  ஏதோ நடந்து  இருக்க வேண்டும்

 

தன் முழு பலம் கொண்டு தாக்கி அவளை விடுவித்து கொண்டு தூரத்தில் நடந்து கொண்டிருந்தான்

 

அவர்கள் மறையும் வரையும் பார்த்து கொண்டிருந்தாள் இலியானா

 

ஒரு  பரவசம் அவளில் ஓடி கொண்டிருந்தது.ஏன் என்று தெரியாமால்...

 

 

http://mithuvin.blogspot.co.uk/2015/02/blog-post.html

 

 

 

 

Edited by நாகேஷ்

  • தொடங்கியவர்

இணைத்த இந்த கதைக்கு ஒருதரின் சத்த்ததை காணலை ..இருநூற்று சொச்சம் பார்த்திருக்கிறீர்கள்.பொதுவாக எனது புளக்கை தவிர பழக்க தோசத்தில் யாழ் இணையத்தில் மட்டும் தான் இணைப்பது வழமை

 

இந்த கதைக்கு ஏதாவது பதில் எதினால் தீட்டு வரும் என்று அஞ்சுவார்கள் என்று எனக்கு நன்கு தெரியும் ...இந்த வைற் கொலர் மனோபவம் உங்களுக்கு அந்த அச்சத்தை தந்திருக்கிறது ..இன்று புலம் பெயர்ந்தோர் பலர நல்ல நிலையில் இருந்தாலும் 80 களில் முதல் புலம் பெயர்ந்த  இருந்த்திலிருந்து நீங்கள் கேட்க  அஞ்சும் ஆயிரம் கதைகளை தாண்டி தான் வந்துள்ளார்கள்

 

இந்த விளிம்பு நிலையின் காட்சிகள் தெரியாமால் இருக்கலாம் .தெரிந்து தெரியாமால் இருக்கலாம்

 

இதில் பாதிக்கு மேல் புனைவுவாக இருந்தாலும் புலம் பெயர் வாழ்வில் கேள்விப்பட்ட சந்தித்த நீங்கள் சந்திக்க அஞ்சும் ஆயிரம் கதைகள் உண்டு 

 

இது போல் ஆயிரம் கதைகள் எழுத தூண்டுகிறது ..தூண்டியமைக்கு நன்றி ஆனால் .இனிமேல் யாழ் இணையத்தில் இணைத்து உங்களுக்கு சங்கடத்தை கொடுக்க மாட்டேன் ..மீண்டும் நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

இணைத்த இந்த கதைக்கு ஒருதரின் சத்த்ததை காணலை ..இருநூற்று சொச்சம் பார்த்திருக்கிறீர்கள்.பொதுவாக எனது புளக்கை தவிர பழக்க தோசத்தில் யாழ் இணையத்தில் மட்டும் தான் இணைப்பது வழமை

 

இந்த கதைக்கு ஏதாவது பதில் எதினால் தீட்டு வரும் என்று அஞ்சுவார்கள் என்று எனக்கு நன்கு தெரியும் ...இந்த வைற் கொலர் மனோபவம் உங்களுக்கு அந்த அச்சத்தை தந்திருக்கிறது ..இன்று புலம் பெயர்ந்தோர் பலர நல்ல நிலையில் இருந்தாலும் 80 களில் முதல் புலம் பெயர்ந்த  இருந்த்திலிருந்து நீங்கள் கேட்க  அஞ்சும் ஆயிரம் கதைகளை தாண்டி தான் வந்துள்ளார்கள்

 

இந்த விளிம்பு நிலையின் காட்சிகள் தெரியாமால் இருக்கலாம் .தெரிந்து தெரியாமால் இருக்கலாம்

 

இதில் பாதிக்கு மேல் புனைவுவாக இருந்தாலும் புலம் பெயர் வாழ்வில் கேள்விப்பட்ட சந்தித்த நீங்கள் சந்திக்க அஞ்சும் ஆயிரம் கதைகள் உண்டு 

 

இது போல் ஆயிரம் கதைகள் எழுத தூண்டுகிறது ..தூண்டியமைக்கு நன்றி ஆனால் .இனிமேல் யாழ் இணையத்தில் இணைத்து உங்களுக்கு சங்கடத்தை கொடுக்க மாட்டேன் ..மீண்டும் நன்றி

 

 

வணக்கம் ஐயா

 

கோவிக்கப்படாது

யாழ் கள உறவுகளை நம்ம அடிமைகள் போலவும் நடாத்தப்படாது

நினைக்கப்படாது....

 

நான் ஒரு எழுத்தாளன் அல்ல

எப்பொழுதாவது கிறுக்குவேன்

 

நான் நேற்று முன் தினம் கிறுக்கியதற்கு

http://www.yarl.com/...-3#entry1088393

 

22 பச்சைப்புள்ளிகளும்

அநேகமாக எல்லா கள உறவுகளும் வந்து வாழ்த்தி ஊக்கப்படுத்தி வருகிறார்கள்

ஏன்??

அவர்களுக்குள் நீங்கள் இல்லை??

 

இன்னொன்று

எனக்காக எதற்காக இவ்வளவு நேரத்தை அவர்கள் செலவளிக்கிறார்கள்

கொஞ்சம் சிந்தியுங்கள்

ஒன்றே ஒன்று தான்

அவர்களுடன் நான் இருக்கின்றேன்

அவர்களது இன்ப துன்பங்களில் 

படைப்புக்களில்

நானும் பங்கு பெறுகின்றேன்

ஊக்கப்படுத்துகின்றேன்

வாழ்த்துகின்றேன்.....

 

 

நான் எழுதுவதை பாருங்கள்

ஊக்கப்படுத்தங்கள்

கருத்தை வையுங்கள் என்பது சுயநலமில்லையா??

 

உங்களுடன் எந்தவித கோபதாபங்களுமில்லை

என் மனதில் எழுந்த ஒரு கேள்வி மட்டுமே..

புண்படுத்தியிருந்தால் மன்னிக்குக....

Edited by விசுகு

  • தொடங்கியவர்

//அவர்களுக்குள் நீங்கள் இல்லை//

 

அது உண்மை தான் ...நான் இருக்க முடியாது ...இருக்காவிட்டாலும் ...இதற்கு முன் பல கதைகள் இணைத்துள்ளேன்  ....எனது கதைகளை விரும்பும் ஒரு சிறிய கூட்டம் இருந்தது ....அந்த சிறிய கூட்டத்துக்கு இந்த மேல் கூறிய பின்னூட்டம் ...குறிப்பாக இந்த கதைக்காக அவர்கள் அஞ்சுவதால் சுட்டி காட்டினேன் ....எனது புளக்கை தவிர ...வேறு ஒரு இடத்தில் இணைப்பதுமில்லை ...கைத்தட்டல்களுக்கு ஏங்கும் மனோநிலையில் இப்ப இல்லை ..இணைப்பதுக்கு வெளியீடுவதுக்கு ஆயிரம் சமூக வலை தளங்கள் இருக்கு  அது பிரச்சனையில்லை ...வழக்கமாக வரும் நண்பர்ள் இந்த கதைக்காக ஓடி ஒளிவதை  தான் சுட்டி காட்டினேன் ...

 

நீங்கள் சொல்வது உண்மை ..யாழ் இணையத்தில் எப்பாவது வரும் ஆள் .....உரையாடல்களில் பங்கு கொள்வதில்லை  ...நான் எல்லாரையும் எதிர்பாத்து சொல்லவில்லை ....எழுதிய இந்த கதைக்காக நல்லதோ கெட்டதோ சொல்லாமால் இருப்பதை தான் அவர்களுக்கு சுட்டி காட்டினேன்...பலர் சொல்லியிருக்கிறார்கள் இது உனக்கு சம்பந்த மில்லாத இடமென்று ..தெரிந்தும்  நான் தமிழ் எழுத பழகிய இடம் என்பதால்  ஓடிவிளையாடிய இடம் போல ஒரு உணர்வு இருந்த்து .....விசுகு சார் உங்களிலும் ஒரு கோபமில்லை உள்ளதை தான் சொல்லி இருக்கிறீர்கள் ...நான் ஒரு சென்டிமெண்ட் ஸ்டுப்பிட் ..... அதுதான் இனிமேல் இந்த காரணத்தை சொல்லி இங்கு இணைப்பது சரியில்லை தான். விசுகு அய்யா மாதிரி நல்லதோ கெட்டதோ சொல்ல சொன்னேன் அவ்வளவு தான் நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்

இணைத்த இந்த கதைக்கு ஒருதரின் சத்த்ததை காணலை ..இருநூற்று சொச்சம் பார்த்திருக்கிறீர்கள்.பொதுவாக எனது புளக்கை தவிர பழக்க தோசத்தில் யாழ் இணையத்தில் மட்டும் தான் இணைப்பது வழமை

இந்த கதைக்கு ஏதாவது பதில் எதினால் தீட்டு வரும் என்று அஞ்சுவார்கள் என்று எனக்கு நன்கு தெரியும் ...இந்த வைற் கொலர் மனோபவம் உங்களுக்கு அந்த அச்சத்தை தந்திருக்கிறது ..இன்று புலம் பெயர்ந்தோர் பலர நல்ல நிலையில் இருந்தாலும் 80 களில் முதல் புலம் பெயர்ந்த இருந்த்திலிருந்து நீங்கள் கேட்க அஞ்சும் ஆயிரம் கதைகளை தாண்டி தான் வந்துள்ளார்கள்

இந்த விளிம்பு நிலையின் காட்சிகள் தெரியாமால் இருக்கலாம் .தெரிந்து தெரியாமால் இருக்கலாம்

இதில் பாதிக்கு மேல் புனைவுவாக இருந்தாலும் புலம் பெயர் வாழ்வில் கேள்விப்பட்ட சந்தித்த நீங்கள் சந்திக்க அஞ்சும் ஆயிரம் கதைகள் உண்டு

இது போல் ஆயிரம் கதைகள் எழுத தூண்டுகிறது ..தூண்டியமைக்கு நன்றி ஆனால் .இனிமேல் யாழ் இணையத்தில் இணைத்து உங்களுக்கு சங்கடத்தை கொடுக்க மாட்டேன் ..மீண்டும் நன்றி

இன்றுதான் இக்கதையை வாசித்தேன். வழமையான நாகேஷ் பாணிக் கதையாக இருந்தாலும் சில படிமங்களை, சுவாரசியமான சொல்லாட்சியைக் காணவில்லை. ஆனால் கதையின் கரு வித்தியாசனமானது. விளிம்பு நிலை மக்களைப் பற்றித் துணுக்குற வைக்கவேண்டும் என்று வலிந்து எழுதாமல் இயல்பாக உள்ளது.

நாகேஷ், கருத்து ஒருவரும் வைக்கவில்லையே என்று யாழில் இணைக்காமல் விடுவது பிழை. வலைப்பதிவை எல்லாம் தேடிப் படிக்கும் பழக்கம் பலரிடம் இல்லை. அதனால்தான் பல சிறந்த கதைகள் சிப்பிக்குள் முத்தாக இணையக் கடலில் மறைந்துபோய் உள்ளது. எல்லோரும் முத்துக் குளிப்பார்கள் என்றில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் இதில் அஞ்சுவதற்கு எதுவும் இல்லை. ஜெயமோகனின் ஏழாம் உலகமும், கருணை ரவியின் முள்ளிவாய்க்கால் சம்பவங்களை வைத்து எழுதப்பட்ட கதைகளும் ஏற்படுத்திய பாதிப்புக்களைவிட நாகேஷின் விளிம்புநிலை மக்களைப் பற்றிய கட்டுடைத்தல் எங்களைப் போன்ற மத்திய தர வாழ்வில் இருந்துகொண்டு துன்பத்தில் உழலுபவர்களைப் பார்த்து பச்சாதாபப்படுவர்களை ஒன்றும் செய்யாது.

  • தொடங்கியவர்

வணக்கம் கிருபன் ...நன்றி  கருத்து கூறியமைக்கு ....

 

நாகேஸ் ஆகவே  உங்களுக்கு  தொடர்ந்து தெரிந்து கொண்டே இருந்திருக்கலாம் என்ற நப்பாசை எனக்கு 

 

சும்மா பகிடிக்கு கிருபன் ...ஹிஹி

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இப்போதுதான் இக் கதையைப் படிக்கின்றேன்....!

 

இன்றும் பலர் விளிம்புநிலை மனிதர்களாக மாறி வருவதைப் பார்க்கும் போது மனசு வலிக்கின்றது. இன்னும் நிஜத்தைச் சொல்வதானால் வேற்று நாட்டவரை வீதிக் குடிகாரராக காணும்போது இல்லாத வேதனை, எம்மவர்கள்  மற்றும் அனாதைகளாக்கப் பட்ட முதியவர்களைப் பார்க்கும் போது வேதனையாக உள்ளது. கற்பு, கலாச்சாரம், மானம்  எல்லாம் மிடில் கிளாஸ்சாக இருக்கும் எம்போன்றவர்களுக்குத்தான்...!!

 

இதற்காக எல்லாம் வேதனைப் படாது தொடர்ந்து உங்கள் ஆக்கங்களை இணையுங்கள்...!!!

  • தொடங்கியவர்

வணக்கம் suvy  நன்றிகள் கதையை வாசித்து கருத்து கூறியதுக்கு

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் நிஜத்தைச் சொல்வதானால் வேற்று நாட்டவரை வீதிக் குடிகாரராக காணும்போது இல்லாத வேதனை, எம்மவர்கள்  மற்றும் அனாதைகளாக்கப் பட்ட முதியவர்களைப் பார்க்கும் போது வேதனையாக உள்ளது.

கதையில் வருபவனும் தனது முன்னாள் காதலியை ஒரு ஜிப்ஸி அணைத்ததைத் தாங்கமுடியாமல் கன்னத்தில் அறைந்துவிட்டுக் காதலியோடு போகின்றார். அவருக்கும்தான் தமிழ்ப்பெண் ஒருவர் விளிம்பு நிலைக்குச் செல்வதும் (அவள் விரும்பியிருந்தும் கூட) தாங்கமுடியவில்லை! ஆனால் தனது குளிரைப் போக்க அவரால் இன்னொரு ரூமேனியப்பெண்ணில் உடற்சூட்டை பெற்றுக்கொண்டது குற்றவுணர்வைத் தரவில்லை.

அதாவது கதையின் நாயகனும் சராசரித் தமிழனாகத்தான் இருக்கின்றான். என்னுடைய நண்பன் முன்னர் சொல்வது வெள்ளைக்காரிகள் குளுக்கோஸ் மாதிரி, தமிழ்ப்பெண்கள் புட்டு மாதிரி என்று! நிறத்தைச் சொல்லவில்லை.

  • தொடங்கியவர்

விசுகு அய்யா .....எனக்கு நாலு பேர் இருக்கிறார்கள்  இங்கு ....உங்களின் நானூறு பேருக்கு சமம் என்று  எனது நினைப்பு.  சண்டைக்கு வராதிங்க திரும்பவும் சொல்லுறன் எனது நினைப்பு ..பார்த்தீங்களா எனது குரல் கேட்டு வந்துட்டாங்கா ,,,மேலே பாருங்க

 

அவங்களுக்கு  இவ்வளவு நேரம் எனது கதையே தெரியாத அளவுக்கு இங்கு ஏதோ கம்பியூட்டர்  வித்தை செய்து எனக்கு எதிராக சதி செய்கிறாங்கள் என்று  நினைக்கிறன்...

 

சும்மா பகிடிக்கு சார் சீரியஸாக எடுத்துக்காதீங்க்

Edited by நாகேஷ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
நானும் உங்கள் கதைகளை படிப்பதுண்டு.....ஆனால் கருத்தெழுதியதில்லை.  :D
 
நீங்கள் ஒருவரை பார்த்து  வணக்கம் சொன்னால்....அவரும் நாளைய தினம் உங்களைப்பார்த்து வணக்கம் சொல்வார்....இதுதான் நியதி. :)
 
இங்கு நான் தாழ்வுமனப்பான்மையை சொல்லவரவில்லை.
  • தொடங்கியவர்

வணக்கம் கு.சாமி சார் ...உங்களை பல காலமாக தெரியும் இங்கு ....நன்றி கருத்து சொன்னதுக்கு

 

கடைசியிலை முகப்புத்தகத்தில் லைக்குக்கு வலைபதிவுகளில் பின்னூட்டத்துக்கு ஏங்கும் ஆசாமிகள் மாதிரி என்னையும்  நினைச்சுக்க போறாங்க போலை ...சாமி.....உங்களுக்கு சொன்னப்பாலென்ன முந்தி பல பெயர்களில் ஆக்டிவாக நாமள இங்க இருந்தனாங்கள் தான் ....ஊகிக்க கூடியவங்கள் தெரிச்சுவாங்க ...இங்கு பல்லாண்டுகாலமாக வணக்கம் பல முறை சொல்லி வந்தனாங்கள் தான் .....காலமும் நேரமும் எப்பவும்  ஒரு மாதிரியில்லை தானே  கு .சாமி சார் :lol:

Edited by நாகேஷ்

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அய்யா .....எனக்கு நாலு பேர் இருக்கிறார்கள்  இங்கு ....உங்களின் நானூறு பேருக்கு சமம் என்று  எனது நினைப்பு.  சண்டைக்கு வராதிங்க திரும்பவும் சொல்லுறன் எனது நினைப்பு ..பார்த்தீங்களா எனது குரல் கேட்டு வந்துட்டாங்கா ,,,மேலே பாருங்க

 

அவங்களுக்கு  இவ்வளவு நேரம் எனது கதையே தெரியாத அளவுக்கு இங்கு ஏதோ கம்பியூட்டர்  வித்தை செய்து எனக்கு எதிராக சதி செய்கிறாங்கள் என்று  நினைக்கிறன்...

 

சும்மா பகிடிக்கு சார் சீரியஸாக எடுத்துக்காதீங்க்

 

 

நீங்க ரொம்ப அப்பாவியாக உள்ளீர்கள்

அதேநேரம் படைப்பாளிகளுக்குள்ள திமிர் உங்களையும் பீடித்துள்ளது தெரிகிறது

எனவே எனது நேரத்தையும் தன்மானத்தையும் காப்பாற்றவேண்டிய பொறுப்பு என்னிடம் வந்துவிடுகிறது.

 

போகமுதல் ஒரு வார்த்தை

உங்க குரல் கேட்டு எவரும் வரவில்லை

இத்தனைநாளாக தேடுவாரற்று கிடந்து

நீங்களே அழுது கொண்டிருந்த பதிவுக்கு

அவர்களைக்கொண்டு வந்தது எவரது எழுத்து என்பதையாவது புரிந்து கொள்ளமுயலுங்கள்

நன்றி.

Edited by விசுகு

விசுகு சார் ..உந்த நாகேஸு ரொம்ப ரகளை பண்ணுறப்போலை ..உங்களின் தராதரம் தெரியாமால் ஏதோ பேசிகறார் ..விடாதையுங்க சார்

Edited by matharasi

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் மண்ணின் விரும்பாத பக்கத்தில் இருந்து எழுதப்பட்ட கதையானாலும் கதை சொல்லப்பட்ட விதமும் எழுத்து நடையும் நன்றாகவே உள்ளது. நான் இக்கதையை வாசித்தவுடன் பதில் எழுத நினைத்தேன். புலம்பெயர் வாழ்வில் எம்மில் அநேகர் படித்து பல உயர் பதவிகளில் இருந்தாலும் ஒரு சிறு பகுதியினர் தவறான பாதைகளில் வழ்pதவறிய ஆடுகளாய் வாழ்வதையும் காணக்கூடியதாகவே உள்ளது. நாகேஸ் இந்த கதையில் அப்பபுதியினரை அவர்களது மன உணர்வுகளை எடுத்து வந்துள்ளார். தொடர்ந்து உங்கள் ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம்.

  • தொடங்கியவர்

வணக்கம் காவலூர் கண்மணி ..நன்றியம்மா .. கதையை வாசித்து கருத்து கூறியமைக்கு.....

  • கருத்துக்கள உறவுகள்

விளிம்புநிலை மனிதர்கள், என் நண்பன் ஒருவனை ஞாபகப்படுத்தியது. ஒரு மனிதனிடம் மனிதர்கள் எதிர்பார்க்கும் அத்தனை நற்குணங்களும் கொண்டவன். அவனிடம் காதல் இருந்தது. அதற்காகக் காதலியைத் தேடியதில்லை. காமம் இருந்தது அதற்கு அவன் தீனியைத் தேடிக் கொடுத்ததில்லை. சம்சார சாகரத்தை விரும்பினாலும் ஒரு முனிவன்போல் வாழ்ந்தான். ஊரில் பெற்றோரை பொருள் கொண்டு மகிழ்வித்தான். சகோதர சகோதரிகள் புதுவாழ்வு அமைக்க உதவினான். ஆனாலும் எப்படி ஒரு விரக்தி அவனை விளிம்புநிலைக்குக் கொண்டுசென்றது என்பதை இன்றுவரை எங்களால் உணர முடியவில்லை. இன்று அவன் விண்ணுலகில். உங்கள் கதையின் பாத்திரங்களைப் போலல்லாது, உங்கள் கதையானது என் நண்பனை, அவன் அழிவிலும் இழிந்தவனல்ல என உணரவைக்கிறது. 

  • தொடங்கியவர்

வணக்கம் paanch  கதையை வாசித்து கருத்து கூறியதுக்கு மிக்க நன்றி

 

சிறுகதையின் வெற்றியே இதில் தான் இருக்கிறது  கதை சொல்பவனின் பங்கு அரைவாசி மிகுதி வாசகனுக்கு ஏற்படுகின்ற தாக்கமே ...அந்த வகையில் சரியாக கதை சொல்லி இருக்கிறேன் என்பது paanch இன் கருத்தினால எனக்கு நம்பிக்கை தருகிறது

 

புலம் பெயர் வாழ்வில் 80 களில் யாழில் பிரபல பாடசாலையின்  பிரபல கிரிக்கெட் வீரன் ஒருவன்  பாரிஸ் நிலக்கீழ் தெருக்களிலும் ரயில்வே நிலையத்திலும் வைன் கோஸ்டி என்று நம்மவர்களால் அழைக்கப்படுவரோடு  திரிந்த அந்த சம்பவ  கருபொருள்  தான் இந்த கதையை புனைய உதவியது  .paanch சொல்வது போன்று  பலரை சந்தித்து இருக்கிறேன்

 

 

Edited by நாகேஷ்

  • கருத்துக்கள உறவுகள்

 

புலம் பெயர் வாழ்வில் 80 களில் யாழில் பிரபல பாடசாலையின்  பிரபல கிரிக்கெட் வீரன் ஒருவன்  பாரிஸ் நிலக்கீழ் தெருக்களிலும் ரயில்வே நிலையத்திலும் வைன் கோஸ்டி என்று நம்மவர்களால் அழைக்கப்படுவரோடு  திரிந்த அந்த சம்பவ  கருபொருள்  தான் இந்த கதையை புனைய உதவியது  .paanch சொல்வது போன்று  பலரை சந்தித்து இருக்கிறேன்

 

பாரிஸில் எனக்குத் தெரிந்த ஒரு யாழ் பாடசாலையின் பிரபல கிரிக்கெட் வீரரும் (80 களில்) இன்றும் எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு இப்படியான வாழ்வையே தொடர்கின்றார்.இடையில் தற்கொலை முயற்சி  கூடச் செய்திருக்கின்றார்.

வித்தியாசமான கதை தொடர்ந்தும் யாழில் இணைந்திருங்கள் நாகேஸ்

  • தொடங்கியவர்

வணக்கம் வாத்தியார்  வாசித்து கருத்து கூறியதுக்கு நன்றி

 

இந்த புனை கதை போல ஒவ்வொருதரும்  புலத்தில் தங்களுக்கு தெரிந்த நிஜகதையை தேட வாய்ப்பு  இருக்கு ..மீண்டும் மிக்க நன்றி வாத்தியார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.