Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோடியின் யாழ்ப்பாண பயணத்துக்கு சீனா கடும் எதிர்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Narendira%20Modi%20SL%20Traviling-%2021.

பிரதமர் மோடியின் யாழ்ப்பாணம் பயணத்துக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த பயணம், இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதாகும் என அது கருத்து தெரிவித்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடி கடந்த 13, 14 தேதிகளில் நமது அண்டை நாடான இலங்கையில் சுற்றுப்பயணம் செய்தார். இந்த பயணத்தின்போது 14-ந் தேதி, உள்நாட்டு போரில் பெரிதும் பாதிப்புக்குள்ளானதும், தமிழர்கள் பெருவாரியாக வாழக்கூடியதுமான யாழ்ப்பாணத்துக்கு அவர் சென்றார். அவருடன் அந்த நாட்டின் அதிபர் சிறிசேனாவும் சென்றிருந்தார்.

   

அங்கு உலகப்பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நூலக வளாகத்தில் ரூ.60 கோடியில் கட்டப்படும் கலாசார மையத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அத்துடன் மத்திய அரசின் உதவியுடன் யாழ்ப்பாணம் இலவளை பகுதியில், தமிழர்களுக்காக கட்டப்பட்ட 27 ஆயிரம் வீடுகளை அவர் பயனாளிகளிடம் ஒப்படைத்தார். மோடியின் இந்த பயணம் குறித்த செய்திகளை சர்வதேச அளவில் ஊடகங்கள் முக்கியத்துவம் அளித்து வெளியிட்டன. மோடியின் யாழ்ப்பாணம் பயணம் சீனாவுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஷாங்காய் சர்வதேச படிப்பு மையத்தின் உதவி ஆராய்ச்சியாளர் லியு ஜாங்யி ஒரு கட்டுரை எழுதி உள்ளார்.

 

அதில் அவர் கூறி இருப்பதாவது:- மோடியின் இலங்கை பயணம், சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஊடகங்களின் கவனத்தை கவர்ந்தது. சீன முதலீட்டில் உருவாகவிருந்த திட்டத்தை இலங்கை நிறுத்தியுள்ள நிலையில், இந்த பயணத்தில் இந்தியாவின் கை ஓங்கியது. மோடி தனது இலங்கை பயணத்தில், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழுகிற வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம் இடம்பெறுமாறு பார்த்துக்கொண்டார். இது இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதாகும். இவ்வாறு அவர் கூறி உள்ளார். இந்த கட்டுரையை சீன அரசின் ‘குளோபல் டைம்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது. இலங்கையில், கொழும்பு துறைமுக நகர் திட்டம் உள்ளிட்ட 5 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.31 ஆயிரம் கோடி) மதிப்பிலான திட்டங்களை நிறைவேற்ற முந்தைய ராஜபக்சே ஆட்சி காலத்தில் சீனாவுடன் ஒப்பந்தம் போடப்பட்டது. இப்போது சிறிசேனா அரசு அதை மறுபரிசீலனை செய்கிறது.

 

இதையும் சீன கட்டுரையாளர், தனது கட்டுரையில் குறிப்பிட தவறவில்லை. இது குறித்து அவர் குறிப்பிடுகையில், “ஒவ்வொரு சிறிய நாடும்கூட, மாறுபட்ட பல்வேறு நாடுகளுடன் சமநிலையை கடைப்பிடிக்க விரும்புகின்றன. அவற்றில் சில, தங்கள் தேச நலனுக்கு, உலக நாடுகளின் போட்டியை சாதகமாக எடுத்துக்கொள்ள முயற்சிக்கவும் செய்கின்றன” என கூறியுள்ளார். அதே நேரத்தில் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே உள்ள வரலாற்றுப்பூர்வமான தமிழர் பிரச்சினைகள், மீனவர்கள் பிரச்சினைகள் நல்லுறவு மலர்வதில் கடினமான நிலையை ஏற்படுத்தக்கூடியவை என்றும் சுட்டிக்காட்டி உள்ளார். அத்துடன், சில குறிப்பிட்ட சக்திகளை கவர்வதற்காக சீனாவின் நல்லெண்ணத்தை இலங்கை அரசு உதாசீனப்படுத்தினால், அது சர்வ தேச சமுதாயத்தில் மதிப்பை பெறுவது கடினம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

http://seithy.com/breifNews.php?newsID=128727&category=WorldNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குத்தான் ஒரு புருசனுடன் (மனைவியுடன்) வாழணும் என்பது.... :o  :o

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குத்தான் ஒரு புருசனுடன் (மனைவியுடன்) வாழணும் என்பது.... :o  :o

 

கள்ளதொடர்பு வைத்திருக்கலாம் ஆனால் களவாக வைத்திருக்க வேணும் ,சிறிலங்கா மாதிரி பப்ளிக்கா வைத்திருந்தால் கஸ்டம்தான்......:D

  • கருத்துக்கள உறவுகள்
“ஒவ்வொரு சிறிய நாடும்கூட, மாறுபட்ட பல்வேறு நாடுகளுடன் சமநிலையை கடைப்பிடிக்க விரும்புகின்றன
பிரித்தானியா சிறிய நாடுகளை உருவாக்கியதே தங்களுடைய நலனுக்காமட்டுமே......அதை நேற்றுவந்த சீனா ஆளநினைத்தால் விடுவார்களா? என்ன இருந்தாலும் சீனா இந்தியாவின் இறையாண்மையில் தலை போடக்கூடாது...

பின்ன எத்தனையாயிரம் தமிழ் மக்களை கொன்றால் அந்த பாவம் எப்படி உங்களை விடும்  

  • கருத்துக்கள உறவுகள்

சொறிலங்காவுக்கு பொந்தியா.. :D தமிழீழத்துக்கு சீனா.. :huh: இதுதான் சமன்பாடு.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டுக்கு சீனா
கேராளவிட்கு இந்தியா என்று தொடங்கினால்தான்...

 

மத்திக்கு உறைக்கும்.

 

தமிழக மீனவர்களை காப்பாற்ற இந்திய கடற்படையால் முடியாதுபோனால்
சீனா கடற்படை உதவியை நாடுவதை தவிர வேறு வலி இல்லை
என்று ஜெயலிதா ஒரு பரபரப்பை ஏற்படுத்தி விட வேண்டும்.

 

ஜெயலிதா சி ஐ எ பெரொல்லில் இருக்கும் ஒருவர்.
0.5% மும் சாத்தியம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழிர்கள் சீனாவுடன் அரசியல் பேரம் பேசுவதற்கான சந்தர்ப்பம் இது.பட்டும் படாமலும் உறவு வைத்தால்தான் அமெரிக்காவும் ,இந்தியாவும் தமிழர்களைப் பற்றி சிந்திப்பார்கள். ஆனால் இவற்றைச் செய்ய வேண்டிய தமிழர் தலைமை இந்தியாவின் அரவணைப்பு மயக்கத்தில் விழுந்து கிடக்கிறதே.இந்தியாவை விட சீனா ஆண்மையான நாடு. இந்தியாவிடம் சோரம் போவதை விட சீனாவுடன் சோரம் போவது உலக நாடுகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தும்.

தமிழர்கள் சீனாவுடன் அரசியல் பேரம் பேசுவதற்கான சந்தர்ப்பம் இது.பட்டும் படாமலும் உறவு வைத்தால்தான் அமெரிக்காவும் இஇந்தியாவும் தமிழர்களைப் பற்றி சிந்திப்பார்கள். ஆனால் இவற்றைச் செய்ய வேண்டிய தமிழர் தலைமை இந்தியாவின் அரவணைப்பு மயக்கத்தில் விழுந்து கிடக்கிறதே.இந்தியாவை விட சீனா ஆண்மையான நாடு. இந்தியாவிடம் சோரம் போவதை விட சீனாவுடன் சோரம் போவது உலக நாடுகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தும்.

  • கருத்துக்கள உறவுகள்

சீன நீர்மூழ்கி வந்த போது இந்தியா எதிர்த்திச்சு. இப்ப மோடி வந்ததும்.. சீனா எதிர்க்குது. இடையில.. சிங்களம் நல்லா குளிர்காயுது. நாங்க தான்... பாதை தெரியாமல்.. திக்குமுக்காடிக்கிட்டு இருக்கம்.  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளதொடர்பு வைத்திருக்கலாம் ஆனால் களவாக வைத்திருக்க வேணும் ,சிறிலங்கா மாதிரி பப்ளிக்கா வைத்திருந்தால் கஸ்டம்தான்...... :D

இதில அமெரிக்கா காரங்கள் ரொம்ப கில்லாடிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.