Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாயக மறுமலர்ச்சிக்கான யாழ் நிதியம்

Featured Replies

வணக்கம் உறவுகளே !
 
என் மனதில் நீண்டகாலமாக இருக்கும் ஒரு திட்டத்தினை உங்கள் முன் வைக்கின்றேன். தங்கள் கருத்துக்களை தெரியப்படுத்தவும். 
 
எமது தாயகத்திலுள்ள முன்னாள் போராளிகள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மிகுந்த சிரமத்தின் மத்தியில் தமது வாழ்க்கையை வாழ்ந்து வருவது நாம் அறிந்ததே. ஒவ்வொரு நாளும் இணையங்களிலும் சமூக வலைதளங்களிலும் உதவி வேண்டி பல உருக்கமான வேண்டுதல்கள் வந்துகொண்டிருக்கின்றன. ( இவற்றில் உண்மையாகவே உதவி தேவைப்படுபவர்களையும் நாம் இனம் காண வேண்டியுள்ளது)
 
இவர்களுக்கு உதவி செய்ய நினைத்தாலும் என்னால் ஒரு பெரிய தொகை வழங்குவதற்குரிய வல்லமை இல்லை. ஆனால் என்னால் மாதம் கூடியது ஒரு £50 வழங்க முடியும். என்னை போன்றே உங்களிலும் பலர் இங்குமிருக்கலாம். தாயகத்திலுமிருக்கலாம்.
 
ஆகவே நம் அனைவரும் இணைந்து யாழ் களம் மூலமாக ஒரு நிதியம் ஒன்றினை உருவாக்கினால் என்ன ?
 
மாதம் எம்மால் இயன்ற பணத்தினை அன்னிதியத்திற்கு வைப்பு செய்வோம். அது இவ் மாதம் £10 ஆக இருக்கலாம். அடுத்த மாதம் £100 ஆக இருக்கலாம். எம்மால் இயன்ற பணத்தினை வைப்பு செய்வோம். 
 
எப்பொழுதெல்லாம் அவசர உதவிகள் தேவைப்படுகிறதோ அப்பொழுது இந்நிதியத்திலிருந்து  நாம் உதவி செய்யலாம் என்பது என் எண்ணம்.
 
இத்திட்டத்திலுள்ள நடைமுறைச் சிக்கல்கள் நன்மை தீமைகள் தொடர்பாக யாழ் நிர்வாகத்தினரும் உறவுகளும் கருத்துக்களை முன் வைக்குமாறு பணிவாக கேட்டுகொள்கின்றேன்.
 
நன்றி,
  • கருத்துக்கள உறவுகள்

அருமையான திட்டம். பெயர் சொல்லி வேலை செய்ய தயாராய் இருக்கும் சிலரையும் உள்வாங்கி செயல்பட்டால் நல்லம் என நினைக்கிறேன். என் பங்களிப்பு நிச்சயம் உண்டு.

என் நண்பர், உறவுகளிடம் அடாத்தாய் புடிங்கியும் தருவேன் :)

  • தொடங்கியவர்

நன்றி கோசான் தங்கள் வரவுக்கும் கருத்துக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இதை ஏற்கனவே பரிந்துரைத்தேன்
உங்கள் முயற்சிக்கு எனது ஆதரவு எப்போதும் இருக்கும்.
கருத்துக்களை கேட்பதுடன்  மட்டும் நிற்காமல்
செயலிலும் இறங்கவேண்டும்.
முதலில் ஒரே நாட்டில் இருக்கும் சிலர் சேர்ந்து இதற்கான ஒரு கூட்டு  வங்கிக்கணக்கை ஆரம்பிக்க வேண்டும்.
பின்னர் படிப்படியாக மற்றவர்களை  இதில் சேர்த்துக்கொள்ளலாம்.

நடைமுறையில் இந்த விடயம் கத்தியின் மேல் நடப்பது போன்ற ஒரு ஆபத்தான விடையம்.

மற்றவர்களின் ஆலோசனையையும் கேட்கவேண்டும்.
 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு முயற்சி செந்தமிழாளன்!

 

நல்ல ஒரு பொறுப்புக் கூறல் ' பொறிமுறை' (Accountability)  இருக்குமெனில்.. எனது ஆதரவும் உண்டு!

 

கடந்த காலங்களில்.. கையைச் சுட்டுக்கொண்ட அனுபவத்தால் எழுதுகின்றேன்! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே இருக்கின்ற நேசக்கரத்தை பலப்படுத்தி செய்யலாம் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் உறவுகளால் ஆரம்பிக்கப்பட்டது  தான் நேசக்கரம். அதை பலப்படுத்தி பலதையும் செய்யலாமே.

  • கருத்துக்கள உறவுகள்

நேசக்கரத்தை ஒரு நிதியமாக்கி அதன்மூலம் உதவிகள் செய்யலாம் என்கிற ஆலோசனை எனக்கு சரியாகப்படுகிறது. எதுவாகினும், எனது ஆதரவு என்றும் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

நேசக்கரம்.. யாழின் நேசக்கரமாய் இருந்த நிலை இன்றிருக்கோ என்பது சந்தேகம். ஆரம்பத்தில் மிக சிநேகித பூர்வமாக எல்லா கள உறவுகளையும் அணுகி.. டண் போன்ற உறவுகள்.. நம்பிக்கைக்குரியவர்களாக கடைசிவரை செயற்பட்டார்கள். 

 

ஆனால்.. இன்று..?!  நீ தந்தா.. தா.. தராட்டிப் போ என்ற இறுமாப்பு நிலைக்கு நேசக்கரம் சில சந்தர்ப்பங்களில் நடந்து கொண்டுள்ளது. 

 

நேசக்கரம்.. இன்று யாழ் உறவுகளின் கட்டுப்பாட்டில் இல்லை. யாழ் உறுப்பினர் சிலரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த நிலைமாறி.. யாழ் உறவுகளின் ஒட்டுமொத்த கருத்துக்களையும் நேசக்கரம்.. சகிப்புத் தன்மையோடும்.. நட்புறவோடும்.. நம்பிக்கையோடும் பேணும் என்றால்... கடந்த காலத்தில் யாழ்.. நேசக்கரத்தினூடு செய்த பங்களிப்புப் போல் மீண்டும் செய்ய ஆர்வம் உண்டு.

 

முதலில் எமக்குள் உள்ள வேற்றுமை.. குழுநிலை.. நீங்கி.. நாம்.. மற்றவர்களின் சுயங்களை மதித்து.. நட்புறவோடும் நம்பிக்கைக்கு பாத்திரமாகவும் எப்பவும் செயற்படுவோம் என்ற ஒரு உறுதி நிலை வந்தால் தான்.. எங்கள் பங்களிப்பு யாழினூடாக இருக்கும்.

 

கடந்த கால சில கசப்பான அனுபவங்களும்.. நேசக்கரத்துக்கு ஆளையாள் உரிமைகோரி அடிபட்டதுகளும்.. அதனூடு குடும்பச் சண்டைகள் வந்ததும்.. அழிக்கிற.. ஒழிக்கிற நிலைக்கு ஆர்ப்பரித்ததும்.. சீ என்று போச்சுது எம்மவர்களின் ஒற்றுமையைக் கண்டு.  :icon_idea:  :(  :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேசக்கரம்.. யாழின் நேசக்கரமாய் இருந்த நிலை இன்றிருக்கோ என்பது சந்தேகம். ஆரம்பத்தில் மிக சிநேகித பூர்வமாக எல்லா கள உறவுகளையும் அணுகி.. டண் போன்ற உறவுகள்.. நம்பிக்கைக்குரியவர்களாக கடைசிவரை செயற்பட்டார்கள். 

 

ஆனால்.. இன்று..?!  நீ தந்தா.. தா.. தராட்டிப் போ என்ற இறுமாப்பு நிலைக்கு நேசக்கரம் சில சந்தர்ப்பங்களில் நடந்து கொண்டுள்ளது. 

 

நேசக்கரம்.. இன்று யாழ் உறவுகளின் கட்டுப்பாட்டில் இல்லை. யாழ் உறுப்பினர் சிலரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த நிலைமாறி.. யாழ் உறவுகளின் ஒட்டுமொத்த கருத்துக்களையும் நேசக்கரம்.. சகிப்புத் தன்மையோடும்.. நட்புறவோடும்.. நம்பிக்கையோடும் பேணும் என்றால்... கடந்த காலத்தில் யாழ்.. நேசக்கரத்தினூடு செய்த பங்களிப்புப் போல் மீண்டும் செய்ய ஆர்வம் உண்டு.

 

முதலில் எமக்குள் உள்ள வேற்றுமை.. குழுநிலை.. நீங்கி.. நாம்.. மற்றவர்களின் சுயங்களை மதித்து.. நட்புறவோடும் நம்பிக்கைக்கு பாத்திரமாகவும் எப்பவும் செயற்படுவோம் என்ற ஒரு உறுதி நிலை வந்தால் தான்.. எங்கள் பங்களிப்பு யாழினூடாக இருக்கும்.

 

கடந்த கால சில கசப்பான அனுபவங்களும்.. நேசக்கரத்துக்கு ஆளையாள் உரிமைகோரி அடிபட்டதுகளும்.. அதனூடு குடும்பச் சண்டைகள் வந்ததும்.. அழிக்கிற.. ஒழிக்கிற நிலைக்கு ஆர்ப்பரித்ததும்.. சீ என்று போச்சுது எம்மவர்களின் ஒற்றுமையைக் கண்டு.  :icon_idea:  :(  :)

  "தாயக மறுமலர்ச்சிக்கான யாழ் நிதியம்"  எனும் பெயரில் புதிதாக ஒன்றை தொடங்கலாம் என்கின்றீர்களா?  :rolleyes:
  • தொடங்கியவர்
இத் திட்டத்திற்கு தங்கள் ஆதரவுகளையும் கருத்துக்களையும் வழங்கிய உறவுகள் அனைவருக்கும் நன்றிகள். 
 
இத்திட்டத்தினை முன்னெடுப்பதற்கு மூன்று வழிகள் உள்ளன 
 
1.  யாழ் களமே நேரடியாக ஒரு நிதியம் ஒன்றினை ஆரம்பித்து நிதிகளையும் உதவிகளையும் கையாள்வது.
 
2. நேசக்கரம் அமைப்பினர் ஒரு உப பிரிவொன்றை ஆரம்பித்து நடவடிக்கைகளை கையாள்வது.#
 
3 இவ்விரு வழிகளும்  சரி வரத்து விடின் வாத்தியார் பரிந்துரைத்தது போன்று ஒரு கூட்டு கணக்கு ஒன்றினை ஆரம்பித்து இதை செயற்படுத்துவது. இது கொஞ்சம் கடினமானது . 
 
இவை தொடர்பாக தங்களது மேலதிக கருத்துக்களும் ஆலோசனைகளும் வரவேற்க்கப்படுகின்றன. 
 
நன்றி. 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.