Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாம் 11 வயதை அடையும் போதுதான் நம் மூளை முழுவளர்ச்சி அடைகிறது: - மூளையின் செயல்திறன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாம் 11 வயதை அடையும் போதுதான் நம் மூளை முழுவளர்ச்சி அடைகிறது: - மூளையின் செயல்திறன்!

[Wednesday 2015-04-01 19:00]
human-brain-010415-400-seithy-healthy.jp

1. மூளையில் 100,000,000,000 (100 பில்லியன்) நியூரான் செல்கள் உள்ளன. நரம்பு மண்டலத்தில் உள்ள நியூரான்கள் உடலின் உணரும் செய்தியைமூளைக்கு கெமிக்கல் சிக்னல் மூலம் கொண்டுசெல்லும். மது (அல்கஹால்) நியூரானின் இணைப்பைத்தான் வலுவிழக்க செய்யும்.

2. நாம் சுவாசம் மூலம் பெறும் ஆச்சிஜனில் 20 சதவிதம் மூளை மட்டுமே பயன்படுத்தும். மீதி தான் மற்ற உறுப்புகள் பயன்படுத்தும். அதாவது நமதுஉடலில் 2 சதவீதமே உள்ள மூளை 20 சதவீதம் ஆக்சிஜனை பயன்படுத்துகிறது. 5 முதல் 10 நிமிடங்கள் ஆக்சிஜன் இல்லையெனில் மூளை செல்கள்இறக்க துவங்கிவிடும்.

  

3. நாம் 11 வயதை அடையும் போதுதான் நம் மூளை முழுவளர்ச்சி அடைகிறது. இருந்த போதிலும் நாம் இருபது வயதை அடையும் போதுதான்முழுமையாக சிந்திக்க உதவுகிறது. நாம் 35 வயதை தாண்டும் போது ஒரு நாளைக்கு நம் மூளையில் உள்ள 7000 மூளை செல்கள் அழிந்துவிடுகின்றனமீண்டும் அந்த செல்கள் உருவாவதில்லை.

4. நம்மை நாமே கிச்சு மூச்சு மூட்ட முடியாது. நம் மூளையின் ஒரு பகுதியான செரிபெல்லம் மூளையின் மாற்ற பகுதிக்கு எச்சரிக்கை செய்யும் நாமேநம்மை கிச்சு மூச்சு ஊட்டுவதாக. அதனால் மூளையின் மாற்ற பகுதிகள் கிச்சு மூச்சு மூட்டுவதை கண்டுகொள்ளாது.

5. மூளை 80 சதவீதம் நீரால் (water) ஆனது.

6. மூளை பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் அதிக சுறுசுறுப்பாகவும், சிந்தனை செய்யும் திறன் அதிகமாகவும் இருக்கும்.

7. அதிக stress மூளையின் நியாபக திறனையும் கற்றுகொள்ளும் திறனையும் குறைத்து விடும்

8. நம் உடலில் உள்ள மொத்த இரத்தத்தில் 20 சதவீதம் மூளைக்கு மட்டுமே தேவையானதாகும்.

9. மூளைக்கு மூளையின் வலியை உணரமுடியாது. மூளையின் வலியை உணர மூளைக்கு அந்த இணைப்பே கிடையாது. எனவே தான் மூளைஅறுவை சிகிட்சை செய்யும் போது நோயாளி முழித்து கொண்டே இருப்பார்கள்.

10. மூளை மிகவும் மெதுவானதாகும் (soft). பட்டர் வெட்டும் கத்தியை கொண்டே மூளையை வெட்டலாம்.

11. மூளையில் இருந்து வரும் செய்திகள் நியூரான்களுக்கு இடையே செல்லும் வேகம்ஒரு வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு.

12. ஒவ்வெரு முறையும் நாம் நியாபக படுத்த நினைக்கும் செய்திகள் அல்லது சிந்தனை செய்யும் நிகழ்வுகளை 2 அல்லது அதற்க்கு மேற்பட்ட மூளைசெல்கள் ஒன்றிணைந்து சேமித்து கொள்ளும்

13. நாம் விழித்துகொண்டிக்கும் பொழுது நமது மூளை உருவாகும் மின்சாரத்தின் அளவு 25 வாட்ஸ், இதன் மூலம் ஒரு பல்ப்பை எரியவைக்கமுடியும்.

14. ரோலர் கோஸ்டர்ஸில் விளையாடும் போது மூளையில் இரத்தம் கட்டிக்கொள்ள (Blood clot) வாய்ப்புகள் அதிகம்.

http://www.seithy.com/breifNews.php?newsID=129418&category=CommonNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

சிலபேருக்கு இந்தப் பதினொரு வயது வராமலே போய்விடுகிறது.. :o:D

சிலபேருக்கு இந்தப் பதினொரு வயது வராமலே போய்விடுகிறது.. :o:D

 

நீங்கள் ஆரைச் சொல்கின்றீர்கள் என்று எனக்குத் தெரியும்...ஆனால் ஆர் என்று நானும் சொல்ல மாட்டேன் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

 நாம் 35 வயதை தாண்டும் போது ஒரு நாளைக்கு நம் மூளையில் உள்ள 7000 மூளை செல்கள் அழிந்துவிடுகின்றனமீண்டும் அந்த செல்கள் உருவாவதில்லை.

 

 

 

 

//நாம் 35 வயதை தாண்டும் போது ஒரு நாளைக்கு நம் மூளையில் உள்ள 7000 மூளை செல்கள் அழிந்துவிடுகின்றனமீண்டும் அந்த செல்கள் உருவாவதில்லை.//

 

 வயது போகும் போது நியூரோன்கள் எனப்படும் மூளையின் நரம்புக் கலங்கள் இறப்பது உண்மை. ஆனால் ஒரு நரம்புக் கலம் இறக்கும் போது, அதன் அருகாமையில் இருக்கும் ஏனைய நரம்புக் கலங்கள் இறந்த கலத்தின் தொழிலை எடுத்துக் கொண்டு செயற்படுவதால் இந்த அழிவுகளால் பெரிய விளைவுகள் இருக்காது. இந்த அழிவு, மாற்றீடு என்பவற்றால் மிக முதிய வயதில் நினைவாற்றல் குறைவு (dementia) ஏற்படலாம். ஆனால், மூளையை செய்யும் தொழில் மூலமோ வேறு வழிகளிலோ (சுடோக்கு, குறுக்கெழுத்துப் புதிர்கள் போன்ற பயிற்சிகள் மூலம்) உசாராக வைத்திருந்தால் இந்த நினைவாற்றல் குறைவை நன்கு தள்ளிப் போட முடியும் என்று ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.  

 

// மூளை பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் அதிக சுறுசுறுப்பாகவும், சிந்தனை செய்யும் திறன் அதிகமாகவும் இருக்கும்//.

 

தவறு: மூளை எந்த நேரத்தில் அதிகம் வேலை செய்யும் என்பது ஒவ்வொருவரதும் biological clock ஐப் பொறுத்தது. இரவில் நாம் உறங்கும் போது மூளையின் இரத்தக் கலன்கள் கொஞ்சம் அகலமாகி இரத்த ஓட்டத்தை அதிகரித்து மூளையில் சேர்ந்திருக்கும் அனுசேபக் கழிவுகளை வெளியேற்றும் வேலையைச் செய்வதாக அண்மையில் வெளிவந்த ஆய்வு முடிவுகள் ஊகமொன்றைத் தெரிவிக்கின்றன. ஆனால் இது இரவில் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்கிறது என்று அர்த்தமல்ல!

 

Edited by Justin

  • கருத்துக்கள உறவுகள்

சிலபேருக்கு இந்தப் பதினொரு வயது வராமலே போய்விடுகிறது.. :o:D

 

நீங்கள் ஆரைச் சொல்கின்றீர்கள் என்று எனக்குத் தெரியும்...ஆனால் ஆர் என்று நானும் சொல்ல மாட்டேன் :rolleyes:

தொப்பி அழவானவர், போட்டுக் கொண்ட பின்....

நீங்கள், சொல்லாமேலே...... கண்டு பிடித்து விட்டோம். :D  :icon_idea:

சிலபேருக்கு இந்தப் பதினொரு வயது வராமலே போய்விடுகிறது.. :o:D

 

உப்பு போடாமல் சாப்பிட்டால் நீங்கள் சொல்லுற பிரச்சினை வரும் எண்டு எங்கேயோ படிச்ச ஞாபகம்.  :D

தொப்பி அழவானவர், போட்டுக் கொண்ட பின்....

நீங்கள், சொல்லாமேலே...... கண்டு பிடித்து விட்டோம். :D  :icon_idea:

:D  :lol: 

நாங்களும் கண்டுபிடிச்சிட்டம்.  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

//நாம் 35 வயதை தாண்டும் போது ஒரு நாளைக்கு நம் மூளையில் உள்ள 7000 மூளை செல்கள் அழிந்துவிடுகின்றனமீண்டும் அந்த செல்கள் உருவாவதில்லை.//

 

 வயது போகும் போது நியூரோன்கள் எனப்படும் மூளையின் நரம்புக் கலங்கள் இறப்பது உண்மை. ஆனால் ஒரு நரம்புக் கலம் இறக்கும் போது, அதன் அருகாமையில் இருக்கும் ஏனைய நரம்புக் கலங்கள் இறந்த கலத்தின் தொழிலை எடுத்துக் கொண்டு செயற்படுவதால் இந்த அழிவுகளால் பெரிய விளைவுகள் இருக்காது. இந்த அழிவு, மாற்றீடு என்பவற்றால் மிக முதிய வயதில் நினைவாற்றல் குறைவு (dementia) ஏற்படலாம். ஆனால், மூளையை செய்யும் தொழில் மூலமோ வேறு வழிகளிலோ (சுடோக்கு, குறுக்கெழுத்துப் புதிர்கள் போன்ற பயிற்சிகள் மூலம்) உசாராக வைத்திருந்தால் இந்த நினைவாற்றல் குறைவை நன்கு தள்ளிப் போட முடியும் என்று ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.  

 

// மூளை பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் அதிக சுறுசுறுப்பாகவும், சிந்தனை செய்யும் திறன் அதிகமாகவும் இருக்கும்//.

 

தவறு: மூளை எந்த நேரத்தில் அதிகம் வேலை செய்யும் என்பது ஒவ்வொருவரதும் biological clock ஐப் பொறுத்தது. இரவில் நாம் உறங்கும் போது மூளையின் இரத்தக் கலன்கள் கொஞ்சம் அகலமாகி இரத்த ஓட்டத்தை அதிகரித்து மூளையில் சேர்ந்திருக்கும் அனுசேபக் கழிவுகளை வெளியேற்றும் வேலையைச் செய்வதாக அண்மையில் வெளிவந்த ஆய்வு முடிவுகள் ஊகமொன்றைத் தெரிவிக்கின்றன. ஆனால் இது இரவில் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்கிறது என்று அர்த்தமல்ல!

 

 

நன்றி  ஐயா

நாமும்  எடுத்துக்கொண்டோம்.. :icon_idea:

யாழில பல பேருக்கு . :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு குறிப்பிடப்படுவது நல்ல மூளையா அல்லது கள்ள மூளையா?  :D

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் தொப்பியை போட்டுவிட்டாராக்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.