Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆவிகளும் நாங்களும்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

aav_zpsu3ejdg3o.jpg

 

ஆவிகளிலையும் பலவகை இருக்கு  :o

 

இந்த ஆவிகளை எல்லாம் பாக்கப் பாவமாக் கிடக்கு. குமாரசாமி

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

anger2-747499.jpg

 

அடுத்த  நாள் அம்மா எங்களுடன் வந்து படுக்கப்போவதாகக் கூறிவிட்டுத் தம்பியின் குடும்பதை அப்பாவின் அறையுள் தூங்கும்படி கூற தம்பியும் பிள்ளைகளும் முதலிலேயே சென்றுவிட்டனர். தம்பியின் மனைவி எம்முடன் கதைத்துவிட்டுப் போனதால் அப்பா தூங்கிய பக்கம் படுக்கவேண்டியதாகிவிட்டது. மேல்மாடியில் என் தங்கை குடும்பமும் என்கணவர் மற்றும் இன்னும் ஒரு மாமா ஆகியோர் தூங்க நான் நின்மதியாக அனைவருக்கும் நடுவில் தூங்கிப்போனேன்.

 

எல்லோரும் தூங்கியிருபார்கள் போல திடீரென விடு விடு ஐயோ என பெரிதாக யாரோ கத்தும் சத்தம். இம்முறை நானே முதலில் அந்தச் சத்தத்தைக் கேட்டதும் திடிக்கிடலோடு மற்ற எல்லாரையும் இருட்டுக்குள் தட்டி எழுப்ப, எல்லோரும் எழும்பி எங்கிருந்து சத்தம் வருகிறது என்று பார்த்தால் மேல்மாடியில் இருந்து வருகிறது.

 

எனக்கு மேல்மாடிக்குப் போகப் பயமாக இருக்க, என்ன பிரச்சனையோ?? ஆராவது போய்ப் பாருங்கோ என்றால் எல்லோரும் நீபோ நீ போ என்று மற்றவரை அனுப்புவதில் குறியாக இருக்க படுத்திருந்த தம்பி என்ன பிரச்சனை.?? நித்திரை கொள்ள விடுறியளே என அலுத்துக்கொண்டு மின்விளக்கைப் போட்டுவிட்டுப் படிகளில் ஏற என்ன நடந்தது என்று அறியும் ஆவலில் மற்றவர் ஒருவிதப் பயத்துடன் பார்த்துக்கொண்டு நிற்க, நானும் பாத்திட்டு  வாறன் என்றபடி அண்ணியும் மேலே போக நானும் துணிவை வரவளைத்துக்கொண்டு படிகளில் ஏற முற்பட படி விளக்கு அணைந்துவிட்டது. உடனே திரும்ப ஓடிவந்து மற்றவர்களுடன் நிற்க்க, அண்ணி இடையில் நின்றுகொண்டு நிவேதா விளக்கைப் போடு என்று கத்துகிறார்.

 

நான் நின்ற இடத்தை விட்டு அசையவில்லை. தம்பியின் மனைவி சென்று விளக்கைப் போட்டாரே தவிர மேலே படிகளில் செல்ல முற்படவில்லை. நான் கடைக்கண்ணால் திரும்பி மணிக்கூட்டைப் பார்க்க நேரம் ஒன்று நாற்பது. யாரோ படிகளில் வருவது தெரிய பார்த்தால் தம்பி பின்னால் அண்ணி. என்னடா யார் கத்தியது  என்று நான் கேட்கிறேன். மாமாதான் கத்தினவர். என்ன ஏதென்று சொல்லுறார் இல்லை. எல்லாரும் போய்ப் படுங்கோ. விடியக் கதைப்பம் என்று கூற வேறு  வழியின்றி தூங்க முயல்கிறேன்.

 

காலையில் எழுந்து கீழே வந்த மாமாவின் முகத்தில் சிரிப்பு இல்லை. அவருக்கு 65 வயது. மிகத் துணிவானவர். என்ன மாமா நடந்தது என்று நான் கேட்டேன்.

இரவு என் கணவர் இடதுபக்கமும் தங்கையின் கணவர் வலதுபக்கமும் நடுவே மாமாவும் படுத்துத் தூங்கியுள்ளனர். வலது பக்கக் காலை பாதத்தில் இருந்து யாரோ தடவியதுபோல் இருக்க, தங்கையின் கணவன் தான் தூக்கக் கலக்கத்தில் தங்கையின் கால் என்று நினைத்துத் தடவுகிறாரோ என எண்ணியபடி விடு நாடா என்றபடி திரும்பிப் பார்தால் தங்கையின் கணவர் குறட்டைவிட்டபடி ஆழ்ந்த தூக்கத்தில் இருக்க, மாமாவும் மீண்டும் நேராகப் படுக்க வயிற்றில் பாரம் ஒன்று அழுத்தியபடியே மேல்நகர இவரால் உடலை அசைக்கவே முடியாதபடி பாரம் அழுத்த கைகால்களை அசைக்க எத்தனிக்கிறார் மாமா. முடியாதுபோக பாரம் அழுத்தியபடி இப்ப நெஞ்சிலும் கழுத்திலும் வந்து நிற்க கத்தக் கத்த வார்த்தைகளே வராது தொண்டைக்குள்ளேயே அமுங்க, மாமாவின்  கை இரண்டு மூன்றுதடவை தட்டுப்பட என் கணவர் விளித்து என்ன மாமா என்று கேட்க, கழுத்தின் பாரம் குறைய மாமா ஐயோ விடுவிடு என்று கத்தினதாகச் சொல்ல, நாங்கள் எல்லோரும் சிரிக்கிறோம். உங்களுக்கும் பயம் பிடிச்சிட்டிது என்று என் தம்பி கூற அவருக்குக் கோவம் வருகிறது.

 

உங்களுக்கு விளையாட்டாக் கிடக்கு. சீவன் போப்போகுது என்றே நான் நினைத்துவிட்டேன். நெஞ்சில் ஏறி எதுவோ இருந்துகொண்டு கழுத்தை நெரிக்க ..... எனக்கு இப்பிடி ஒருநாளும் வந்ததில்லை என்றுவிட்டு இருக்க அண்ணி கெட்ட ஆவிகள் இந்த நேரங்களில் யாரின் உடலில் போகப் பாக்கும். நல்லகாலம் மாமா தப்பிவிட்டார் என்று கூற, பூருற ஆவி ஏன் அண்ணி சத்தம் போடாமல் பூராமல் அவற்றை கழுத்தில கை வைச்சது என்று கேட்க, அண்டைக்கு உனக்கு நடந்ததும் அப்ப பொய்யாகத்தான் இருக்கவேணும் என்று என் வாயை அடைக்க நான் ஒன்றும் கூற முடியாது நின்றேன்.

 

 

இன்னும் இருக்கு

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

இறந்த வீடுகளுக்கு சில evil ஆவிகளும் வந்து போவினமாம்.. :unsure: அதில் ஒன்றின் வேலையாக இருக்கலாம்.. desismileys_3028.gif

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு அவசரப்படுவதே தொழிலாகிவிட்டது கொஞ்ச நாட்களாக.

 

வணக்கம் சுமே.....

 

எனக்கு 

உங்கள் அப்பா இறக்கும்வரை

அவரையோ தங்களையோ தெரியாது.

 

ஆனால் அவர் இறந்திபின் தான் அவரை அறியமுடிந்தது

அவர் எம் சொத்து என்பது தெரியவந்தது...

 

இந்தக்கதையை நீங்கள் தொடக்கும் போதும்

அதற்காக போட்ட படத்தையும் பார்த்தபோது

அவர்மீதான எமது விம்பத்தை இவை மாற்றிவிடக்கூடும் எனத்தோன்றியது

சில விடயங்களுக்கு அவசரப்படத்தான் வேண்டும்

உங்களது தொடர்ச்சியான எழுத்துக்களுக்கும்

படங்களுக்கும் பின்

தற்பொழுது உங்களது அப்பா என் கண்முன் ஆவியாக மட்டுமே உள்ளார்.

நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சுமே.....

 

எனக்கு 

உங்கள் அப்பா இறக்கும்வரை

அவரையோ தங்களையோ தெரியாது.

 

ஆனால் அவர் இறந்திபின் தான் அவரை அறியமுடிந்தது

அவர் எம் சொத்து என்பது தெரியவந்தது...

 

இந்தக்கதையை நீங்கள் தொடக்கும் போதும்

அதற்காக போட்ட படத்தையும் பார்த்தபோது

அவர்மீதான எமது விம்பத்தை இவை மாற்றிவிடக்கூடும் எனத்தோன்றியது

சில விடயங்களுக்கு அவசரப்படத்தான் வேண்டும்

உங்களது தொடர்ச்சியான எழுத்துக்களுக்கும்

படங்களுக்கும் பின்

தற்பொழுது உங்களது அப்பா என் கண்முன் ஆவியாக மட்டுமே உள்ளார்.

நன்றி.

 

அப்ப உங்களுக்கு நான் எழுதுவது விளங்கவில்லை என்று அர்த்தம்.  எதுக்கும் ஓட ஓட வாசிக்காது மற்றவர்கள் எழுதியதையும் நான் அதற்கு எழுதியதையும் வாசித்தால் வடிவா விளங்கும் :D அப்பா ஆவியாக வந்தவர் என்றோ வருவார் என்றோ எங்காவது கூறியிருக்கின்றேனா??? அவர் எனக்கு முதலில் அப்பா. அவர் இருக்கும்போதே எப்படி வாழ்ந்தவர் என்பது உங்களிலும் விட எனக்கும் அவருடம் பழகியவர்களுக்கும் தெரியும். என் அப்பாவிடம் அன்பும் மரியாதையும் என்னைவிட மற்றவர்களுக்கு அதிகமாக இருந்துவிட முடியுமா ????

அப்பாவை நீங்கள் ஆவியாகப் பார்ஹத்தால் அது உங்கள் மனதின் கோளாறு

இறந்த வீடுகளுக்கு சில evil ஆவிகளும் வந்து போவினமாம்.. :unsure: அதில் ஒன்றின் வேலையாக இருக்கலாம்.. desismileys_3028.gif

 

இதையாவது வாசியுங்கள் விசுகு அண்ணா

 

எதுக்கும் வீட்டில இரண்டு மூன்று இடத்தில கமராக்களை பொருத்தி விடுங்கோ 
சுவாரசியமா எதுவும் தட்டுப்பட்டா யுடிய்யுப்பில போட்டு லைக் அள்ளலாம். 
 
 
ஒருவேளை உங்களுக்கு தெரியாமல் உங்கட வீட்டை வேறு யாரும் வசிக்கிறார்களோ தெரியாது. கீழ் வீடியோவில இருப்பவர் வீட்டை அவருக்கே தெரியாமல் ஒரு நபர் வாழ்ந்திருக்கிறார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

ஆவி பற்றி நினைத்து தூங்கினால் அப்படிப்பட்ட அனவுகளும் வரும் அக்கா ஆனா ஆவீ இருக்கா இல்லையா எனக்கு தெரிந்தாகணும்

ஏனென்றால் நான் இருக்குற இடத்தில உயிர் இருந்தும் பயம் உறுத்தும் ஆவிகள் சுற்றி திரிகின்றன அக்கா :rolleyes: :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

எதுக்கும் வீட்டில இரண்டு மூன்று இடத்தில கமராக்களை பொருத்தி விடுங்கோ 
சுவாரசியமா எதுவும் தட்டுப்பட்டா யுடிய்யுப்பில போட்டு லைக் அள்ளலாம். 
 
 
ஒருவேளை உங்களுக்கு தெரியாமல் உங்கட வீட்டை வேறு யாரும் வசிக்கிறார்களோ தெரியாது. கீழ் வீடியோவில இருப்பவர் வீட்டை அவருக்கே தெரியாமல் ஒரு நபர் வாழ்ந்திருக்கிறார்.
 

 

 

இருக்கும் இருக்கும் :(

 

ஆவி பற்றி நினைத்து தூங்கினால் அப்படிப்பட்ட அனவுகளும் வரும் அக்கா ஆனா ஆவீ இருக்கா இல்லையா எனக்கு தெரிந்தாகணும்

ஏனென்றால் நான் இருக்குற இடத்தில உயிர் இருந்தும் பயம் உறுத்தும் ஆவிகள் சுற்றி திரிகின்றன அக்கா :rolleyes: :rolleyes:

 

சுற்றித்திரியிர ஆவியை நான் பாக்காமல் சொல்ல ஏலாது முனிவர்

 

என்னை பொறுத்தவரை ஆவிகள் பேய் பிசாசு போன்றவற்றில் நம்பிக்கை இல்லை. ஆனால் மற்றவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை பிழை என சொல்லவில்லை.
 
நித்திரை கொள்ளும்போது தலைக்கு கீழை இரும்பு சாமான் ஒண்டை வைத்துகொண்டு படுத்தால் உந்த பேய் பிசாசு எல்லாம் வராது எண்டு சொல்லுறவை. ஒருக்கா அப்படி ட்ரை பண்ணி பாருங்கோ.  :icon_idea:
 
நான் இருக்குது எண்டு நம்பிற ஒரே ஆவி நீர் ஆவி.  :D  :D

Edited by Surveyor

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆவி பிரச்னைக்கு ஒரு நல்ல தீர்வு இருக்கு .

.

..

.

.

.

.

..

.

.

..

.

.

.

..

.

.

இவவை கொண்டுவந்து பாடாவிட்டால் எல்லாம் சரி வரும் .

 

 

 

 

 

 

அவ்ஸ் ல் சூப்பராய் பாடுபவர் 11120540_1614931618723095_68711659985363

சுமோ அக்கா உங்களிற்கு மாத்திரம் பேய் படம் போட தெரியுமோ  நாங்களும் போடுவிம்ல எப்படி நல்ல இருக்கா.

Edited by பெருமாள்


:D  :lol:

Edited by மீனா

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மீனா . ஆவிகள் பேய்கள் காணப்படுகின்ற வீடுகளில் சத்தமாக இவவின் பாட்டை போடவும் அல்லது சுமே அக்காவும் சேர்ந்து பாடினால் முழுபலன் கிடைக்கும் ஒரு நூறு வருடத்திட்க்கு அந்த வீடுகளில் ஆவி,பேய்கள் மறந்தும் தலை வைச்சு படுக்காதுகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

என்னை பொறுத்தவரை ஆவிகள் பேய் பிசாசு போன்றவற்றில் நம்பிக்கை இல்லை. ஆனால் மற்றவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை பிழை என சொல்லவில்லை.
 
நித்திரை கொள்ளும்போது தலைக்கு கீழை இரும்பு சாமான் ஒண்டை வைத்துகொண்டு படுத்தால் உந்த பேய் பிசாசு எல்லாம் வராது எண்டு சொல்லுறவை. ஒருக்கா அப்படி ட்ரை பண்ணி பாருங்கோ.  :icon_idea:
 
நான் இருக்குது எண்டு நம்பிற ஒரே ஆவி நீர் ஆவி:D  :D

 

 

அப்ப எதுக்கு இரும்புத் துண்டு எல்லாம் தலைக்குக் கீழே ????

 

நன்றி மீனா . ஆவிகள் பேய்கள் காணப்படுகின்ற வீடுகளில் சத்தமாக இவவின் பாட்டை போடவும் அல்லது சுமே அக்காவும் சேர்ந்து பாடினால் முழுபலன் கிடைக்கும் ஒரு நூறு வருடத்திட்க்கு அந்த வீடுகளில் ஆவி,பேய்கள் மறந்தும் தலை வைச்சு படுக்காதுகள்.

 

இது நல்ல பிஸ்நெஸ். :lol: யாரின் வீடுகளில் ஆவி வந்தால் என்னைக் கூப்பிடுங்கள் விரட்ட. மிகச் சொற்ப தொகையே அறவிடப்படும்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:D  :lol:

 

ஐயோ

அப்ப எதுக்கு இரும்புத் துண்டு எல்லாம் தலைக்குக் கீழே ????

ஆவி பேய் பிசாசு என்பவை இருக்குது எண்டு நம்புற ஆளுகளுகுதான் இரும்புத்துண்டு. நம்பாத ஆளுகளுக்கு ஒண்டும் தேவை இல்லை. நானும் ஒருக்காலும் இரும்புத்துண்டு பாவிக்கவில்லை. ஆனால், இரும்புத்துண்டு வைத்துக்கோண்டு படுத்தும் ஆவி வந்தால் நான் பொறுப்பு இல்லை. :lol:  :lol:  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மே மாதக் கடைசியில் மீண்டும் தொடர்வேன். அதுவரை பொறுங்கள் :)

  • கருத்துக்கள உறவுகள்

ஆவிகள் ஹொலிடே போகுது போல இருக்கு  :D  :D  :D

ஆவிகள் ஹொலிடே போகுது போல இருக்கு  :D  :D  :D

 

ஆவிகளுக்கு பரீட்சை என்று ஒரு கதை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆவிகளுக்கு பரீட்சை என்று ஒரு கதை

 

 

இல்லை, இல்லை கதையை வாசிச்ச எல்லார்ட வீட்டையும் வந்து கதையின் கருத்தை கேட்கப்போறாங்களாம்.

எதுக்கும் எல்லாரும் கதவை இறுக பூட்டி வையுங்கோ . நடு இரவில தான் வருவாங்க .

அது சரி , கதவ பூட்டினாலும் அவங்களால உள்ளே வர முடியுமே தானே ?

அடபாவிகள்  :D அந்த அப்பாவி ஓட்டை வாய்ப் பிள்ளையை ஆவியாக்கீட்டீர்களே :D

  • கருத்துக்கள உறவுகள்

மே மாதக் கடைசியில் மீண்டும் தொடர்வேன். அதுவரை பொறுங்கள் :)

 

அதுவரை ஆவிகளே எங்களுக்கு கதை சொல்லுறது ?ஆவிகளும் நீங்களும் ....... :D

  • 1 year later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 06/05/2015 at 0:25 PM, putthan said:

 

 

அதுவரை ஆவிகளே எங்களுக்கு கதை சொல்லுறது ?ஆவிகளும் நீங்களும் ....... :D

அட நானே கதை சொல்லுறது எண்டிட்டு மறந்திட்டனே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.