Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காகங்களே! மேகங்களே!...

Featured Replies

காகங்களே! மேகங்களே!...

காகங்கள் கரைந்தால் குயிலின் பாட்டு கேட்காது

மேகங்கள் நிறைந்தால் நிலவின் அழகு தெரியாது

ஆயினும் காகங்களே! மேகங்களே!

குயிலின் சத்தம் குறைந்திருப்பதாலும்

நிலவின் ஒளி மறைந்திருப்பதாலும்

அவைகள் இல்லையென்று அர்த்தம் இல்லை

இதோ! அவைகள் வெளிக்கிளம்பி விட்டன

ஆகவே காகங்களே! மேகங்களே!

கூவுகின்ற ஆவலையும்

வண்ணமாய் மின்னுகின்ற எண்ணத்தையும்

விட்டு

கரைதலையும் கலைதலையும் மட்டும் செய்யுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்காக சபேசன் சார் இந்தக் கவிதை

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்காக சபேசன் சார் இந்தக் கவிதை

உங்களைத்தான் கறுப்பி. அவர் கையாண்ட காகம் மேகம் இரண்டிலும் கறுப்புத்தானே.... :lol:

தவறு சபேசன்..

ஒப்பீட்டுக்கு..ஏதேனும் இருந்தால்தானே..இது சிறந்தது என்று சொல்லமுடியும்..

பிறப்பிலோ..அல்லது..இனத்திலோ..க

  • கருத்துக்கள உறவுகள்

உங்களைத்தான் கறுப்பி. அவர் கையாண்ட காகம் மேகம் இரண்டிலும் கறுப்புத்தானே.... :lol:

:angry: :(

  • தொடங்கியவர்

விகடகவி சொன்னது:

"பிறப்பிலோ..அல்லது..இனத்திலோ..

ஓ...புரிந்தது சபேசன் அண்ணா..

நீங்கள் தேவர்கள்..அரக்கர்கள்.. என்று வேற்றினத்து பிரபலங்களோடு நெருங்கிய தொடர்பை வைத்தpருக்கிறீர்கள் போல்...

எனக்குப்புரியாமலல்ல..

உங்களுடைய நிறைய விம்ரசனங்கள் பார்த்தேன்..

எல்லாவற்றிலும் ஒருவகையான முரணாண போக்கை கையாளுகிறீர்கள்..

இது தவற இப்படி செய்யலாமே..என தனிமடலில் அனுப்புங்கள்..அதுவும்..கட்டளை

  • தொடங்கியவர்

இது கள உறுப்பினர்களை மனதில் வைத்து எழுதப்பட்ட கவிதை அல்ல. அப்படி நான் செய்யமாட்டேன்.

இதை நான் 10.01.06 அன்று தங்களை குயில்கள் என்று நினைக்கும் காகங்களை நோக்கி எழுதினேன்.

நான் யாழ் களத்தில் இணைவதற்கு முன்பே எழுதினேன்.

ஐயோ மன்னித்துக்கொள்ளுங்கள்

சபேசன் அண்ணா அவசரப்பட்டு தவறாக..(மற்றவர்கள் எழுதியதயும் பார்த்து.)

புரிந்து கொண்டேன்..

  • தொடங்கியவர்

என்னைப் பொறுத்தவரை இப்பொழுது எழுதுபவர்கள் தொடர்ந்து எழுத வேண்டும். வானொலி, தொலைக்காட்சிகளில் வந்து கவிதை படிப்பவர்கள் தொடர்ந்து அதை செய்ய வேண்டும்.

(ஆனால் நீண்டகாலமாக எந்த ஒரு பிரயோசனமும் இல்லாமல் தொடர்ந்து ஒன்றையே செய்கின்றார்களே என்ற கோபத்தில்தான் நான் பெண்கவிஞர்கள் பற்றி கட்டுரை எழுதினேன்)

அப்படி அவர்கள் தொடர்ந்து செய்தால்தான் புதிய கவிஞர்கள் வருவார்கள்.

எனக்கு அப்பொழுது 14 வயது. சிறு சஞ்சிகைளில் எம்மவர்கள் எழுதுகின்ற கவிதைகளைப் பார்த்து, இதை விட என்னால் நன்றாக எழுத முடியுமே என்ற எண்ணத்தில்தான் நான் கவிதையே எழுத ஆரம்பித்தேன்.

இன்றைக்கு அதிகமாக கட்டுரைகள் எழுதுவதால், கவிதைகள் பற்றி சிந்திப்பதில்லை.

ஆனால் இன்றைக்கு மற்றவர்கள் எழுதுகின்ற கவிதைகளைப் பார்த்து யாராவது என்னைப் போன்று கவிதை எழுத வரலாம். ஆகவே கவிதை எழுதுபவர்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பமும்.

குயிலின் சத்தம் குறைந்திருப்பதாலும்

நிலவின் ஒளி மறைந்திருப்பதாலும்

அவைகள் இல்லையென்று அர்த்தம் இல்லை

அழகாக சொல்லி இருக்கிறீங்க சபேசன் அண்ணா. தொடர்ந்தும் சிந்திக்க கூடிய கவிதைகளை வழங்குவீர்களென நம்புகிறேன். நன்றி வணக்கம்

நிலா இது போலி நிலாக்களுக்குச் சொல்லேல்லை...

உண்மையிலேயே உண்மையான நிலாவுக்காகச் சொன்னது ஆமா... :P :P :P

நிலா இது போலி நிலாக்களுக்குச் சொல்லேல்லை...

உண்மையிலேயே உண்மையான நிலாவுக்காகச் சொன்னது ஆமா... :P :P :P

நீங்கள் போலி நிலாக்கு சொன்னதென நினைச்சியளா? ஐய்யோ மக்கு ஆதி.

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் உங்களுடைய இக்கவிதை எனக்கு ஒரு பெரும் கவிஞரை ஞாபகப்படுத்துகிறது. சில குதர்க்கவாதங்கள் கருதி யாரை ஞாபகப்படுத்துகிறது என்று இங்கு சொல்ல விரும்பவில்லை. உங்களுடைய இக்கவிதை பல நியங்களைச் சுமந்து நிற்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

கவிஞர் சபேசனின் கவிதைகள் யாழ் கவிக் கோ கவிஞர் காவடியை நினைவு படுத்துகின்றன. :lol::lol:

நல்ல சிந்தனையோட்டமுள்ள கவிதை சபேசன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிஞர் சபேசனின் கவிதைகள் யாழ் கவிக் கோ கவிஞர் காவடியை நினைவு படுத்துகின்றன. :rolleyes::D

சபேசனின் கவிதைகள் மட்டுமலஇல.. கவிதைகள் என்றாலே நான் தான் நினைவுக்கு வருவதாய் நண்பர்களும் சொல்கிறார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எத்தகைய புலமை நிறைந்த படைப்புக்களே ஆயினும் சரி, அவை எந்த ஒன்றாலும் அனைத்து நெஞ்சங்களையும் ஒருமிக்க வெற்றி கொள்ள முடிந்ததில்லை, உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கி கொள்வதை தவிர்த்து அவர்களின் இளம் முயற்சிகளுக்கு குறுக்கே படுகிடையாய் கிடக்காதீர்கள், கவிதை நயத்துக்காக கவலைப்படும் உங்கள் மனங்களை, மனித உணர்வுகளின் பாலும் கொஞ்சமேனும் அக்கறை செலுத்த பழகிக்கொள்ளுங்கள்.

  • தொடங்கியவர்

கவிதை நயத்திற்காக மட்டும் அல்ல, தமிழுக்காகவும் கவலைப்படுகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை நயத்திற்காக மட்டும் அல்ல, தமிழுக்காகவும் கவலைப்படுகிறேன்.

அந்த கவலைகளுக்கு, மிகத்தேவையான இடங்கள் பலவும் இருக்க, துரும்பளவு பிரைச்சினையில் அதை செலவு செய்யவேண்டியதேவை என்ன?

சினிமா செய்கின்ற கலாச்சார சீரழிவு, மொழிச் சிதைப்பு இவற்றில் எல்லாம் அந்த கவலைகள் வாழாதிருந்து விடுகிறதே. எமது சக்திக்கு முடியாதென்பதால் அதை இரசிக்கவும் வேறு பழகிவிட்டோமே. முடிந்தால் சிறிய எதிர்ப்பையாவது அங்கே காட்டலாமே. சிறுதுளி பெருவெள்ளம் போன்று தோல்விகளைக் கொடுத்தேனும் அவற்றைத் திருத்த முயற்சி செய்திருக்கலாமே? வெறும் பேச்சுக்களின் அளவில் மட்டும் தமிழ் பற்றை வெளிப்படுத்தாமல்.

அந்த கவலைகளுக்கு, மிகத்தேவையான இடங்கள் பலவும் இருக்க, துரும்பளவு பிரைச்சினையில் அதை செலவு செய்யவேண்டியதேவை என்ன?

சினிமா செய்கின்ற கலாச்சார சீரழிவு, மொழிச் சிதைப்பு இவற்றில் எல்லாம் அந்த கவலைகள் வாழாதிருந்து விடுகிறதே. எமது சக்திக்கு முடியாதென்பதால் அதை இரசிக்கவும் வேறு பழகிவிட்டோமே. முடிந்தால் சிறிய எதிர்ப்பையாவது அங்கே காட்டலாமே. சிறுதுளி பெருவெள்ளம் போன்று தோல்விகளைக் கொடுத்தேனும் அவற்றைத் திருத்த முயற்சி செய்திருக்கலாமே? வெறும் பேச்சுக்களின் அளவில் மட்டும் தமிழ் பற்றை வெளிப்படுத்தாமல்.

வணக்கம் தமிழ் வாசிக்க கூடிய அணைவரும் கவிதைகள் இரசிக்கலாம் என்பது வழமையானது. நான் இந்த களத்தில் வந்த போது நல்ல கருத்துக்கள் தரும் திரு செல்வமுத்து அவர்களும் இரசிகையும் என்னுடைய எழுத்துப்பிழைகளை சுட்டிக்காட்டீனார்கள். அதை நான் எனக்கு ஒரு உந்துதலாக எடுத்து அந்தப்பிழைகளை கவனத்தில் எடுத்து ஒரளவுக்கு என்னை நான் மாற்றி இருக்கிறேன். அவர்களுடைய கருத்து என்னை ஓரளவு எழுத்துப்பிழைகள் இன்றி எழுதவைத்துள்ளது. மொழி என்பது கருத்துக்களைப்பரிமாறும் ஊடகம் அதில் பிழைகள் இல்லாது எழுதுவது எழுத்தாளனின் கடமை. அதற்காக இந்திய திரைப்படத்துக்கும் எழுத்துப்பிழைகளுக்கும் முடிச்சு போடாதீர்கள் சபேசனின் கருத்தை ஒரு முன்மாதிரியாக எடுத்து நீங்களும் எழுதுங்கள் பிழைகள் தவிர்த்து எழுதலாமே. இல்லை எளுதுகில் எளுதுங்கோ

Edited by elakkiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலக்கியன்!

காவடி, வன்னிமைந்தனைத் திருத்தம் தான் செய்து கொண்டிருக்கின்றார் என்று நீங்கள் கருதினால் என்னால் உங்களைத்திருத்த முடியாது. திருத்தம் என்று சொல்லிக்கொண்டு மற்றவர் திறமைகளுக்கு வால் கட்ட நினைப்பவர்களை திருத்தக்காறராக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உங்கள் புலமை, சபேசனின் வழிகாட்டுதலில் வளம் பெறுவதையிட்டு நான் ஒன்றும் பொறாமை கொள்ளவில்லை.

இலக்கியன்!

காவடி, வன்னிமைந்தனைத் திருத்தம் தான் செய்து கொண்டிருக்கின்றார் என்று நீங்கள் கருதினால் என்னால் உங்களைத்திருத்த முடியாது. திருத்தம் என்று சொல்லிக்கொண்டு மற்றவர் திறமைகளுக்கு வால் கட்ட நினைப்பவர்களை திருத்தக்காறராக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உங்கள் புலமை, சபேசனின் வழிகாட்டுதலில் வளம் பெறுவதையிட்டு நான் ஒன்றும் பொறாமை கொள்ளவில்லை.

வணக்கம் தேவன் நான் என்னுடைய புலமை பற்றியோ உங்கள் அறிவு பற்றியோ இங்கு பேசவரவில்லை.தமிழில் எழுதுவது பிழைகள் தவிர்த்து எழுதினால் மற்ற வாசகர்கள் தடுமாற மாட்டார்கள் மொழியின் தன்மை திரிபுபடமாட்டாது. வன்னிமைந்தன் என்னுடைய நண்பர் அதற்கு ஏன் சும்ம மைந்தனை இங்கு இழுக்கிறீர்கள். அவர் மட்டுமா எழுத்துப்பிழை விடுகின்றார்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலக்கியன்!

வணக்கம். நான் கவிஞ்ஞர் காவடிக்குத்தான் பதில் எழுதினேன். சபேசன் பதில் அளித்தார், தவிர நான் எங்கே எழுத்துப் பிழையைப் பற்றிக் கதைத்தேன், ஒளி எழுத்தால் அதை நக்கல் வேறு செய்தேனா? ஏன் தவறாக விளக்கம் கொள்ளுகிறீர்கள். சபை அடக்கம் தெரிந்த உங்கள் கருத்துக்களை மதிக்கிறேன். அவ்வாறு இல்லாதன வற்றின் மீதே எனது கருத்தைத் தெரிவித்தேன். தவிர உங்களைப் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்

  • தொடங்கியவர்

காகங்களே! மேகங்களே! என்ற கவிதையை நீங்கள் யாழ் களத்தில் நடக்கின்ற மற்றைய விவாதங்களின் அடிப்படையில் நோக்குவது தவறு.

இக் கவிதை பல இடங்களுக்கு பொருந்தும்.

உதாரணம்:

நான் இசைஞானி ரசிகன். எனக்கு இசைஞானி குயில் போன்று தெரிகிறார்.

தேவா, சிற்பி, ஆதித்யன் என்ற காகங்கள் கரைந்த பொழுது, அவைகள்தான் அதிகமாக கேட்டது. குயில் பாட்டு வெளியே கேட்கவில்லை. அதற்காக காகங்களால் குயிலாக மாற முடிந்ததா என்றால், இல்லை.

இன்றைக்கு தமிழை சரியான உச்சரிப்போடு பாடக் கூடிய எஸ்பி, ஜேசுதாஸ் போன்ற குயில்களின் சத்தம் குறைந்து விட்டது. தமிழை கடித்து துப்புகிறவர்கள்தான் அதிகமாக கத்துகிறார்கள்.

இந்திய இராணுவக் காலத்தில் விடுதலைப்புலிகள் (குயில்கள்) வன்னிக் காடுகளுக்குள் இருந்தார்கள். அப்பொழுது ஈபிஆர்எல்எவ், ஈபிடிபி போன்ற காகங்கள் கத்திக் கொண்டு திரிந்தன. கடைசியில் குயில்கள் வெளிக்கிளம்பியதும் அந்தக் காகங்கள் கலைந்து கரைந்து போயின

எதுவும் எழுதாமல் தம்மை எழுத்தாளர் என்கின்ற காகங்களுக்கும் இது பொருந்தும்.

இப்படி பல இடங்களுக்கு பொருந்தும்.

Edited by சபேசன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.