Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

 உதயசிறி விடுதலையானார்

Featured Replies


உதயசிறி விடுதலையானார்

 

சிகிரியா சுவரோவிய சுவரில் எழுதினார் என்ற குற்றச் சாட்டின் பேரில் சிறைப்பட்டிருக்கும் சித்தாண்டி யுவதி சின்னத்தம்பி உதயசிறி இன்று வியாழக்கிழமை காலை எட்டு மணிக்கு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

 

இரண்டு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் உதயசிறிக்கு ஏப்ரல் மாதம் முதலாம் திகதியன்றே ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியிருந்தார்.

 

எனினும், உதயசிறியை உடனடியாக விடுதலை செய்வதற்கு அவர் சார்பில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நேற்று புதன்கிழமை வரை அவரது விடுதலைக்கு தடையாக இருந்து வந்தது.

 

இந்நிலையில்  உதயசிறி, சார்பில் வழக்குத் தொடர்ந்த நல்லாட்சிக்கான மனித உரிமைகள் இயக்கமும், மனித உரிமைகள் இல்லமும் கண்டி மேல் நீதிமன்றத்தில் வைத்து நேற்று புதன்கிழமை வழக்கை விலக்கிக்கொண்டதை அடுத்து உதயசிறியை உடனடியாக விடுவிப்பதாக சிறைச்சாலை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

 

இந்த அறிவித்தல் நேற்று புதன்கிழமை மாலையளவிலேயே தமக்குக் கிடைக்கப் பெற்றதால் உதயசிறியை இன்று வியாழக்கிழமை அழைத்துவரப் போவதாக உதயசிறியின் உறவினர்கள், சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.

 

அதன் பிரகாரம் உதயசிறி சரியாக இரண்டரை மாதங்களுக்குப் பின்னர் சிறையிலிருந்து தனது வீட்டுக்குத் திரும்பி கொண்டிருக்கின்றார்.

- See more at: http://www.tamilmirror.lk/145077#sthash.SdLDUP6q.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி..!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி..! 

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதிக்கு நன்றி. அப்படியே, பல்லாண்டுகளாக வாடும் ஏனைய அரசியல் கைதிகளும் விடுதலை பெற ஆவன செய்யப்பட வேண்டும்.

யார் என்ன அரசியல் பேசினாலும், சிறிசேன காலத்தில் சமாதானம் வராவிடில், வேறு ஒருவர் காலத்திலும் வராது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதிக்கு நன்றி. அப்படியே, பல்லாண்டுகளாக வாடும் ஏனைய அரசியல் கைதிகளும் விடுதலை பெற ஆவன செய்யப்பட வேண்டும்.

யார் என்ன அரசியல் பேசினாலும், சிறிசேன காலத்தில் சமாதானம் வராவிடில், வேறு ஒருவர் காலத்திலும் வராது.

என்ன சொல்லுறீங்கள் நாதம்ஸ்?? 2009 இலேயே மகிந்த சமாதானத்தை கொண்டுவந்துவிட்டாரே.. :unsure::D

article_1430385317-a%20(4).JPG

 

article_1430385324-a%20(1).jpg

 

article_1430385331-a%20(2).JPG

 

article_1430385347-a%20(5).jpg

 

சிகிரியா சுவரோவிய சுவரில் எழுதினார் என்ற குற்றச் சாட்டின் பேரில் சிறைவைக்கப்பட்டிருந்த சித்தாண்டி யுவதி சின்னத்தம்பி உதயசிறி இன்று வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார். -

 

http://www.tamilmirror.lk/145116#sthash.cTEENaIM.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சொல்லுறீங்கள் நாதம்ஸ்?? 2009 இலேயே மகிந்த சமாதானத்தை கொண்டுவந்துவிட்டாரே.. :unsure::D

சரிதான், எசமான். :D

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

2013 செப்டம்பரில் நானும் பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு சீகிரியா போனேன்.  அப்போது ஒரு பென்சிலால் எதையாவது கிறுக்கியிருந்தால் நானும் நாடறிந்த பிரபல்யமாகியிருக்கலாம். சே! சந்தர்ப்பத்தைத் தவறவிட்டுவிட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

2013 செப்டம்பரில் நானும் பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு சீகிரியா போனேன். அப்போது ஒரு பென்சிலால் எதையாவது கிறுக்கியிருந்தால் நானும் நாடறிந்த பிரபல்யமாகியிருக்கலாம். சே! சந்தர்ப்பத்தைத் தவறவிட்டுவிட்டேன்.

கிறுக்கி இருந்தியல் எண்டால், முதலில் உங்கட பிள்ளையளற்ற வாங்கிக் கட்டியிருப்பியள். :unsure:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

சிறுபான்மை இனத்தவர் கோடிபோல, பெரும்பான்மை மேல் படர வேண்டும் என்று சொன்ன விஜயதுங்க தவிர, மற்ற எல்லா சனதிபதிமாருக்கும் விசிறிகள் இருந்தவை நாதமுனி.

  • கருத்துக்கள உறவுகள்

சிறுபான்மை இனத்தவர் கோடிபோல, பெரும்பான்மை மேல் படர வேண்டும் என்று சொன்ன விஜயதுங்க தவிர, மற்ற எல்லா சனதிபதிமாருக்கும் விசிறிகள் இருந்தவை நாதமுனி.

Edited by Nathamuni

சிறுபான்மை இனத்தவர் கோடிபோல, பெரும்பான்மை மேல் படர வேண்டும் என்று சொன்ன விஜயதுங்க தவிர, மற்ற எல்லா சனதிபதிமாருக்கும் விசிறிகள் இருந்தவை நாதமுனி.

என்னை மன்னியுங்கள்: உதயசிறி கண்ணீர்

 

 

article_1430384731-150.jpg

சிகிரியா சுவரோவிய சுவரில் எழுதினார் என்ற குற்றச் சாட்டின் பேரில் சிறைவைக்கப்பட்டிருந்த சித்தாண்டி யுவதி சின்னத்தம்பி உதயசிறி, இன்று வியாழக்கிழமை காலை விடுதலை செய்யப்பட்டார்.

அவர், சிறைச்சாலையிலிருந்து வெளியேறிய அவர், சிறை கதவுக்கு வெளியே நின்றியிருந்த சிறைச்சாலை அதிகாரியின் காலை குனிந்து வணங்கிவிட்டு வெளியே சற்று தூரம் நடக்கையில் அவருடைய அம்மா, அக்கா மற்றும் அண்ணா ஆகிய மூவரும் ஓடோடி சென்று உதயசிறியை கட்டியணைந்துகொண்டனர்.

மூவரின் கட்டியணைப்பில் கண்ணீர் மல்கிய உதயசிறி, அந்த சுவரில் தெரியாமல் எழுதிவிட்டேன். என்னை மன்னியுங்கள். இனிமேல், இவ்வாறான தவறுகளை விடவே மாட்டேன். இவ்வாறான தவற்றை இனியாரும் செய்யமாட்டார்கள். 

எனக்கு மன்னிப்பு வழங்கிய ஜனாதிபதிக்கு நன்றி கூறுகின்றேன். என் விடுதலைக்காக உழைத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்டோருக்கு நன்றி கூறிக்கொள்கின்றேன் என்றும் அவர் கூறினார்.

- See more at: http://www.tamilmirror.lk/145107#sthash.VAfFbU5f.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

ஓ..... அவரும் நல்லவரா??

  • கருத்துக்கள உறவுகள்

பஸில் உள்ளே உதயசிறி வெளியே நல்ல செய்தி தான்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி, பிள்ளை இதை ஒரு கெட்ட கனவுபோல் மறந்து சகஜமான வாழ்வுக்குத் திரும்ப வேண்டும்...!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி. சிங்களவர்கள் சுவர்களில் எழுதுவதில்லையா என்பது எனது கேள்வி?

  • கருத்துக்கள உறவுகள்

4f471d370ccf15067c919ad4da4d757e

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.