Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இராணுவத்தினரின் தடுப்பில் பாலகுமாரன்! - புகைப்பட ஆதாரத்தை வெளியிட்டார் பிரான்சிஸ் ஹரிசன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்தினரின் தடுப்பில் பாலகுமாரன்! - புகைப்பட ஆதாரத்தை வெளியிட்டார் பிரான்சிஸ் ஹரிசன் photo.png

[Monday 2015-05-18 17:00]
Balakumaran-army-180515-400-seithy.jpg

புலிகளின் மூத்த உறுப்பினர் பாலகுமாரனும் அவரது மகனும் மற்றும் ஒருவரும் இராணுவத்தின் பிடியில் இருக்கும் ஒரு புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இப் புகைப் படத்தினை பிரிட்டிஷ் ஊடகவியலாளர் பிரான்ஸ்சிஸ் ஹரிசன் தனது டுவிட்டர் தளத்தில் பதிவேற்றியுள்ளார். பாலகுமாரன் இறுதிப் போரில் சரணடைந்த பின்னர் இதுவரை அவர் பற்றிய தகவல் ஏதும் தெரியாதுள்ளது குறிப்பிடத்தக்கது.

  

 

Balakumaran-army-180515-seithy.jpg

http://www.seithy.com/breifNews.php?newsID=132320&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

அரசுக்கு தெரியாமல் இல்லை. ஆனால் அவர்கள் தொடர்ந்தும் மௌனம் சாதித்து உலகை ஏமாற்ற நினைக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கிருந்தாலும் பாதுகாப்பாய் இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கிருந்தாலும் பாதுகாப்பாய் இருந்தால் சரி, ஆனால் இங்கிருத்தால்.......? 

உண்மையில் ஒரு அறிவாளி .... உயிர் பிழைத்து இருக்கவேண்டும் .....

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப் பிடித்த அரசியல் வாதிகளில்..... திரு.பாலகுமாரன் அவர்களும் ஒருவர்.
நல்ல சிந்தனையுள்ள பேச்சாளர். ஆர்ப்பாடமில்லாத அமைதியான மனிதர்.
எங்கிருந்தாலும்... நலமுடன் இருக்க, இறைவனை வேண்டுகின்றேன்.

நீங்கள் எல்லாம் அவரை சிங்கள இராணுவம் இன்னும் வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களை சிங்கள இராணுவம் பாதுகாத்து வைச்சிருக்கா இல்லையா என்பதல்ல.. கேள்வி.. சர்வதேச சமூகம்.. பாதுகாப்பாக சிங்கள இராணுவத்திடம் சரணடையக் கேட்ட நிலையில்.. இவர்கள் அவர்களிடம் கையளிப்பட்ட நிலையில்.. இன்று அவர்களின் நிலை என்ன.. என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு சிங்கள இராணுவத்தை விட அதற்கு வக்காளத்து வாங்கி செயற்பட்ட சர்வதேச சமூகத்துக்கு அதிகம் உள்ளது. :icon_idea:


சர்வதேச சமூகம் தான் இதற்குப் பதிலளிக்க வேண்டும்..?! அவர்கள் சிங்கள இராணுவத்தை வந்து விசாரிச்சு உண்மைகளை கண்டுபிடிச்சு தமிழ் மக்களிடம் சமர்ப்பிக்கட்டும். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக்கொடி விவகாரத்தில் சொல்கைம் சர்வதேச ரீதியில்.. உறுதி மொழிகளை வழங்கி.. செமையாக மாட்டி இருக்கிறார். அவரின் மனச்சாட்சியே அவரை விடுகுதில்லை. ஆனால் அதில் அன்று போலி உறுதி மொழிகளை வழங்கியதில்.. சம்பந்தப்பட சில தெற்காசிய நாட்டு தலைமைகள்.. அது குறித்து.. மூச்சும் விடுவதில்லை இன்று.

 

முள்ளிவாய்க்கால் சரணடைந்தல் என்பது சர்வதேசம் ஏற்படுத்திய பொறிமுறை. அதில் நடந்த தவறுகளுக்கு.. சரணடைவின் பின் நிகழ்ந்த கொடுமைகளுக்கு சர்வதேசமும் கூட்டு பங்காளியாகும். அந்த வகையில் அவர்கள் தங்கள் தவறை தாங்களே விசாரித்து தமக்கும் சம்பந்தப்பட்ட சிங்கள அரசுகளுக்கும் அதன் படைகளுக்கும்.. தண்டனை வழங்கி பாதிப்பட்ட மக்களுக்கு சரியான நீதியை எனியாவது வழங்க முன்வர வேண்டும். :icon_idea:


 

இங்கு விக்கி ஐயாவும் சர்வதேசத்தின் கடப்பாட்டை வலியுறுத்தி இருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

 சர்வதேசமும் மண்ணாங்கட்டியும். சும்மா போங்கோ. அவை தானே எல்லாத்துக்கும்    காரணம். இப்ப சும்மா கண்துடைப்பு நாடகம்.

நீங்கள் எல்லாம் அவரை சிங்கள இராணுவம் இன்னும் வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா?

 

 

வட மாகாண சபைத் தேர்தல் நடைபெற்ற காலப்பகுதியில் பாலகுமாரனை வெளியில் கொண்டு வந்தால் மாகாண சபைத் தேர்தலில் அரசிற்கான வெற்றி வாய்ப்புகள் இருக்குமா என்று பசில் றாஜபக்ச தமக்கு நெருக்கமானவர்களிடம் வினவியதாக ஒரு செய்தியை சிங்கள உடகமொன்றில் படித்திருந்தேன். எந்த ஊடகம் என்று நினைவில்லை. எனவே அவர் உயிருடன் இருப்பதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.

 

பாலகுமாரன் போன்ற ஒரு அரசியல் அறிவு மிக்கவரை விடுதலைப்புலிகளின் தலைமை சரியாகப் பயன்படுத்தவில்லை என்ற ஆதங்கம் எனக்கு எப்போதுமே இருக்கிறது... 

  • கருத்துக்கள உறவுகள்

பாலகுமாரன் போன்ற ஒரு அரசியல் அறிவு மிக்கவரை விடுதலைப்புலிகளின் தலைமை சரியாகப் பயன்படுத்தவில்லை என்ற ஆதங்கம் எனக்கு எப்போதுமே இருக்கிறது... 

 

அப்படி ஒரேயடியாகச் சொல்லி விட முடியாது. இந்தியப் படைகள் காலத்தில் தமிழ் மக்கள் சார்பில் நகர்த்தப்பட்ட அரசியல் நகர்வுகளில்.. ஈரோஸ் - புலிகள் மிகவும் காத்திரமான நகர்வுகளை செய்திருந்தார்கள்.

 

அதன் பின்னர் ஈரோஸ் பிளவு.. காட்டிக்கொடுப்புக்கள்.. உட்சண்டைகள் காரணமாக.. பாலகுமார் தானே விலத்தி இருக்க முற்பட்ட போதுதான்.. புலிகள் அவரை இயக்கத்துக்குள் அரசியல் ஆசானாக உள்வாங்கிக் கொண்டார்கள். அவர் இயக்கத்துக்குள் வளர்த்தெடுத்த அரசியல் போராளிகளே அதிகம்.

 

இந்த நிலைக்கு புலிகளின் தலைமை மீது முழுப்பொறுப்பும் சுமத்த முடியாது.

 

அண்மையில் மகிந்தவின் பேச்சை கேட்டால் தெரியும்.. எனி வடக்குக் கிழக்கில் பிரிவினைக்கு யாருக்கும் இடமளிக்கமாட்டேன் என்று பதவியில் இல்லாத போதே கொக்கரிக்கிறார். இருந்த போது எவ்வளவு செய்திருப்பார். :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கேணல் ரமேசுக்கு நிகழ்ந்ததை நினைக்கும் போது பாலகுமார் உயிரோடிருக்க வாய்ப்பில்லை எனத்தோன்றினாலும் மேலே மணி குறிப்பிட்ட விடயம், சேகுதாவூதின் நம்பிக்கைகளை வைத்துப் பார்க்கும் போது ஆள் இருக்கும் என்றும் நினைக்கத் தோன்றுகிறது.

வ செ ஜெ இதைப்பற்றி என்ன நினைக்கிறார் என்று அறிய ஆவல்.

கடைசிக்காலத்தில் தன் மகனை கட்டாய சேர்ப்பில் இருந்து தவிர்க்கப் பெரும் பிரயத்தனப் பட்டார் என்று கேள்விப்பட்டுள்ளேன்.

சரணடையும் முன் பசீர் கருணா போன்றவர்களுடம் தொடர்பை ஏற்படுத்தி இருந்தால் ( திருமதி தமிழ்செல்வன் போல்) உயிர் தப்பி இருக்க வாய்ப்பிருக்கு.

பாலகுமாரின் நிதானம் பிரபாவுக்கோ

பிரபாவின் வீரம் பாலகுமாருக்கோ வாய்திருந்தால் ஒரு முழுமையான தலைவனை நாம் பெற்றிருக்கக் கூடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.