Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் நகரில் ஆர்ப்பாட்டம் நடத்த தடை! பொலிஸ் குவிப்பு - கவச வாகனத்தில் அதிரடிப்படை ரோந்து Photo's

Featured Replies

யாழ்ப்பாண நகரில ஆர்ப்பாட்டங்களை நடத்த யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் தடைவித்துள்ளது.

காவற்துறையினரின் விண்ணப்பத்துக்கு இணங்க இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக, காவற்துறை தலைமையகம் தெரிவத்துள்ளது.

thadai-5.JPG

 இதன்படி வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், குமாரவேலு தலைமையிலான மக்கள் சக்தி இயக்கம் - மானிப்பாய் மற்றும் ராஜினி தலைமையிலான பெண்கள் இயக்கம் - கொக்குவில் ஆகிய தரப்புக்கு இந்த தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றவர்கள் தண்டிக்கப்படுவர் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.  

thadai-4.jpg

இந்த நிலையில் யாழ் நகரப்பகுதியில் பொலிஸ் குவிக்கப்பட்டுள்ளது.அதே நேரம் கவச வாகனத்தில் அதிரடிப்படை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

thadai-3.JPG

அண்மையில் புங்குடுதீவு மாணவி படுகொலைக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, 130 பேர் கைது செய்யப்பட்டிருந்தமையின் அடிப்படையிலேயே இந்த தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

thadai-1.JPGthadai-2.JPG
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் மக்கள் இதே போல நடந்து கொண்டார்கள்(ஜெயலலிதா சிறை சென்ற போது) இராணுவமோ ,அதிரடி படையோ சட்டம் ஒழுங்கை கடைபிடிக்க குவிக்கப்படவில்லை...ஆனால் இங்கு ஒரு காவாலி கூட்டத்திற்காக கொமான்டோக்களும் இராணுவமும் குவிக்கப்படுகின்றது ....

  • கருத்துக்கள உறவுகள்

ஏனெண்டால் ஆட்சியில் இருந்ததும் அதிமுக, கலவரம் செய்ததும் அதிமுக :)

இதுவே முள்ளிவாய்கால் முற்றம் எண்டா புல்டோசரோட போயிருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏனெண்டால் ஆட்சியில் இருந்ததும் அதிமுக, கலவரம் செய்ததும் அதிமுக :)

இதுவே முள்ளிவாய்கால் முற்றம் எண்டா புல்டோசரோட போயிருப்பார்கள்.

 

இங்கு நான் சொல்ல வந்தது மாநிலத்தில் கலவரம் என்றவுடன் மத்திய (இந்திய) அரசு இராணுவத்தை அனுப்பவில்லை என்பதே

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் பொலீஸ் அதிகாரம் மாநில அரசின் கீழ் வருகிறது. மிக அரிதாக, மாநில முதலமைச்சரின், அல்லது ஆளுனரின் அழைப்பில் மத்திய ரிசேர்வ் படை அனுப்பப் படும்.

இலங்கையில் பொலிஸ் அதிகாரம் முழுக்க முழுக்க மத்திய அரசிடம்.

ஜெயாவை உள்ளே போடும் போது தி மு க ஆட்சியில் இருந்திருந்தால் அவர்களும் போலீசை அதிரடிப் படையை கலகம் அடக்கும் படையை இறக்கி இருப்ப்ர்.

  • கருத்துக்கள உறவுகள்

thadai-1.JPG

 

ஏம்பா... யாழ்ப்பாண நீதிமன்றில், தமிழ் தட்டச்சு செய்யத் தெரிந்தவர்கள், ஒருவரும் இல்லையா?
2015´ம் ஆண்டிலும், கையாலை,.... எழுதிக் கொண்டிருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உந்த பவள் காவச வாகனங்களுக்கு அழிவே இல்லை. தமிழனின் வரலாற்றில் அதற்கு தனி இடம் கொடுத்திருக்கிறார்கள் சிங்களவர்கள். இதனை விட பெரிய கலவரங்கள் எல்லாம் கொழும்பு மற்றும் தென்பகுதியில் நடந்த போது பவள் ஓடினதே இல்ல. எங்கட ஊரில.. 1986 கோட்டை முற்றுகைக்கு முன்னர் யாழ் நகர் இப்படித்தான் இருந்தது என்ற நிதர்சனம் காட்சிகள் தான் மனதில் ஓடுது.. இவற்றைப் பார்க்க.

 

இராணுவ.. அடக்குமுறைக்குள் வாழ்வது போன்ற கொடுமை இந்த உலகில் வேறில்லை. :(:rolleyes::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

thadai-3.JPG

 

புலிகள் இருந்திருந்தால், இந்த பவள் கவச வாகனம்... இராணுவ முகாமுக்குள், தூசி பிடித்த நிலையில் நின்றிருக்கும். :D

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணி வெடிக்கு சிக்காது என அறியப்பட்ட பவளை அதன் கன்னி ஓட்டத்திலேயே, இயக்கச்சியில் வைத்து ஒரு பனை உயரத்துக்கு கிளப்பினார் லெப் கே ராதா.

உணர்சிப்பெருக்கின் விளைவாக ராணுவத்தை நகரில் நிறுத்த தருணம் பார்திருந்தோர்கு நாமே வழிசெய்து கொடுத்துள்ளோம் :(

  • கருத்துக்கள உறவுகள்

எம் பெண்களை இராணுவமும் அதன் கூட்டுக் காவாலிகளும் மேய விட்டு சாவதைப் பார்ப்பதிலும் உணர்ச்சிப் பெருக்கை (மக்கள் அமைதியாகத்தான் போராடினார்கள். இராணுவமும் சிங்கள அரசும்.. தான்.. இடையில் ஒற்றர்களை பயன்படுத்தி.. வன்முறையை தூண்டியது.) வெளிக்காட்டி.. உலகிற்கு தாங்கள் வாழும் அபாயத்தை இனங்காட்டுவது நல்லது. :icon_idea:

 

ஆனால்.. இராணுவத் தலையீட்டையே தவர்த்தேன்.. என்று சம்பந்தன் புளுகுவதுதான் மகா கொடுமை. இராணுவம் பவளோடு நிற்க. :icon_idea::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

உது ஒரிஜினல் பவள் கவச வாகனம் இல்ல. பவள் மாதிரியில் சிறிலங்காவில் வடிவமைக்கப்பட்ட யுனிக்கோர்ன் கவச வாகனம்!

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியா, இது நானறியாத விடயம் வாலி. நன்றி.

ஆனால் ராதா தூக்கியது தென்பாபிரிக்காவிலிருந்து வந்த ஒரிஹினல் பவளைத்தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்நாட்டில் மக்கள் இதே போல நடந்து கொண்டார்கள்(ஜெயலலிதா சிறை சென்ற போது) இராணுவமோ ,அதிரடி படையோ சட்டம் ஒழுங்கை கடைபிடிக்க குவிக்கப்படவில்லை...ஆனால் இங்கு ஒரு காவாலி கூட்டத்திற்காக கொமான்டோக்களும் இராணுவமும் குவிக்கப்படுகின்றது ....

 

சும்மா இருங்கோ புத்தன்....இதே சாட்டோடை சாட்டாய் இன்னும் கொஞ்ச ஆமி / பொலிசை வீடுகளுக்குள்ளையும் இருத்தி விடலாமெல்லே.. :D

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணி வெடிக்கு சிக்காது என அறியப்பட்ட பவளை அதன் கன்னி ஓட்டத்திலேயே, இயக்கச்சியில் வைத்து ஒரு பனை உயரத்துக்கு கிளப்பினார் லெப் கே ராதா.

உணர்சிப்பெருக்கின் விளைவாக ராணுவத்தை நகரில் நிறுத்த தருணம் பார்திருந்தோர்கு நாமே வழிசெய்து கொடுத்துள்ளோம் :(

உண்மைதான் !
ஒரு கன்னத்தில் விழுந்ததும் மக்கள் மறு கன்னத்தை காட்டியிருக்க வேண்டும் (மாறாக ஆர்பாட்டம் செய்திருக்கிறார்கள்)
ஒரு வித்தியா ..........
  • கருத்துக்கள உறவுகள்

திறந்த வெளிச் சிறைச் சாலையில் இருந்து கொண்டு வேறு எதை எதிர் பாரக்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் பொலீஸ் அதிகாரம் மாநில அரசின் கீழ் வருகிறது. மிக அரிதாக, மாநில முதலமைச்சரின், அல்லது ஆளுனரின் அழைப்பில் மத்திய ரிசேர்வ் படை அனுப்பப் படும்.

இலங்கையில் பொலிஸ் அதிகாரம் முழுக்க முழுக்க மத்திய அரசிடம்.

ஜெயாவை உள்ளே போடும் போது தி மு க ஆட்சியில் இருந்திருந்தால் அவர்களும் போலீசை அதிரடிப் படையை கலகம் அடக்கும் படையை இறக்கி இருப்ப்ர்.

 

உண்மை, அதனால் பொலிஸ் அதிகாரம் அந்த பிராந்திய இனத்திடம் இருந்தால் இலகுவில் குற்றவாலிகளை இனம்காணமுடியும் அத்துடன் விசாரானைக்கு மக்களிடம் இருந்து தகவல்கள் பெறுவது வசதி,எங்கன்ட பொலிஸ் என்ற ஒரு உணர்வு வரும்.....பல நன்மைகள் உண்டு....அதை இனவாத சிங்கள அரசு புரிந்துகொள்ளபோவதில்லை....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.