Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பூர் விவகாரம் ,வித்தியா விவகாரங்கள் தொடர்பாக இரா .சம்பந்தன் ஐயா சிறப்பு நேர்காணல்

Featured Replies

  • தொடங்கியவர்

மைத்திரி அரசால் இரத்துச் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட ஒரு அரச வர்ததமானி அறிவித்தலுக்கு எதிராக  முதலீட்டு வர்த்தக ஊக்குவிப்பினர் வழக்குதாக்கல் செய்ய முடியும் என்றால், காலம் காலமாக சம்பூரை வாழ்விடமாக கொண்ட மக்களை பலவந்த வல்வளைப்பினால் வெளியேற்றி அவ்விடத்தினை  மகிந்த அரசால் ஒரு அரச வர்ததமானி அறிவித்தல் மூலம் பல் முதலீட்டு வர்த்தக ஊக்குவிப்பினர்களுக்கு வழங்கும் போது தற்போது மக்களின் பிரநிதிகள் எனப்படுவோரால் ஏன் எவ்வித வழக்குதாக்கல்களையும் செய்ய முடியவில்லை????????????????

 

 

உங்கள் அனைவரினதும்  அரசியல் சித்துவேலைகள்  சம்பூர், கடற்கரைசேனை, கட்டப்பறிச்சான் வாழ் மக்களிடம் எடுபடாது நான் அந்த மக்களுடன் சுமார் ஜந்து வருடங்களுக்கு மேலாக மனிதாபிமான பணிகள் ஒன்றாக ஈடுபட்டவன். அது விடுதலைப்புலிகளின் காலத்திலும்! ஒன்றை மட்டும் தெளிவாக புரிந்து கொண்டால் நல்லது சம்பந்தன் ஜயாவை பிரதிநிதுத்தவப்படுத்தும் அனைவரும் நீங்கள் செய்யும் அரசியல் குப்பைகளையும் மக்கள் பொறுத்து உங்களையும் அனுமதிக்கின்றார்கள் என்றால் தேசிய தலைவர் அவர்களால் துார நோக்கு பார்வையுடன் உருவாக்கப்பட்ட ஒரு மக்கள் சார்ந்த அரசியல் கூட்டடைப்பு என்பதால்தான் மக்கள் பொறுத்துள்ளனர். இது பழுத்த அரசியல்வாதியான சம்பந்தன் ஜயாவுக்கும் நன்றாக தெரியும்.

வழக்கு 2007இல் போடப்பட்டது .தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை புலிகள் உருவாக்கவில்லை .கிழக்கிலங்கை பத்திரிகையாளர் சங்கம் உருவாக்கியவர்கள் .நீங்கள் 5வருடமாகத்தான் அந்த மக்களுக்கு சேவை செய்தனீங்கள் ஏன் இப்ப உங்களால் மக்களுக்கு சேவை செய்யமுடியவில்லை .புலிகள் இருந்த காலத்திலும் நாங்கள் சேவை செய்தனாங்கள் இப்பவும் செய்கின்றோம் ஏன் என்றால் நாங்கள் எங்களின் சொந்த காலில் நின்று செய்கின்றோம் .

உங்களுடைய புலுடாக்களை எங்களிடம் காட்ட முனையாதீர்கள் .கருத்துகளை எழுத முதல் எப்பொழுது வழக்கு தொடர்ந்தது என்பதை அறியுங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

ஒ.................2007 இல் போட்ட வழக்கிற்க்கு இதுவரைக்கும் உங்கட ஆக்கள் என்ன செய்தவை?  அவர்கள் நேற்று போட்ட வழக்கிற்க்கு அடுத்தநாளே தடையும் வாங்கி விட்டார்கள்.....

தன்னார்வ தொண்டு மூலம் பணியாற்றும் எங்களுக்கு நன் கொடையாளர்களால் வழங்கப்படும் வரையறுக்கப்பட்ட நிதிகளை வைத்தே திட்டங்களை மேற்கொள்ள முடியும். 

நான் அரசியலவாதி அல்ல புலுடாக்களை விட்டு மக்களை ஏமாற்ற மக்களோடு மக்களாக நின்று பணியாற்றும் வகையை சேர்ந்தவன்..

 

 

கூட்டமைப்பை (அதாவது புலிகளால் எல்லா கட்சிகளையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்ட கட்சி) புலிகள் உருவாக்கவில்லை எனின் தேர்தல் காலத்தில் ஏன் வாக்கு வேட்டைக்கு அவர்களை பயன்படுத்துகின்றீர்கள் சம்பந்தன் ஜயா சிங்க கொடியோடு நின்று தேர்தலில் நின்று வென்றுகாட்ட சொல்லுங்கள் பார்ப்பம்.

Edited by புலிக்குரல்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்தேசியக் கூட்டமைப்பை விடுதலைப்புலிகள் உருவாக்கல்லை என்றால்.. அதனைப் பதிவு செய்த கட்சியாக்க வேண்டியானே..?!

 

நாங்கள் விடுதலைப்புலிகளோடு எந்த வகையிலும் தொடர்பற்ற சுத்தவான்கள் என்று சொல்லிகொள்ள விரும்பிறவை அதைச் செய்யலாம் தானே..?!

 

ஆனால் வாக்குப் போடுற மக்கள் விடுதலைப்புலிகளைப் பெற்றெடுத்த மக்கள் என்பதை ச.சு கும்பல் விளங்கிக் கொள்ளனும்.

 

சம்பூர் விவகாரம் தெளிவாகவே சுமந்திரனின் அரசியல் எதிர்காலத்திற்காகவே சம்பந்தனால் கையாளப்படுகிறது. அந்த மக்களின் சுய எழுச்சிப் போராடத்தின் பலாபலன்களையும் இவர்களே அனுபவிக்க நினைக்கிறார்கள்.

 

அதுசரி.. கட்டாந்தரையாக உள்ள சம்பூரை அங்கு அகதிமுகாம்களில் கஸ்டப்பட்ட.. மக்களைக் கொண்டே துப்புரவாக்கி மைத்திரியை கொண்டு கொடி நட்டு வழங்க இருக்கீங்களே.. கிழக்கு மாகாண சபையைக் கொண்டு அந்தக் காணிகளை துப்புரவு பண்ணி மக்கள் பயனுள்ள நிலையில்.. அதனைக் கையளிப்பதோடு.. மக்களுக்கு அவசியமான இல்லங்கள்.. போக்குவரத்துக்கள்.. அங்காடிகள்.. பள்ளிகள்.. பிற அலுவல்களுக்கான அலுவலகங்கள் திறக்க என்ன ஏற்பாடு செய்திருக்கிறேள். இன்னும் பேசிக் கொண்டு தான் இருக்கிறீர்களோ என்னவோ..?! அல்லது அவை அடுத்த தேர்தல் வரை மக்களை காக்க வைக்கவோ..??!

 

சுமந்திரன் 2007 சட்டத்தரணியாக செயற்பட்டு ஒரு வழக்கை போட்டது மக்கள் நலன் விரும்பியல்ல. கொடுத்த காசுக்கு. இப்ப அது அரசியலுக்கும் உதவுது. 2007 சுமந்திரன் அரசியலுக்கு வர கனவும் கண்டிருக்க மாட்டார். ஏனெனில்.. அவரின் அரசியல் பிரவேசம் சுத்துமாத்துக்களைக் கொண்டிருக்கும் என்று கணித்து அப்பவே புலிகள் அதனை சம்பந்தனிடம் மறுத்துவிட்டனர்.

 

இன்று சுமந்திரனை தூக்கிப் பிடிச்சு விடுதலைப்புலிகளை காலில் போட்டு மிதிக்கும் இவர்கள் யார் என்பதையும் மக்கள் அடையாளம் கண்டுகொள்வது அவசியம். :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் எப்ப வந்தவர்? சம்பூர் மக்கள் கட்டைபறிச்சான் இடைதங்கல்  அகதி  முகாங்களிலும், கிளிவெட்டி இடைதங்கல் அகதி முகாங்களிலும் வாழும் போது வந்து பார்த்தவர்களா? ஒவ்வொரு அனர்த்தங்களிலும் மக்கள் படும் கஷ்டங்களும் ஒட்டுக் குழுக்களால் ஏற்பட்ட சொல்லண்ணா துன்பங்களிலும் என்ன செய்தவர்கள்? மக்களின் தொடர் போரட்டங்களிலேயே இவ் காணி விடுவிப்பும், மீள்குடியேற்றம் ஏற்படுகின்றது. புலுடா விடும் சுயநலன் அரசியல் இலாபங்களை இப்போது தேடுகின்றனர் அவ்ளவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனே 2015 இல் தான் சம்பூர் மக்களை பார்க்க போனவர். 2014 மாரிகால மழையால் சனம் அல்லோலகலப்பட்டது உவை திரும்பியும் பார்க்கல.

  • தொடங்கியவர்

ஒ.................2007 இல் போட்ட வழக்கிற்க்கு இதுவரைக்கும் உங்கட ஆக்கள் என்ன செய்தவை?  அவர்கள் நேற்று போட்ட வழக்கிற்க்கு அடுத்தநாளே தடையும் வாங்கி விட்டார்கள்.....

தன்னார்வ தொண்டு மூலம் பணியாற்றும் எங்களுக்கு நன் கொடையாளர்களால் வழங்கப்படும் வரையறுக்கப்பட்ட நிதிகளை வைத்தே திட்டங்களை மேற்கொள்ள முடியும். 

நான் அரசியலவாதி அல்ல புலுடாக்களை விட்டு மக்களை ஏமாற்ற மக்களோடு மக்களாக நின்று பணியாற்றும் வகையை சேர்ந்தவன்..

 

 

கூட்டமைப்பை (அதாவது புலிகளால் எல்லா கட்சிகளையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்ட கட்சி) புலிகள் உருவாக்கவில்லை எனின் தேர்தல் காலத்தில் ஏன் வாக்கு வேட்டைக்கு அவர்களை பயன்படுத்துகின்றீர்கள் சம்பந்தன் ஜயா சிங்க கொடியோடு நின்று தேர்தலில் நின்று வென்றுகாட்ட சொல்லுங்கள் பார்ப்பம்.

ஓ சம்பளத்திற்கா மக்களோடு மக்களா நின்று வேலை செய்தனீங்கள் ,திருகோணமலை மாவட்டம் முழுவதும் எனது கால் படாத கிராமங்கள் கிடையாது .எனக்கு திருகோணமலையை பற்றி வகுப்பெடுக்க முனையாதீர்கள் .

இதிலை குத்தி முறிகின்ற உங்கள் எல்லோருக்கும் சவால் விடுகின்றோம் நீங்கள் உண்மையான செயல் வீரர்களாயின் வரும் தேர்தலில் சம்பந்தன் ஐயாவுக்கு எதிராக ஒருவரை நிற்பாட்டி ஆகக் குறைந்தது கட்டுக்காசை எடுக்கக் கூடியளவு வாக்கையாவது பெறுங்கள் பார்ப்பம் .

தமிழ்தேசியக் கூட்டமைப்பை விடுதலைப்புலிகள் உருவாக்கல்லை என்றால்.. அதனைப் பதிவு செய்த கட்சியாக்க வேண்டியானே..?!

 

நாங்கள் விடுதலைப்புலிகளோடு எந்த வகையிலும் தொடர்பற்ற சுத்தவான்கள் என்று சொல்லிகொள்ள விரும்பிறவை அதைச் செய்யலாம் தானே..?!

 

ஆனால் வாக்குப் போடுற மக்கள் விடுதலைப்புலிகளைப் பெற்றெடுத்த மக்கள் என்பதை ச.சு கும்பல் விளங்கிக் கொள்ளனும்.

 

சம்பூர் விவகாரம் தெளிவாகவே சுமந்திரனின் அரசியல் எதிர்காலத்திற்காகவே சம்பந்தனால் கையாளப்படுகிறது. அந்த மக்களின் சுய எழுச்சிப் போராடத்தின் பலாபலன்களையும் இவர்களே அனுபவிக்க நினைக்கிறார்கள்.

 

அதுசரி.. கட்டாந்தரையாக உள்ள சம்பூரை அங்கு அகதிமுகாம்களில் கஸ்டப்பட்ட.. மக்களைக் கொண்டே துப்புரவாக்கி மைத்திரியை கொண்டு கொடி நட்டு வழங்க இருக்கீங்களே.. கிழக்கு மாகாண சபையைக் கொண்டு அந்தக் காணிகளை துப்புரவு பண்ணி மக்கள் பயனுள்ள நிலையில்.. அதனைக் கையளிப்பதோடு.. மக்களுக்கு அவசியமான இல்லங்கள்.. போக்குவரத்துக்கள்.. அங்காடிகள்.. பள்ளிகள்.. பிற அலுவல்களுக்கான அலுவலகங்கள் திறக்க என்ன ஏற்பாடு செய்திருக்கிறேள். இன்னும் பேசிக் கொண்டு தான் இருக்கிறீர்களோ என்னவோ..?! அல்லது அவை அடுத்த தேர்தல் வரை மக்களை காக்க வைக்கவோ..??!

 

சுமந்திரன் 2007 சட்டத்தரணியாக செயற்பட்டு ஒரு வழக்கை போட்டது மக்கள் நலன் விரும்பியல்ல. கொடுத்த காசுக்கு. இப்ப அது அரசியலுக்கும் உதவுது. 2007 சுமந்திரன் அரசியலுக்கு வர கனவும் கண்டிருக்க மாட்டார். ஏனெனில்.. அவரின் அரசியல் பிரவேசம் சுத்துமாத்துக்களைக் கொண்டிருக்கும் என்று கணித்து அப்பவே புலிகள் அதனை சம்பந்தனிடம் மறுத்துவிட்டனர்.

 

இன்று சுமந்திரனை தூக்கிப் பிடிச்சு விடுதலைப்புலிகளை காலில் போட்டு மிதிக்கும் இவர்கள் யார் என்பதையும் மக்கள் அடையாளம் கண்டுகொள்வது அவசியம். :icon_idea::)

சம்பூருக்கு சுமந்திரன் திடீர் விஜயம்- மீள்குடியேரும் மக்களுடன் ஆலோசனை!

[ சனிக்கிழமை, 23 மே 2015, 05:21.02 PM GMT ]

திருகோணமலை சம்பூர் பகுதிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் திடீர் விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.

இன்று மாலை 5.30 மணியளவில் கிழக்குமாகாண கல்வியமைச்சரும், மீள்குடியேற்ற அமைச்சருமான தண்டாயுதபாணி அவர்களுடன் விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தற்போது மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் சம்பூர் மக்களுடன் கலந்துரையாடியதுடன் அவர்களின் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்துள்ளார்.

(இரண்டாம் இணைப்பு)

சம்பூர் மீள்குடியேற்ற மக்களின் தேவைகளை ஆராய குழு நியமனம்!

திருகோணமலை சம்பூர் பகுதியில் மீள்குடியேற்றத்திற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அங்கு மீள் குடியேறிவரும் மக்களின் தேவைகள் குறித்து ஆராய்வதற்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண கல்வியமைச்சரும், மீள்குடியேற்ற அமைச்சருமான வி.தண்டாயுதபாணி தலைமையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை அவரது அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே மேற்படி குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதன்போது உதவி பிரதம செயலாளர் தலைமையில் 12 அங்கத்தவர்கள் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மேற்படி குழுவானது எதிர்வரும் திங்கட்கிழமை காலை 8.00 மணிக்கு கிழக்கு மாகாண கல்வியமைச்சரும், மீள்குடியேற்ற அமைச்சருமான வி.தண்டாயுதபாணி சம்பூர் கிராமத்திற்கு விஜயம் செய்து அங்கு மீள் குடியேறிவரும் மக்களின் தேவைகள் உள்ளிட்ட பல விடயங்களை கேட்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/

இதுக்கும் ஏதாவது லொள்ளு கருத்து எழுதுவீங்கள் ,அதை விட என்ன தெரியும் .

 

Edited by Gari

  • தொடங்கியவர்

சம்பந்தனே 2015 இல் தான் சம்பூர் மக்களை பார்க்க போனவர். 2014 மாரிகால மழையால் சனம் அல்லோலகலப்பட்டது உவை திரும்பியும் பார்க்கல.

">http://thandaayuthapaani%20uthavi_zpsj8exrchd.j

Edited by Gari

  • கருத்துக்கள உறவுகள்

அதைத்தான் நானும் சொல்கி்ன்றேன் எனக்கு திருகோணமலை மாவட்டமும் மக்களோடு மக்களாக மனிதாபிமான பணிகளில் ஈடுபடுவதால் ஒவ்வொரு கிராம மக்களின் பொருளாதார, சமூக விழுமியங்களும், அவர்களின் அன்றாட வாழ்வு நடைமுறைகளும் அத்துப்படி. சம்பூரில் புலுடா அரசியல் நாடாத்தும் நீங்கள் அதே பிரதேசத்தில் கட்டப்பறிச்சான் கடற்கரைச்சேனை அதனை சேர்ந்த பிரதேசங்களில் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்படும் போது வாக்குறுதிகளை வழங்கிவிட்டு சென்றவர்கள்தான் இவர்கள். அதோடு எல்லைக் கிராமங்களிளும், தங்கள் பாட்டன் முப்பாட்டன் வாழ்ந்த காணிகள் என்று முஸ்லிம்களால் நயவஞ்சமாக அடாவடி செய்து பிடிக்கப்படும் காணிகள் பற்றி உங்கள் கட்சி சார்ந்த நடவடிக்கைகள் ஏதும் இல்லையே? வெள்ள அனர்த்தத்தின் போது முதுார் வாழ் தமிழ் மக்களுக்கான உதவிகளை அரசசார்ப்பற்ற நிறுவனங்களே  வழங்கியதே ஒழிய எந்த ஒரு பாரளுமன்ற உறுப்பினர் கூட வருகை தரவில்லை இரவிரவாக திருமலை - முதுார் இறங்குதுறைகளில் நாம் பணிபுரிந்த கஷ்டமும் அந்த உதவிகளை வெருகல்வரைக்கும் அதனை கொண்டு சென்றோம். பிரபல்யம் தேடும் காட்சிகளை களைந்து விட்டு மக்களுக்காக பணிபுரிய வேண்டும் தேர்தல் காலங்களில் மட்டும் சம்பந்தன் ஜயா தலை காட்டுவது தவிர்க்கப்பட வேண்டும்.

 

ஒருவரின் வேலையை கொச்சப்படுத்தும் உங்களிகளின் கருத்தாடல்கள் அநாகாிகமானது.

 

Gari சம்பந்தன் ஜயாக்கு எதிராக எவரையும் களமிறக்கி தமிழ் அரசியலை கூறு போட்டு விற்க்கும் எண்ணம் இல்லை நானும் திருமலையில் தேர்தல் காலத்தில் சம்பந்தன் ஜயாவுக்காக வாக்கு கேட்டு திரிந்தவர்கள் தான். உங்கள் பதிவுகளை அனைத்தும் நான் வாசிப்பது உண்டு ஆனால் சம்பந்தன் ஜயாவாலும் அதனை சார்ந்தவர்களினாலும் மேற்க்கொள்ளப்படும் அரசியல் தவறுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் அதனை மறுதலிப்பதானது கூட்டமைப்பின் எதர்கால சுருக்கம் என்றுதான் சொல்ல முடியும். எல்லாம் எனக்கு தெரியும் என்கிற தொனி தவிர்க்கப்பட வேண்டும். இல்லையேல் சம்பூர் காணி விடுவிப்பும் மீள்குடியேற்றம்  சம்பந்தமான கூட்டமைப்பின் பணிகள் எதுவரை என்பது பற்றி அந்த மக்ககளால் தொிவிக்கப்படும் கருத்துக்களை காணெளிகளாக பதிவு ஏற்ற வேண்டிவரும். அங்கு அந்த மக்களோடு இருக்கும் துரைரெட்ணசிங்கம் ஜயா பற்றிய எந்தவொரு செய்திகளும் இல்லை அவரின் பணிகளை விட ஆடிலயும் ஆவணிலயும் வரும் சம்பந்தன் ஜயா சுமந்திரன் ஜயா பணிகள் முன்னகர்த்தப்படுவது அந்த பிரதேச மக்களை நீங்கள் ஏமாற்ற முனையும் செயல் முகமன்னுக்காக ஒன்றுக்காக சம்பந்தன் ஜயா சுமந்திரன் ஜயா போன்றோரை மக்கள் வரவேற்றால் அது அங்கிகாரம் ஆகிவிடாது...

Edited by புலிக்குரல்

  • கருத்துக்கள உறவுகள்

">http://thandaayuthapaani%20uthavi_zpsj8exrchd.j

கரி உந்த படத்தில் நிப்பது மாகாணசபை உறுப்பினர்களே ஜனார்த்தன்ன், தண்டாயுதபாணி, நாகேஸ்வரன்

உந்தப்படம் யார்ர வீட்டு முத்தத்தில எடுத்தது என்டு தெரியுமோ? உந்த நேரத்தில் சம் சும் எங்க போனவை.

ஆக மொத்தம் சம்பந்தனோ சுமந்திரனாலயோ மக்களுக்கு ஒரு சின்ன விடயம் நடந்தாலும் புலத்து தேசிய வாலுகளுக்கு தாங்கி கொள்ள முடியவில்லை. என்ன ஒரு சிறந்த கொள்கை.
ஹிட்லரின் முட்டாள்தனத்தால் அழிந்த ஜெர்மனியை ஹிட்லருக்கு பின் வந்த ஆட்சியாளர்கள் ஹிட்லரை அழித்த மேற்கு நாடுகளுடன் சேர்ந்து தான் கட்டி எழுப்பினார்கள். ஜப்பானும் அது போலவே. அது போல் தான் இதுவும். 
  • கருத்துக்கள உறவுகள்

நல்லது நடந்தால் எங்களுக்குத்தான் நெஞ்சு பொறுக்காதே, பிறகு எப்பிடி வியாபாரம் செய்ய்யிறதாம்?

  • கருத்துக்கள உறவுகள்

வரும் தேர்தலில் தமிழர்களின் வாக்கு வங்கியை தனதாக்க வேண்டியது
மைத்திரியின் தற்போதைய தேவை.
 

தவிர சம்பூர் தனியார் வர்த்த மானி மகிந்தவுடன் தொடர்பு பட்டது
அதை முதலில் முடக்க வேண்டும்.

 

இரண்டுக்கும் இடையில் .....
நான்தான் கோட்டுக்கு போனேன்
நான்தான் சம்பூர் போனேன் என்று

சின்னத்திரை தொடர் இந்த பக்கம்.

 

எனது சின்ன யோசனை ஒன்று உடை அலங்காரம் பற்றியது
சுமந்திரனுக்கு வெள்ளை சேட்டு போட்டிருக்கலாம்.... அதில் கொஞ்சம் அழுக்கும் இருந்திருப்பின்
கதாபத்திரத்துடன் இன்னும் ஒன்றி போயிருக்கும்.
மக்களுக்காக உழைத்து கலைத்து வருகிறார் என்று ஒரு காட்சி பதிவாகி இருக்கும்.

  • தொடங்கியவர்

கரி உந்த படத்தில் நிப்பது மாகாணசபை உறுப்பினர்களே ஜனார்த்தன்ன், தண்டாயுதபாணி, நாகேஸ்வரன்

உந்தப்படம் யார்ர வீட்டு முத்தத்தில எடுத்தது என்டு தெரியுமோ? உந்த நேரத்தில் சம் சும் எங்க போனவை.

ஆளுமைமிக்க மிக்க தலைவர் தான் நேரடியாக செல்லவேண்டும் என்பதில்லை .சம்பந்தன் ஐயாவுக்கு திருகோணமலையில் ஆளுமைமிக்க எல்லோரையும் அரவணைத்து செல்லக்கூடிய தளபதியாக மதிப்புக்குரிய அமைச்சர் திரு .தண்டாயுதபாணி அவர்கள் கிடைத்துள்ளார் .

தற்போது இதை எழுதும் நேரம் அமைச்சர் திரு .தண்டாயுதபாணி அவர்கள் மாகாணசபை அதிகாரிகளுடன் மக்களின் தேவைகளை கேட்டறிந்து ஒருங்கிணைந்த மீழ்குடியேற்ற திட்டதிற்கான செலவீனங்களை மதிப்பிட சம்பூர் செல்கின்றார் .

  • கருத்துக்கள உறவுகள்

கரி திருச்செல்வமும் நாகேஸ்வரனும் தங்கள் அரசியல் பலத்தை காட்ட அப்பாவி சனங்களை பயன்படுத்தி உண்ணாவிரதம் இருந்த கதை தெரியும் தானே. இதே தண்டாயுதபாணி நாகேஸ்வரன் சில மாநங்களுக்கு முன் சம்பூர்ண விடுவித்தாச்சு என கூட்டிச்சென்று படம் காட்டியதும் தெரியும்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

 வெள்ள அனர்த்தத்தின் போது முதுார் வாழ் தமிழ் மக்களுக்கான உதவிகளை அரசசார்ப்பற்ற நிறுவனங்களே  வழங்கியதே ஒழிய

இது எந்த ஆண்டு என்பதை அறியத்தாருங்கள் .

அங்கு அந்த மக்களோடு இருக்கும் துரைரெட்ணசிங்கம் ஜயா

இவர் என்ன மக்களுக்கு செய்தவர் என்று சொல்லுங்கள் ?

  • தொடங்கியவர்

சம்பூர் நில விடுவிப்பு.. சுமந்திரன் தேர்தல் அரசியலாக்கப்பட்டு வருகுது. சம்பந்தன் ஐயாவின் பேட்டியில் அதற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம்.. அழுத்தம் திருத்தமாக.. 2007 இல் அதாவது புலிகள் இருக்கேக்கேயே சுமந்திரன் செயற்படத் தொடங்கிட்டார்.. இப்ப பா.உ ஆகியும் தொடர்ந்து செயற்படுகிறார்.. அடுத்த முறை நீங்கள் தான் மக்கள்.. அவரை தொடர்ந்து பா.உ ஆக்கனுன்னு கெஞ்சுவது போல உள்ளது. :lol:

 

இப்ப அவரின் கூட்டாளிகள்.. சம்பூரில்.. சுமந்திரன் என்று சொல்கிறார்கள். சம்பூரில் இன்னும் மீட்கப்படாத நிலம் பற்றி (around5,000 acres of lands still remain under the SL military occupation in Champooor, கடற்படை முகாம் பகுதி தவிர) இன்னும் பல்லாயிரம் ஏக்கர்கள் பற்றி.. பேச்சில்லை. அதே போல் வடக்கில். கிழக்கில்..! எனியும் சம்பூர் தான் தொடர்ந்து பேசப்படும் போல. மிச்சம் மறக்கப்பட்டிரும். சம்பந்தன் மறைச்சிடுவார்.

 

மற்றும்படி இப்பேட்டியில் ஒரு தலைவர் சொல்லக் கூடிய காத்திரமான பதில்கள் எதிலும் இல்லை. :icon_idea:

 

யாழ்ப்பாணத்தில் பவளோடு நிற்பது அதிரடிப்படை என்று சொல்லுவாராக்கும். இராணுவத்திற்கு உடுப்பை மாத்தினா அதிரடிப்படை.. பொலிஸ். எல்லாரும் சிங்களம் தான். :lol:

in

இந்த 5000 ஏக்கர் பற்றி விபரம் தர முடியுமா ?சும்மா எல்லாம் எழுந்தமானமாக விலாசத்துக்கு எழுதக்கூடாது . :)  :icon_idea:

  • தொடங்கியவர்

சம்பந்தன் திருமலையில் மண்கவ்வியதை மறந்துவிட்டீர்கள். திருமலையில் எலிகளுக்கும் எலிவாலுகளுக்கும் மட்டும் தான் ஆதரவு என்றால் ஏன் மற்ற கட்சிகள் போட்டியிட கூடாது என ஒற்றைக்காலில் நிக்கிறியள்.

மற்றைய கட்சிகள் என்னத்தை கிழிச்சவர்கள் திருகோணமலை மக்களுக்கு ?

வட -கிழக்கு இணைந்த மாகாண சபையை EPRLF ஆட்சிசெய்த போது ,திருகோணமலை YMHA க்கு சொந்தமான காணியை அடாத்தாக பறித்து அதில் மாகாண சபைக்குரிய விடுதி கட்டியவர்கள், திருகோணமலை இன் எதிர்கால தலைவர்களில் ஒருவராக வளர்ந்த Dr.ஞானசேகரனை கடத்தி காணாமல் போக செய்தவர்களை திருமலை மக்கள்

ஆதரிப்பார்களா ?

89இல் சம்பந்தன் ஐயாவை தோற்கடிப்பதற்காக ஈரோஸ் ரெட்னராஜவுடன் இணைந்து செயற்பட்டனான் அதற்குரிய காரணம் திருமலைக்கு பல வழிகளிலும் நாசம் செய்த ஒட்டுக்குழுக்களுடன் சேர்ந்து முதன் முதலாக தேர்தலில் சம்பந்தன் ஐயா போட்டியிட்டது .

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் கேட்கிறேன் இப்படி நடந்த EPRLF மற்றும் முன்னாள் ஆயுத குழுக்களுடன் ஏன் கூட்டமைப்பில் இணைந்தீர்கள். 89 இல் ஒட்டுக்கழுக்களுடன் சம்பந்தன் சேர்ந்ததை எதிர்த்த நீங்கள் இன்று அவருடன் நிற்பது சரியா?

அதுதான் கேட்கிறேன் இப்படி நடந்த EPRLF மற்றும் முன்னாள் ஆயுத குழுக்களுடன் ஏன் கூட்டமைப்பில் இணைந்தீர்கள். 89 இல் ஒட்டுக்கழுக்களுடன் சம்பந்தன் சேர்ந்ததை எதிர்த்த நீங்கள் இன்று அவருடன் நிற்பது சரியா?

 

காரணம் - ஆயுதபயம் + உயிர்பயம்
 
ஆயுதத்துடன் இருந்த புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் ..... போன்றோருக்கே இந்தக்கதி என்றால் இவர்கள் கதி. 
 
தெல்லிப்பளை சந்தியில் ரயர் போட்டு எரித்து கூத்தாடியிருப்பார்கள் இப்படி.
 
2rzw66a.jpg
  • கருத்துக்கள உறவுகள்

காரணம் - ஆயுதபயம் + உயிர்பயம்

 

ஆயுதத்துடன் இருந்த புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் ..... போன்றோருக்கே இந்தக்கதி என்றால் இவர்கள் கதி. 

 

தெல்லிப்பளை சந்தியில் ரயர் போட்டு எரித்து கூத்தாடியிருப்பார்கள் இப்படி.

 

2rzw66a.jpg

அப்ப சுழிபுரம் கொலை ஓகேயோ. ஏனெனில் ஓரிடமும் எழுதியதாக தெரியவில்லை.

---------------------

அப்ப சுழிபுரம் கொலை ஓகேயோ. ஏனெனில் ஓரிடமும் எழுதியதாக தெரியவில்லை.

 

 

சுழிபுரம் கொலையும் தப்பே. மிருகத்தனமான எந்த கொலையையும் நான் ஆதரிப்பதில்லை. கொலைகள் எமது சமுதாயத்திற்கான தீர்வில்லை என்பதில் மிகவும் உறுதியாக எப்பவும் இருந்துள்ளேன், இப்பவும் இருக்கின்றேன். ஆனாலும் தேத்தாவின் திட்டமிட்ட கொலைகளுடன் ஒப்பிடும் போது இதெல்லாம் ஒன்றுமேயில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

காரணம் - ஆயுதபயம் + உயிர்பயம்

ஆயுதத்துடன் இருந்த புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் ..... போன்றோருக்கே இந்தக்கதி என்றால் இவர்கள் கதி.

தெல்லிப்பளை சந்தியில் ரயர் போட்டு எரித்து கூத்தாடியிருப்பார்கள் இப்படி.

2rzw66a.jpg

உங்களுக்கு கூட்டமைப்பு உருவாகிய விதம் தெரியவில்லை. நீங்கள் இணைத்த படம் 83 ம் ஆண்டு கலவரம் எடுக்கப்பட்டது என நினைக்கிறேன். சம்பந்தருக்கும் தெல்லிப்பளைச் சந்திக்கும் என்ன தொடர்பு ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.