Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வல்வெட்டித்துறையில் இருந்து சென்று குருநாகலில் போட்டியிட முடியாதா? - கேள்வி எழுப்பும் சிவாஜிலிங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வல்வெட்டித்துறையில் இருந்து சென்று குருநாகலில் போட்டியிட முடியாதா? - கேள்வி எழுப்பும் சிவாஜிலிங்கம்
[Wednesday 2015-07-15 19:00]
மஹிந்த ராஷபக்ஷவிற்கு அம்பாந்தோட்டையில் இருந்து வந்து குருநாகலில் போட்டியிட முடியுமாயின், வல்வெட்டித்துறையில் இருந்து வந்து என்னால் மட்டும் ஏன் குருநாகலில் போட்டி இட முடியாது என வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். வேட்புமனுத் தாக்கல் செய்த பின்னர் இனவாதத்தை தூண்டுவதற்காகவா குருநாகலில் போட்டியிடுகின்றீர்கள் என சிங்கள ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தான் இவ்வாறு பதிலுக்கு கேள்வி எழுப்பியதாக அவர் குறிப்பிட்டார்.

மஹிந்த ராஷபக்ஷவிற்கு அம்பாந்தோட்டையில் இருந்து வந்து குருநாகலில் போட்டியிட முடியுமாயின், வல்வெட்டித்துறையில் இருந்து வந்து என்னால் மட்டும் ஏன் குருநாகலில் போட்டி இட முடியாது என வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். வேட்புமனுத் தாக்கல் செய்த பின்னர் இனவாதத்தை தூண்டுவதற்காகவா குருநாகலில் போட்டியிடுகின்றீர்கள் என சிங்கள ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தான் இவ்வாறு பதிலுக்கு கேள்வி எழுப்பியதாக அவர் குறிப்பிட்டார்.

  

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில்,

குருநாகல் மாவட்டத்தில் வீடு வீடாக சென்று பிரசாரத்தினை எமது அணி மேற்கொள்ளப் போவதில்லை. பொதுக் கூட்டங்களை அங்கு நடாத்துவதற்கான சூழலும் இல்லை. இலங்கையில் மிகப்பெரியளவில் இராணுவ வீரர்களையும், போரின் போது கொல்லப்பட்ட இராணுவ வீரர்களின் குடும்பங்களும் வாழும் இடம் தான் குருநாகல் மாவட்டம். இதன் காரணமாக தான் போர் வெற்றியைக் கொண்டாடிய மஹிந்த ராஜபக்ஷ குருநாகல் மாவட்டத்தில் களமிறங்கியிருக்கின்றார்.

போர்க்குற்றத்தில் சர்வதேச நீதிமன்றில் மஹிந்த ராஜபக்ஷவை நிறுத்துவதை தடுப்பதற்காக இலங்கை கையொப்பமிடவில்லை. அடுத்த 5 வருடங்களுக்குள் நாடாளுமன்றத்தில் இனவாத குப்பையில், மோதி எமது பிரச்சினையினை தள்ளிக்கொண்டு போனால், சர்வதேச தலையீட்டினை கோருவதை விட வேறு வழியில்லை.

இலங்கையில் உள்ள அரசியல் தீர்வில் நம்பிக்கை கிடையாது. சர்வதேச மத்தியஸ்தம் மட்டுமே வழி வகுக்கும். உங்களால் முடியாமல் போனால் வடக்கு கிழக்கில் பொது சன வாக்கெடுப்பினை நடாத்தி, எமது தலைவிதியினை நாங்களே தீர்மானிக்கின்ற நிலையை உருவாக்குவோம் என்பதனை எச்சரிக்கை செய்யும் முகமாக இந்த தேர்தலில் களமிறங்கியிருக்கிறோம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், அதற்கு துணைபோகும் மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் எச்சரிக்கை விடுக்கும் முகமாகவே குருநாகல் மாவட்டத்தில் களமிறங்கியிருக்கிறேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=135934&category=TamilNews&language=tamil

இமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், அதற்கு துணைபோகும் மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் எச்சரிக்கை விடுக்கும் முகமாகவே குருநாகல் மாவட்டத்தில் களமிறங்கியிருக்கிறேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

என்னது வடிவேலு, கவுண்டமணியையே மிஞ்சிட்டார்.

அதுசரி மாகாணசபை உறுப்பினராமே அதை இராஜினாமா பண்ணத் தேவையில்லையா?

Edited by ஜீவன் சிவா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

என்னது வடிவேலு, கவுண்டமணியையே மிஞ்சிட்டார்.

அதுசரி மாகாணசபை உறுப்பினராமே அதை இராஜினாமா பண்ணத் தேவையில்லையா?

இல்லை. அவர் பாராளுமன்றுக்குத்  தேர்வானால் மட்டுமே மாகாணசபை உறுப்பினர் பதவியை ராஜினாமாச் செய்யவேண்டும்

நன்றி வாத்தியார்

பொதுவாகவே ஒரு ரச உத்தியோகத்தர் தேர்தலில் நிற்பதானாலும் அவர் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டியிருக்கும் என்று கேள்விப்பட்டிருந்தேன். அதனால்தான் இந்தக் கேள்வி.

  • கருத்துக்கள உறவுகள்

தெரியாமல் தான் கேட்கிறேன்!

உங்கட வளவுக்குள்ள.. பனைகள் இருக்கும்போது எதற்காக அடுத்தவனின்ர வளவுக்குள்ளை போவான்?:innocent:

குருநாகல மாவட்டத்தில் மகிந்தவை எதிர்த்துப் போட்டியிடுவது ஏன்? – சிவாஜிலிங்கம் பதில்

JUL 16, 2015 | 1:13by புதினப்பணிமனைin செய்திகள்

sivajilingamசிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கவே, அவர் போட்டியிடும் குருநாகல மாவட்டத்தில் சுயேச்சைக் குழுவாகப் போட்டியிடுவதாக, வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில், குருநாகல மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக சிவாஜிலிங்கம் கடந்த 13ஆம் நாள் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார்.

சிங்களவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் குருநாகல மாவட்டத்தில் தாம் போட்டியிடுவதற்கான காரணங்களை அவர் நேற்றிரவு பிபிசி தமிழோசைக்கு விபரித்தார்.

மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே குருநாகல மாவட்டத்தில் போட்டியிடுகிறேன்.

குருநாகல மாவட்டத்தில் எம்மால் வெற்றியீட்ட முடியாது என்பது யதார்த்தம் என்றாலும், மைத்திரிபால சிறிசேன மற்றும் மகிந்த ராஜபக்சவுக்கு அடையாள ரீதியில் எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கிலேயே நானும், ஏனைய 18 தமிழர்களும் அங்கு சுயேச்சையாக போட்டியிடுகிறோம்.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மகிந்த ராஜபக்சவுக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வாய்ப்பளித்தது தவறு எனச் சுட்டிக்காட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயங்கியது.

அதைச் சுட்டிக்காட்ட வேண்டிய ஆழமான, உறுதியான தேவை இருப்பதாகக் கருதியதாலேயே நாடளுமன்றத் தேர்தலில் குருநாகல மாவட்டத்தில் போட்டியிட முடிவெடுத்தோம்.

வடக்கு- கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே சுயேச்சையாகப் போட்டியிடுவதால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனுமதியைப் பெற வேண்டிய தேவை எழவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/07/16/news/7866

  • கருத்துக்கள உறவுகள்

தெரியாமல் தான் கேட்கிறேன்!

உங்கட வளவுக்குள்ள.. பனைகள் இருக்கும்போது எதற்காக அடுத்தவனின்ர வளவுக்குள்ளை போவான்?:innocent:

சொந்த வீட்டுக்குள்ள வட சுட முடியாவிட்டால்,பக்கத்து வீட்டு எண்ணைச்சட்டியில கை வைக்கிறது . தப்பா, புங்கையண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

இது சும்மா கிடந்த சிங்களவனை இந்த சம்பவம் மூலம் மகிந்தவுக்கு சார்பாக மாற்றி விட்ட பெருமை சிவாஜிக்கே இதுக்காக எவ்வளவு மகிந்தவிடம் வேண்டினாரோ பகிடிக்கு தானுங்கோ .

  • கருத்துக்கள உறவுகள்

இவர் அவர்களின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவர்! ? 

இப்ப என்னடாண்டா அவர்களின் பிளேட் மாறுது! ?

எல்லாம் மண்டைபிழைகள்.  இவர் அங்கு போட்டி இடுவதால்   உலக சமூகம்   இலங்கையில் இரு சமூகமும் முரண்பட்டுள்ளது என்பதை  ஏற்காது.  இவ்வளவு  யுத்தத்திற்கு பிறகும் ஒரு தமிழன்  சிங்கள தேசத்தில் போட்டி இடுகிறாரே என்று  பத்திரிகைகள் பெரிதாக எழுதும்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் மண்டைபிழைகள்.  இவர் அங்கு போட்டி இடுவதால்   உலக சமூகம்   இலங்கையில் இரு சமூகமும் முரண்பட்டுள்ளது என்பதை  ஏற்காது.  இவ்வளவு  யுத்தத்திற்கு பிறகும் ஒரு தமிழன்  சிங்கள தேசத்தில் போட்டி இடுகிறாரே என்று  பத்திரிகைகள் பெரிதாக எழுதும்

உங்களுக்கு, உலக பத்திரிகைகள், வாசிக்கும் அனுபவம் போலுள்ளது.
எந்தப், பத்திரிகை எழுதும்?
அத... முதல்ல சொல்லுங்க, நேசன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.