Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்புக்கு வந்த சோதனை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்புக்கு வந்த சோதனை?

கூட்டமைப்புக்கு வந்த சோதனை?
நிலாந்தன்

 

கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதிலிருந்து அது அனுபவித்து வரும் ஏகபோகத்திற்கு  இப்பொழுது சோதனைக் காலம் தொடங்கிவிட்டது போலத் தெரிகிறது. கடந்த ஆறு ஆண்டுகளிலும் படித்த நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் படிப்படியாக அதிகரித்து வந்த அதிருப்தியும் சலிப்பும் தற்பொழுது சமூகத்தின் ஏனைய மட்டங்களுக்கும் பரவத் தொடங்கியுள்ளன.

அண்மைய ஆண்டுகளில் இணையப் பரப்பில் குறிப்பாக சமூக வலைத்தளங்களில் கூட்டமைப்புக்கு எதிரான கேள்விகளும் விமர்சனங்களும் அதிகரித்து வந்தன. இப்பொழுது அந்த அதிருப்தியானது மெய்நிகர் யதார்த்த பரப்பையும் தாண்டி ஒரு பௌதீக யதார்த்தமாக பரவிவருகிறது. யாழ்ப்பாணத்தின் பத்திரிகைகள் சிலவற்றின் ஆசிரியர் தலையங்கங்களும் அதைப் பிரதிபலிக்கின்றன.

இவ்வாறாக கடந்த ஆறு ஆண்டுகளில் கூட்டமைப்பின் மீதான கேள்விகளும் விமர்சனங்களும் அதிகரிக்கக் காரணங்கள் எவை?

முதலாவது காரணம்- கூட்டமைப்பானது எதிர்ப்பு அரசியல் தடத்தில் இருந்து விலகத் தொடங்கியிருப்பது. இதைச் சிறிது விரிவாகப் பார்க்கலாம். வடமாகாணசபை உருவாக்கப்படும் வரையிலும் கூட்டமைப்பு ஒப்பீட்டளவில் துலக்கமான ஒரு எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்து வந்தது. குறிப்பாக மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இருந்தவரையிலும் அந்த எதிர்ப்பு அரசியலுக்கு ஓர் அழுத்தமும் இருந்தது. ஆனால் மாகாணசபை உருவாக்கப்பட்டபின் மாகாணசபையை அபிவிருத்திக்கான ஒரு பரிசோதனைக் களமாக மாற்ற கூட்டமைப்பு முயற்சித்தது. அதற்காக கொழும்பை நோக்கி மிகத் துலக்கமாக நல்லெண்ணச் சமிக்ஞைகளையும் காட்டியது. வடமாகாணசபை உருவாக்கப்பட்டபோது அதை இலங்கைத் தீவில் மற்றொரு அதிகார மையம் போலக் கட்டி எழுப்பவும் அந்த மாகாண சபையை தத்தெடுக்கவும் சில சக்திமிக்க வெளிநாடுகள் முயற்சிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான ஓர் அழுத்தப் பிரயோக உத்தியாக வடமாகாணசபைக்கு அளவுக்கு அதிகமான ஒரு முக்கியத்துவத்தையும் அங்கீகாரத்தையும் மேற்குநாடுகளும் இந்தியாவும் வழங்கக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெளிநாடுகள் வடமாகாணசபையை அதிகமதிகம் நெருங்க நெருங்க ராஜபக்ச அரசாங்கம் அந்த மாகாணசபை இயங்குவதற்கு எதிராக புதிது புதிதாக முட்டுக் கட்டைகளை உருவாக்கியது. இதனால் கூட்டமைப்பின் நல்லிணக்க சமிக்ஞைகள் எதிர்பார்த்த பலன்களைத் தரவில்லை.

இதன் விளைவாக வடமாகாண முதலமைச்சர் படிப்படியாக எதிர்ப்பு அரசியலை நோக்கி  நகரத் தொடங்கினார். இப்பொழுது அவர் ஏறக்குறைய தீவிர தமிழ்த்தேசியவாதிகளில் பெரும்பகுதியினரால் ஆர்வத்தோடு கவனிக்கப்படும் ஒருவராக மாறிவிட்டார். அதாவது  வடமாகாணசபையை இந்தியாவோ அல்லது மேற்கத்தேய நாடுகளோ தத்தெடுத்தனரோ இல்லையோ, முதலமைச்சரை தீவிர தேசியவாதிகளில் ஒரு பகுதியினர் தத்தெடுத்துவிட்டார்கள் என்பது மட்டும் தெரிகிறது. ஏறக்குறைய கால்நூற்றாண்டுகளுக்கு முன்பு வடக்குக் கிழக்கு இணைந்த மாகாணசபைக்கு முதலமைச்சராக இருந்த வரதராஜப்பெருமாள் சபையை இயக்க முடியாமல் ஒரு கட்டத்தில் ஈழப்பிரகடனம் செய்துவிட்டு நாட்டைவிட்டு வெளியேறினார். இப்பொழுது விக்கினேஸ்வரனும் இனப்படுகொலைப் பிரகடனத்தைச் செய்துவிட்டு எதிர்ப்பு அரசியலுக்கு மிக நெருக்கமாக வந்துவிட்டார். இது முதலாவது கட்டம்.

இரண்டாவது கட்டம் - ஆட்சி மாற்றத்தோடு தொடங்கியது. கூட்டமைப்பு ஆட்சிமாற்றத்தின் பங்காளியாகியது. இது தவிர்க்கமுடியாதபடி இணக்க அரசியலை வேறொரு வடிவத்தில் முன்னெடுக்கவேண்டிய நிலைக்கு அந்தக் கட்சியைத் தள்ளியது. மகிந்தவுடனான இணக்க அரசியல் தோல்வியில் முடிந்த கையோடேயே மைத்திரியுடனான இணக்க அரசியல் தொடங்கியது. இந்நிலையில் வரவிருக்கும் தேர்தலில் கூட்டமைப்பினால் முழுமையான, மூர்க்கமான ஒரு எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்க முடியுமா?

நிச்சயமாக முடியாது. இதுதான் பிரச்சினை. தமிழ் தேர்தல் களம் எனப்படுவது ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கும் மேலாக எதிர்ப்பு அரசியலுக்கே பழக்கப்பட்டு வந்துள்ளது.  எதிர்ப்பு அரசியலின் அடிப்படையில் உருவாக்கப்படும் இனமான அலையானது முடிவில் வாக்களிப்பு அலையாக மாறும். அந்த வாக்குகள் பெரும்பாலும் இன அடையாள வாக்குகளே. அல்லது அரசுக்கு எதிரான வாக்குகளே. குறிப்பாக 2009 இற்குப் பின் பெருமளவிற்கு பழிவாங்கல் வாக்குகளே.

கூட்டமைப்புக்கு வந்த சோதனை?

ஆனால் இம்முறை கூட்டமைப்பால் அப்படி ஒரு எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கமுடியாது. வேண்டுமானால் மகிந்தவுக்கு எதிராக ஓர் எதிர்ப்பு அரசியலையும், மைத்திரி மற்றும் ரணில் போன்றவர்கள் பொறுத்து எதிர்ப்பற்ற ஒரு நிலையையும் பேணவேண்டியிருக்கும். அதாவது ஒரு முழுமையான இன உணர்வு அலையை தோற்றுவிப்பது கடினமாக இருக்கும். இத்தகையதோர் பின்னணியில் வடமாகாணசபை உருவாக்கப்பட்டதில் இருந்து மகிந்தவை நோக்கியும் மைத்திரியை நோக்கியும் அதாவது தென்னிலங்கையை நோக்கி கூட்டமைப்புக் காட்டிவரும் நல்லெண்ணச் சமிக்ஞைகளானவை அக்கட்சியானது எதிர்ப்பு அரசியல் தடத்தில் இருந்து விலகி வருகிறதா என்ற சந்தேகத்தை வாக்காளர்கள் மத்தியில் தோற்றுவித்துவிட்டது. இது கூட்டமைப்பின் மீதான விமர்சனங்கள் அதிகரிப்பதற்கு ஒரு முக்கிய காரணம்.

இரண்டாவது காரணம் - வடமாகாணசபை. வடமாகாணசபையில் கூட்டமைப்பு ஆளும் கட்சியாக இருக்கிறது. ஆளும் கட்சிகளுக்கு எதிரான அதிருப்தி என்பது பொதுவானது. அதுவும் கூட்டமைப்பைப் பொறுத்தவரை அக்கட்சியானது வடமாகாணசபையில் இணக்க அரசியலுக்கும் எதிர்ப்பு அரசியலுக்கும் இடையே இரண்டாகக் கிழிபடுகிறது. முழுமையான இணக்க அரசியலையும் முன்னெடுக்க முடியவில்லை. துலக்கமான எதிர்ப்பு அரசியலையும் முன்னெடுக்க முடியவில்லை. மகிந்த இருந்தவரை மாகாணசபை இயங்க முடியாததுக்கு அவரைக் குற்றம் சாட்ட முடிந்தது. ஆனால் மைத்திரி வந்த பின்னரும் நிலைமைகள் பெரியளவில் மாறவில்லை என்று முதலமைச்சர் லண்டனில் வைத்துக் கூறியுள்ளார். இது வாக்காளர்களுக்கு ஒரு தெளிவற்ற சித்திரத்தையே வழங்குகிறது. குறிப்பாக அரை நூற்றாண்டுக்கும் மேலாக எதிர்ப்பு அரசியலுக்கே வாலாயப்பட்டுப் போன ஒரு வாக்களிப்பு பாரம்பரியத்தைப் பொறுத்தவரை இது ஒரு தெளிவற்ற சித்திரம்தான். ஒருபுறம் முதலமைச்சர், தீவிர தேசிய சக்திகளைக் கவரக்கூடியவராகக் காணப்படுகிறார். ஆனால் அவருடைய கட்சித் தலைமையோ தீவிர தேசிய சக்திகளால் கடுமையாக நிந்திக்கப்படுகிறது.

அதோடு, ஓர் ஆளும் கட்சியாக அவர்கள் வடமாகாணசபையில் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை எவ்வளவு தூரம் வெற்றிகரமாகத் தீர்த்திருக்கிறார்கள்? முழுக்க முழுக்க எதிர்ப்பு அரசியலை நடத்தினால் இக்கேள்வி வராது. எல்லாப் பழியையும் கொழும்பின் மீது போட்டுவிட்டுத் தப்பிவிடலாம். ஆனால் இப்பொழுது தப்ப முடியாது. உதாரணமாக சுன்னாகம் நீர்ப்பிரச்சினை. நீரில் மாசு உண்டோ இல்லையோ அது பொதுசன அபிப்பிராயமாக மாறிவிட்டது. அதுவும் இதுபோன்ற பல பிரச்சினைகளும் கூட்டமைப்பின் மீதான அதிருப்தியையும் கோபத்தையும் அதிகப்படுத்தியுள்ளன. இது இரண்டாவது காரணம். குறிப்பாக வடக்கிற்கே உரியது.

மூன்றாவது காரணம் - ஆயுதப் போராட்டம் பற்றிய முற்கற்பிதங்களோடு மிதவாதிகளை அணுகுவது. ஆயுதப் போராட்ட களத்தில் எதுவும் வேகமானது. ஆயுதப் போராட்டத்தை ஒரு அளவுகோலாக வைத்துக் கொண்டு மிதவாதிகளை அளக்க முடியாது. அந்த வேகத்திற்கு ஒன்றும் நடக்கவில்லை என்று குற்றம் சாட்டவும் முடியாது. ஆனால் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்னரான ஒரு சமூகச் சூழலில் கூட்டுக் காயங்களோடும் கூட்டு மனவடுக்களோடும் கொந்தளித்துக் கொண்டிருக்கும் ஓர் உளவியல் சூழலில் மிதவாதிகளைக் குறித்து முடிவெடுக்கும் எல்லாத் தருணங்களிலும் ஆயுதப் போராட்டம் ஒரு முற்கற்பிதமாக வந்து முன்னால் நிற்கும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். இது காரணமாக சராசரி வாக்காளர்கள் 2009 இற்கு முந்திய நிலைமைகளையும் 2009 இற்கு பிந்திய நிலைமைகளையும் ஒப்பீடு செய்வர்கள். இதுவும் கூட்டமைப்புக்கு பாதகமானதே.

இனி நான்காவது காரணம் - கடந்த ஆறு ஆண்டுகளில் கூட்டமைப்பு தன்னைப் படிப்படியாக புலி நீக்கம் செய்துவிட்டதாக புலிகளின் ஆதவாளர்கள் நம்புகிறார்கள். புலி நீக்கம் மட்டுமல்ல. தேசிய நீக்கமும் நிகழ்ந்திருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஆயுதப் போராட்டத்தில் வெளிக்காட்டப்பட்ட வீரத்தையும், தியாகத்தையும் கூட்டமைப்பின் தலைமை போதியளவிற்குக் கௌரவிக்கவில்லை என்றும் அவர்கள் கோபமடைந்துள்ளார்கள். இக்கோபத்தை புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் அதிகம் காணமுடிகிறது. தமிழகத்திலும் ஓரளவிற்குக் காணமுடிகிறது. இதுவும் கூட்டமைப்பின் மீதான அதிருப்திகள் அதிகரிக்க ஒரு காரணம்.

இனி ஐந்தாவது காரணம் - கடந்த ஆறு ஆண்டுகளில் ஐந்து தேர்தல்கள் நடந்துவிட்டன. இத்தேர்தல்களின் போது கூட்டமைப்பு வழங்கிய வாக்குறுதிகளில் அநேகமானவை நிறைவேற்றப்படவில்லை. கூட்டமைப்பு மட்டுமல்ல கடந்த சுமார் 60 ஆண்டுகால இன அடையாள அரசியலில் மிதவாதிகள் வழங்கிய பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கும் கட்சியானது வாக்குறுதிகளை நிறைவேற்றுவது கடினம் என்பது வாக்காளர்களுக்கு தெரிந்தே இருக்கிறது. அது அரசாங்கத்தை எதிர்க்கிறது என்பதற்காகவே அவர்கள் தமது வாக்குகளை அளித்தார்கள். வாக்குறுதிகளுக்காக அல்ல. ஆனால் 2009 இற்குப் பின்னரான அசாதாரணமான ஓர் உளவியல் சூழலின் பின்னணியில் கூட்டமைப்பு விடும் ஒவ்வொரு சிறு தவறும் உருப்பெருக்கிக் காட்டப்படுகின்றன. குறிப்பாக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்கி மக்களாணையைப் பெற்று பின்னர் கொழும்பிலும் அனைத்துலக அரங்கிலும் அவர்கள் அந்த மக்களாணைக்கு விசவாசமாக நடந்துகொள்ளவில்லை என்ற விமர்சனம் படித்த நடுத்தர வர்த்கத்தினர் மத்தியில் பரவலாக உருவாகிவிட்டது.

மேற்சொன்ன முக்கிய காரணங்கள் மற்றும் ஏனைய உபகாரணங்களின் திரண்ட விளைவாக கூட்டமைப்பின் மீதான அதிருப்தி அதிகரித்து வருவது குறிப்பாக யாழ்ப்பாணத் தேர்தல் களத்தில் துலக்கமாகத் தெரிகிறது. இது முழுக்க முழுக்க கூட்டமைப்பின் செயற்பாடுகள்  காரணமாக ஏற்பட்ட ஓர் அபிப்பிராய திரட்சிதான். இவ் அபிப்பிராயத்தை உருவாக்கியதில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு பெரும்பங்கு கிடையாது. அவர்கள் கூட்டமைப்புக்கு எதிராக திட்டமிட்டு செயற்பட்டு உருவாக்கிய ஓர் அபிப்பிராயம் அல்ல இது. ஆனால் இந்த அபிப்பிராய மாற்றம் மக்கள் முன்னணிக்கு அனுகூலமானது. இந்த அபிப்பிராய மாற்றத்தை வாக்குகளாகத் திரட்டுவது என்பது அந்தக் கட்சியின் பிரசார உத்திகளிலேயே தங்கியிருக்கிறது.

கடந்த ஐந்தாண்டுகளாக அக்கட்சியானது ஓர் இலட்சியவாதக் கட்சியாகவே சிறுத்துக் காணப்பட்டது. திருப்பகரமான தருணங்களில் அறிக்கைகளை விடுவது, பேட்டிகளை வழங்குவது என்பதற்குமப்பால் அக்கட்சியானது அடிமட்ட வலையமைப்பைப் போதியளவு பலப்படுத்தியிருக்கவில்லை. புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் அதற்கு இருந்த கவர்ச்சி தாயகத்தில் இருந்திருக்கவில்லை. கடந்த ஆறு ஆண்டுகளில் தாயகத்தில் அக்கட்சி மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கைகள் பெரும்பாலானவற்றில் திரும்பத் திரும்ப ஒரே முகங்களே காட்சியளித்தன. ஏறக்குறைய ஓரேயளவு தொகையினரே அவற்றில் பங்குபற்றினார்கள். அவ் எதிர்ப்பு நடவடிக்கைகளில் பங்குபற்றியவர்களின் தொகையை விடவும் அவை பற்றிய செய்திகளைச் சேகரிக்க வந்த ஊடகவியாளர்களின் தொகை அதிகமாக இருந்தது. சில சமயங்களில் அவற்றைக் கண்காணிக்க வரும் புலனாய்வாளர்களின் தொகை அதிகமாய் இருந்தது. இப்பொழுது கூட்டமைப்புக்கு எதிராகப் பரவிவரும் அதிருப்திக்கு மக்கள் முன்னணி உரிமைகோர முடியாது. ஆனால் கடந்த ஆறு ஆண்டுகளாக மிகக் குறைந்த தொகையினரோடு தம் அரசியல் இலக்குகளில் விட்டுக் கொடுப்பின்றி நின்று நிலைத்ததன் பலனை அக்கட்சி இனி அறுவடை செய்யக் கூடும்.

கூட்டமைப்புக்கு எதிராக உருவாகியிருக்கும் ஓர் அதிருப்தி அலையை அதன் தலைமை எவ்வாறு கையாளப் போகிறது? தனது பிரச்சாரப் பணிகளைத் தொடக்கி வைத்து திருமலையில் ஒரு சந்திப்பில் சம்பந்தர் ஆற்றிய ஒரு உரையை இங்கு சுட்டிக்காட்டலாம். 'நாங்கள் பயணத்தை முடிக்கப் போகிறோம்' என்று அவர் கூறுகிறார். ஆனால் மக்கள் முன்னணி இனித்தான் பயணத்தைத் தொடங்க முயற்சிக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார். ஓர் அரசியல் தலைவர் பயணத்தை முடிக்கப் போகிறோம் என்று கூறுவது பொருத்தமானதா? அது வரலாற்றின் இயங்கியல் விதிகளுக்கு ஏற்புடையதா? ஒரு கதைக்காக வரும் ஆண்டில் சம்பந்தர் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் கண்டுபிடித்து விடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அதோடு பயணம் முடிந்துவிடுமா? மூன்றாவது தரப்பின் அழுத்தம் இன்றி அதை அமுல்படுத்த முடியுமா? சிங்களக் கடும்போக்குவாதிகளிடம் இருந்தும் சிங்கள பௌத்த மயப்பட்டிருக்கும் அதிகார கட்டமைப்பிடம் இருந்தும் நீதி நிர்வாகக் கட்டமைப்பிடம் இருந்தும் யுத்த எந்திரத்திடம் இருந்தும் அதைப் பாதுகாப்பதற்காக மேலும் எவ்வளவு காலம் போராட வேண்டியிருக்கும்? எனவே ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை பயணங்கள் முடியப்போவதில்லை. ஆனால் சம்பந்தர் பயணத்தை முடிக்கப் போவதாகக் கூறுகிறார். மக்கள் முன்னணியை விமர்சிப்பதற்காகவே அவர் அவ்வாறு கூறியிருக்கிறார்.

தமிழர்கள் மத்தியில் உள்ள மிக மூத்த தலைவர் அவர். தனது பிரச்சார மேடைகளில் தனிப்பட்ட தாக்குதல்களை அநேகமாகச் செய்ததில்லை. ஆனால் தனது சொந்தத் தொகுதியில் மக்கள் முன்னணியை விமர்சிப்பதற்காக அவர் பழைய தோம்புகளை இழுத்துக் கதைத்திருக்கிறார். இவ்வாறு வழமைக்கு மாறாக உரையாற்றியிருப்பது எதைக் காட்டுகிறது? கூட்டமைப்பு இதுவரையிலும் அனுபவித்து வந்த ஏகபோகத்திற்கு சோதனை வந்துவிட்டதை அக்கட்சி உணர்ந்துவிட்டது என்பதைத்தானே.?

எனவே வரவிருக்கும் தேர்தலில் தமிழ் வாக்களிப்பு பாரம்பரியத்தின்படி யார் இனமான அலையை அதிகம் தூண்டுகிறார்களோ அவர்களுக்கே வெற்றிவாய்ப்புக்கள் அதிகமாய் இருக்கும். வாக்களிப்பு அலை ஒன்றைத் தூண்டுவதாக இருந்தால் முழு அளவு எதிர்ப்பு அரசியல் பிரச்சாரத்தை முன்னெடுக்கவேண்டியிருக்கும். இந்நிலையில் முழு அளவு எதிர்ப்பு அரசியல் பிரச்சாரத்தை முன்னெடுக்கப் போவது யார்?

அல்லது வாக்களிப்புப் பாரம்பரியத்தை மாற்ற வேண்டும். அதைக் கூட்டமைப்பே செய்ய வேண்டியிருக்கும். ஒரு தீர்வுக்கான மக்கள் ஆணையை கேட்க வேண்டியிருக்கும்.

யார் எதை முன்னெடுத்தாலும் இரண்டு கட்சிகள் மத்தியிலும் மேடைக் கவர்ச்சிமிக்க பேச்சாளர்கள் இல்லை என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். இன்னாருடைய குரலுக்குக் கட்டுப்பட்டு மக்கள் ஆடாமல் அசையாமல் இருந்து பேச்சைக் கேட்பார்கள் என்று கூறுமளவிற்கு தமிழ் மக்கள் மத்தியில் தங்க நாக்குகளோ, வெள்ளி நாக்குகளோ கிடையாது. கடந்தவார கட்டுரையில் கூறப்பட்டதைப் போல தமிழ்த்தேசிய கோசங்களை யு.என்.பியும் முன்வைக்கலாம் என்ற ஒரு நிலைமையே யாழ்ப்பாணத்தில் காணப்படுகிறது. இந்நிலையில் வடமாகாணசபைத் தேர்தலின் போது உருவாக்கப்பட்டதைப் போல ஒரு வாக்களிப்பு அலையை எந்தக் கட்சி உருவாக்கப் போகிறது?

மக்கள் முன்னணியானது வாக்குகளைச் சிதறடிக்கிறது என்றும் அது எதிர்த்தரப்புக்கே சாதகமாய் முடியும் என்றும் ஒரு வழமையான குற்றச்சாட்டு உண்டு. இது எங்கிருந்து தோற்றம் பெறுகிறது? மக்கள் முன்னணியை ஒரு வெற்றியீட்டும் கட்சியாக பார்க்காதவர்கள் மத்தியில் இருந்தே இக்குற்றசாட்டு வருகிறது. வெற்றியீட்டும் கட்சிகள் வாக்குகளைத் திரட்டுகின்றன. தோற்கும் கட்சிகள் வாக்குகளைச் சிதறடிக்கின்றன. மக்கள் முன்னணி வாக்குகளைத் திரட்டுமா? அல்லது சிதறடிக்குமா?

 

 
 
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

 கடந்த ஆறு ஆண்டுகளில் கூட்டமைப்பு தன்னைப் படிப்படியாக புலி நீக்கம் செய்துவிட்டதாக புலிகளின் ஆதவாளர்கள் நம்புகிறார்கள். புலி நீக்கம் மட்டுமல்ல. தேசிய நீக்கமும் நிகழ்ந்திருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஆயுதப் போராட்டத்தில் வெளிக்காட்டப்பட்ட வீரத்தையும், தியாகத்தையும் கூட்டமைப்பின் தலைமை போதியளவிற்குக் கௌரவிக்கவில்லை என்றும் அவர்கள் கோபமடைந்துள்ளார்கள். இக்கோபத்தை புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் அதிகம் காணமுடிகிறது. தமிழகத்திலும் ஓரளவிற்குக் காணமுடிகிறது. இதுவும் கூட்டமைப்பின் மீதான அதிருப்திகள் அதிகரிக்க ஒரு காரணம்.

 

2009 இன் பின்பு சுமந்திரனும், விக்கி ஐயாவும் தமிழ் அரசியலுக்குள் பிரவேசித்து, அரசியல் வெற்றிடங்களை நிரப்ப முயலுகிறார்கள். இதில் விக்கி ஐயா ஓரளவு வெற்றி கண்டு விட்டார். சுமந்திரனின் அரசியல் பிரவேசம் இன்னும் பரிசித்து பார்க்கப்படவில்லை......

இருவரும் அண்மையில் லண்டனுக்கு வந்து புலம்பெயர் சமூகங்களை சந்தித்தார்கள் என்பது குறிப்பிடத் தக்கது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூட்டமைப்புக்கு வந்த சோதனை?


நிலாந்தன்

கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதிலிருந்து அது அனுபவித்து வரும் ஏகபோகத்திற்கு  இப்பொழுது சோதனைக் காலம் தொடங்கிவிட்டது போலத் தெரிகிறது. கடந்த ஆறு ஆண்டுகளிலும் படித்த நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் படிப்படியாக அதிகரித்து வந்த அதிருப்தியும் சலிப்பும் தற்பொழுது சமூகத்தின் ஏனைய மட்டங்களுக்கும் பரவத் தொடங்கியுள்ளன.

அண்மைய ஆண்டுகளில் இணையப் பரப்பில் குறிப்பாக சமூக வலைத்தளங்களில் கூட்டமைப்புக்கு எதிரான கேள்விகளும் விமர்சனங்களும் அதிகரித்து வந்தன. இப்பொழுது அந்த அதிருப்தியானது மெய்நிகர் யதார்த்த பரப்பையும் தாண்டி ஒரு பௌதீக யதார்த்தமாக பரவிவருகிறது. யாழ்ப்பாணத்தின் பத்திரிகைகள் சிலவற்றின் ஆசிரியர் தலையங்கங்களும் அதைப் பிரதிபலிக்கின்றன.

 

எனக்கு தெரிந்த வகையில் இந்த கருத்து சரியெனபடுகிறது ..சரியோ பிழையோ என பார்க்க எலெக்சன் முடியும் மட்டும் காத்திருக்க வேண்டும் ..அதுவரை பொறுமையாக இருப்போம் :) 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு வேண்டும் 
எப்படி புலிகளின்ட ஆயுத போராட்டம் 2009 இல் முடிந்ததோ அப்படியே கூத்தமைப்பின் அஹிம்சை போராட்டம் 2015 இல் முடியட்டும் 

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் மீது ஒரு அதிருப்தி அலை இருப்பது போல் காட்டி, ததேமமு வுக்கு ஆதரவாய் ஒரு அலை வீசுவதுபோல் காட்ட நிலாந்தன் படாத பாடு படுகிறார்.

அடுத்த பேச்சுவார்த்தை என்பது எல்லை நிர்ணயம் பற்றியதாய் இருக்கும் என்று 2097 இல்கூறிய ஆய்வுத்திலகம்தான் இவர்.

யாழ்பாணத்தில் ததேமமுவால் முக்தக்கி ஒரு சீட் பெற முடியலாம். அதன் பிரதிபலனாக டக்கி ரெண்டும், விசயா ஒண்டும் அடிப்பார்கள். கூட்டமைப்பு 3 ஆகச் சுருங்கும்.

ஆனால் யாழிற்கு வெளியேதான் இவர்களால் ஒரு சீட்டையு பெறமுடியாது.

ஆனால் யாழிற்கு வெளியே இவர்களால் கூட்டமைப்பு எடுக்கும் சீட்டை வலுவாக குறைக்க முடியும். உதாரணமாக மட்டக்களப்பில் கணேசமூர்தி போன்றோர் யுஎன்பியில் கேட்கிறார்கள்.

இவருக்கு தொகுதியில் நல்ல பேர் உண்டு, யுன்பியில் முஸ்லீம் காங்கிரசும் கேட்பதால் - இவர் ஒரு சீட் வெல்லக்கூடும். அப்படி நடந்தால் அது கூட்டமைப்பில் இருந்தே போகும்.

இதில் ஒரு நீண்ட நோக்கு பாதகம் முழுத்தமிழ் தேசிய அரசியலின் எதிர்காலத்துக்கும் உண்டு.

எம்மிடம் எப்போதும் சலுகை அரசியலுக்கு வரவேற்பு உண்டு. துரையப்பா, ராஜதுரை, செல்லத்தம்பு, ராஜமனோகரி இப்படி.

இடையில் இனவாதம் எமக்குத் தந்த கொடுமையும், புலிகளின் பலமும், எம் மக்களை தேசியத்தின் பால் கட்டிப் போட்டு வந்தது.

புலிகள் செய்த மிக நல்ல செயல்களில் ஒன்று சிவராமின் ஐடியாவுக்கு செயல்வடிவம் கொடுத்து கூட்டமைப்பை உருவாக்கியது.

இப்போ இனவாதம் எம்மை வெளிப்படையாக கொடுமை செய்வதில்லை ( மண் அபகரிப்பு போன சைலன்ட் கில்லர்ஸ் தொடர்கிறது). இப்போ புலிகளின் பலமும் எம் சார்பில் இல்லை. இப்போ கூட்டமைப்பு பலம் இழகுமாயின், அந்த இடத்தை ததேமமு வை கொண்டு ஒரு போதும் நிரப்ப முடியாது.

குறிப்பாக கிழக்கிலும் வன்னியிலும்.

கூட்டமைப்பின் இடங்களை நிரப்பப் போவது விஜயகலா போன்ற சலுகை அரசியல்வாதிகளே.

இந்த சலுகை அரசியல்வாதிகளின் பெருக்கத்தை ரணில் போன்றோர் நிச்சயம் ஊக்குவிப்பர்.

மிகை தேசியம் பேசி கஜேந்திகுமார் வெண்டாலும் அவர்களை யாழின் ஒரு எம்பி என விஜயகலா ரேஞ்சில்தான் சிங்களம் நடத்தும். இவர்களும் 5 வருடம் அறிக்கைப் போர் செய்து விட்டு அடுத்த தேர்தலுக்கு வருவார்கள்.

ஆனால் மக்களுக்கு தேசிய அரசியல் அலுப்புத்தட்டிவிடும்.

ஈற்றில் மக்களும் தேசியத்தை கைவிட்டு, முஸ்லீம்களைப் போல் சலுகை அரசியல் பக்கம் தாவி விட. தமிழ்தேசிய அரசியலானது யாழில் இரெண்டு எம்பிகள் எனும் அளவில் சுருங்கி விடும்.

இப்படி ஒரு காலப் பொறிக்குள்தான் பிரபாவை இழுத்து புலிகளை அழித்தார்கள்.

இப்போ அதே முறையில் கூட்டமைப்பையும் அதனூடே தமிழ் தேசிய அரசியலின் முழு எதிர்காலத்தையுமே குறிவைக்கிறார்கள்.

பார்க்கலாம் மக்கள் இதை விளங்கி செயல்படுவார்களா இல்லையா என்று.

ஒன்று மட்டும் நிச்சயம் கூட்டமைப்பு கலகலத்துப் போனால் - இனி தமிழ் தேசிய அரசியல் இலங்கையில் காலாகாலத்துக்கும் தலை எடுப்பது கடினமே.

எங்கள் எல்லோருக்கும் இதுதான் கடைசி பஸ். டிரைவரோட கொழுவிக் கொண்டு, அதையும் கொழுத்தியே தீருவோம் என்று அடம் பிடித்தால் அழிவுதான்.

Edited by goshan_che

கூட்டமைப்பின் மீது ஒரு அதிருப்தி அலை இருப்பது போல் காட்டி, ததேமமு வுக்கு ஆதரவாய் ஒரு அலை வீசுவதுபோல் காட்ட நிலாந்தன் படாத பாடு படுகிறார்.

அடுத்த பேச்சுவார்த்தை என்பது எல்லை நிர்ணயம் பற்றியதாய் இருக்கும் என்று 2097 இல்கூறிய ஆய்வுத்திலகம்தான் இவர்.

யாழ்பாணத்தில் ததேமமுவால் முக்தக்கி ஒரு சீட் பெற முடியலாம். அதன் பிரதிபலனாக டக்கி ரெண்டும், விசயா ஒண்டும் அடிப்பார்கள். கூட்டமைப்பு 3 ஆகச் சுருங்கும்.

ஆனால் யாழிற்கு வெளியேதான் இவர்களால் ஒரு சீட்டையு பெறமுடியாது.

ஆனால் யாழிற்கு வெளியே இவர்களால் கூட்டமைப்பு எடுக்கும் சீட்டை வலுவாக குறைக்க முடியும். உதாரணமாக மட்டக்களப்பில் கணேசமூர்தி போன்றோர் யுஎன்பியில் கேட்கிறார்கள்.

இவருக்கு தொகுதியில் நல்ல பேர் உண்டு, யுன்பியில் முஸ்லீம் காங்கிரசும் கேட்பதால் - இவர் ஒரு சீட் வெல்லக்கூடும். அப்படி நடந்தால் அது கூட்டமைப்பில் இருந்தே போகும்.

இதில் ஒரு நீண்ட நோக்கு பாதகம் முழுத்தமிழ் தேசிய அரசியலின் எதிர்காலத்துக்கும் உண்டு.

எம்மிடம் எப்போதும் சலுகை அரசியலுக்கு வரவேற்பு உண்டு. துரையப்பா, ராஜதுரை, செல்லத்தம்பு, ராஜமனோகரி இப்படி.

இடையில் இனவாதம் எமக்குத் தந்த கொடுமையும், புலிகளின் பலமும், எம் மக்களை தேசியத்தின் பால் கட்டிப் போட்டு வந்தது.

புலிகள் செய்த மிக நல்ல செயல்களில் ஒன்று சிவராமின் ஐடியாவுக்கு செயல்வடிவம் கொடுத்து கூட்டமைப்பை உருவாக்கியது.

இப்போ இனவாதம் எம்மை வெளிப்படையாக கொடுமை செய்வதில்லை ( மண் அபகரிப்பு போன சைலன்ட் கில்லர்ஸ் தொடர்கிறது). இப்போ புலிகளின் பலமும் எம் சார்பில் இல்லை. இப்போ கூட்டமைப்பு பலம் இழகுமாயின், அந்த இடத்தை ததேமமு வை கொண்டு ஒரு போதும் நிரப்ப முடியாது.

குறிப்பாக கிழக்கிலும் வன்னியிலும்.

கூட்டமைப்பின் இடங்களை நிரப்பப் போவது விஜயகலா போன்ற சலுகை அரசியல்வாதிகளே.

இந்த சலுகை அரசியல்வாதிகளின் பெருக்கத்தை ரணில் போன்றோர் நிச்சயம் ஊக்குவிப்பர்.

மிகை தேசியம் பேசி கஜேந்திகுமார் வெண்டாலும் அவர்களை யாழின் ஒரு எம்பி என விஜயகலா ரேஞ்சில்தான் சிங்களம் நடத்தும். இவர்களும் 5 வருடம் அறிக்கைப் போர் செய்து விட்டு அடுத்த தேர்தலுக்கு வருவார்கள்.

ஆனால் மக்களுக்கு தேசிய அரசியல் அலுப்புத்தட்டிவிடும்.

ஈற்றில் மக்களும் தேசியத்தை கைவிட்டு, முஸ்லீம்களைப் போல் சலுகை அரசியல் பக்கம் தாவி விட. தமிழ்தேசிய அரசியலானது யாழில் இரெண்டு எம்பிகள் எனும் அளவில் சுருங்கி விடும்.

இப்படி ஒரு காலப் பொறிக்குள்தான் பிரபாவை இழுத்து புலிகளை அழித்தார்கள்.

இப்போ அதே முறையில் கூட்டமைப்பையும் அதனூடே தமிழ் தேசிய அரசியலின் முழு எதிர்காலத்தையுமே குறிவைக்கிறார்கள்.

பார்க்கலாம் மக்கள் இதை விளங்கி செயல்படுவார்களா இல்லையா என்று.

ஒன்று மட்டும் நிச்சயம் கூட்டமைப்பு கலகலத்துப் போனால் - இனி தமிழ் தேசிய அரசியல் இலங்கையில் காலாகாலத்துக்கும் தலை எடுப்பது கடினமே.

எங்கள் எல்லோருக்கும் இதுதான் கடைசி பஸ். டிரைவரோட கொழுவிக் கொண்டு, அதையும் கொழுத்தியே தீருவோம் என்று அடம் பிடித்தால் அழிவுதான்.

உங்கள் பதிவீல் சில தவறுகள் இருக்கின்றன.

மட்டக்களப்பில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது.

2096ம் ஆண்டு என்று குறிப்பிட்டிருப்பது வேறு ஆண்டாக இருக்க வேண்டும்.

 

சரி! இங்கே சில தெளிவுபடுத்தல்களை செய்ய வேண்டும்.

 

தமிழர்களின் ஒற்றுமைக்காக விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்ட அமைப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு. எனவே விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்ட அமைப்பை மக்கள் எப்படியும் ஆதரிப்பார்கள் என்ற எண்ணம் அதன் தலைமைக்கு ஏற்பட்டது. கூட்டமைப்பின் சர்ரபில் ஒரு தும்புக்கட்டையை நிறுத்தினாலும் அது வெற்றி பெறும்  என்ற எண்ணக்கருவும் அதனால் தான் ஏற்பட்டது. 

தமிழ் தேசியக் கூட்டமைப்பை சரியான பாதையில் இட்டுச் செல்வதற்கும் அதற்கு ஒரு போட்டிக் கட்சி தேவைப்படுகிறது. ஜனநாயக தேசயத்தில் ஒரு போட்டிக் கட்சி இல்லாவிட்டால் தான்தோன்றித்தனமான செயல்பாடுகள் ஏற்படுவது இயற்கை. அதனர்ல தான் எதிர்க்கட்சியின் அவசியம் பற்றீ எப்போதுமே பேசப்பட்டு வந்திருக்கிறது.

இன்றைய நிலையில் அந்தப் போட்டிக் கட்சி என்ற நிலையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி பெற்றிருக்கிறது. நீங்கள் குறிப்பிடுவதைப் போல அது வடக்கிற்கு வெளியே இன்னமும் கால் பதிக்கவிலலை என்பது ஓரளவு உண்மையிருந்தாலும் கடந்த தேர்தலில் யாழ்ப்பாணத்திலும் கால் பதிக்காத நிலை இருந்தது என்பதும் இப்போது நிலமை மாறியிருக்கிறது என்பதும் உ;ணமையே. அந்த வகையில் இன்னும் சில ஆண்டுகளில் கிழக்கிலும் இந்த மாற்றம் ஏற்படலாம்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரசன்னம் தமிழ் பிரதிநிதிகளின் தெரிவில் வீழ்ச்சியை ஏற்படுத்தலாம் என்ற உங்களது கருத்தையும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் இதற்கு முற்று முழுதாக பொறுப்புக் கூற வேண்டியவர்கள் த.தே. கூட்டணியினரே.

கூட்டணிக்குள் இருக்கும் கட்சிகளின் கருத்துக்களைக் கூட ஏற்றுக் கொள்ள மறுக்கும் ஒரு மனப்பான்மையில் சம்பந்தன் சுமந்திரன் உள்ளிட்ட தலைமைகள் செயல்படுகின்ற நிலையில் வெளிக் கட்சிகளின் கருத்துக்களை இவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் அல்லது தங்களது நிலையை மறுபரிசீலனை செய்வார்கள் என்பதற்கு என்ன நிச்சயம் இருக்கிறது.

கூட்டணிக்குள் இருக்கும் ஏனைய கட்சீகளையே இவர்கள் ஆயுதம் தூக்கியவர்கள் நாங்கள் கறை படியாத கைகளுக்கச் சொந்தக்காறர்கள் என விமர்சிக்கும் தமிழரசுக் கட்சியின் தலைமையை மற்றவர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்.

 

இந்த நிலையில் கீரைக் கடைக்கும் எதிர்க்கடை தேவை என்பதாய் தோன்றியுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வருகை தமிழ் தேசிய்க கூட்டமைப்பு பிளவடையாதிருப்பதற்கும் உந்துதலை ஏற்படுத்தியிருக்கும்.

 

மாறாக இந்தத் துர்தல் முடிந்த பின்பாவது தமது கொள்கைகளை மறு பரிசீலனை செய்ய சம்பந்தனும் சுமந்திரனும் முன்வநதால் எதிர்காலத் தமிழர்களின் அரசியலுக்கு ஒரு சாதகமான விடயமாக அமையலாம். 

இது நடக்குமா என்பது சம்பந்தன் சுமந்திரனின் கருத்துக்களை உள்வாங்கும் மனநிலையிலேயே உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

திருத்தங்களுக்கு நன்றி.

உங்கள் கீரைக் கடை வியாக்கியானம் முன்பே விவாதித்ததுதான்.

எமது சூழலில் -

கடை = தமிழ் தேசியம்

எதிர்கடை = டக்கி விசயா எட்செறா

ததேமமு போட்டிருப்பது கடைக்குள் கடை.

இது எதிர் கடையின் வியாபாரத்தை கூட்டுமே ஒழிய வேறில்லை.

இங்கே தமிழர்களான நாங்கள் கடைக் காரர் மட்டுமே. நுகர்வோர் நிலையில் இருப்பவர்கள் சிங்களவர்கள்.

நாங்கள், கடை, உள்கடை, எதிர் கடை எனப் பிரிவது அவர்களுக்கு மிகவும் நல்லது. எமக்கல்ல.

எதிர்கடை ஒன்று தேவை என்றால் - பிரபாவே ரெண்டு அமைபுக்களை உருவாக்கி இருப்பாரே?

பல அமைபுக்கள் சேர்ந்த ஒற்றை அமைப்பே அப்போதும் இப்போதும் எமது தேவை.

 

திருத்தங்களுக்கு நன்றி.

உங்கள் கீரைக் கடை வியாக்கியானம் முன்பே விவாதித்ததுதான்.

எமது சூழலில் -

கடை = தமிழ் தேசியம்

எதிர்கடை = டக்கி விசயா எட்செறா

ததேமமு போட்டிருப்பது கடைக்குள் கடை.

இது எதிர் கடையின் வியாபாரத்தை கூட்டுமே ஒழிய வேறில்லை.

இங்கே தமிழர்களான நாங்கள் கடைக் காரர் மட்டுமே. நுகர்வோர் நிலையில் இருப்பவர்கள் சிங்களவர்கள்.

நாங்கள், கடை, உள்கடை, எதிர் கடை எனப் பிரிவது அவர்களுக்கு மிகவும் நல்லது. எமக்கல்ல.

எதிர்கடை ஒன்று தேவை என்றால் - பிரபாவே ரெண்டு அமைபுக்களை உருவாக்கி இருப்பாரே?

பல அமைபுக்கள் சேர்ந்த ஒற்றை அமைப்பே அப்போதும் இப்போதும் எமது தேவை.

 

ஒரேயொரு கேள்விக்கு மட்டும் பதில் தாருங்கள் கோசான்

தமது உண்மையான எண்ணப்பாடு வேறாயிருந்த போதிலும்  தேர்தல் வாக்குக்களுக்காக மீண்டும் பிரபாகரனே எம் தலைவர் என்று பேிச கைதட்டல் வாங்குவதையும் தலைவரின் மூத்த பிள்ளை  சம்பந்தன்  இரண்டாம் பிள்ளை சுமந்திரன் என்று பேசி வாக்குப் பொறுக்குவதையும் நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

 

 

 

2010 வரை கூட்டமைப்பின் கடை தேசியம் சுயநிர்ணயம் சுயாட்சி போன்ற திம்புக் கோட்பாடுகளை பின்பற்றியது உ;ண்மை தான். அதைத் துணிந்து பாராளுமன்றத்திலும் கூறியனார்கள். 

ஆனால் இப்போது ஒற்றையாட்சி பிரிக்கப்பட முடியாத சிறிலங்கா என்றெல்லாம் கூறிய பின்னர் அவர்களது தேசியக் கடை  மூடப்பட்டு சிங்களத்தின் ஊதகுழலாக மாறாப் போனது. 

எனவே தமிழ் தேசிய்க கூட்டமைப்பின் கடையை தேசியத்தின் கடையாக இனியும் பார்க்க முடியாது. 

மாறாக தேசியத்தின ;அடையாளம் பொறிக்கப்பட்ட பையினுள் உளுத்துப் போன பருப்பை வைத்து விற்கும் தந்திரக்காரனின் கடையாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.

 

  • கருத்துக்கள உறவுகள்

மணி,

அரசியல் தலைமை என்பது நாம் மக்களை வழி நடத்துவது. மக்கள் போகும் போக்குக்கு இழுபடுவதில்லை.

சம் சும் பிரபாவை பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. இந்த தேர்தல் பிரபா நல்லவரா கெட்டவரா என்பதை பற்றி அல்ல. பெரும்பாலான பேச்சாளர்கள் தேர்தல் விஞ்ஞாபனம் பற்றியே பேசினார்கள்.

இரெண்டு புது முகங்கள் பிரபாவை பற்றி பேசினார்கள்.

இதை உக்காந்து பார்ப்பதை தவிர சம் சும் வேறு என்ன செய்ய முடியும்?

மேடையில் வைத்து இல்லை என்றா மறுதலிக்க முடியும். அப்படிச் செய்தால் அது பிரபாவை அவமதித்ததாய் சித்தரிக்கப் படும்.

சம் சும் மைப் பொறுத்தவரை அவர்கள் பிரபாவை புகழவும் இல்லை இகழ்வும் இல்லை. அவரைத் தாண்டிப் போய் அரசியல் செய்ய விழைகிறார்கள். ஆகவேதான் அவரைப் பற்றி ஏதும் சொல்லவில்லை.

இந்த நேர்மை பராட்டப் படவேண்டியதே.

சராவும் உதயனும் பொறுக்கி அரசியல் செய்வது என்ன புதிசா?

ஆனால் பாருங்கள் சும் தோற்றாலும் சரா வெல்லுவார். இதுதான் அரசியல்.

மக்களிடம் முடிந்தளவுக்கு உண்மைகள் சொல்லப்பட்டு விட்டன.என்ன போய் சொல்லியாவது வாக்கு கேட்பது அவர்களின் சாதுரியம்.யாருக்கு வாக்களிப்பது என்பது மக்களின் சுதந்திரமான முடிவு.

 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்திலை இந்தமுறை சொல்லி அடிக்கிறம் 6 சீட். 1 சீட்  டக்கிளஸ் அங்கிளுக்குப் போகிது. சுமந்திரன் ஸார் தான் அதிகூடிய விருப்புவாக்குகளை அள்ளிக் குவிக்கிறார். 

கடைசியில் விளையாட்டு கழகங்களின் நிலைக்கு தமிழரின் தலைமை கட்சிகளின் நிலை அவர்களின் வால்களினால் அடிமைத்தனமாக சுய புத்திஇல்லாது வெளிவருவது சாபகேடு மட்டும் அல்ல அரசியல் வினைதிரன் பற்றி கவலை இல்லாதவர்கள். யாழின் குழு நிலை வாதமே இவ்வாறு எழுத  தூண்டுகின்றது .

உண்மையில் சுமத்திரன் இதயசுத்தியுடன் தன் வேலையை பார்த்து இருந்ததால் இவ்வளவு பிடுங்கு பாடு வந்துருக்காது கடைசியாக அவரின் கூட்டங்களில் எடுக்கபட்ட படங்கள் யதார்த்ததை உணர்த்துவதை காட்டுகின்றது . நயவஞ்சக சிங்கள இந்திய அரசுகளின்   ஆசி என்றும் தனக்கு உண்டு என்று கோதாவில் இறங்கி உள்ளார் .ஆனால் இதில் தோல்வி அடைந்தால் இனி அரசியலுக்கு முழுக்கு போடுவது சுமந்திரன் தரவளிகளுக்கு நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் தோற்பார் எண்டு ஆகஸ்ட் 17 வரையுமாவது கனவு காணுங்கோ! :grin:

யாழ்ப்பாணத்திலை இந்தமுறை சொல்லி அடிக்கிறம் 6 சீட். 1 சீட்  டக்கிளஸ் அங்கிளுக்குப் போகிது. சுமந்திரன் ஸார் தான் அதிகூடிய விருப்புவாக்குகளை அள்ளிக் குவிக்கிறார். 

நிறைய சாத்தியகூறுகள் காணப்படுகிறது

  • கருத்துக்கள உறவுகள்

திருத்தங்களுக்கு நன்றி.

உங்கள் கீரைக் கடை வியாக்கியானம் முன்பே விவாதித்ததுதான்.

எமது சூழலில் -

கடை = தமிழ் தேசியம்

எதிர்கடை = டக்கி விசயா எட்செறா

ததேமமு போட்டிருப்பது கடைக்குள் கடை.

இது எதிர் கடையின் வியாபாரத்தை கூட்டுமே ஒழிய வேறில்லை.

இங்கே தமிழர்களான நாங்கள் கடைக் காரர் மட்டுமே. நுகர்வோர் நிலையில் இருப்பவர்கள் சிங்களவர்கள்.

நாங்கள், கடை, உள்கடை, எதிர் கடை எனப் பிரிவது அவர்களுக்கு மிகவும் நல்லது. எமக்கல்ல.

எதிர்கடை ஒன்று தேவை என்றால் - பிரபாவே ரெண்டு அமைபுக்களை உருவாக்கி இருப்பாரே?

பல அமைபுக்கள் சேர்ந்த ஒற்றை அமைப்பே அப்போதும் இப்போதும் எமது தேவை.

மிகவும் கவனமாக  ஒன்றை மறைக்கமுயல்கிறீர்கள்

கூட்டமைப்புக்குள்  ஏற்கனவே பல கடைகள்

அவற்றில் தமிழரசுக்கட்சி என்ற கடை உள்ளுர் பொருட்களை விற்பதை நிறுத்திவிட்டது

அதனால் தான் புதிய கடை ஒன்று தேவைப்படுகிறது

தேவை இருக்கும் போது புதிய கடை வருவது உணரப்படுகிறது

தப்பு மாறியவர்களில் தான்...

அவர்களுக்கு உள்ளுர்  பொருட்கள் பற்றி கவலையில்லை..

Edited by விசுகு

அண்ணை காலாவதியான பொருட்கள், மற்றும் ஒவ்வாத பொருட்களை அகற்றி....கடையை புனருத்தானம் பண்ணி பழைய இடத்திலே நடத்தினால் நல்லம்....

பார்ப்பம் எல்லாதிட்கும் சனம் என்னத்தை விரும்புதெண்டு... 

இப்புடி எத்தினை கடையெண்டு திறக்குறது

Edited by Surveyor

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை காலாவதியான பொருட்கள், மற்றும் ஒவ்வாத பொருட்களை அகற்றி....கடையை புனருத்தானம் பண்ணி பழைய இடத்திலே நடத்தினால் நல்லம்....

பார்ப்பம் எல்லாதிட்கும் சனம் என்னத்தை விரும்புதெண்டு... 

இப்புடி எத்தினை கடையெண்டு திறக்குறது

கூட்டுறவுக்கடை ஒரு கடையாகத்தான் இருக்கணும்

அது தான் எல்லோர் விருப்பமும்

பெயருக்கேற்ப இயங்கணும்

ஒரு சிலர் அதை வியாபாரத்தளமாகப்பாவிக்கத்தொடங்கித்தானே சிக்கலே ஆரம்பம்..

இது ஒரு  நகைச்சுவை இரண்டு  தமிழ் கட்சிகளும் மக்கள்  தீர்வு  பற்றி  இன்னும்  பேசவே  இல்லை தங்கள்  பிரச்சினை  பற்றியே  மாறி மாறி  விமர்சனம்  நடக்கு  இதில்  எங்க  யாரு  தீர்வு  பெற்று  கொடுப்பது 

அவருக்கு ரணில் சொகுசு வாகனம்  கொடுத்தது  தான்  எங்க  கவலை சனத்துக்கு  காணி கொடுக்காது  விட்டது  பற்றி  அல்ல .

 

ஆய்த எழுத்து படமும் இதைத்தான் சொல்லுகின்றதோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.