Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசியப் பட்டியல் நியமனம் தமிழரசுக் கட்சியின் முடிவே தவிர, கூட்டமைப்பின் முடிவல்ல! - என்கிறார் சுரேஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Tuesday 2015-08-25 07:00]
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவு என்பது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முடிவல்ல என்றும், அது தன்னிச்சையாகவும் ஒருதலைப்பட்சமாகவும் தமிழரசுக் கட்சியினால் எடுக்கப்பட்ட முடிவு என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் ஈபிஆர்எல்எஃப் கட்சியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவு என்பது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முடிவல்ல என்றும், அது தன்னிச்சையாகவும் ஒருதலைப்பட்சமாகவும் தமிழரசுக் கட்சியினால் எடுக்கப்பட்ட முடிவு என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் ஈபிஆர்எல்எஃப் கட்சியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

  

யாழ் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்ட சுரேஸ் பிரேமச்சந்திரன் தோல்வியடைந்ததையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் ஒரு கட்சியின் தலைவரான அவருக்கு தேசிய பட்டியலில் இடமளிக்க வேண்டும் என கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் அங்கம் வகிக்கும் மற்ற கட்சித்தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

ஆயினும் அந்தக் கோரிக்கை தொடர்பில் சரியான முடிவு எடுக்காமல் தமிழரசுக்கட்சி தனது விருப்பத்திற்கு இரண்டு பேரை தேசியப்பட்டியல் உறுப்பினர்களாக நியமித்திருப்பதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டினார்.

இந்த கோரிக்கை தொடர்பில் திருகோணமலையில் இரண்டு முக்கிய பேச்சுகள் நடைபெற்றிருந்த போதிலும், பேச்சுகளுக்கு அமைவாக முடிவு எடுக்கப்படவில்லை என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

"தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கான தேசியப் பட்டியலுக்கு தமிழரசு கட்சியில் இருக்கும் சில நபர்கள் தமது கட்சியின் இரண்டு உறுப்பினர்களை நியமித்திருப்பது, கூட்டமைப்பில் இருக்கும் தமிழரசு கட்சி தவிர்த்த மற்ற கட்சிகளுக்கு ஏற்புடைய செயலல்ல. எல்லோரும் சேர்ந்து விதை விதைப்பதும், அறுவடை செய்யும்போது தமிழரசு கட்சி மட்டும் செய்துகொண்டு போவது என்பதும் ஆரோக்கியமான அரசியலுக்கும் நல்லதல்ல; ஒரு கூட்டமைப்பு தத்துவங்களுக்கும் நல்லதல்ல; ஆனால் இதனை மிகவும் வெட்கம் கெட்டத்தனமாக தமிழரசு கட்சி தொடர்ந்து செய்கிறது என்பதுதான் ஒரு விடயம்" என்றார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

அதேசமயம், இந்த பிரச்சனை குறித்து தமது கட்சி இரண்டொரு தினங்களில் விரிவானதொரு அறிக்கையை வெளியிடவுள்ளதாக தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன், இதுகுறித்த விரிவானதொரு நேர்காணலை வழங்குவதற்குத் தற்போது தான் தயாரில்லை என்றும், சுருக்கமானதொரு கருத்தை மட்டுமே இப்போது தன்னால் தெரிவிக்க முடியும் என்றும் அவர் கூறினார். 

http://seithy.com/breifNews.php?newsID=138988&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் அன்று கஜே கோஸ்டிக்குச் சொன்னதைத்தான் இன்றும் சொல்கிறோம் விருப்பமில்லாவிட்டால் எவரும் கூட்டமைப்பில் இருந்து விலகிக்கொள்ளலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

சம் சும் கும்பல்.. உங்களையும் தேற விடாது.. தமிழர்களையும் உருப்பட விடாது. தானும் கெட்டு தன் இனத்தையும் கெடுக்கும் ஒரு அலுவலை தான் சம் சும் கும்பல் இப்ப முதன்மையா எஜமான விசுவாசம் கொண்டு முன்னெடுத்து வருகுது. வாக்குப் போட்ட மக்களுக்கு தெளிவான அரசியல் அறிவில்லாட்டி இதுதான் நடக்கும்.

கூட்டமைப்பை உருவாக்க.. தமிழரசுக் கட்சியை விட புளொட்டை விட மற்றவர்கள் பட்ட பாடு அதிகம். இப்ப அவர்கள் எல்லாம் வெளிய. கூட்டமைப்பை புறக்கணித்த புளொட் உள்ள. தமிழர் விடுதலைக் கூட்டணியில் தலைமைக்கு சண்டை போட்டிட்டு ஓடியாந்த சம்பந்தன் இப்ப உள்ள. முதலில் தமிழரசுக் கட்சி கூட்டமைப்பை விட்டு வெளியேறினால்.. அல்லது வெளியேற்றப்படனும். அப்பதான் கூட்டமைப்பு வெளில உள்ள பலரையும் உள்ளடக்கி பலப்படும். கொள்கையில் உறுதியாக இருந்து..செய்யப்பட்ட தியாகங்களை மலினப்படுத்தி அரசியல் குறுகிய இலாபம் பெற முனையாமல்.. உறுதியாக இருக்கும். tw_angry:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த இரண்டு வருடங்களில்.... கூட்டமைப்பு என்னும் கட்சியே.... இருக்காது.
சுரேஷ் பிரேமச் சந்திரனை.... கஜேந்திரகுமாரின், "தமிழ் தேசிய மக்கள் முன்னணியில்" இணைய வரும்படி.... அன்பாக அழைக்கின்றோம்.:)

  • கருத்துக்கள உறவுகள்

சுரேஸ் தனக்கு கட்சியில் விருப்பமில்லை என்றும் விலகுவதாகவும் எப்போ சொன்னவர் ? அவரின் கருத்துக்கு பதிலளிக்க தேவை இல்லை என ஏன் சம்பந்தர் போக்கு காட்டுகிறார்,,

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த இரண்டு வருடங்களில்.... கூட்டமைப்பு என்னும் கட்சியே.... இருக்காது.
சுரேஷ் பிரேமச் சந்திரனை.... கஜேந்திரகுமாரின், "தமிழ் தேசிய மக்கள் முன்னணியில்" இணைய வரும்படி.... அன்பாக அழைக்கின்றோம்.:)

தமிழ் தேசிய கூட்டமைப்பு தேசியத்தலைவரால் உருவாக்கப்பட்டது. யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்ற பழமொழிக்கு இணையாகவே இலங்கைவாழ் தமிழ்மக்களால் கூட்டமைப்பு போற்றப்படுவதை சம், சுங் கூட்டம் மிக நன்றாகவே தெரிந்து வைத்துள்ளது. இன்றைய நிலையில் கூட்டமைப்பை உடைக்க முயல்பவர்கள் அங்குள்ள மக்களால் நிச்சயம் தூக்கியெறியப் படுவார்கள்.    

  • கருத்துக்கள உறவுகள்

தனித்து போய் கட்சி தொடங்கினால் கஜேந்திரன்,ஆனந்தசங்கரி போன்றோரு க்கு நடந்த நிலைதான் உங்களுக்கும் வரும்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் அன்று கஜே கோஸ்டிக்குச் சொன்னதைத்தான் இன்றும் சொல்கிறோம் விருப்பமில்லாவிட்டால் எவரும் கூட்டமைப்பில் இருந்து விலகிக்கொள்ளலாம்!

அங்கை இருக்கிறவை தங்கடை பிரச்சனையை தாங்களே பாத்துக்கொள்ளுறம் எண்டு அறிக்கை விடுகினம்....நீங்கள் என்னடாவெண்டால் புலம்பெயர்தேசத்திலையிருந்து ஓடர் போடுறியள்!!!!! confused0006.gif

நீங்கள் சுமந்திரன் வாலா?happy01941.gif

கூட்டமைப்பு விரைவில் தமிழரசு கட்சியாக மாறிவிடும் .இந்த தேர்தலில் அப்படிதான் போட்டியிட்டார்கள்

கூட்டமைப்பு ஒரு கட்சியாக பதியாமல் இருப்பது ஒரு செய்தி வந்தபோது இதுபற்றி ஒரு பதிவு ஒருவருடத்திற்கு முதல் எழுதினேன் .

பெயரில் என்ன இருக்கு என்று யோசித்தேன் இப்ப வாலுகளின் அலட்டலகளை பார்க்க நிட்சயம் மாறவேண்டும் சும்மா எதற்கெடுத்தாலும் தலைவர் உருவாக்கிய கூ ட்டமைப்பு என்று கொண்டு ,

தலைவர் உருவாகிய கூட்டமமைப்பில் இருந்து அவர்களின் முக்கிய ஆட்களை துரத்திவிட்டு தலைவர் வேண்டாத புளொட்டை உள்வாங்கிவிட்டார்கள் இப்பவும் தலைவர்  உருவாகியது என்று கொண்டு சிலர் .

கூட்டமைப்பு விரைவில் தமிழரசு கட்சியாக மாறிவிடும் .இந்த தேர்தலில் அப்படிதான் போட்டியிட்டார்கள்

கூட்டமைப்பு ஒரு கட்சியாக பதியாமல் இருப்பது ஒரு செய்தி வந்தபோது இதுபற்றி ஒரு பதிவு ஒருவருடத்திற்கு முதல் எழுதினேன் .

பெயரில் என்ன இருக்கு என்று யோசித்தேன் இப்ப வாலுகளின் அலட்டலகளை பார்க்க நிட்சயம் மாறவேண்டும் சும்மா எதற்கெடுத்தாலும் தலைவர் உருவாக்கிய கூ ட்டமைப்பு என்று கொண்டு ,

தலைவர் உருவாகிய கூட்டமமைப்பில் இருந்து அவர்களின் முக்கிய ஆட்களை துரத்திவிட்டு தலைவர் வேண்டாத புளொட்டை உள்வாங்கிவிட்டார்கள் இப்பவும் தலைவர்  உருவாகியது என்று கொண்டு சிலர் .

மிக மிக கேவலமான புளொட் இணை உள் வாங்கலாம் மற்றவர்கள் தான் கூடாதோ ....கூட்டமைப்பில் இருந்து எவரும் விலகி பாருங்கள் ...அப்ப தெரியும் தமிழரசு கட்சியா அல்லது வேறு எவருமா என்று ....எத்தனை தடவை சொல்லி உள்ளேன் ...அரசியல் என்பது உங்களுக்கு விளங்காத ஒன்று ...எத்தனை நாளைக்கு இப்படி உல்டா விடுவீர்கள் ....

இனி எப்படி தமிழரசு கட்சி இருக்க போகுது என்பதை மக்கள் விருப்பு வாக்குகள் மூலம் காட்டி உள்ளார்கள் ....சம் இப்பவே தள்ளாடும் வயது ....இனி காலம் தலைவரின் சிந்தனைக்கு ஏற்ப நடத்த போகின்றது வெளிச்சம் .....

  • கருத்துக்கள உறவுகள்

.இனி காலம் தலைவரின் சிந்தனைக்கு ஏற்ப நடத்த போகின்றது வெளிச்சம் .....

தலைவரைக் காட்டித்தான் கூட்டமைப்பு ஓட்டுப்பெற்றது வெளிப்படை.:unsure:

சந்திரனைப் பார்த்து நாய் குலைத்தது என்று சொல்வார்கள். ஆனால் நாய் பார்த்துக் குலைப்பதற்கும் சந்திரன் வேண்டுமென்பது குலைப்பவருக்குப் புரிவதில்லை.:(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.