Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டைப் பிரிப்பதற்கு நாம் எதிரானவர்கள்: சம்பந்தன் சிங்களத்தில் பேட்டி (வீடியோ)

Featured Replies

இந்தமாதிரி அரசியல் வாதிகளை நம்பி அப்பாவி ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் தங்கள் இன்னுரை ஈகம் செய்துள்ளதை நினைத்தால்தான் வேதனையாக உள்ளது.

விடுதலை போராட்டங்கள் ஆரம்பிப்பதற்கு முன்னர் இவர்கள் மேடைகளில் இவ்வாறு பேசி இருந்தால் இவிளைஞர்கள் இறந்திருக்கமாட்டார்கள்.  

 

நீங்கள் என்ன சொல்ல வாறிங்க?

ஆயுத போராட்டம் தொடங்கி எதிரியை தேடமுன்னம் அந்த அரசியல் வாதிகளை போட்டு தள்ளியாச்சே. 

அதுக்குப்பிறகு எத்தனையோ நடந்து முடிந்து விட்டது இப்போ வந்து மறுபடியும் அரிவரியில் இருந்து தொடங்க வேண்டுமா? 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் என்ன சொல்ல வாறிங்க?

ஆயுத போராட்டம் தொடங்கி எதிரியை தேடமுன்னம் அந்த அரசியல் வாதிகளை போட்டு தள்ளியாச்சே. 

அதுக்குப்பிறகு எத்தனையோ நடந்து முடிந்து விட்டது இப்போ வந்து மறுபடியும் அரிவரியில் இருந்து தொடங்க வேண்டுமா? 

சம்மந்தன் போன்றவர்கள் எதுவுமே நடக்காதது போல பேசும்போது அரிவரியில் இருந்துதான் அரம்பிக்கவேண்டியுள்ளது 

  • கருத்துக்கள உறவுகள்

அன்று அமிர்தலிங்கம் 1977 இல் எதிர்க்கட்சந்தலைவராக இருந்த பொழுது அவர்கொள்கை தமிழீழம். இன்று சம்பந்தர் எதிர்க்கட்சித்தலைவராக நாட்டைப் பிரிக்க மாட்டேன் .நான் சிங்களவரின் எதிர்க்கட்சித் தலைவர் என்கிறார்.உங்களைத் தெரிவு செய்தது தமிழர்களே அன்றி சிங்களவர்கள் அல்ல.

நேற்று தமிழ் பி பி சி யிலும் இதை கூறியிருந்தார்.யாழ்பாணத்தில் ரணிலுடன் சேர்ந்து கொடிபிடித்தற்கு இதே அர்த்தம் தானே .

சிங்களம் நியாயமான தீர்வு ஒன்றை தராவிட்டால் பிரிவினையை தவிர வேறுவழியில்லை என்று தான் அனைத்து அரசியல்வாதிகள் தொடக்கம் ஆயுத அமைப்புகள் வரை செயற்பட்டுவந்ததன .புலிகள் மட்டும் விதிவிலக்கு அவர்கள் இந்திய ,சர்வதேச அழுத்தங்களால் பேச்சுவார்த்தைக்கு சென்றார்களே ஒழிய அவர்கள் நோக்கம் தமிழ் ஈழம் தான் .

77ஆம் ஆண்டு தொடக்கம் அரசியல்வாதிகளுக்கு தமிழ் ஈழக்கோசம் மக்களை அவர்கள் பின்னால் திரட்ட அவர்கள் அரசியல் இருப்பாக அது இருந்தது ஆனால் அதற்காகன எந்த ஒரு வேலைத்திட்டமும் அவர்களிடம் இருக்கவில்லை .இந்தியாவை போய் கெஞ்சி எதையாவது செய்யுங்கள் என்பதை விட அவர்கள் எதையும் செய்யவில்லை . 

ஆனால் இளைஞர்கள்  ஆயுத போராட்டத்தால் தமிழ் ஈழம் அடையலாம் என்று செயற்படவேறு தொடங்கிவிட்டார்கள் .ஓரளவு மக்களுக்குள் இறங்கி வேலை செய்யவும் தொடங்கிய காலம் அது .காந்தியம் ,விவசாய பண்ணைகள் .ஆயுத சேகரிப்பு ,சிங்கள நிர்வாக சீர்குலைப்பு என்று ஏழு எட்டு இயக்கங்கள் செயற்பட தொடங்கிவிட்டார்கள் .

சிங்கள அரசின் கெடுபிடிக்கு தப்பி தமிழ் நாட்டில்  சில அரசியல்வாதிகளின் தொடர்பு ,ஆயுத பயிற்சிக்கு முகாம்கள் கூட அமைத்துவிட்டார்கள்..இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் கொலைகள் வரை போய் இறுதியில் தமிழ்நாட்டில் கைதில் முடிந்தது .அந்த நேரம் தமிழ் நாட்டில் இருந்த அனைத்து போராளிகளையும் (ஏறக்குறைய இரு நூறு வரும் ) பிடித்து அனுப்பியிருந்தால் ஆயுத போராட்டம் திசை மாறியிருக்கும் அல்லது அப்போதே முடிந்திருக்கும் .

83 இனக்கலவரம் அனைத்தையும் பிரட்டி போட்டுவிட்டது .இந்தியாவின் பிடியில் நேரடியாக எமது போராட்டம் போய்விட்டது .தமது வசதிக்கு ஏற்ப இயக்கங்களை ஆட்டிபடைக்க தொடங்கிவிட்டார்கள் .தொடர்பில் இருக்கும் RAW அதிகாரிகள் ஆளுக்கு ஒரு கதை சொல்லுவார்கள்  ஆயுதங்கள் பயிற்சிகள் வேறு கொடுத்தார்கள் .ஜே ஆர் மிக கடுப்பில் இருந்த காலம் அது .இந்திராகாந்தி அமேரிக்கா பக்கம் சாயும் ஜே ஆருக்கு பாடம் புகட்ட வெளிப்படையாக  அதை செய்தார் .

இந்திரா காந்தி கொலை -அவர் உயிருடன் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்று அவருக்கு மட்டும் தான் தெரியும் .ஆனால் இந்திய வெளியுறவு கொள்கை பெரிதாக மாறவில்லை ஆனால் ராஜீவின் அனுபவமில்லாதா தலைமையை பலர் பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள் ஜே ஆர் உட்பட .ஆரம்பத்தில் எமது பிரச்சனையில் சற்று குழம்பிய ராஜீவ் இலங்கை -இந்திய ஒப்பந்தை உருவாக்கி அதை எப்படியும் நிறைவேற்றவேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டார் .

இலங்கை அரசை வழிக்கு கொண்டுவருவது தான் கஷ்டம் என்று நம்பியவருக்கு அதைவிட பெரிய ஒரு இடி காத்திருந்தது .அதுதான் புலிகள் .இந்திய வெளியுறவு செயலாளர்கள்  நினைத்தே பார்க்க முடியாத ஒரு விடயம் அது .தமது கையிற்குள் இருந்த பெடியங்களுக்கு ஒப்பந்தை பற்றி சும்மா சொன்னால் காணும் என்று நினைத்தார்கள் .

இங்கு இரு விடயங்கள் நடந்தது -

ஆரம்பத்தில் பேச்சு வார்த்தை என்று தொடங்கும் போதே சிங்களத்தை நம்ப முடியாது இந்தியாதான் பொறுப்பு என்று இயக்கங்கள் கேட்டிருந்தார்கள் .

மற்றது டெல்கியில் நடந்த இந்திய வெளியுறவு கொள்கை வகுப்பாளர்களின் சந்திப்பின் போது அனைத்து இயக்க தலைவர்களுக்கும்   தமிழ் ஈழத்தை  எக்காலமும் இந்தியா அனுமதிக்காது என்ற செய்தி . நீங்கள் தமிழ் ஈழம் தான் தீர்வு என்று நினைத்தால் தொடர்ந்து போராடலாம் ஆனால் இந்தியா அதை அங்கீகரிக்காது என்ற குழப்பமான முடிவையும் சொன்னார்கள் .

ஈபி ,ஈரோஸ் ,டெலோ இந்திய அரசின் நேரடி பிடியில் தான் ஓரளவு இருந்தன . புளொட் ஏற்கனவே இந்தியாவால்  கருவறுக்க பட தொடங்கியிருந்தது .அவர்களாலும் அசைய முடியாத நிலை .எனவே இந்த நான்கு தலைவர்களும் தலையாட்டுவதை தவிர வேறு வழியில்லை .பிராபா மட்டும் "அண்ணை அவங்கள் சொல்லுகின்ற எல்லாவற்றிற்கும் தலையாட்டுங்கோ ஆனால் நாங்கள் அங்கை அடிப்பம் "என்று சொன்னாராம் . அருகில் இருந்த நண்பர் சொன்னார் . 

அதேதான் தொடர்ந்து முள்ளிவாய்கால்வரை நீண்டது .

இன்று சம்பந்தன் டெல்கியில் அன்று சொன்னதைத்தான்  சொன்னார் புதிதாக எதுவும் சொல்லவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று தமிழ் பி பி சி யிலும் இதை கூறியிருந்தார்.யாழ்பாணத்தில் ரணிலுடன் சேர்ந்து கொடிபிடித்தற்கு இதே அர்த்தம் தானே .

சிங்களம் நியாயமான தீர்வு ஒன்றை தராவிட்டால் பிரிவினையை தவிர வேறுவழியில்லை என்று தான் அனைத்து அரசியல்வாதிகள் தொடக்கம் ஆயுத அமைப்புகள் வரை செயற்பட்டுவந்ததன .புலிகள் மட்டும் விதிவிலக்கு அவர்கள் இந்திய ,சர்வதேச அழுத்தங்களால் பேச்சுவார்த்தைக்கு சென்றார்களே ஒழிய அவர்கள் நோக்கம் தமிழ் ஈழம் தான் .

77ஆம் ஆண்டு தொடக்கம் அரசியல்வாதிகளுக்கு தமிழ் ஈழக்கோசம் மக்களை அவர்கள் பின்னால் திரட்ட அவர்கள் அரசியல் இருப்பாக அது இருந்தது ஆனால் அதற்காகன எந்த ஒரு வேலைத்திட்டமும் அவர்களிடம் இருக்கவில்லை .இந்தியாவை போய் கெஞ்சி எதையாவது செய்யுங்கள் என்பதை விட அவர்கள் எதையும் செய்யவில்லை . 

ஆனால் இளைஞர்கள்  ஆயுத போராட்டத்தால் தமிழ் ஈழம் அடையலாம் என்று செயற்படவேறு தொடங்கிவிட்டார்கள் .ஓரளவு மக்களுக்குள் இறங்கி வேலை செய்யவும் தொடங்கிய காலம் அது .காந்தியம் ,விவசாய பண்ணைகள் .ஆயுத சேகரிப்பு ,சிங்கள நிர்வாக சீர்குலைப்பு என்று ஏழு எட்டு இயக்கங்கள் செயற்பட தொடங்கிவிட்டார்கள் .

சிங்கள அரசின் கெடுபிடிக்கு தப்பி தமிழ் நாட்டில்  சில அரசியல்வாதிகளின் தொடர்பு ,ஆயுத பயிற்சிக்கு முகாம்கள் கூட அமைத்துவிட்டார்கள்..இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் கொலைகள் வரை போய் இறுதியில் தமிழ்நாட்டில் கைதில் முடிந்தது .அந்த நேரம் தமிழ் நாட்டில் இருந்த அனைத்து போராளிகளையும் (ஏறக்குறைய இரு நூறு வரும் ) பிடித்து அனுப்பியிருந்தால் ஆயுத போராட்டம் திசை மாறியிருக்கும் அல்லது அப்போதே முடிந்திருக்கும் .

83 இனக்கலவரம் அனைத்தையும் பிரட்டி போட்டுவிட்டது .இந்தியாவின் பிடியில் நேரடியாக எமது போராட்டம் போய்விட்டது .தமது வசதிக்கு ஏற்ப இயக்கங்களை ஆட்டிபடைக்க தொடங்கிவிட்டார்கள் .தொடர்பில் இருக்கும் RAW அதிகாரிகள் ஆளுக்கு ஒரு கதை சொல்லுவார்கள்  ஆயுதங்கள் பயிற்சிகள் வேறு கொடுத்தார்கள் .ஜே ஆர் மிக கடுப்பில் இருந்த காலம் அது .இந்திராகாந்தி அமேரிக்கா பக்கம் சாயும் ஜே ஆருக்கு பாடம் புகட்ட வெளிப்படையாக  அதை செய்தார் .

இந்திரா காந்தி கொலை -அவர் உயிருடன் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்று அவருக்கு மட்டும் தான் தெரியும் .ஆனால் இந்திய வெளியுறவு கொள்கை பெரிதாக மாறவில்லை ஆனால் ராஜீவின் அனுபவமில்லாதா தலைமையை பலர் பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள் ஜே ஆர் உட்பட .ஆரம்பத்தில் எமது பிரச்சனையில் சற்று குழம்பிய ராஜீவ் இலங்கை -இந்திய ஒப்பந்தை உருவாக்கி அதை எப்படியும் நிறைவேற்றவேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டார் .

இலங்கை அரசை வழிக்கு கொண்டுவருவது தான் கஷ்டம் என்று நம்பியவருக்கு அதைவிட பெரிய ஒரு இடி காத்திருந்தது .அதுதான் புலிகள் .இந்திய வெளியுறவு செயலாளர்கள்  நினைத்தே பார்க்க முடியாத ஒரு விடயம் அது .தமது கையிற்குள் இருந்த பெடியங்களுக்கு ஒப்பந்தை பற்றி சும்மா சொன்னால் காணும் என்று நினைத்தார்கள் .

இங்கு இரு விடயங்கள் நடந்தது -

ஆரம்பத்தில் பேச்சு வார்த்தை என்று தொடங்கும் போதே சிங்களத்தை நம்ப முடியாது இந்தியாதான் பொறுப்பு என்று இயக்கங்கள் கேட்டிருந்தார்கள் .

மற்றது டெல்கியில் நடந்த இந்திய வெளியுறவு கொள்கை வகுப்பாளர்களின் சந்திப்பின் போது அனைத்து இயக்க தலைவர்களுக்கும்   தமிழ் ஈழத்தை  எக்காலமும் இந்தியா அனுமதிக்காது என்ற செய்தி . நீங்கள் தமிழ் ஈழம் தான் தீர்வு என்று நினைத்தால் தொடர்ந்து போராடலாம் ஆனால் இந்தியா அதை அங்கீகரிக்காது என்ற குழப்பமான முடிவையும் சொன்னார்கள் .

ஈபி ,ஈரோஸ் ,டெலோ இந்திய அரசின் நேரடி பிடியில் தான் ஓரளவு இருந்தன . புளொட் ஏற்கனவே இந்தியாவால்  கருவறுக்க பட தொடங்கியிருந்தது .அவர்களாலும் அசைய முடியாத நிலை .எனவே இந்த நான்கு தலைவர்களும் தலையாட்டுவதை தவிர வேறு வழியில்லை .பிராபா மட்டும் "அண்ணை அவங்கள் சொல்லுகின்ற எல்லாவற்றிற்கும் தலையாட்டுங்கோ ஆனால் நாங்கள் அங்கை அடிப்பம் "என்று சொன்னாராம் . அருகில் இருந்த நண்பர் சொன்னார் . 

அதேதான் தொடர்ந்து முள்ளிவாய்கால்வரை நீண்டது .

இன்று சம்பந்தன் டெல்கியில் அன்று சொன்னதைத்தான்  சொன்னார் புதிதாக எதுவும் சொல்லவில்லை .

இதைத்தான் இவ்வளவு கஷ்ட்டப்படாமல் நாங்கள் சொல்கிறோம்......... 
ஆரம்ப புள்ளிக்கே வந்திருக்கிறோம் என்று .....எல்லாம் ஆடி முடிந்து இதே சம் தனது பொக்கை வாயால் சொல்வார் 
இனி தமிழனை கடவுள் தான் காப்பாற்றவேண்டும் என்று ....

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் 7 பிறவி எடுத்து வந்தாலும் நாட்டைப் பிரிக்கக் கூடிய சக்தியை பெற முடியாது. அது ஒன்னும் அப்பம் பிரிக்கிற மாதிரி வேலை இல்லை. அப்படி இருக்க ஏன் இந்தக் கிழடு கனவு காணுது. கதிரை சுகத்திற்கு சும்மா கண்ணா பின்னாண்னு உளறக் கூடாது. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

 

இதையும் பாருங்கள் எப்படி சம்பந்தன் மாத்தையா தமிழில விளாசுகிறார் என்று 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த சம்பந்தரும், தமிழ் கூட்டமைப்பும் ஒன்றுக்கும் ஒத்து வர மாட்டார்கள் என்று தெரிகிறது.. இன்னும் கொஞ்ச காலம் கழித்து, ஈழ தமிழ் பிரச்சனயே இல்லை என்று சொல்வார்கள் போலும்.  ஈழ தமிழர்களே, நல்ல தலைவர்கள் உங்களுக்கு கிடைத்து இருக்கிறார்கள்.  உங்கள் பிரச்னை தீர்ந்த மாதிரி தான். 

ஒரு சின்ன தீவில், நான் யாழ் தமிழன், நான் மட்டகளப்பு தமிழன், மேலும் நான் கொழும்பு தமிழன் மற்றும் ஒதுக்கி வைக்க பட்டுள்ள தமிழ் நாடு தமிழன் வேறு மலையகத்தில். உங்கள் தமிழின பற்றை நினைத்தால் புல்லரிக்குது போங்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சின்ன தீவில், நான் யாழ் தமிழன், நான் மட்டகளப்பு தமிழன், மேலும் நான் கொழும்பு தமிழன் மற்றும் ஒதுக்கி வைக்க பட்டுள்ள தமிழ் நாடு தமிழன் வேறு மலையகத்தில். உங்கள் தமிழின பற்றை நினைத்தால் புல்லரிக்குது போங்கள்.

 

அருமை கண்ணா

 

அல்லான்ர பகிடியால இழந்தது நாங்கள் தானே, உங்களுடைய ஆயுத போராட்டம் உங்களுக்கு விளையாட்டு, பொழுதுபோக்கு. போராட்டத்தால் உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்திற்கும் கிடைத்தது வெளிநாட்டு சுகபோக வாழ்க்கை. 

மீரா, என்னிடம் பச்சை ஒன்றுமில்லை, இல்லையேல் அள்ளிப் போட்டிருப்பேன்! (நிர்வாகம் பச்சையையும் இல்லாது ஒழித்தது மட்டுமில்லாமல் படங்கள் இணைப்பதையும் தடுத்திருக்கிறது! போற போக்கில் துரத்தவும் படலாம்!

என்னைப்பொறுத்தவரை ஆயுதப்போராட்டம் என்று போய் தூக்கி ஆடிவிட்டு, இன்று புலத்துக்கு ஓடி வந்து விட்டு, காட்டிக்கூட்டிக் கொடுப்புகளில் இடுபடுபவர்களை கூத்தாடுபவர்களை மன்னிக்க முடியவில்லை! மக்கள், மக்கள் மக்கள் யுத்தம் என்று நிண்டது, நடந்தது, இருந்ததுகளை இழுத்து தோணியில் போட்டு கொண்டு போய் விட்டு, அங்கு பயிற்சிகளுக்கு ஆயுதங்களும் இல்லாமல், கொட்டன் கம்புகளோடு ஆடி, சேர்ந்து உள்ளுக்குள்ளேயே ஆயிரக்கணக்காணவர்களை போட்டு சவுக்கம் காடுகளிலும், ஆத்தங்கரையோரங்களிலும், கடற்கரையோரங்களிலும் புதத்து விட்டு பின் சந்தர்ப்பம் வர தப்பியோடி வந்து விட்டு, அடித்து சத்தியம் செய்வது "எனக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை, அதுதானே வெளியேறினேன்"! சரி, வெளியேறினால் பேசாமல் இருப்பதுதானே!

அல்லாவை கூப்பிட தேவையில்லை! தப்பி வந்து விட்டோம், இனி ஏன் அல்லா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த சம்பந்தரும், தமிழ் கூட்டமைப்பும் ஒன்றுக்கும் ஒத்து வர மாட்டார்கள் என்று தெரிகிறது.. இன்னும் கொஞ்ச காலம் கழித்து, ஈழ தமிழ் பிரச்சனயே இல்லை என்று சொல்வார்கள் போலும்.  ஈழ தமிழர்களே, நல்ல தலைவர்கள் உங்களுக்கு கிடைத்து இருக்கிறார்கள்.  உங்கள் பிரச்னை தீர்ந்த மாதிரி தான். 

ஒரு சின்ன தீவில், நான் யாழ் தமிழன், நான் மட்டகளப்பு தமிழன், மேலும் நான் கொழும்பு தமிழன் மற்றும் ஒதுக்கி வைக்க பட்டுள்ள தமிழ் நாடு தமிழன் வேறு மலையகத்தில். உங்கள் தமிழின பற்றை நினைத்தால் புல்லரிக்குது போங்கள்.

 

சொல்வார்கள் அல்ல....சொல்லிவிட்டார்கள்......:grin:

ஆனால் இன்னும் உத்தியோகபூர்வமாக சொல்லவில்லை. :mellow:

அவர்கள் அதை  உத்தியோகபூர்வமாக சொல்லும் போது அதின்ரை அர்த்தம்  கண்டுபிடிக்கேலாமல் இருக்கும்.<_<

தமிழ் டிக்சனறியிலையும் அதுக்கான அர்த்தம் இருக்கவே இருக்காது..:cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.