Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முரண்பாடுகள் குறித்து விக்னேஸ்வரனுடன் பேச சம்பந்தன் முடிவு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பொதுத்தேர்தல் காலத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்ட அறிக்கைகள் குறித்து அவருடன் பேசவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். விக்னேஸ்வரனை விரைவில் சந்தித்து முரண்பாடுகள் குறித்து பேச்சு நடத்தவுள்ளதாகவும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

பொதுத்தேர்தல் காலத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்ட அறிக்கைகள் குறித்து அவருடன் பேசவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். விக்னேஸ்வரனை விரைவில் சந்தித்து முரண்பாடுகள் குறித்து பேச்சு நடத்தவுள்ளதாகவும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

   

தமிழரக்கட்சியின் மத்திய குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நேற்றுக் கொழும்பில் இடம்பெற்றிருந்தது. இதன்போது தமிழரசுக்கட்சியின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்களால் பொதுத்தேர்தல் காலத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் செயற்பட்ட விதம் மற்றும் அவரது அறிக்கைகள் குறித்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

குறிப்பாக தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா முதல்வரின் செயற்பாடுகள் குறித்து வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தான் வெளியிட்ட கருத்துக்களையும் சுட்டிக்காட்டினார். இக்கருத்துக்கள் தொடர்பில் ஆழமாகக் கவனம் செலுத்திய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், "குறித்த விடயம் தொடர்பில் நானும் அவதானத்தை செலுத்தியுள்ளேன். வடக்கு முதல்வரின் செயற்பாடுகள் குறித்தும் அவருடைய அறிக்கை தொடர்பாகவும், எமது கட்சியுடனான முரண்பாடுகள் குறித்தும் விரைவில் அவரை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளேன்.

நான் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற்றதைத் தொடர்ந்து வடக்கு முதல்வர் எனக்கு வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார். அத்துடன் என்னைச் சந்திப்பதற்கும் தயராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆகவே, அவரை சந்தித்து இவ்விடயங்கள் குறித்துக் கலந்துரையாடவுள்ளதோடு எதிர்காலத்தில் தொடர்ந்தும் செயற்படுவது குறித்து முக்கிய விடங்கள் தொடர்பாகவும் பேசவுள்ளேன்" என்றார்.

அதனையடுத்து வடக்கு, கிழக்கில் தனித்துப் போட்டியிட்ட தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக தமிழரசுக்கட்சியின் சில உறுப்பினர்கள் தமது கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக செயற்பட்டமை தொடர்பாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக்கட்சியின் செயலாளரின் செயற்பாடுகள், அதனைத் தொடர்ந்து கட்சியின் மூத்த தலைவரான பொன்.செல்வராஜா தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாகவும் கவனத்தில் எடுக்கப்பட்டது.

அதேபோன்று யாழ்ப்பாணம், மட்டக்களப்பு , திருகோணமலை தேர்தல் மாவட்டங்களில் மேலுமொரு ஆசனங்களை வெற்றி கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் காணப்பட்டபோதும் அது கைநழுவிப் போனதற்கான காரணங்கள் தொடர்பாகவும் கருத்துக்கள் கூறப்பட்டன. அதனையடுத்து பொதுத்தேர்தல் காலத்தில் கட்சியின் செயற்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்களை ஆராய்வதற்காக தேர்தல் மீளாய்வுக்குழுவொன்று நியமிக்கப்பட்டது.

அத்துடன் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் பேராசிரியர் சிற்றம்பலம் தேசியப்பட்டியல் நியமனம் குறித்து அதிருப்தியை வெளியிட்டார். அதன்போது தேசியப்பட்டியலுக்கான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டமைக்கான காரணத்தை கூட்டமைப்பின் தலைவர் தெளிவுபடுத்தினார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=140305&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

முரண்பாடுகள் குறித்து விக்னேஸ்வரனுடன் பேச சம்பந்தன் முடிவு!

நல்ல முடிவு...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனப்பிரச்சனை பற்றி பேசுவதற்கு எங்கு நேரம் இருக்கின்றது இவர்களின் கருத்து முரண்பாடுகள் பற்றி பேசும்போது ..... எல்லாம் எண்களின் தலை எழுத்து tw_dissapointed:

  • கருத்துக்கள உறவுகள்

இனப்பிரச்சனை பற்றி பேசுவதற்கு எங்கு நேரம் இருக்கின்றது இவர்களின் கருத்து முரண்பாடுகள் பற்றி பேசும்போது ..... எல்லாம் எண்களின் தலை எழுத்து tw_dissapointed:

ஐயா  தமிழ் அரசு

ஆத்திரத்திலும் தமிழை மறக்கக்கூடாதையா..tw_dizzy:

எல்லாம் எங்களின் தலை எழுத்து..:rolleyes:

 

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐயா  தமிழ் அரசு

ஆத்திரத்திலும் தமிழை மறக்கக்கூடாதையா..tw_dizzy:

எல்லாம் எங்களின் தலை எழுத்து..:rolleyes:

 

ஆத்திரம் கண்ணை மறைக்கும் என்பது இதுதானோ ? எமது மக்களின் நிலையை நினைத்தால் வலிக்கின்றது ....

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்திரம் கண்ணை மறைக்கும் என்பது இதுதானோ ? எமது மக்களின் நிலையை நினைத்தால் வலிக்கின்றது ....

இதற்கேயா??

இனித்தானே இருக்கையா ...

எம்மினம் எம்மவரால் ஏமாற்றப்படுவதை சும்மா பார்த்திருக்கப்போகின்றோம்

உங்களைத்திடப்படுத்திக்கொள்ளுங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் ஒரு தலைவருக்கு அழகு

விக்கிக்கு ஆப்பிறுக்கிற வேலையை விட்டுட்டு ... தேர்தல் காலங்களில் ... உது காலா காலமாக தான் நடக்கிறது ... அங்குள்ள சனங்களுக்கு சொன்ன, கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்றப்பாருங்கோ!

அப்பு, கட்டையில் போற காலத்தில் .. மக்களை விற்று ... கதிரையை கட்டிப்பிடிததபடி போய் சேர்ந்திடாதையுங்கோ! ... போனாலும் காலம் பூரா சனம் தூற்றிக்கொண்டிருக்காமல் போகப் பாருங்கோ!

  • கருத்துக்கள உறவுகள்

விக்கிக்கும் சம் சும்முக்கும் சிண்டு முடிஞ்சு அதில இடயாள சைக்கிள் ஓடப்பாத்த புலவாலுகளுக்கு நல்ல நோஸ் கட்.

சம் சும் விக்கி யின் பெட்டியடிப்பில் சிங்களவர் மாட்டீனமோ இல்லையோ புல வாலுகள் மாட்டி முழி பிதுங்கீனம் :)

  • கருத்துக்கள உறவுகள்

சைக்கிளி காப்பில லொறி ஓடப்பாத்த ஆளுங்கதான் பாவம்!:grin:

  • கருத்துக்கள உறவுகள்

 

அறிக்கை போரும் புலவால்களின் விளையாட்டு என்று சில மாற்றுகருத்து புலவால்கள் சொல்லியினம் ஆனால் விக்கி ஐயா சொல்லுறார் ஆங்கில ,சிங்கள ஊடகங்களின் விளையாட்டு என்று

சில கருத்து முரண்பாடுகள் அவ்வப்போது ஏற்படலாம். அதைப் பெரிதுபடுத்துவதில் ஒரு சில ஆங்கில, சிங்கள ஊடகங்கள் முனைப்பாக உள்ளன எனத் தெரிவித்துள்ளார் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்.

 

  • கருத்துக்கள உறவுகள்

விக்கி ஐயா நாகரீகமான முறையில் பதில் அறிக்கை விட்டிருக்கிறார்.மாவை,சுமத்திரன் போல் பேசவில்லை.அவர் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது. நல்லவர்களைத் தேர்ந்தெடுங்கள் என்றார். மாவை,சுமத்திரனுக்கு ஏன் குத்துதுஃ அவர்கள் நல்லவர்கள் இல்லையா? யார் கண்டது பாம்பின் காலைப் பாம்பு அறியும்.

அன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண 
நன்னயஞ் செய்து விடல்.

விக்கி ஐயா காட்டமான பதிலறிக்கை விடுவார் என எதிர்பார்த்திருந்த சம் சும் மாவை கோஸ்டிகளுக்கு ஏமாற்றம்.எப்படி இவரைக் கழட்டுவது???????

விக்கிக்கும் சம் சும்முக்கும் சிண்டு முடிஞ்சு அதில இடயாள சைக்கிள் ஓடப்பாத்த புலவாலுகளுக்கு நல்ல நோஸ் கட்.

சம் சும் விக்கி யின் பெட்டியடிப்பில் சிங்களவர் மாட்டீனமோ இல்லையோ புல வாலுகள் மாட்டி முழி பிதுங்கீனம் :)

சைக்கிளி காப்பில லொறி ஓடப்பாத்த ஆளுங்கதான் பாவம்!:grin:

சூ..சூ...சூச்சு... ம்ம்ம்ம்... மீண்டும் அதே காலைத்தான் ...!tw_dizzy:

ஆமா, உந்த புலவாலுகள் தான் பப்பிளிக்கிலை தேர்தல் காலங்களில் சொன்னவர்கள் விக்கி மேலை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று! புலிவாலுகளுக்கு உதுகும் வேணும் இன்னமும் வேணும்! சும்மா வாயை குடுத்து சூ*தை கெடுத்த நிலைதான்! நான் சொல்லுறது சரிதானே கோசன் சே, வாலி அண்ணாக்களே?

* சம்மந்தர் சொல்லவே இல்லை, "தேர்தல் முடிய கவணிக்கிறேன்" என்று? உதயனிலை கூட பிழையான செய்தி அப்ப போட்டுட்டாங்கள்! உந்த செய்தியை போட்டவங்களுக்கு எதிராக வழக்கு போடுவோமா? மானம் மாணம்  போன  நட்ட ... ஈடோ, அதை அதை கேட்டு?

* அங்காலை போன கிழமை போல வவுனியாவிலை மேலே இல்லாத மாவையார் அப்படி ஒண்டும் சவுண்டுகள் விடேலை? 

ப்பாய்ய்ய்ய் ... படுத்திருந்து மேலே துப்பியது முகத்தில் விழேலை, படுத்து மேலே மூத்தா அடிச்சது, வாயுக்குள்ளேயே விழுகுதாம் ... அய்யே..

உந்த யாழிலையும் யாரோ ஒண்டு, உதை ... நகர்வோ, மூண்டு நாலு வருச நகர்வாம்! அதை வெளியிலை சொல்ல ஏலாதெண்டும் ... அரசியல் யாணத்தில் கொட்டியும் இருந்துது! ப்பாய்ய்..

  • கருத்துக்கள உறவுகள்

சைக்கிள் காப்பில சிலருக்கு தவளவே தெரியல, இவர்களெல்லாம் நடந்து, ஓடி எப்படிக் கொண்டு போகப் போகிறார்களோ?????

  • கருத்துக்கள உறவுகள்

சைக்கிள் காப்பில சிலருக்கு தவளவே தெரியல, இவர்களெல்லாம் நடந்து, ஓடி எப்படிக் கொண்டு போகப் போகிறார்களோ?????

சைக்கிள் காப்பில புலிபாச்சல் செய்வினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விக்கிக்கும் சம் சும்முக்கும் சிண்டு முடிஞ்சு அதில இடயாள சைக்கிள் ஓடப்பாத்த புலவாலுகளுக்கு நல்ல நோஸ் கட்.

சம் சும் விக்கி யின் பெட்டியடிப்பில் சிங்களவர் மாட்டீனமோ இல்லையோ புல வாலுகள் மாட்டி முழி பிதுங்கீனம் :)

இதுக்கை என்ன புளுக்கொடியலுக்கு புலம்பெயர் தமிழரை இழுக்கோணும்?????
முதல்லை உங்கடை கோஷ்டியளை 2016 முடியக்கிடையிலை எல்லாத்தையும் நல்லபடியாய் முடிக்கச்சொல்லுங்கோ....அதுக்குப்பிறகு மிச்சத்தை கதைப்பம்.

சும்மா எப்ப பாத்தாலும் புலிவால் புண்ணியானம் எண்டு கொண்டு....
எதுக்கெடுத்தாலும் ஓடி வந்தவன்.....புலிவால்......சீனவெடி....கொத்து ரொட்டி..... வெட்கமாயில்லை....படித்தவர்கள் என்று தங்களுக்கு தாங்களே சூடாரம் சூட்டிக்கொண்டு திரிகின்றீர்களே...கருத்துக்களை பார்த்தால் மட்டமான கருத்துக்கள். கேவலமான கருத்துக்கள். படித்தவர்கள் என்று ஒரு  வெண்மை.... தேர்ச்சியில்லாத கேவலக்கருத்துக்கள்.

வாழ்க வளர்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.