Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போதையை கைவிடுங்கள் ; கணவனின் பிணத்துடன் குழந்தைகளுடன் நின்று புகைபடம் எடுத்து பேஸ்புக்கில் போட்ட பெண்!

Featured Replies

போதைப் பழக்கத்தால் உயிரை இழந்த தனது 26 வயது கணவரின் உடலுடன், தானும், தனது பிள்ளைகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண். போதைப் பழக்கம் உயிரைப் பறிக்கும். அதை இனியாவது விட்டு விடுங்கள். அதற்காகத்தான் இந்தப் புகைப்படம் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். இதைப் பார்த்து நாலு பேர் திருந்தினால் அது தனக்கு மகிழ்ச்சியே என்றும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஈவா ஹாலந்த். இவரது கணவரின் பெயர் மைக் செட்டில்ஸ். கணவர் ஹெராயின் போதை பழக்கத்திற்கு அடிமையானவர். இந்தத் தம்பதிக்கு லூகாஸ் மற்றும் அவா என்ர மகளும் மகனும் உள்ளனர். மைக்கும் , ஈவாவும் 11 ஆண்டு காலம் சேர்ந்து வாழ்ந்தனர்.

அமைதியான இவர்களது வாழ்க்கையில் ஹெராயின் போதையால் சூறாவளை வீசியது விட்டது. போதைக்கு அடிமையாகிப் போன மைக் செப்டம்பர் 2-ம் தேதி மரணமடைந்தார்.

உடைந்து போன ஈவா, அந்த சோகத்திலிருந்து உடனடியாக வெளியே வந்து ஒரு காரியத்தை செய்தார். சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த தனது கணவரின் உடலுக்கு அருகே தானும், தனது பிள்ளைகளுமாக நின்று ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் இந்தப் புகைப்படத்தை தந்து பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் வெளியிட்டார். கூடவே தனது சோக வாழ்க்கையையும், மைக்குக்கு நேர்ந்த கதியையும் விளக்கி, இதுதான் எல்லோருக்கும் கதி. கடைசியில் மரணம்தான் கிடைக்கும். இன்றே போதைப் பழக்கத்தை விட்டுவிடுங்கள் என்று அதில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அவரது இந்தக் கடிதமும், புகைப்படமும் பலரையும் உலுக்கியது. பலரும் தங்களது கெட்ட பழக்கத்தை விட ஆரம்பித்து விட்டதாக ஈவாவுக்கு தெரிவித்து வருகின்றனர். ஒரு பெண் தனது போதைப் பழக்கத்திலிருந்து விடுபட இந்தப் புகைப்படம் உதவியதாக கூறி நடு ரோட்டில் வைத்து ஈவாவைக் கட்டிப் பிடித்து அழுது நன்றி கூறியுள்ளார்.

இந்தப் புகைப்படம் இப்போது வைரலாக பரவி வருகிறது.

ஈவா தனது கடிதத்தில் கூறியுள்ளதவது:

நீங்கள் முடிவெடுக்காத ஒவ்வொரு நாளும் உங்களது முடிவு வேகமாக நெருங்கி வருகிறது என்று அர்த்தம். எந்தப் பெற்றோரும் தங்களது பிள்ளையை அடக்கம் செய்வதை நினைத்துக் கூட பார்க்க மாட்டார்கள். அதே போலத்தான் எந்தக் குழந்தையும் இவ்வளவு இளம் வயதில் தனது பெற்றோரை இழக்க விரும்பாது.

இது தவிர்க்கக் கூடியதாகவே இருந்தது. ஆனால் அதைச் செய்யத் தவறியதால் மொத்தக் குடும்பமும் இன்று சோகத்தில் உள்ளது. இந்தப் படம் பலருக்கு பார்க்க கஷ்டமாக இருக்கலாம். ஆனால் இதைப் பார்த்து நாலு பேர் திருந்தினால் அது எனக்கு மகிழ்ச்சி தரும்.

ஹெராயின் போதை சுகம் தராது. கொல்லும். உயிரைப் பறிக்கும். இதை இப்பழக்கம் உடையோர் உணர வேண்டும். அதெல்லாம் சாக மாட்டோம் என்று நீங்கள் நினைக்கலாம். மைக்கும் கூட அப்படித்தான் நினைத்தார். இன்று அவரது நிலையைப் பாருங்கள்.

நான் அவரது வாழ்க்கையில் வரும் முன்பே அவருக்கு ஹெராயின் பழக்கம் வந்து விட்டது. இன்று அவரது கனவுகள், நம்பிக்கை எல்லாமே போய் விட்டது. தனது வாழ்க்கை இப்படி மாறிப் போகும் என்று அவர் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. வாழ்ந்த வாழ்க்கை முழுக்க அவர் சந்தோஷமாக இருந்தார்.

அவர் நல்ல மகனாக, நல்ல சகோதரனாக, நல்ல நண்பனாக, மிகச் சிறந்த தந்தையாக இருந்தார். எதையும் விட தனது குழந்தைகளை அவர் அவ்வளவு நேசித்தார். ஆனால் இன்று அவர் இல்லை.

எங்கள் மீது மிகுந்த அன்பு செலுத்தினார். இதற்காக தனது பழக்கத்திலிருந்து மீள சிகிச்சை கூட எடுத்துக் கொண்டார். ஆனால் எல்லாம் கை மீறிப் போய் விட்டது. யாருக்காவது இது பயன்படுமே என்ற நோக்கில்தான் இதைச் சொல்கிறேன். மாறி விடுங்கள் இப்பழக்கம் இருந்தால் என்று அதில் கூறியிருந்தார் ஈவா.woman-whose-husband-died

- See more at: http://www.canadamirror.com/canada/49070.html#sthash.ZoaA77aX.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

போதைப் பொருள் விழிப்புணர்வுக்காக இறந்த கணவர் முன் நின்று போட்டோ எடுத்தவ ஏன் சிரிச்சுக் கொண்டு நிற்கிறார்.சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு போஸ் குடுக்க வேண்டாமோ!

  • கருத்துக்கள உறவுகள்

பரபரப்புக்காக எடுத்து வெளியிட்ட படம்போல் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

 

பரபரப்புக்காக எடுத்து வெளியிட்ட படம்போல் உள்ளது.

அப்பாவின் சடலம் பக்கத்தில் கிடக்கும் போது

மனைவியும் பிள்ளைகளும் சிரிக்கின்றன என்றால் யாரோ சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று தானே அர்த்தம்?

அப்போ 

அவரது இறப்புக்கும் இவர்களே தான் காரணமோ.....?:(

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

 

அப்பாவின் சடலம் பக்கத்தில் கிடக்கும் போது

மனைவியும் பிள்ளைகளும் சிரிக்கின்றன என்றால் யாரோ சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று தானே அர்த்தம்?

அப்போ 

அவரது இறப்புக்கும் இவர்களே தான் காரணமோ.....?:(

அண்ணை இறப்பிற்கு இவர்கள் காரணமோ 
அல்லது இன்சூரன்ஸ் பணம் காரணமோ தெரியாது ....:cool:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படத்துக்குப் பின்னால் ஒரு முக்கியமான செய்தி இருக்கின்றது!

அத்துடன் அந்தச் செய்திக்குள் பல கடந்த காலச் சோகங்களும், நிகழ் காலச் சோகங்களும் , எதிர்காலச் சோகங்களும் புதைந்து கிடக்கின்றன!

கொஞ்சம் கவனத்தில் எடுப்போமே...!

  • கருத்துக்கள உறவுகள்

 

தனக்கு வந்தது யாருக்கும் வரக்கூடாது என சொல்வது பெருந்தன்மை தானே.

John Brady THIS picture has a thousand words....and one profound lesson.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குடிகாரனிடம் இருந்து விடுபட்ட சந்தோசம் அவனது மனைவி பிள்ளைகளிடம் தெரிகிறது. rire-smiley-rit-ah-img.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.