Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரம பிதாவே....: கவிதை - நிழலி

Featured Replies

பரம பிதாவே
இறுதிச் சுற்றறிக்கையில் அவர்கள்
அப்படித்தான் கட்டளையிட்டு இருந்தார்கள்
கவனமாக எழுதப்பட்ட எழுத்துகளின் மூலம்
எம் சாவை பற்றி
அவர்கள் அறிந்து
கொண்டுதான்  இருந்தார்கள்
நீர் அறிவீர் அதை

 

பிதாவே
அடைக்கப்பட்ட குறுநிலம் ஒன்றில்
எல்லா அதிகாரங்களும் குவிந்து கொண்டன
உலகின் இண்டு இடுக்குகளிலும் இருந்து
அதிகாரத்தின் குரல்கள் எம் சாவை
வலியுறுத்தி கட்டளையிட்டன
நாம் சாவதற்காகவே அடைக்கப்பட்ட
மந்தைகள் என்றனர்

எம் சாவின் மூலம்
உலகின் முதலாம் தர நியாயம்
வலியுறுத்தப்படும் என்றனர்
எம் குழந்தைகளின் இரத்தத்தினால்
மட்டுமே
தம் பாதைகள் செப்பனிடப்படும் என்றனர்

 
பரம பிதாவே
நீரே ஒத்துக் கொள்வீர்
அந்த வார்த்தைகளில்
அந்த எழுத்துகளில்
அந்த எத்தனிப்புகளில்
வஞ்சகம் நிறைந்து இருந்தன என்று
ஆனாலும்
நீரும் வாளாவிருந்தீர்
பரம பிதாவே
நீரும் பேசாது இருந்தீர்
 

அவர்களின் கண்களில் இருந்து
கயமை ஒரு ஒளிச்சுடராக எரிந்து
உம்மை மகிழ்விக்கும் போது கூட
அதை பற்றி நீர் பேசாது இருந்தீர்
பரம பிதாவே
நீர் பேசாது இருந்தீர்

 அவர்கள்
எம் குழந்தைகளின்
பச்சை இரத்தம் காய்ந்து போனபின்
சுரண்டி எடுத்து ஆய்வு கூடத்தில்
வைத்து பரிசோதிக்கலாம் என்ற
போதும்
எம் சிறுமிகளின்
அடித் தொண்டை வரை
அதிகாரத்தின் ஆண் குறி
நீண்டு மூச்சை நிறுத்தும் போதும்
நீர்
வாய் பேசாது இருந்தீர்
பரம பிதாவே நீர்
பேசாது இருந்தீர்

உமக்கு பின்னால்
அணி அணியாக
உலகமே தன்
அதிகார ஆண் குறியை செலுத்தும்
போது
வசந்த மண்டபத்தில்
ஆலிங்கனத்திலும்
திருச்சபையின் இரவு விருந்துகளிலும்
நீர் லயித்து இருந்தீர்
பரம பிதாவே
நீர் லயித்து இருந்தீர்


இப்போது எம்மை மீண்டும்
சுரண்டி எடுக்கின்றார்கள்
பரம பிதாவே
எம்மை அவர்கள்
மீண்டும் சுரண்டி எடுக்கின்றார்கள்

தங்களால்
இன்னும் சமன் செய்யாத
பேரேடுகளை
ஒப்புக் கொடுக்க
தம் எதிரிகளை
மண்டியிட்டு தொழ வைக்க
எம் தொலைந்து போன
வாழ்வை எடுத்து
மீண்டும்
எமை சுரண்டுகின்றனர்
பிதாவே
மீண்டும் சுரண்டுகின்றனர்
 

மறுக்கப்பட்ட நீதியின் பெயரால்
மீண்டும் மீண்டும்
நீதி மறுக்கப்படலே
தவறாக தண்டிக்கப்பட்ட
மந்தைகளுக்கு
தீர்ப்பு என்று சொல்லும்
அவர்களின் பின்னால்
நீரும் இருக்கின்றீர்
பரம பிதாவே
நீரும் இருக்கின்றீர்

 
எனக்குத் தெரியும்
நீர் அவர்களின் பிரதிநிதி என
நீர் அவர்களின் குருதி தோய்ந்த
Spoon களில் மது அருந்துபவர் என
குழந்தைகளின் நரபலியில்
உம்மை புனிதப்படுத்துபவர் என
அதிகாரத்தின் குரலுடனும்
அதிகாரத்தின் குழுமத்துடனும்
நீர்
உடன்பாடு செய்பவர் என

 
ஒரு குழந்தையின்
சாவுக் குரலுடன்
உன்னை சபிக்கின்றேன்
பமர பிதாவே
உன்னை சபிக்கின்றேன்
மறுக்கப்பட்ட எமக்கான நீதியின்
பெயரால்
நீர்
நாசமாகப் போவீராக

நீதி வழங்காது மீண்டும்
தீர்ப்புகளினால் தண்டிக்கப்படும்
எம் சனங்களின் பெயரால்
நீர் நாசமாக போவீராக

ஆமென்
அரோகரா

 

  • கருத்துக்கள உறவுகள்

சாபம் போட்டால் பலித்துவிடுமா என்ன?

tw_angry:tw_angry:tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

வேதங்களின்,

விசித்திரமான கலவியில் ,

விளைந்த அவதாரமொன்றின்,

வேள்வியின் ஆகுதியாய்....,

எமது குழந்தைகளும், கன்னியரும்,

அக்கினியில் சங்கமித்தனர்!

 

வேள்வித் தீயின் கோரப்பசி,

அணைந்த பாடில்லை!

 

இன்னும்... இன்னும்,,,

என்றே ஓலமிட்டுக் கொண்டிருக்கிறது!

 

அந்த அக்கினியின் நாக்குகள்,

அறுக்கப்பட்டால் அன்றி....,

அதன் பசி அடங்கப் போவதில்லை!

 

உங்கள் கவிதை சாபமிடுகின்றது!

எமது சாபம் பலிப்பதற்கு நாங்கள் பரசு ராமர்களோ, விசுவாமித்திரர்களோ அல்லவே!

வெறும் சூத்திரர்கள்...! (அவ்வாறு தானே அவர்கள் சொல்கிறார்கள், நிழலி..!)

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையின் பதிவு தோழரே!

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் பரமபிதா

  • கருத்துக்கள உறவுகள்

சாபங்களால் தீராது இது...! காலங்காலமாய் இது நடந்துகொண்டுதான் இருக்கின்றது. இன்று எங்கள் தலையில் விடிந்திருக்கு...! இதுவும் கடந்து போகும்...!

மரியாளுக்கு பாலன் பிறந்தபோது , இதுவா அந்தக் குழந்தை , இதுவா அந்தக் குழந்தை எனக் கொல்லப் பட்ட குழந்தைகள் ஏராளம்.

 

ஆயினும் ஒரு கவிஞனோ / கலைஞனோ அறம் பாடக் கூடாது...,அது பூமராங் போன்றது...!

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் 32 குறுப்பாக பிரிந்து அடிபட்டு விட்டு, பிறகு ஏன் பரம பிதாவை குற்றம் சொல்ல வேண்டும். 

அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

பின்ன்னூட்டம் இட்ட அனைவருக்கும் என் நன்றி. வேலை பளு காரணமாக உடனடியாக நன்றி சொல்ல முடியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தின்.... கட்டாயம், உங்கள் கவிதை நிழலி.
தந்தை... செல்வா... 40 வருடங்களுக்கு முன்பு சொன்னது போல், இனி... தமிழனை ஆண்டவன் தான், காப்பாற்ற வேண்டும் என்று சொன்னார்.
இப்ப.... சுமந்திரனும், "ஐநா தீர்மானம் வலு குறைந்த ஒன்று!- சுமந்திரன் பா.உ. அதிருப்தி."  படுகிறார்.
தமிழனுக்கும்.... அரசியலுக்கும்... வெகு தூரம். நல்ல சந்தர்ப்பங்களை... பயன் படுத்தத் தெரியாத... 
ஊத்தை வாழி அரசியல் வாதிகளால்... தமிழினம் அழியப் போவது உறுதி.

tnatem2.jpg

http://www.yarl.com/forum3/topic/163843-ஐநா-தீர்மானம்-வலு-குறைந்த-ஒன்று-சுமந்திரன்-பாஉ-அதிருப்தி/

பரம பிதாவே.... எம்மை காப்பற்றுங்கள்..... என்று, பிரார்த்திப்பதை தவிர, எமக்கு வேறு வழிகளை.... சிங்களம் எமக்கு விட்டு வைக்க வில்லை 
அப்படி... விட்டு வைத்த இடங்களிலும் , ஒட்டுக் குழுக்கள் பூந்து... குப்பையை கொட்டி விட்டு... போய் விட்டுதுகள். tw_dissapointed:tw_dissapointed:

கோட்டு, சூட்டு... போட்டுக் கொண்டு, தமிழன் அழிந்தான் எண்டு... அடியுங்கடா.... மேளம்.

Edited by தமிழ் சிறி

  • 1 month later...
On 9/21/2015, 7:04:12, suvy said:

சாபங்களால் தீராது இது...! காலங்காலமாய் இது நடந்துகொண்டுதான் இருக்கின்றது. இன்று எங்கள் தலையில் விடிந்திருக்கு...! இதுவும் கடந்து போகும்...!

மரியாளுக்கு பாலன் பிறந்தபோது , இதுவா அந்தக் குழந்தை , இதுவா அந்தக் குழந்தை எனக் கொல்லப் பட்ட குழந்தைகள் ஏராளம்.

 

ஆயினும் ஒரு கவிஞனோ / கலைஞனோ அறம் பாடக் கூடாது...,அது பூமராங் போன்றது...!

ஒரு மார்க்கமான கவிதைக்கு நன்றிகள்.

பரமபிதா என்று ஒருவர் இருந்தால் அவர் எம்மை விட பரிதாபத்துக்குரியவர்.

அவரின் பெயராலேயே வருணாசிரம தர்மங்களும் சாதிகளும் மதங்களும் மனிதருக்கு மனிதர் வேற்றுமைகளும் மனிதர்களால் உருவாக்கப்பட்டது.கொடிய போர்களுக்கு மனிதன் கடவுளையும் மதங்களையும் காரணமாகப் பாவிக்கின்றான். சுருக்கமாக சொன்னால் பரமபிதாவை நாம் எப்போதோ கொன்றுவிட்டோம். நல்ல கவிதை. வாழ்த்துக்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.