Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீட்டுத்திட்டத்திற்காய் செஞ்சிலுவை சங்க பணியாளர்கள் பாலியல் இலஞ்சம் கேட்பதாக பெண்கள் ஆவேசம்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கிளிநொச்சி மாவட்டம் முழங்காவில் பகுதியில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இந்திய வீட்டுத்திட்டத்தை வழங்குவதற்கு பாலியல் இலஞ்சம் கோருவதாக அப் பகுதி பெண்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். 
 
போரால் பாதிக்கப்பட்ட கணவன்மாரை இழந்த பெண்களை பாலியல் ரீதியாக சுறண்டி அவர்களை பெரும் துயரத்திற்கு உள்ளாக்கும் இந்த நடவடிக்கை குறித்து பிரதேச பெண்கள் ஆவேசத்துடன் முறைப்பாடுளை மேற்கொண்டுள்ளனர். 
 
முழங்காவில் பகுதியில் இந்திய வீட்டுத்திட்ட பயனாளி ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரப்பட்டதாக தெரிவித்து பெண் ஒருவர் கிளிநொச்சி செஞ்சிலுவை சங்கத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 
 
போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்புத் திட்டத்தில் செஞ்சிலுவை சங்கம் இணைந்து செயற்படுகின்றது. கடந்த 2012முதல் கிளிநொச்சி முழங்காவிலில் வீடமைக்கும் பணியில் அவ் அமைப்பு ஈடுபடுகிறது. 
 
இலங்கை செஞ்சிலுவை சங்க நிதி விடுவிப்பு பணியாற்றும் கொழும்பு அதிகாரிகள் இருவர்மீதே குறித்த பெண்ணால் பாலியல் இலஞ்சம் கோரப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 
 
இந்த விடயம் தொடர்பில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கொழுமபு அலுவலகமும் கிளிநொச்சி அலுவலகமும் இணைந்து விசாரணைகளை முன்னெடுப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 
 
இதன்போது பாலியல் இலஞ்சம் கோரும் சம்பவங்கள் சில இடம்பெற்றுள்ளதாக இனம் காணப்பட்டுள்ளது. இவ்வாறு பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளபோதும் கணவனை இழந்த பெண் ஒருவரே முதலில் துணிந்து முறைப்பாடு செய்துள்ளார்.
 
விடுமறை நாளில் அவர் குறிப்பிடும் இடத்திற்குச் சென்று மேலதிகாரியை சந்தித்தால் இலகுவில் நிதியை விடுவித்து விடலாம் என்று அலுவலரை் ஒருவர் பெண்ணிடம் கூறியுள்ளார்.
 
வீட்டுத்திட்டத்திற்கான பணத்தை வழங்குவதில் இழுபறி நிலமை காணப்பட்டுள்ளதுடன் பணத்தை வழங்காமல் மனிதாபிமானமற்ற முறையில் மிரட்டியதாகவும் எதிர்த்தால் வீட்டுத்திட்டம் பறிபோகும் என எச்சரித்து உள்ளதாகவும் தெரிய வருகிறது. 
 
பாலியல் இலஞ்சம் கோரியமை உள்ளிட்ட 25இற்கு மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவை தொடர்பில்விசாரணைகள் முன்னெடுக்கப் படுவதாகவும் இலங்கை செஞ்சிலுவை சங்க தலைவர் நிமால் குமார் கூறியுள்ளார். 
 
மிகவும் கீழ்தரமான இந்த விடயம் குறித்து உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிட்டவேண்டும் என்றும் எதிர்காலத்தில் இவ்வாறான அநீதிகள் நடைபெறாது மக்களுக்கு வீட்டுத்திட்டம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்றும் பிரதேச பெண்கள் குளோபல் தமிழுக்குத் தெரிவித்தனர்.
 
  • 2 weeks later...

 

இந்திய வீட்டுத் திட்டத்தை வழங்குவதில் பாலியல் இலஞ்சம் கோரப்படுவதாக புகார்

 
 
 
இலங்கைப் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகளை ஒதுக்குவதில், தமிழர்கள் பாலியல் தொல்லைக்கு உள்ளாவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து, இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகமும், இலங்கை செஞ்சிலுவைச் சங்கமும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளன.

இதுகுறித்து, செஞ்சிலுவை சங்கத்தின் கிளிநொச்சி கிளை செயலர், தம்பு சேதுபதி கூறியதாவது:

வட மாகாணத்தில், கட்டி வரும் வீடுகளை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்றால், பாலுறவுக்கு சம்மதிக்க வேண்டும் என, தமிழ்ப் பெண்கள் நிர்ப்பந்திக்கப்படுவதாக, 30க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன.

இதுகுறித்து, இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம், சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் இலங்கை செஞ்சிலுவை சங்கம் ஆகியவை கூட்டு விசாரணையை தொடங்கியுள்ளன. இது போன்ற செயலை, இந்தியா பொறுத்துக் கொள்ளாது என, இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார், என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில், உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட, தமிழர்களுக்காக, இந்தியா, 50,000 வீடுகளை கட்டித் தரும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்திய அரசுடன், இலங்கை மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கங்களும், இப்பணியை மேற்பார்வையிட்டு வருகின்றன.

வீடு கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய, செஞ்சிலுவை சங்க அதிகாரி ஒருவர், பாலுறவுக்கு அழைத்ததாக, விதவைப் பெண் ஒருவர் கடந்த மாதம் புகார் அளித்தார். இதையடுத்து, இதுபோல் பல புகார்கள் குவிந்து வருகின்றன.

பாலியல் ரீதியாக சாதகமாக நடப்பவர்களுக்கே வீடு கட்ட நிதி என்கிறார்கள்: குமுறும் தமிழ் பெண்கள்!

 

women.jpgகொழும்பு: பாலியல் ரீதியாக தங்களுக்கு சாதகமாக நடப்பவர்களுக்கே வீடு கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூறுகின்றனர் என்று தமிழ் பெண்கள் புகார் தெரிவித்துள்ளதாக இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கிளிநொச்சி கிளை செயலாளர் தம்பு சேதுபதி கூறி உள்ளார்.

இலங்கையில் உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகளை கட்டித் தர இந்திய அரசு முன்வந்துள்ளது. அதன்படி 3 ஆண்டுகளில் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளது. இது தவிர, இத்திட்டத்தின் கீழ், போரினால் சேதமடைந்த தங்களது வீடுகளை பயனாளிகள் பழுது பார்த்துக்கொள்ளவும் நிதி உதவி அளிக்கப்படுகிறது.

 

இந்நிலையில், வீடுகளை பழுது பார்க்க நிதி ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்துள்ளது. அது குறித்து இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கிளிநொச்சி கிளை செயலாளர் தம்பு சேதுபதி கூறும்போது, ''பாலியல் ரீதியாக தங்களுக்கு சாதகமாக நடந்து கொள்பவர்களுக்கே வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூறியதாக 30க்கும் மேற்பட்ட பெண்கள் எழுத்துப் பூர்வமாகவும், வாய்மொழியாகவும் என்னிடம் புகார் தெரிவித்துள்ளனர்" என்று கூறியதாக இலங்கையில் இருந்து வெளிவரும் சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது.

மேலும் அதில், கடந்த 2 மாதங்களாக இதுபோன்ற புகார்கள் பெண்களிடம் இருந்து வந்த வண்ணம் உள்ளன. இந்த பிரச்னையின் தன்மை கருதி கொழும்பில் உள்ள இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தலைமையகத்துக்கு புகார்களை அனுப்பி வைத்திருக்கிறேன் என்றும் தம்பு சேதுபதி குறிப்பிட்டு இருக்கிறார்.

குறிப்பாக, போரினால் இடம் பெயர்ந்த மூலன்கவில் என்னும் இடத்தைச் சேர்ந்த விதவைப் பெண் ஒருவர் செஞ்சிலுவை சங்க அதிகாரிகளுக்கு எதிராக கிளிநொச்சி கிளையில் அளித்த புகாரில், தான் பாலியல் ரீதியாக அதிகாரிகளுக்கு சாதகமாக நடந்து கொண்டால்தான் வீடு கட்டும் திட்டத்தில் நிதி உதவி செய்யப்படும் என்று கூறியதாக, குற்றம் சாட்டி உள்ளார் தம்பு சேதுபதி.

இந்த குற்றச்சாட்டு குறித்து கொழும்பில் உள்ள இந்திய தூதரக அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், ''இந்தப் பிரச்னையை இந்திய தூதரக அதிகாரிகள் கொழும்பில் உள்ள இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினரிடம் கொண்டு சென்றுள்ளனர். இதுபற்றி இலங்கை அரசு விசாரணை நடத்தி வருகிறது. இதுபோன்ற எந்த செயலையும் இந்தியா சகித்துக்கொள்ளாது" என்று தெரிவித்துள்ளார்.

http://www.vikatan.com/news/article.php?aid=53600

  • கருத்துக்கள உறவுகள்

"இதுபோன்ற எந்த செயலையும் இந்தியா சகித்துக்கொள்ளாது" என்றால்.... இலங்கை சகித்துக் கொள்கிறதா???

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அபிவிருத்தித் திட்டங்கள் என்ற போர்வையில் ஈழச் சமுதாயம் சீரழிக்கப்படுகின்றது.செஞ்சிலுவைச் சங்கம் கண்ணை மூடிக் கொண்டிருப்பது கவலைக்குரியது.

பாலியல் லஞ்சம் கோரிய அதிகாரிகளை நாட்டைவிட்டு வெளியேறவிடாதீர்கள்:இந்தியத்தூதுவர்
பாலியல் லஞ்சம் கோரிய அதிகாரிகளை நாட்டைவிட்டு வெளியேறவிடாதீர்கள்:இந்தியத்தூதுவர்

கிளிநொச்சியில் இந்திய வீட்டுத் திட்டப் பணிக்காகப் பாலியல் லஞ்சம் கோரிய சம்பவம் தொடர்பில், விசாரணைகளை எதிர்கொள்ளும் அதிகாரிகள் எவரையும், விசாரணைகள் முடியும் வரையில் நாட்டைவிட்டு வெளியேற அனுமதிக்கக்கூடாது என்று, இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா, இலங்கை வெளிவிவகார அமைச்சிடம் கோரியுள்ளார். 

கிளிநொச்சி முழங்காவில் பகுதியில், இந்திய வீடமைப்புத்திட்ட உதவியைப் பெறும் பயனாளிகளிடம், திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பங்காளரான செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் பாலியல் இலஞ்சம் கோருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அத்துடன் இது தொடர்பிலான முறைப்பாடும், கிளிநொச்சியிலுள்ள செஞ்சிலுவைச் சங்க அதிகாரிக ளுக்கு எழுத்துமூலம் வழங்கப்பட்டது. 

மேலும், இது தொடர்பிலான விசாரணைகள் கிளிநொச்சி மாவட்டச் செயலகம், இந்தியத் தூதரகம், செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்து டன், இந்த விவகாரம் தொடர்பிலான அறிக்கை புதுடில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  

இது புதுடில்லியில், வெளிவிவகார தீர்மானங்களை மேற்கொள்ளும் சவுத்புளொக்குக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தியுள்ளதுடன்  இந்த விவகாரத்தைத் தீவிரமாகவும் எடுத்துக் கொண்டுள்ளது. இந்திய வெளிவிவகாரச் செயலரும் இந்த விடயத்தில் கரிசனை எடுத்துக் கொண்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை எதிர்கொள்ளும் அதிகாரிகள் எவரையும், விசாரணைகள் முடியும் வரையில் நாட்டைவிட்டு வெளியேற அனுமதிக்கக் கூடாது என்று, இந்தியத் தூதுவர் வை.கே. சின்ஹா, வெளிவிவகார அமைச்சிடம் கோரியுள்ளார்.

அதிகாரிகள் தப்பிச் செல்வதை நாங்கள் விரும்பவில்லை. எனவே வெளிவிவகார அமைச்சு மற்றும் அவர்களின் குடிவரவு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளோம் என்று இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, இந்த விசாரணைகளை மேற்கொள்ள எந்தக் காலக்கெடுவும் விதிக்கப்படவில்லை என்றும், எனினும், விசாரணைகள் விரைவாகவும், முழுமையாகவும் நடத்தப்படும் என்றும் மற்றொரு இந்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இத்தகையதொரு குற்றச்சாட்டு முதல் முறையாக எழுந்திருப்பதாகவும், இது புதுடில்லியின் மோடி அரசை பெரிதும் சீற்றத்துக்குள்ளாக்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  

http://onlineuthayan.com/news/1212

  • கருத்துக்கள உறவுகள்

புலி விட்டுப் போனதால.. பழைய வியாதிகள் எம்மவர்களை நல்லாவே ஆட்கொள்ள வெளிக்கிட்டுது. ஆயுதத்துக்கு உள்ள மரியாதை.. அந்த ஆயுதம் எதிர்பார்த்த புகட்ட முனைந்த சமூக தனிநபர் ஒழுக்கத்துக்கு கொடுக்கக் கூடிய மனநிலையில் எம்மவர்கள் இல்லாமை இவர்களின் மனங்களில் புதைந்து கிடக்கும் காட்டுமிராண்டித் தனத்தையே இனங்காட்டுகிறது. சாமானியன்.. முதல் சம்பந்தர் வரை இதுதான் நிலைமை. tw_angry::rolleyes:

ஹிந்திய துணைத்தூதரகத்தின் வருகை என்பது எமது சமூகத்தை இன்னும் பல வகையில் சீரழிக்கும். அது சிங்களத்தின் படையிருப்புக்கு ஒப்பானது. !!

  • கருத்துக்கள உறவுகள்

புலி விட்டுப் போனதால.. பழைய வியாதிகள் எம்மவர்களை நல்லாவே ஆட்கொள்ள வெளிக்கிட்டுது. ஆயுதத்துக்கு உள்ள மரியாதை.. அந்த ஆயுதம் எதிர்பார்த்த புகட்ட முனைந்த சமூக தனிநபர் ஒழுக்கத்துக்கு கொடுக்கக் கூடிய மனநிலையில் எம்மவர்கள் இல்லாமை இவர்களின் மனங்களில் புதைந்து கிடக்கும் காட்டுமிராண்டித் தனத்தையே இனங்காட்டுகிறது. சாமானியன்.. முதல் சம்பந்தர் வரை இதுதான் நிலைமை. tw_angry::rolleyes:

ஹிந்திய துணைத்தூதரகத்தின் வருகை என்பது எமது சமூகத்தை இன்னும் பல வகையில் சீரழிக்கும். அது சிங்களத்தின் படையிருப்புக்கு ஒப்பானது. !!

"அடியைப்போல அண்ணன் தம்பி உதாவாது."

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.