Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மின்சாரக் கதிரையும் இல்லை ஹைபிரிட்டும் இல்லை ஜனாதிபதி

Featured Replies

மின்சாரக் கதிரையும் இல்லை ஹைபிரிட்டும் இல்லை ஜனாதிபதி
 

article_1443802194-may.jpgயுத்த வெற்றி நாயகர்களை மின்சாரக் கதிரையில் உட்கார வைக்கப்போவதாகக் கூறினார்கள். ஆனால், அது ஒருபோதும் நடக்காது. அதேபோல் ஹைபிரிட் நீதிமன்ற முறைமையும் இருக்காது. எமது சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே அனைத்து விசாரணைகளும் நடைபெறும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அமெரிக்கா மற்றும் ஜெனீவாவுக்கான விஜயத்தினை முடித்துக்கொண்டு நாடுதிரும்பி ஜனாதிபதி, தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் முகமாக ஜனாதிபதி மாளிகையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை - ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே மேற்படி கூறினார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

“எம்மீது சர்வதேசம் கொண்டிருந்த கொடுங்கோபத்தினை எமது இராஜதந்திர நகர்வுகளினூடாக தணியவைத்திருக்கிறோம். இது எமது நல்லாட்சிக்கான அரசாங்கத்துக்குக் கிடைத்த பெரு வெற்றி. கடந்த காலத்தில் அரசாட்சியாளராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ, இலகுவாக சர்வதேசத்தினைப் பகைத்துக்கொண்டார். உலகின் பல நாடுகளை ஒன்றுதிரட்டி சக்திவாய்ந்த அமைப்பான ஐக்கிய நாடுகள் சபைக்கெதிரா அரசியல்வாதியொருவர் உண்ணாவிரதமிருந்தபோது அவருக்கு இளநீர்கொடுத்து, சர்வதேசத்தின் பகையினை மஹிந்த அதிகரிக்கச் செய்தார். அதேபோல், உலகின் பகையாளியாகப் பார்க்கப்பட்ட கடாபியுடன் தோளில் கைபோட்டுக்கொண்டதனூடாக மேற்குலகின் பகையினை மேலும் வளர்த்துக்கொண்டார். இவ்வாறான நிலைமைகளினால்தான் சர்வதேசத்தின் கடும்போக்கு, எமது நாட்டினை வாட்டி வதைத்தது. 

ஆனால், எமது அரசாங்கம் சரியான முறையில் சர்வதேசத்தை அணுகி, அவர்களின் கோபத்தினைத் தணித்திருக்கிறோம். இது நமக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இந்த வெற்றியினைச் சகிக்க முடியாதவர்கள் தேவையற்ற விதத்தில் பிரசாரங்களை மேற்கொள்கின்றனர். ஆகையினால், அவர்களுக்கும் எமது நியாயத்தினைத் தெளிவுபடுத்தவேண்டும். எனவே, வெகுவிரைவில் அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து, அவர்களின் சந்தேகங்களுக்குப் பதில் வழங்கக் காத்திருக்கிறோம்.

அதேபோல், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தங்களை மின்சாரக் கதிரைக்கு அனுப்பிவிடுவோம் என மக்கள் மத்தியில் பொய்ப் பிரசாரம் செய்த முன்னாள் ஆட்சியாளர்கள் இனிமேல் பயப்பிடத்தேவையில்லை. ஏனெனில் அவ்வாறானதொரு நிலைமை அவர்களுக்கு ஏற்படாது. அதேபோல், சர்வதேச கலப்பு நீதிமன்றம் அமையவுள்ளதாகக் கூறுவதிலும் உண்மையில்லை. எமது நாட்டின் உயர்நீதிமன்ற சட்டதிட்டங்களுக்கு அமையவே இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்படும். இந்த விசாரணையின் போது குற்றச்சாட்டுக்குள்ளான அனைத்துத் தரப்பினரும் தமது நியாயங்களை வெளிப்படுத்த முடியும். அது புலிகளாக இருந்தாலும் பரவாயில்லை, இராணுவத்தினராக இருந்தாலும் பரவாயில்லை.

நாட்டு மக்கள் ஒரு விடயத்தினைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். சர்வதேசம் எமக்கு யோசனைகளைத்தான் முன்வைத்திருக்கிறார்கள். அவைகளைக் கட்டளைகளாகப் பார்க்கக்கூடாது. ஆகையினால், எமது நடத்தைகளின் பிரகாரமே சர்வதேசத்தின் மேலதிக ஆதரவினையும் பெற்றுக்கொள்ள முடியும். இறுதி யுத்தத்தினை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இந்தியா, சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகள் நேரடியாக உதவியிருந்தன. ஆகையினால் அவர்களுக்கு இந்த யுத்த வெற்றியின் நிலைமை நன்கு தெரியும். யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமையும் நன்கு தெரியும். எனவேதான் இந்தப் பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். 

எனவே, நாட்டின் நலனுக்காக அனைத்துத் தரப்பினரும், அனைத்துக் கட்சியினரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டுமென பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன்” என்று குறிப்பிட்டார்.

- See more at: http://www.tamilmirror.lk/155618/ம-ன-ச-ரக-கத-ர-ய-ம-இல-ல-ஹ-ப-ர-ட-ட-ம-இல-ல-ஜன-த-பத-#sthash.RX5a6T7W.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா, சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகள் நேரடியாக உதவியிருந்தன

ஜஸ்டினின் வேறொரு திரியில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்து உள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

இறுதி யுத்தத்தினை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இந்தியா, சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகள் நேரடியாக உதவியிருந்தன. ஆகையினால் அவர்களுக்கு இந்த யுத்த வெற்றியின் நிலைமை நன்கு தெரியும்.

ஐ லயிக் திஸ் ....இப்படி ஓப்பனா சொன்னால் ஒருவருக்கும் பிரச்சினையில்லை 
சிங்கலவனிண்ட அடியால தான் எல்லாம் நடந்தததாக ....அள்ளிவிட்ட வாத்திமார்கள் நல்லாட்சி அரசாங்கம் மேல   கோபிக்க போயினம்  
ஓ ஒருவேளை இவரும் பொய்யர் லிஸ்டில் இருக்கிறாரா ....ராஜபக்ஷ நாட்டில் இல்லாத காலத்தில் பதில் பாதுகாப்பமைச்சராக பணியாற்றியவர் ஆயிற்றே ... 

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய நாடுகள் சபைக்கெதிரா அரசியல்வாதியொருவர் உண்ணாவிரதமிருந்தபோது அவருக்கு இளநீர்கொடுத்து, சர்வதேசத்தின் பகையினை மஹிந்த அதிகரிக்கச் செய்தார். அதேபோல், உலகின் பகையாளியாகப் பார்க்கப்பட்ட கடாபியுடன் தோளில் கைபோட்டுக்கொண்டதனூடாக மேற்குலகின் பகையினை மேலும் வளர்த்துக்கொண்டார். இவ்வாறான நிலைமைகளினால்தான் சர்வதேசத்தின் கடும்போக்கு, எமது நாட்டினை வாட்டி வதைத்தது

 

அப்ப இளநீரும்,கடாபியும் தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் ...முள்ளிவாய்கால் அல்ல

  • கருத்துக்கள உறவுகள்

இதைப் பற்றி மைத்திரி தான் ஜனாதிபதியாக வர வேண்டும் என நினைத்தவர்களது பதில் என்ன?...மகிந்தாவுக்கு தண்டனை கிடைக்கா விட்டாலும் பரவாயில்லை.மைத்திரியின் ஆட்சியின் கிடைத்ததைப் பெற்றுக் கொண்டு வாழ வேண்டும் என எடுத்துக் கொள்ளலாமா!

  • கருத்துக்கள உறவுகள்

இது சுமந்திரனின் ராஜதந்திரத்துக்கு கிடைத்த வெற்றி .

இதைப் பற்றி மைத்திரி தான் ஜனாதிபதியாக வர வேண்டும் என நினைத்தவர்களது பதில் என்ன?...மகிந்தாவுக்கு தண்டனை கிடைக்கா விட்டாலும் பரவாயில்லை.மைத்திரியின் ஆட்சியின் கிடைத்ததைப் பெற்றுக் கொண்டு வாழ வேண்டும் என எடுத்துக் கொள்ளலாமா!

நிச்சயமாக. 
மகிந்தவுக்கு 20 வருசம் கழிச்சு தூக்கு கிடைப்பதற்காக 20 வருடம் தமிழர் அங்கு வதை பட அனுமதிக்க முடியாது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் மூச்சு விடவாவது அவகாசம் கிடைத்துள்ளது.  மகிந்த இருந்திருந்தாலும் அவருக்கு தண்டனை வழங்க சீனாவும் ரஸ்யாவும் விடாது மகிந்த தூக்கு மேடை ஏறுவதால் தமிழருக்கு தீர்வும் வராது. 

மைத்ரி பேசுவதோ மகிந்தா பேசுவதோ சம் சும் பேசுவதோ அல்ல எமக்கு முக்கியம் .இன்று வாசுவும் தன் பங்கிற்கு எதையோ பேசியிருக்கின் றார் நாளை சிவாஜிலிங்கம் எதையாவது உளறுவார் . இவற்றை தலையங்கமாகி செய்தி மட்டும் வெளியிடமுடியும் .

ஆனால் எமக்கு இவையல்ல முக்கியம் , ஐ நா வில் என்ன நடந்தது என்பதுதான் முக்கியம் .

தமிழர் தரப்பு எதிர்பார்த்த அளவு யு என்  அறிக்கை திருப்தி தரவில்லை என்பது உண்மை ஆனால் சிங்கள தரப்பு எதிர்பார்த்ததை விட அவர்களுக்கு ஆப்பு அடிக்கபட்டது என்பது அதைவிட உண்மை .

மங்கள சமரவீர ஐ நாவில் ஆற்றிய உரையை கேட்டால் அது நன்றாக விளங்கும் .சிங்கள தரப்பு தற்காலிகமாக காலத்தை தள்ளி போட்டு கொண்டு தப்பி ஓடுவதில் தான் கடந்த வருடங்களை கழித்தது .இம்முறை அது முற்றாக வெற்றி அழிக்கவில்லை .கிரடிற் கார்ட்டில் மினிமம் காசை கட்டிக்கொண்டு கடனை தள்ளிக்கொண்டே போவது போல போகின்றார்கள் .ஆனால் முழு கடனையும் என்றாவது கட்டியே தீரவேண்டும் .

யு என் இத்தோடு நின்றுவிட போவதில்லை.அறிக்கையில் குறிப்பிடப்பட்ட ஒப்புக்கொண்ட விடயங்களை நிறைவேற்ற தவறும் பட்சத்தில் அடுத்த கட்டத்திற்கு விசாரணை செல்ல சாத்தியம் நிறைய இருக்கு .

மைத்ரி பேசுவதோ மகிந்தா பேசுவதோ சம் சும் பேசுவதோ அல்ல எமக்கு முக்கியம் .இன்று வாசுவும் தன் பங்கிற்கு எதையோ பேசியிருக்கின் றார் நாளை சிவாஜிலிங்கம் எதையாவது உளறுவார் . இவற்றை தலையங்கமாகி செய்தி மட்டும் வெளியிடமுடியும் .

ஆனால் எமக்கு இவையல்ல முக்கியம் , ஐ நா வில் என்ன நடந்தது என்பதுதான் முக்கியம் .

தமிழர் தரப்பு எதிர்பார்த்த அளவு யு என்  அறிக்கை திருப்தி தரவில்லை என்பது உண்மை ஆனால் சிங்கள தரப்பு எதிர்பார்த்ததை விட அவர்களுக்கு ஆப்பு அடிக்கபட்டது என்பது அதைவிட உண்மை .

மங்கள சமரவீர ஐ நாவில் ஆற்றிய உரையை கேட்டால் அது நன்றாக விளங்கும் .சிங்கள தரப்பு தற்காலிகமாக காலத்தை தள்ளி போட்டு கொண்டு தப்பி ஓடுவதில் தான் கடந்த வருடங்களை கழித்தது .இம்முறை அது முற்றாக வெற்றி அழிக்கவில்லை .கிரடிற் கார்ட்டில் மினிமம் காசை கட்டிக்கொண்டு கடனை தள்ளிக்கொண்டே போவது போல போகின்றார்கள் .ஆனால் முழு கடனையும் என்றாவது கட்டியே தீரவேண்டும் .

யு என் இத்தோடு நின்றுவிட போவதில்லை.அறிக்கையில் குறிப்பிடப்பட்ட ஒப்புக்கொண்ட விடயங்களை நிறைவேற்ற தவறும் பட்சத்தில் அடுத்த கட்டத்திற்கு விசாரணை செல்ல சாத்தியம் நிறைய இருக்கு .

இங்கு கருத்தெழுதும் பலருக்கு அடைந்தால் ஈழம் இல்லை சுடுகாடு பாணி அரசியலை தவிற ஒரு மண்ணும் விளங்காது.  சிங்கள அரசு மக்களுக்கு என்ன வேணுமென்டாலும் கூறலாம் ஆனால் ஐநாவில் அவர்களின் குடும்பி வலுவாக மாட்டுப்பட்டிருக்கிறது. கூட்டமைப்பும் மூளையுள்ள புலம்பெயர் தமிழர் அமைப்புகளும் அடுத்த கட்டத்திற்கு எவ்வாறு இந்த விசாரணைகளை நகர்த்தி செல்லப்போகிறார்கள் என்பதில் தான் அனைத்தும் தங்கியிருக்கிறது. முதல் கட்டமாக சம்பந்தர் சிங்கள அரசு பேச்சாளர் போல பேசுவதை தவிர்க்க வேண்டும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.