Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்முறை முடிவுக்கு வந்ததால் தான் சர்வதேச ஆதரவு கிடைத்தது - மீண்டும் வன்முறையை ஆதரிக்க முடியாது:

Featured Replies

வன்முறை முடிவுக்கு வந்ததால் தான் சர்வதேச ஆதரவு கிடைத்தது - மீண்டும் வன்முறையை ஆதரிக்க முடியாது:

 

 

வன்முறை முடிவுக்கு வந்ததால் தான் சர்வதேச ஆதரவு கிடைத்தது - மீண்டும் வன்முறையை ஆதரிக்க முடியாது:

 

வன்முறை முடிவுக்கு வந்து தமிழ் சமூகம் அஹிம்சை வழியில் செயற்பட தொடங்கியுள்ளதால் தான் சர்வதேச ஆதரவு கிடைத்தள்ளது எனவே நாம் மீண்டும் வன்முறையை ஆதரிக்க முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
 
இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்,இந்துக்கல்லூரியில் காந்தி ஜெயந்தி தினம் கொண்டாடப்பட்டது. அந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
 
மேலும் தெரிவிக்கையில், 
 
மஹாத்மா காந்தி இந்தியாவின் சுதந்திரத்திற்காக அஹிம்சை வழியில் போராடினார். அவர் பிரிவினையை  ஆதரிக்கவில்லை . இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிவதை விரும்பவில்லை.  இருந்தும் இந்தியாவில்  இருந்து  பாகிஸ்தான்  உருவானது.
பின்னர் நீண்ட காலத்திற்கு பின்னர் பாகிஸ்தான் பிரிந்தது. ஒன்று பாகிஸ்தான் மற்றையது வங்காளதேஷ். 
 
தந்தை செல்வா அவர்களை ஈழத்து காந்தி என அழைப்பார்கள். தந்தை செல்வாவும் அவருடைய காலத்தில் சத்தியத்தையும் அஹிம்சையையும் பின்பற்றினவர் 
 
கடந்த 1961ம் ஆண்டு நாம் பாரிய சத்தியாகிரக போராட்டத்தை வடக்கு கிழக்கில் ஆரம்பித்தோம்.அரசாங்க அதிபரின் அலுவலகம் முன்பாக நாம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம். தொடர்ந்து சில நாட்களாக போராட்டத்தை  வடக்கு கிழக்கு முழுவதும் நடாத்தினோம்.
 
சில நாட்களில் எமக்கு ஒரு செய்தி வந்தது அரசாங்கம் அவசரகால தடை சட்டத்தை பிரகடனப்படுத்த போகின்றது ஊரடங்கு சட்டம் பிரகடனபப்டுத்த போகின்றது என தகவல் வந்தது. அதனை அடுத்து தந்தை செல்வாவின் தலைமையில் வவுனியாவில் நாம் அனைவரும் சந்தித்தோம்.
 
எல்லோரும் சொன்னார்கள் ஊரடங்கு சட்டம் பிரகடன படுத்தப்பட்டால் நாம் அதற்கு எதிராக போராட எமது மக்களை வீதிகளில் இறக்க வேண்டும் என கூறினார்கள்.
 
அவ்விதமாக நாங்கள் செயற்பட்டால் அது வன்முறையில் முடியும் நாம் வன்முறைக்கு இடமளிக்க முடியாது. ஊரடங்கு சட்டம் பிரகடனப்படுத்த பட்டால் நாம் எமது போராட்டத்தை நிறுத்தி பின்னர் தொடருவோம் என தந்தை செல்வநாயகம் கூறினார்.
 
தந்தை செல்வா அவர்கள் வன்முறையை விரும்பவில்லை அவர் வன்முறையை எதிர்த்தவர் அவ்விதமான தலைவர் இருந்த போது  எமது  இனம் ஏன் வன்முறையை  பின்பற்றினார்கள். என்பது  ஒரு பெரிய  கேள்வி.
 
எமது இனம் வன்முறையை பின்பற்றியதால்  தான் எமது இனத்திற்கு  பெரும் அழிவு ஏற்பட்டது. தற்போது அது ஒரு முடிவுக்கு வந்துள்ளது வன்முறையை நாங்கள் இனி எப்போதும் ஆதரிக்க முடியாது. அஹிம்சையை நாம் பின்பற்ற வேண்டும் அஹிம்சைக்கு கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும். 
 
இன்றைக்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவு தமிழ் மக்களின் உரிமையினை அடைய கூடிய அளவுக்கு கிடைத்து இருக்கிறது என்றால் அதுக்கு முக்கிய காரணம் வன்முறை முடிவுக்கு வந்து இருப்பதும். அஹிம்சை அடிப்படையில் தமிழ் சமூகம் செயற்பட தயாராக இருக்கின்றது அதன் ஊடாக தமிழ் மக்களின் நியாமான பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் எனும் கருத்தை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டதால் தான் இந்த நிலைமை. என தெரிவித்தார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு முன்பு சிங்கள இனவாதிகள் உள்ளூரில் கிடைத்த தென்னமட்டை பணமட்டையால்தான் தமிழர்களை அடித்தார்கள்.
இப்ப பெரிசா சர்வதேச ஆதரவு வந்திருக்கு. 

நாலு வருடம் முன்பு நடந்தவையே ஞாபகம் இல்லை.
நல்ல தலீவரு .....

வாயை திறந்தாலே ..... பொய்யும் புரட்டுமே பிழைப்பாய் போச்சு....

(வன்முறையே சர்வதேசத்தால்தான் வந்தது. இரண்டாய் இருந்த நாட்டை சிங்களவரிடம் கொடுத்தது யார் ?)

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச ஆதரவு எமக்கு கிடைப்பதற்கு முக்கிய காரணம் வன்முறை(கெரில்லா யுத்தம்) என்பதையும் மறக்க முடியாது......

  • கருத்துக்கள உறவுகள்

வன்முறை முடிவுக்கு வந்ததால் தான் சர்வதேச ஆதரவு கிடைத்தது - மீண்டும் வன்முறையை ஆதரிக்க முடியாது:

 

 

வன்முறை முடிவுக்கு வந்ததால் தான் சர்வதேச ஆதரவு கிடைத்தது - மீண்டும் வன்முறையை ஆதரிக்க முடியாது:

 

வன்முறை முடிவுக்கு வந்து தமிழ் சமூகம் அஹிம்சை வழியில் செயற்பட தொடங்கியுள்ளதால் தான் சர்வதேச ஆதரவு கிடைத்தள்ளது எனவே நாம் மீண்டும் வன்முறையை ஆதரிக்க முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
 
இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்,இந்துக்கல்லூரியில் காந்தி ஜெயந்தி தினம் கொண்டாடப்பட்டது. அந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
 
மேலும் தெரிவிக்கையில், 
 
 
மஹாத்மா காந்தி இந்தியாவின் சுதந்திரத்திற்காக அஹிம்சை வழியில் போராடினார். அவர் பிரிவினையை  ஆதரிக்கவில்லை . இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிவதை விரும்பவில்லை.  இருந்தும் இந்தியாவில்  இருந்து  பாகிஸ்தான்  உருவானது.
பின்னர் நீண்ட காலத்திற்கு பின்னர் பாகிஸ்தான் பிரிந்தது. ஒன்று பாகிஸ்தான் மற்றையது வங்காளதேஷ். 
 
தந்தை செல்வா அவர்களை ஈழத்து காந்தி என அழைப்பார்கள். தந்தை செல்வாவும் அவருடைய காலத்தில் சத்தியத்தையும் அஹிம்சையையும் பின்பற்றினவர் 
 
கடந்த 1961ம் ஆண்டு நாம் பாரிய சத்தியாகிரக போராட்டத்தை வடக்கு கிழக்கில் ஆரம்பித்தோம்.அரசாங்க அதிபரின் அலுவலகம் முன்பாக நாம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம். தொடர்ந்து சில நாட்களாக போராட்டத்தை  வடக்கு கிழக்கு முழுவதும் நடாத்தினோம்.
 
சில நாட்களில் எமக்கு ஒரு செய்தி வந்தது அரசாங்கம் அவசரகால தடை சட்டத்தை பிரகடனப்படுத்த போகின்றது ஊரடங்கு சட்டம் பிரகடனபப்டுத்த போகின்றது என தகவல் வந்தது. அதனை அடுத்து தந்தை செல்வாவின் தலைமையில் வவுனியாவில் நாம் அனைவரும் சந்தித்தோம்.
 
எல்லோரும் சொன்னார்கள் ஊரடங்கு சட்டம் பிரகடன படுத்தப்பட்டால் நாம் அதற்கு எதிராக போராட எமது மக்களை வீதிகளில் இறக்க வேண்டும் என கூறினார்கள்.
 
அவ்விதமாக நாங்கள் செயற்பட்டால் அது வன்முறையில் முடியும் நாம் வன்முறைக்கு இடமளிக்க முடியாது. ஊரடங்கு சட்டம் பிரகடனப்படுத்த பட்டால் நாம் எமது போராட்டத்தை நிறுத்தி பின்னர் தொடருவோம் என தந்தை செல்வநாயகம் கூறினார்.
 
தந்தை செல்வா அவர்கள் வன்முறையை விரும்பவில்லை அவர் வன்முறையை எதிர்த்தவர் அவ்விதமான தலைவர் இருந்த போது  எமது  இனம் ஏன் வன்முறையை  பின்பற்றினார்கள். என்பது  ஒரு பெரிய  கேள்வி.
 
எமது இனம் வன்முறையை பின்பற்றியதால்  தான் எமது இனத்திற்கு  பெரும் அழிவு ஏற்பட்டது. தற்போது அது ஒரு முடிவுக்கு வந்துள்ளது வன்முறையை நாங்கள் இனி எப்போதும் ஆதரிக்க முடியாது. அஹிம்சையை நாம் பின்பற்ற வேண்டும் அஹிம்சைக்கு கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும். 
 
இன்றைக்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவு தமிழ் மக்களின் உரிமையினை அடைய கூடிய அளவுக்கு கிடைத்து இருக்கிறது என்றால் அதுக்கு முக்கிய காரணம் வன்முறை முடிவுக்கு வந்து இருப்பதும். அஹிம்சை அடிப்படையில் தமிழ் சமூகம் செயற்பட தயாராக இருக்கின்றது அதன் ஊடாக தமிழ் மக்களின் நியாமான பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் எனும் கருத்தை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டதால் தான் இந்த நிலைமை. என தெரிவித்தார்.
 
 

கோட்சே பொழுதுபோகவில்லை என்று காந்தியை சுட்டார் ........

  • கருத்துக்கள உறவுகள்
 
மஹாத்மா காந்தி இந்தியாவின் சுதந்திரத்திற்காக அஹிம்சை வழியில் போராடினார். அவர் பிரிவினையை  ஆதரிக்கவில்லை . இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிவதை விரும்பவில்லை.

  இருந்தும் இந்தியாவில்  இருந்து  பாகிஸ்தான்  உருவானது.

பின்னர் நீண்ட காலத்திற்கு பின்னர் பாகிஸ்தான் பிரிந்தது.

சோ,பிரிட்டிஸ்காரன் வகுத்த எல்லை கோட்டின்படி இந்தியா ,பாகிஸ்தான் ,பங்களாதேஷ் எல்லாம் ஒன்றாக இருந்திருக்க வேணும் என்று சொல்லுறீயள்,பாகிஸ்தான் தலைவர்கள் தமிழ்தலைவர்களைவிட புத்திசாலிகள்.........மேலும் ஜின்னாவும் ,காந்தியும் குஜாராத்திகள் என்று அண்மையில்தான் அறிந்தேன்.

கட்டுக்கோப்பும்  பண்பாடும் ,சிறந்த  நல்லொழுக்கமும் உள்ள தமிழினம் ஏன் வன்முறையை கையில் எடுத்தது என்ற கிஸ்ரறி தெரியாதவர்களை தேர்ந்தெடுத்து .......யார் தப்பு அப்பு ...........

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுக்கோப்பும்  பண்பாடும் ,சிறந்த  நல்லொழுக்கமும் உள்ள தமிழினம் ஏன் வன்முறையை கையில் எடுத்தது என்ற கிஸ்ரறி தெரியாதவர்களை தேர்ந்தெடுத்து .......யார் தப்பு அப்பு ...........

தமிழினன் வன்முறையைக் கையில் எடுத்த பின்னர்தானே கட்டுக்கோப்பும், நல்லொழுக்கமும் வந்து சேர்ந்தது. அதற்கு முன்னரும், பின்னரும் ஒரு பகுதியினர் பணிவாகவும் பயந்தவர்களாகவும், இன்னொரு பகுதியினர் மற்றவர்களை ஏய்த்துப் பிழைப்பவர்களுமாகத்தானே இருந்தனர்/ இருக்கின்றனர். இப்போது பொதுநல அரசியல் செய்வதாகச் சொல்லிச் சுயநல அரசியல் செய்வதைத்தான் எல்லோரும் செய்கின்றார்கள். ஆனால் தங்களது வருமானத்திலும், புகழைப் பெருக்குவதிலும் மட்டும் கவனமாக இருப்பார்கள்.

தமிழினன் வன்முறையைக் கையில் எடுத்த பின்னர்தானே கட்டுக்கோப்பும், நல்லொழுக்கமும் வந்து சேர்ந்தது. அதற்கு முன்னரும், பின்னரும் ஒரு பகுதியினர் பணிவாகவும் பயந்தவர்களாகவும், இன்னொரு பகுதியினர் மற்றவர்களை ஏய்த்துப் பிழைப்பவர்களுமாகத்தானே இருந்தனர்/ இருக்கின்றனர். இப்போது பொதுநல அரசியல் செய்வதாகச் சொல்லிச் சுயநல அரசியல் செய்வதைத்தான் எல்லோரும் செய்கின்றார்கள். ஆனால் தங்களது வருமானத்திலும், புகழைப் பெருக்குவதிலும் மட்டும் கவனமாக இருப்பார்கள்.

அண்ணே வணக்கம் ...............கட்டுக்கோப்பும் நல்லொழுக்கமும் எம் பண்புகள் இவை காணாமல் போக முயற்சி செய்யப்பட்ட நிலையில் அவற்றை பேணி பாதுக்காக்க த்தான் வன்முறையை கையில் எடுத்தோம் என்ற நிலையை இதே ஜெனறேசனில் உள்ள நீங்களே ஒத்துக்கொள்ளவில்லை என்பது வேதனைக்குரிய விடயம் ................நன்றி .:)

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே வணக்கம் ...............கட்டுக்கோப்பும் நல்லொழுக்கமும் எம் பண்புகள் இவை காணாமல் போக முயற்சி செய்யப்பட்ட நிலையில் அவற்றை பேணி பாதுக்காக்க த்தான் வன்முறையை கையில் எடுத்தோம் என்ற நிலையை இதே ஜெனறேசனில் உள்ள நீங்களே ஒத்துக்கொள்ளவில்லை என்பது வேதனைக்குரிய விடயம் ................நன்றி .:)

எந்த வன்முறையை நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள் என்று தெரியவில்லை! தலிபானும் , ஐசிலும் கட்டுக்கோப்பையும் நல்லொழுக்கத்தையும் பேண வன்முறையை நாடியுள்ளார்கள் என்று சொல்லுகின்றார்கள். அதை நீங்கள் குறிக்கவில்லை என்று நினைக்கின்றேன்:rolleyes:

சாத்வீகப் போராட்டம் மூலம்  தமிழீழம் காணமுடியாது  என்பதால்தான் ஆயுதப் போராட்டம் உருவானது என்பது வரலாறு. ஆனால் வன்முறைப் போராட்டம் மூலம் மட்டும் தமிழீழத்தை அடையமுடியாது என்பதும் வரலாறாகிப்போனது. கட்டுக்கோப்பும் நல்லொழுக்கமும் வன்முறைகளால் என்றுமே பேணமுடியாது என்பதையும் வரலாறு சொல்லுகின்றது.

இப்போது சம்பந்தர் பேசும்போது ஒன்றில் 80களுக்கு முன்னரானவற்றைப் பேசுகின்றார் அல்லது 2009க்குப் பின்னரானவற்றைப் பேசுகின்றார். இடையில் 30 வருடங்களை கவனமாக மறந்துவிட்டார். 

நான் நெடுக சொல்கிறதுதான் ...  தாத்தா டிமென்ஷியாவினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்! ... பழசெல்லாம் மறந்து போச்சு!

வெள்ளையன் வெளிக்கிட்ட பின் 58இல் காலி முகத்திடலில் சத்தியாக்கிரகம் இருந்து சிங்களவன் கக்கூசு தீத்தினது தொடக்கம்  காலாகாலமாக 63, 77 ன இனக்கலவரங்கள் எல்லாம் நடந்து 83 வரை வன்முறை இல்லாமல் உங்கள் குரல்களை உலகம் ஆகா ஓகோ என்று கவணித்தது தானே???

விட்டால் ... ராக்கட்டுகளும் விடுவீர்கள் தாத்தா???

எந்த வன்முறையை நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள் என்று தெரியவில்லை! தலிபானும் , ஐசிலும் கட்டுக்கோப்பையும் நல்லொழுக்கத்தையும் பேண வன்முறையை நாடியுள்ளார்கள் என்று சொல்லுகின்றார்கள். அதை நீங்கள் குறிக்கவில்லை என்று நினைக்கின்றேன்:rolleyes:

சாத்வீகப் போராட்டம் மூலம்  தமிழீழம் காணமுடியாது  என்பதால்தான் ஆயுதப் போராட்டம் உருவானது என்பது வரலாறு. ஆனால் வன்முறைப் போராட்டம் மூலம் மட்டும் தமிழீழத்தை அடையமுடியாது என்பதும் வரலாறாகிப்போனது. கட்டுக்கோப்பும் நல்லொழுக்கமும் வன்முறைகளால் என்றுமே பேணமுடியாது என்பதையும் வரலாறு சொல்லுகின்றது.

இப்போது சம்பந்தர் பேசும்போது ஒன்றில் 80களுக்கு முன்னரானவற்றைப் பேசுகின்றார் அல்லது 2009க்குப் பின்னரானவற்றைப் பேசுகின்றார். இடையில் 30 வருடங்களை கவனமாக மறந்துவிட்டார். 

சம்பந்தர் பற்றி நான் இங்க எதுவும் வாய் திறக்கல ........ஆனால் வன்முறை பற்றி அவர் சொல்லும் விளக்கம் இருக்கே அதுக்கே வாய் திறந்தேன் செம கொமடி .........நீங்கள் ஆயிரம் ஆயிரம் வார்த்தைகளால் நிறுவலாம் ...............அது பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை .  தமிழன் சிறப்பாக வாழ்ந்த சரித்திரத்தை  இங்கே நான் குறிப்பிடவில்லை  .எம் விடுதலைப்போராட்டம் ஆரம்பிக்க முதல்  சாதி அந்தஸ்து சமயம் என்ற வன்முறையில் வாழ்ந்த தமிழனை  இலகுவாக ஏமாற்றி தன்னை தனது நிலையை மேம்படுத்திக்கொண்ட எதிரியை சொன்னேன் .நீங்கள் குறிப்பிட்டதுபோல வன்முறை கையில் எடுக்கப்பட்ட போது இவை காணாமல் பொய் விட்டது .ஆனால் அதே வன்முறை மௌனமான வேளை அவை இரட்டிப்பாய் ஆகி விட்டது .........எது வன்முறை .என்று சம்பந்தர் கூறுகிறார் .நானம் கேட்கிறோம் அவ்வளவுதான்  அண்ணே ..............:)

 

  • கருத்துக்கள உறவுகள்

பலஸ்தீன கொடி ஐ.நா சபையில் இன்று பறப்பதற்கு முக்கிய காரணம் வன்முறையா? சாத்வீகமா?

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விடுதலைப் போராட்டத்தை, அது  எந்த மக்களின் விடிவிற்காக  ஆரம்பிக்கப்பட்டதோ, அந்த மக்களின் தலைவரே அது விடுதலைப் போராட்டம் அல்ல, அது ஒரு வன்முறை என்றும் அதனை இனியும் தான் அனுமதிக்கப் போவதில்லை என்றும் கூறுவது தமிழினம் என்ற ஒரு இனத்திலேயே காணக்கூடியதாக இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படிஎன்றால் 61ம் ஆண்டே உங்களின் சாத்வீகப் போராட்டத்துக்கும், சத்தியாக்கிரகத்துக்கும் சர்வதேச ஆதரவு கிடைத்திருக்க வேண்டுமே? ஏன் கிடைக்கேலை? சர்வதேசமும் ஒரு இனத்தின் அழிவை எதிர்பார்த்துத்தான் மௌனம் காத்தது என்று ஏற்றுக்கொள்ளலாமா? இந்த ஆதரவு ஒரு ஆயுதப் போராட்டத்தின்பின் கிடைத்த வெற்றியே ஒழிய, அகிம்சை எங்கே வென்றது இங்கே? ஒரு அழிவிலிருந்து வந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர் இப்படி துப்புக்கெட்ட பேச்சுக்களைப் பேசி அந்த மக்களை சீண்டுவதை நிறுத்த வேண்டும். ஏறிய ஏணியை உதைக்கும் அற்ப வேலை உவர்களுக்கு கைவந்த கலை. இனி ஒரு தேர்தலை   சந்திக்க மாட்டோம் என்று முடிவு பண்ணிவிட்டாரா? அல்லது மக்களுக்கு இந்த ராயதந்திரம் விளங்காது என்று எண்ணிவிட்டாரோ தெரியல. இதுக்கெல்லாம் பெயர் ராயதந்திரம்.

இது தேவையற்ற பேச்சு.  மக்கள் நல்லதொரு வாய்ப்பை கூட்டமைப்புக்கு வழங்கியிருக்கிறார்கள். அதை வைத்து எமக்கு ஒரு தீர்வை பெற முயற்சிக்காமல் இப்ப தான் கோமாவில் இருந்து எழுந்த மாதிரி ஏன் ஆயுதம் தூக்கினார்கள் என்று ஆராய வெளிக்கிடுவது முட்டாள்தனம்.

இந்த தாத்தா அன்ட் கும்பல் .. எம்மக்களுக்கு உரிய உரிமைகளை பெறுவதற்கு பதில் .. ... தம் உயிரை கொடுத்து எம் மக்களின் விடுதலைக்காக போராடியவர்களின் தியாகங்களில் இன்று குளிர் காய்ந்து கொண்டு, அவர்களின் தியாகங்களை தூற்றுவதில் காலத்தை போக்கப் போகிறார்கள் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.