Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

 

ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு


 
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகளை தன்னிச்சையாக விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ராஜீவ் குற்றவாளிகளை விடுவிப்பதில் மத்திய அரசுக்கே அதிக அதிகாரம் இருக்கிறது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும், முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உட்பட 7 பேரது தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கும் அதிகாரமும் தமிழக அரசுக்கு இல்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதேபோல், சிபிஐ விசாரித்த வழக்குகளில் குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்குவதில் மத்திய அரசே இறுதி முடிவு எடுக்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதனையடுத்து, இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு

ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்று ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் ஆயுள் தண்டனை கைதிகளான நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் கடந்த ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி தமிழக அரசு விடுதலை செய்தது. இதை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன்பாக நடந்து வந்தது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் இப்ராஹிம் கலிபுல்லா, பி.சி.கோஸ், ஏ.பி.சாப்ரே, யு.யு.லலித் ஆகிய 5 பேர் கொண்ட அமர்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், 'முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை.

மத்திய அரசுக்கே அதிகாரம் இருக்கிறது என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. மேலும், அவர்களது தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கும் அதிகாரமும் தமிழக அரசுக்கு இல்லை' என நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/126492/language/ta-IN/------.aspx

  • கருத்துக்கள உறவுகள்
சுப்ரீம் கோர்ட்டில் ராஜீவ் கொலை கைதிகள் விடுதலைக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு
[ புதன்கிழமை, 02 டிசெம்பர் 2015, 01:38.20 AM GMT ]
rajiv_killers_freed_001.jpg
ராஜீவ் கொலை கைதிகள் விடுதலைக்கு எதிராக மத்திய அரசினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது. ஆகவே, தமிழகம் மட்டுமின்றி நாடு முழுதும் இந்த தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை கைதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்யப் போவதாக தமிழக அரசு அறிவித்தது.

இந்த முடிவை எதிர்த்து அப்போதைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தது. சுப்ரீம் கோர்ட்டு 7 பேரையும் விடுதலை செய்ய இடைக்கால தடை விதித்தது.

இந்த வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வு அமைக்கப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் ஜூலை 15-ந் திகதி தொடங்கி 11 நாட்களாக நடைபெற்றது.

மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித்குமார் தன்னுடைய வாதத்தில், சி.பி.ஐ. விசாரணை நடத்திய வழக்கில் உரிய முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக அறிவித்த பிறகு அவர்களை விடுதலை செய்வது குறித்த முடிவை மத்திய அரசு தான் எடுக்க வேண்டும் என்றார்.

அனைத்து தரப்பிலும் இறுதி வாதங்கள் முடிவடைந்து ஆகஸ்டு 12-ந் திகதி இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கின் மீதான இறுதி தீர்ப்பு இன்று  வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.

ராஜீவ் கொலை கைதிகள் விடுதலை குறித்து மட்டுமின்றி, 14 ஆண்டுகளில் ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிக்கப்படுவது சரியா? என்பது குறித்த முடிவும் அறிவிக்கப்படவுள்ளது.

ஆகவே, தமிழகம் மட்டுமின்றி நாடு முழுதும் இந்த தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தலைமை நீதிபதி எச்.எல்.தத்து இன்று ஓய்வு பெறுவதால் அவர் வழங்கக்கூடிய கடைசி தீர்ப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/show-RUmtzCTWSWms5J.html

எவருமே இச் செய்திக்கு ஒரு பின்னூட்டமும் இடவில்லை. எல்லாராலும் மறக்கப்பட்டவர்களாக ஆகிவிட்டார்கள் இவர்கள்.

தீர்ப்பின் படி,  ஆயுள் தண்டனையாக குறைத்தது கூட பிழை என்று ஆகின்றது. அப்படிப் பார்த்தால் முன்னர் விதிக்கப்பட்ட மரண தண்டனை மீள உறுதிப்படுமா? இல்லை என்றால் ஆயுள் வரைக்கும் நீடிக்கும் 'ஆயுள் ' தண்டனையா?

முன்னால் உயர் நீதிமன்ற நீதிபதி  சந்துரு போன்றோரே இவர்கள் பால் நல்லவிதமாக கருத்துகள் சொல்லிய பின்னும் தீர்ப்பை தீர்மானித்த 5 நீதிபதிகளில் ஒருவர் கூட இவர்களின் பால் அக்கறை கொள்ளாதது அரசியல் நோக்கம் கொண்ட தீர்ப்பாகவே இதை கருத வைக்கின்றது.

உத்தரவிட்டவர்கள், திட்டம் தீட்டியவர்கள் என்று அனைவரும் கொல்லப்பட்டு  விட்டனர். மிச்சத்தில் பலர் இலங்கை அரசுடன் நல்லெண்ணமாகி அமைச்சர் பதவி வரைக்கும் அனுபவித்து விட்டனர். ஆனால் இவர்கள் மட்டும் இன்னும் சிறைக்குள்...

 

 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் மறந்து விட்டார்கள் .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

எவருமே இச் செய்திக்கு ஒரு பின்னூட்டமும் இடவில்லை. எல்லாராலும் மறக்கப்பட்டவர்களாக ஆகிவிட்டார்கள் இவர்கள்.

தீர்ப்பின் படி,  ஆயுள் தண்டனையாக குறைத்தது கூட பிழை என்று ஆகின்றது. அப்படிப் பார்த்தால் முன்னர் விதிக்கப்பட்ட மரண தண்டனை மீள உறுதிப்படுமா? இல்லை என்றால் ஆயுள் வரைக்கும் நீடிக்கும் 'ஆயுள் ' தண்டனையா?

இந்திய ஊடகங்களின் படி, ஏற்கனவே விதித்த ஆயுள் தண்டனையே தொடரும்.. அதாவது ஆயுள்வரை நீடிக்கும் தண்டனை.
தமிழக அரசு இந்த ஆயுள் தண்டனையை குறைப்பு செய்ய்து, விடுதலைக்கு உத்தரவிட்டதுதான் தவறு என சொல்கிறது தற்போதைய தீர்ப்பு.

இது நிச்சயம் அரசியல் உள்நோக்கம் கொண்டதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் கொலைக் கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கே உண்டு: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) வழக்கில் ஆயுள் சிறை தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் கைதிகள் ஏழு பேரை விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கே உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்கள் மீது குடியரசுத் தலைவர் மிகவும் தாமதமாக முடிவெடுத்ததாகக் கூறி, அவர்களின் தண்டனையை ஆயுள் சிறையாக உச்ச நீதிமன்றம் குறைத்தது. மேலும், இந்த வழக்கில் இந்த மூவருடன் சேர்த்து ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நளினி (முருகனின் மனைவி), ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் ஏற்கெனவே சுமார் 20 ஆண்டுகளை சிறையில் கழித்துள்ளதால் அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

 இதைத் தொடர்ந்து, ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக சட்டப்பேரவையில் மாநில அரசு கடந்த ஆண்டு பிப்ரவரியில் தீர்மானம் நிறைவேற்றியது. இருப்பினும் இந்த நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்தது.

 இந்த விவகாரத்தை தலைமை நீதிபதி எச்.எல். தத்து தலைமையிலயான அரசியல் சாசன அமர்வு கடந்த ஜூலை 15-ஆம் தேதி முதல் தொடங்கி 11 நாள்கள் விசாரித்து அளித்த தீர்ப்பு விவரம்:

 ஏழு கேள்விகள்:
 1. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 53-உடன் இணைந்த 43-ஆவது பிரிவின்கீழ் ஆயுள் சிறை என்பது கைதியின் வாழ்நாள் முழுவதும் என பொருள்படுமா? வாழ்நாள் தண்டனையை அனுபவித்து வரும் கைதி, அத்தண்டனையை ரத்து செய்து தனக்கு மன்னிப்பு வழங்கக் கோரும் உரிமையை வழங்குகிறதா? சில குறிப்பிட்ட வழக்குகளில் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க சிறப்புப் பிரிவை உருவாக்க முடியுமா? ஆயுள் தண்டனை என்பது 14 ஆண்டுகளுக்கும் மேற்பட்டதா? மரண தண்டனையை ஆயுள் சிறையாகக் குறைத்த பிறகு அக்கைதிகளுக்கான சிறைத் தண்டனையை ரத்து செய்ய முடியுமா?
 2. "தொடர்புடைய அரசு' என்ற வகையில் கைதியின் விடுதலையை இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் தீர்மானிக்க வேண்டியது மாநில அரசா? மத்திய அரசா?
 3. இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 432(7) மாநில அரசின் அதிகாரத்தை விலக்கி வைத்து மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்குகிறதா?.
 4. அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் ஆயுள் கைதிக்கு அளித்த தண்டனையை ரத்து செய்யக் கூடிய அதிகாரம் மத்திய அரசுக்கு உண்டா? மாநில அரசுக்கு உண்டா?.
 5. ஒரு வழக்கில் இரண்டு "தொடர்புடைய அரசுகள்' என இருக்க முடியுமா?.
 6. மாநில அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தன்னிச்சையாக ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய முடியுமா?
 7. குற்றவியல் தண்டனைச் சட்டத்தில் "ஆலோசனை' என்று குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தையை "ஒப்புதல்' என எடுத்துக் கொள்ளலாமா?

மேற்கண்ட ஏழு கேள்விகளை அரசியல் சாசன அமர்வின் பரிசீலனைக்கு மூன்று நீதிபதிகள் அமர்வு அளித்திருந்தது. அதன்படி நடத்தப்பட்ட விசாரணையில், "தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் தண்டனை, ஆயுள் சிறையாகக் குறைக்கப்பட்ட பிறகு அவர்கள் அதிகபட்சமாக 14 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். அவர்களின் குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப 14 ஆண்டுகள் சிறைக் காலத்தை கடந்த பிறகு ஆயுள் முழுவதும் சிறையில் கழிக்க உத்தரவிடுவதை சிறப்புப் பிரிவாகக் கருதலாம்' என நீதிமன்றம் தெளிவுபடுத்துகிறது.

 "குற்றவியல் தண்டனைச் சட்டம் 432, 433 ஆகிய பிரிவுகளின் கீழ் கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரத்தைப் பயன்படுத்துவது சம்பந்தப்பட்ட அரசுகளுக்கே உண்டு. அதை நீதிமன்றம் பயன்படுத்த முடியாது' என்று தெளிவுபடுத்தப்படுகிறது.

 யாருக்கு அதிகாரம்?: மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகளால் தொடுக்கப்பட்ட வழக்குகளில் தண்டனை பெற்ற கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கே உண்டு.
 அதன்படி, "தொடர்புடைய அரசுகள்' என்பதை வழக்கின் தன்மைக்கு ஏற்ப மத்திய, மாநில அரசுகள் எனவும், "ஆலோசனை' என்ற வார்த்தையை "ஒப்புதல்' எனவும் கருத வேண்டும்.

குற்றவாளிக்கு தன்னிச்சையாக தண்டனையைக் குறைக்க குற்றவியல் தண்டனைச் சட்டம் 432(1) பிரிவு வழிவகுக்கவில்லை. சம்பந்தப்பட்ட குற்றவாளி அளிக்கும் மனுவைப் பரீசிலித்து, அதன் மீது நீதிபதி விசாரித்து திருப்தி அடைந்த பிறகே அவரது தண்டனையைக் குறைக்க முடியும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

 தீர்ப்பில் முரண்பாடு:

அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்ற ஐந்து நீதிபதிகளில் தலைமை நீதிபதி எச்.எல். தத்து, நீதிபதிகள் எஃப்.எம்.கலிஃபுல்லா, பினாகி சந்திர கோஸ் ஆகியோர் மேற்கண்ட தீர்ப்பை ஒருமித்த கருத்துடன் எழுதியுள்ளனர்.
 மற்ற இரு நீதிபதிகளான யு.யு.லலித், அபய் மனோகர் சாப்ரே ஆகியோர் "ஆயுள் கைதியின் தண்டனையைக் குறைக்க சிறப்புப் பிரிவை உருவாக்கத் தேவையில்லை' என்ற கருத்தை வலியுறுத்தி தனியாக தீர்ப்பு எழுதியுள்ளனர். இருப்பினும் பெரும்பான்மை அடிப்படையில் மூன்று நீதிபதிகளின் தீர்ப்பே இறுதியானதாகக் கருதப்படுகிறது.

தினமணி

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

எலக்சன் வரும் போது, அவர்களை, பா.ஜ.க விடுவிக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.