Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை சிங்களவரின் நாடு ஏனையோர் வந்தேறு குடிகள் : கொக்கரிக்கிறார் ஞானசார தேரர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை சிங்களவரின் நாடு ஏனையோர் வந்தேறு குடிகள் : கொக்கரிக்கிறார் ஞானசார தேரர்
இலங்கை சிங்களவரின் நாடு ஏனையோர் வந்தேறு குடிகள் : கொக்கரிக்கிறார் ஞானசார தேரர்
வரலாற்று ரீதியாக இந்த நாட்டின் மக்கள் சிங்களவர்களே. பாதைகள் அமைப்பதற்கும், வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், தோட்டங்களில் பணியாற்றுவதற்காகவுமே ஏனைய இனத்தவர் இந்த நாட்டுக்கு வந்தனர். இந்த நாடு சிங்களவர்களின் நாடு. நாட்டில் தோன்றியுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தமிழ் மக்கள் சிங்கள மொழியைக் கற்க வேண்டும். இவ்வாறு பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

அந்த அமைப்பின் தலைமையகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே  அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,
இது சிங்களவர்களின் நாடு. இந்த நாட்டில் வாழ்வதற்கு ஒரு முறையிருக்கிறது. அதனை மாற்றிச் சவூதிஅரேபியாவில் உள்ள ஒரு கிராமமாக மாற்றுவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

தற்போது அரச அதிகாரிகள் தமிழ் மொழியைக் கற்கவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. முட்டாள் சிங்களவர்களுக்கு இன்னும் கொஞ்ச நாள்களில் அரபு மொழியைக் கற்கவேண்டிய சூழலும் ஏற்படலாம். நாட்டின் கலாசாரம் ஒற்றுமையை பாதுகாக்க வேண்டிய தேவையுள்ளது. 

தற்போது அரசியல் தீர்வு பற்றிக் கதைக்கின்றனர். வடக்கு- கிழக்கு இணைப்புப் பற்றிப் பேசுகின்றனர். இந்தப் பிரச்சினை ஏன் தோன்றின. இந்த நாட்டில் வாழும் தமிழர்கள் சிங்கள மொழியைக் கற்றால் எந்தப் பிரச்சினையும் இல்லை. 

வரலாற்று ரீதியாக இந்த நாட்டின் மக்கள் சிங்களவர்களே. பாதைகள் அமைப்பதற்கு, வர்த்தக நடவடிக்கைகளுக்காக, தோட்டங்களில் பணியாற்றுவதற்காகவே ஏனைய இனங்கள் இந்த நாட்டிற்கு வந்தனர். வடக்கு கிழக்கில் இருப்பது அரசியல் பிரச்சினை அல்ல. நிர்வாகப் பிரச்சினை என்றார்.  
10-Dec-2015 10:10 am

http://onlineuthayan.com/news/4643

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதைய இலங்கையின் புதிய அரசியல் கொள்கைகளில் "இனவாதம்" பேசுவோர் தண்டனைக்குரியவர்கள்.
அது உண்மையாயின் இவர் மீது தண்டனை விதிக்கப்பட வேணும்.
நிச்சயம் அதனை நாங்கள் "நடக்கும்" என்று எதிர் பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Sasi_varnam said:

இப்போதைய இலங்கையின் புதிய அரசியல் கொள்கைகளில் "இனவாதம்" பேசுவோர் தண்டனைக்குரியவர்கள்.
அது உண்மையாயின் இவர் மீது தண்டனை விதிக்கப்பட வேணும்.
நிச்சயம் அதனை நாங்கள் "நடக்கும்" என்று எதிர் பார்க்கலாம்.

கொள்கைமட்டும்தான்... சட்டம் இல்லை ...

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கறுப்பி said:

இலங்கை சிங்களவரின் நாடு ஏனையோர் வந்தேறு குடிகள் : கொக்கரிக்கிறார் ஞானசார தேரர்

வரலாற்று ரீதியாக இந்த நாட்டின் மக்கள் சிங்களவர்களே. பாதைகள் அமைப்பதற்கும், வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், தோட்டங்களில் பணியாற்றுவதற்காகவுமே ஏனைய இனத்தவர் இந்த நாட்டுக்கு வந்தனர். இந்த நாடு சிங்களவர்களின் நாடு. நாட்டில் தோன்றியுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தமிழ் மக்கள் சிங்கள மொழியைக் கற்க வேண்டும். இவ்வாறு பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

அந்த அமைப்பின் தலைமையகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே  அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,
இது சிங்களவர்களின் நாடு. இந்த நாட்டில் வாழ்வதற்கு ஒரு முறையிருக்கிறது. அதனை மாற்றிச் சவூதிஅரேபியாவில் உள்ள ஒரு கிராமமாக மாற்றுவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

தற்போது அரச அதிகாரிகள் தமிழ் மொழியைக் கற்கவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. முட்டாள் சிங்களவர்களுக்கு இன்னும் கொஞ்ச நாள்களில் அரபு மொழியைக் கற்கவேண்டிய சூழலும் ஏற்படலாம். நாட்டின் கலாசாரம் ஒற்றுமையை பாதுகாக்க வேண்டிய தேவையுள்ளது. 

தற்போது அரசியல் தீர்வு பற்றிக் கதைக்கின்றனர். வடக்கு- கிழக்கு இணைப்புப் பற்றிப் பேசுகின்றனர். இந்தப் பிரச்சினை ஏன் தோன்றின. இந்த நாட்டில் வாழும் தமிழர்கள் சிங்கள மொழியைக் கற்றால் எந்தப் பிரச்சினையும் இல்லை. 

வரலாற்று ரீதியாக இந்த நாட்டின் மக்கள் சிங்களவர்களே. பாதைகள் அமைப்பதற்கு, வர்த்தக நடவடிக்கைகளுக்காக, தோட்டங்களில் பணியாற்றுவதற்காகவே ஏனைய இனங்கள் இந்த நாட்டிற்கு வந்தனர். வடக்கு கிழக்கில் இருப்பது அரசியல் பிரச்சினை அல்ல. நிர்வாகப் பிரச்சினை என்றார்.  

இது வேற பிரச்சினை போல...

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இன வெறியர்கள் இப்படி கூறுவது புதிதல்ல அதில் இவரும் இணைந்துள்ளார் 

புலன் பெயர் புண்ணியவான்களே மிக விரைவில் கிளிநொச்சியிலும் முல்லைத் தீவிலும் அரபு மொழி பேச வேண்டிய நிலைவரும், கடைசியில் தமிழ் இளைஞ்சர்கள் உயிர் கொடுத்து அல்லாவின் பஊமியாக போகிறது எமது மண். ஆனால் இதை தடுக்கும் சக்தி எமக்கு இருக்கு என்பதை அறியாமல் இருக்கிறொம்.

 

இந்திய -இலங்கை ஒப்பந்தத்தை வாசித்து விளங்காதவர்களால் வந்த வினை இவ்வளவும் ,

கொஞ்ச நாட்களுக்கு அப்படியானவர்களை பொறுப்பில் வைத்ததற்கு பயனை அனுபவிக்கத்தானே வேணும் ,

 

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் அண்ணா ,
உங்களிடம் இந்த செய்திக்குரிய மற்றும் இந்திய -இலங்கை ஒப்பந்தம் சார்ந்த ஆழ்ந்த கருத்துக்கள் நிறைந்த விடயங்கள் கூற இருந்தால் அதை தெளிவாக விவரிக்கலாமே. என்னை போன்றவர்கள் குறைந்த பட்சம் தெரிந்து கொள்வோம். 
வெறும்  உறலை எதுக்கு போட்டு எதுக்கு இந்த இடி இடிக்கிறீங்க.

இந்திய இலங்கை ஒப்பந்ததின் படிதானே கிழகிலையும் வடக்கிலையும் மீள் குடியேற்றம் எண்ட பெயரிலை சிங்கள குடியேற்றங்கள் நடந்தன...  தமிழர் பிரதேசங்களுக்கு சிங்கள போலீஸ் ,  தரப்படுத்தல் சட்டம் பின்வாங்கப்படாமை எல்லா கேவலமும் நடந்தது... அரசியல் கைதிகள் எல்லாம் விடுதலை செய்யப்பட்டது எல்லாம் நடந்தது... 

திலீபன் அண்ணை இந்திய இலங்கை ஒப்பந்ததின் முகமூடியை கிழிச்சு நீண்ட நாள் ஆன கதை கூட தெரியவில்லை...

திலீபனின் 5 அம்ச கோரிக்கையும்  அதுக்கு இந்திய இலங்கை அரச கொள்கையும்...  எதற்கும் உடன்படவில்லை எண்டது அர்சுண் அண்ணைக்கு  தெரியாது போல... 

 

Edited by காத்து

கோரிக்கைகள் வைத்து உண்ணாவிரதம் இருந்து தீர்வு வரும் என்றால் உலகில் யுத்தமே வராதே ,கொஞ்சம் பாவியுங்கோ ?

இந்தியாவிற்கு திலீபன் யார் ?

 

2 minutes ago, arjun said:

கோரிக்கைகள் வைத்து உண்ணாவிரதம் இருந்து தீர்வு வரும் என்றால் உலகில் யுத்தமே வராதே ,கொஞ்சம் பாவியுங்கோ ?

இந்தியாவிற்கு திலீபன் யார் ?

 

இந்திய இலங்கை ஒப்பந்ததின் ஒரு தரப்பு புலிகள்...   அந்த தரப்பின் அரசியல் தலைவர் திலீபன்...   

இலங்கை சிங்களவரிடம் இருந்து மாறி இந்தியாவுக்கு  அடிமையாக போகும் ஒரு ஒப்பந்ததில் புலிகள் கையொப்பம் இட்டு இருக்க வேண்டியது இல்லைதானே... 

இந்திய நடுவெண் ஆட்சியை விட  இலங்கை சிறந்த நாடு... 

முதலில் அடிப்படை அறிவை வளருங்கள்... 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, arjun said:

கோரிக்கைகள் வைத்து உண்ணாவிரதம் இருந்து தீர்வு வரும் என்றால் உலகில் யுத்தமே வராதே ,கொஞ்சம் பாவியுங்கோ ?

இந்தியாவிற்கு திலீபன் யார் ?

 

இல்லண்ணே வாசிக்க தெரியும் உங்கள மாதிரி ஒரு "தினுசா" புரிஞ்சுக்க தெரியாது.
தம்பி தெரியாமல் கேட்கிறான் சொல்லிதாரத விட்டுட்டு .... 
 

 

அர்சுண்

நேபாளத்திலும் , பூட்டானிலும் , பங்களாதேசிலையும்,  பாக்கிஸ்தானிலையும் , திபெத்திலும் இந்தியா என்ன செய்தது எண்டதை அறியாத பாமர மக்கள் இருப்பார்கள் அவர்களுக்கு அவியுங்கள் உங்கள் கதைகளை...

இப்பவும் இந்தியாவிடம் செல்லும் இலங்கை தமிழ் மக்களால் தமது பிரதிநிதிகளாக தெரிவு செய்யபட்ட கூட்டமமைபினருக்கு உந்த கதைகள் தெரியாது உங்கள் நாலு பேருக்குக்குத்தான் தெரியும் போல 

சம தரப்பாக இருந்து  இந்தியாவை பகைக்க கூடாது எனும் எண்ணம் வேறு அவர்களுக்கு கீழை வாழும் எண்ணம் என்பது வேறு...   இந்த பகுத்தறிவு கூட கிடையாமலா இங்கை இவ்வளவு வெட்டி பந்தா... 

அடிமைக்கும் நண்பனுக்கும் வித்தியாசம் கூட தெரியவில்லை எண்டால் என்ன செய்ய...? 

அடிமைக்கும் நண்பனுக்கும் இருக்கும் வித்தியாசம் இல்லை இது ,

அதை விளங்க அரசியல் தெரியவேண்டும் .அது தெரியாத்ததால் தான் இவ்வளவு பிரச்சனை .

உலக வரலாற்றில் ஒப்பந்தம் செய்தவன் எல்லாம் அடிமை சாசனத்தில் கையெழுத்து இடவில்லை ஆனால் ஒரு சாராருக்கு சாதகமாக அந்த ஒப்பந்தம் இருக்க நிறைய சாத்தியம் இருக்கு .

தமிழ் ஈழம் அல்லது சாம்பல்மேடு என்றால் சாம்பல் மேட்டிற்காக தொடர்ந்து போராடுங்கள் 

ஒரு கோதாரியையும் விளங்க முடியாத ஒரு அர்ப மனிதர்கள் தங்களை நியாயப்படுத்த சொல்லும் வசனமாக போனது அரசியல்...  அது உங்களுக்கு தெரியவில்லை என்பது... 

அரச இயல் என்பது ஒரு கலை..  அது பாமரனுக்கும் புரியும் மாதிரி செய்வதே நல்ல தலைமை ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.