Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனவாதத்தை தூண்டுவோருக்கு சிறைத்தண்டனை;புதிய சட்டமூலம் விரைவில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனவாதத்தை தூண்டுவோருக்கு சிறைத்தண்டனை;புதிய சட்டமூலம் விரைவில்
இனவாதத்தை தூண்டுவோருக்கு சிறைத்தண்டனை;புதிய சட்டமூலம் விரைவில்
இனவாத மற்றும் மதவாதத்தை தூண்டும் வகையில் பேசுவோருக்கு எதிராக கடுமையான சிறைத்தண்டனை வழங்கும் புதிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில்  சமர்பிக்கப்படவுள்ளது.

ஆளுங்கட்சிப் பிரதம கொறடாவும், ஊடகத்துறை அமைச்சருமான கயந்த கருணாதிலகவினால் இந்த சட்டமூலம்  சமர்பிக்கப்படவுள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான இனவாத மற்றும் மதவாத கருத்துக்களைப் பரப்பும் குழுவின் செயற்பாட்டினால் கட்டியெழுப்பப்பட்டு வரும் இன நல்லிணக்கத்திற்கு பங்கம் ஏற்படுவதாக அரசாங்கத்திடம் சில தமிழ் உறுப்பினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனை கருத்திற்கொண்டுள்ள அரச தரப்பு இனவாத, மதவாத கருத்துக்களைப் பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு உறுதியளித்துள்ளதோடு, அதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக சிறைத்தண்டனை வழங்கும் சட்டமூலத்தை சபையில் சமர்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
12-Dec-2015 10:14 am
http://onlineuthayan.com/news/4765

  • கருத்துக்கள உறவுகள்

பிக்குமாரை(சிலர் இனவாத்தை கக்கிய வண்ணமே உள்ளனர்) எப்படி தண்டிப்பது?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சட்டமூலத்தைச் சமர்ப்பிக்க இலங்கை அரசாங்கம் எடுத்திருக்கும் முடிவு வரவேற்பிற்குரியது. இனவாத மதவாதக் கருத்துக்களைப் பரப்பி பிரிவினையை ஊக்குவிக்கும் எந்தவொரு தரப்பும் கடுமையாகத் தண்டிக்கப்படல் வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

பல்லின மக்களையும், பல்வேறு மதங்களையும் கொண்ட சிறீலங்காவில் புத்தமதத்தை மட்டுமே அரசின் மதமாகக் கொண்டு அதன் கருத்துக்களையும் பரப்பி, இன அழிப்பையும் மேற்கொள்ளும் சிறீலங்கன் அரசியல்வாதிகளைத் தண்டிப்பதற்கான சட்டத்தை யார் சமர்ப்பிப்பது??? :( 

  • கருத்துக்கள உறவுகள்

உந்த சட்டமூலம் அமுலுக்கு வந்த அடுத்த நிமிடமே.. சொறீலங்கா.. பெளத்த சிங்கள நாடு என்றவையை உள்ள போடுங்க.. அதற்குரிய அரசியல் அமைப்பை உள்ள தூக்கி வையுங்க. பெளத்த சாசன அமைச்சை கலையுங்க.. அமைச்சரை உள்ள போடுங்க.  பெளத்த மதம் சொறீலங்காவின் முதன்மை மதம் என்ற அரசியல் சாசனக் குறிப்பை நீக்குங்க. சிங்கள ஆட்சியாளர்கள்.. தலதாமாளிகைக்கு போய் ஆசிர்வாதம் வாங்குவதை நிறுத்துங்க. அப்படி ஆசீர்வாதம் வாங்கனுன்னா.. மும்மதத் தலைவர்களையும் ஓரிடத்தில் அழைத்து அங்கு ஆசீர்வாதம் வாங்குங்க. பெளத்த பீடங்கள் கலைக்கப்படனும்.. அல்லது அவற்றின் அரசியல்.. அரச செல்வாக்குகள் முற்றாக ஒழிக்கப்படனும். இதை எல்லாம் செய்வீங்களாங்க..... இது என்னமோ சிறுபான்மை மக்களின் கொஞ்ச அடையாளங்களையும் அழித்து மொத்த சொறீலங்காவியும் சிங்கள பெளத்த அடையாளமாக்கும் அரசியல் சட்டத் திருத்தமாவே தெரிகிறது. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்பார்த்தது தான்

பயங்கரவாதச்சட்டத்தை எடுக்கின்றோம் என்றபோதே

இவ்வாறு ஒன்று வரும் என்று.....

அரசுகள் மாறலாம்

கொண்டுவரப்படும் கொடூரச்சட்டங்கள்

தமிழருக்கு மட்டுமே என்பது வரலாறு தரும் பாடம்..

9 hours ago, வாலி said:

இந்த சட்டமூலத்தைச் சமர்ப்பிக்க இலங்கை அரசாங்கம் எடுத்திருக்கும் முடிவு வரவேற்பிற்குரியது. இனவாத மதவாதக் கருத்துக்களைப் பரப்பி பிரிவினையை ஊக்குவிக்கும் எந்தவொரு தரப்பும் கடுமையாகத் தண்டிக்கப்படல் வேண்டும். 

அடிமைகள். எப்போதுமே தன்னப்போன்ற சக அடிமைகள் துன்புறுத்தப்படுவதையே விரும்புவர். எஜமான். செய்யும் எந்த த பாரிய குற்றத்தையும் பயபக்தியோடு ஏற்றுக்கொள்வர். 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, trinco said:

அடிமைகள். எப்போதுமே தன்னப்போன்ற சக அடிமைகள் துன்புறுத்தப்படுவதையே விரும்புவர். எஜமான். செய்யும் எந்த த பாரிய குற்றத்தையும் பயபக்தியோடு ஏற்றுக்கொள்வர். 

2009 மே வரை செய்யப்பட்டதை (ஆனால் தலைப்புக்குச் சற்றும் பொருத்தமில்லாமல்) மிகமிக அருமையாக இரண்டு வரிகளில் சொல்லி இருக்கிறீர்கள்! பாராட்டுக்கள்! :cool:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, கறுப்பி said:

இனவாத மற்றும் மதவாதத்தை தூண்டும் வகையில் பேசுவோருக்கு எதிராக கடுமையான சிறைத்தண்டனை வழங்கும் புதிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில்  சமர்பிக்கப்படவுள்ளது.

உப்புடி சட்டம் வருமெண்டால் முக்காவாசி பிக்குகளும் உள்ளுக்கை தான் போகவேணும்.
 

பிக்குளையும் திருத்தலாம் ஆனால் எம்மவர் சிலரை திருத்தவே முடியாது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, வாலி said:

இந்த சட்டமூலத்தைச் சமர்ப்பிக்க இலங்கை அரசாங்கம் எடுத்திருக்கும் முடிவு வரவேற்பிற்குரியது. இனவாத மதவாதக் கருத்துக்களைப் பரப்பி பிரிவினையை ஊக்குவிக்கும் எந்தவொரு தரப்பும் கடுமையாகத் தண்டிக்கப்படல் வேண்டும். 

சொந்த உரிமையை கேட்பவனை இனவாத பட்டியலில் சேர்த்து சிங்களத்திற்கு விசுவாசமாக இருக்கின்றார்களாம். :cool:

7 minutes ago, arjun said:

பிக்குளையும் திருத்தலாம் ஆனால் எம்மவர் சிலரை திருத்தவே முடியாது .

அண்ணைக்கு சிறிமாவின்ரை புருசன் பண்டாரநாயக்காவை பிக்கு போட்டுத்தள்ளினது என்னத்துக்கெண்டு தெரியாது போலை கிடக்குtw_grin:

ஏனண்ணை பிக்கு பண்டாவை போட்டு தள்ளியவன் .சொன்னால் உங்கட புது கதையை நாங்களும் கேட்கலாம் .

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

உப்புடி சட்டம் வருமெண்டால் முக்காவாசி பிக்குகளும் உள்ளுக்கை தான் போகவேணும்.
 

ஓம் அவர்களையும் சேர்த்துத்தான் உள்ளுக்கை போடவேணும்.

 

7 minutes ago, குமாரசாமி said:

சொந்த உரிமையை கேட்பவனை இனவாத பட்டியலில் சேர்த்து சிங்களத்திற்கு விசுவாசமாக இருக்கின்றார்களாம். :cool:

சொந்த உரிமையை இனவாதத்தை தூண்டாமல் நல்லமுறையிலும் கேட்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

 

9 minutes ago, குமாரசாமி said:

சொந்த உரிமையை கேட்பவனை இனவாத பட்டியலில் சேர்த்து சிங்களத்திற்கு விசுவாசமாக இருக்கின்றார்களாம். :cool:

அண்ணைக்கு சிறிமாவின்ரை புருசன் பண்டாரநாயக்காவை பிக்கு போட்டுத்தள்ளினது என்னத்துக்கெண்டு தெரியாது போலை கிடக்குtw_grin:

அதுதான் அண்ணை நல்ல வடிவாய் சொல்லியிருக்கிறார். நீங்க வேற......... :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, வாலி said:

ஓம் அவர்களையும் சேர்த்துத்தான் உள்ளுக்கை போடவேணும்.

 

சொந்த உரிமையை இனவாதத்தை தூண்டாமல் நல்லமுறையிலும் கேட்கலாம்!

தமிழ்கட்சிகள் 30வருசமாய் என்னத்தை/எப்பிடி கேட்டவையள்??

6 minutes ago, arjun said:

ஏனண்ணை பிக்கு பண்டாவை போட்டு தள்ளியவன் .சொன்னால் உங்கட புது கதையை நாங்களும் கேட்கலாம் .

பிக்குவுக்கு சிறிமாவிலை ஒரு கண் எண்டு உங்களைப்போலை பெரிய ஆக்கள் அப்ப கதைச்சவை :cool:

சுட்டான் பூசாரி விழுந்தான் பண்டாரி கதையை எழுதுங்கோ அண்ணை 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

தமிழ்கட்சிகள் 30வருசமாய் என்னத்தை/எப்பிடி கேட்டவையள்??

ஆனால் அதுக்குப் பின்னரான 30 வருசமா வன்முறையாலும் கேட்டு முடியாமல் போய்விடதும் உண்மைதானே! நல்ல முறையில் கேட்டு தராவிட்டாலும் சேதாரம் எதுவும் எங்களுக்கு இருக்காது! ஆனால் வன்முறை அப்படியல்ல சேதாரம் நிமிர முடியாமல் இருக்கும்!:unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, வாலி said:

ஆனால் அதுக்குப் பின்னரான 30 வருசமா வன்முறையாலும் கேட்டு முடியாமல் போய்விடதும் உண்மைதானே! நல்ல முறையில் கேட்டு தராவிட்டாலும் சேதாரம் எதுவும் எங்களுக்கு இருக்காது! ஆனால் வன்முறை அப்படியல்ல சேதாரம் நிமிர முடியாமல் இருக்கும்!:unsure:

 

அந்த வன்முறையை கையில் எடுத்திராவிட்டால் 31வது வருடம் தீர்வு கிடத்திருக்குமா? தந்திருப்பார்களா?
அவர்கள் தருபவர்களாக இருந்தால் உலகமே போற்றும் மைத்திரி ஆட்சிக்கு வந்தவுடன் நற்சம்பவங்கள் நடந்திருக்க வேண்டுமல்லவா?

ஜனாதிபதி ஆட்சிமுறைய இந்தா முடிக்கிறன் கிழிக்கிறன் படுக்கவைக்கிறன் எண்டு வந்தவர்....இன்னும் ஒண்டையும் காணேல்லை :grin:

1 hour ago, வாலி said:

2009 மே வரை செய்யப்பட்டதை (ஆனால் தலைப்புக்குச் சற்றும் பொருத்தமில்லாமல்) மிகமிக அருமையாக இரண்டு வரிகளில் சொல்லி இருக்கிறீர்கள்! பாராட்டுக்கள்! :cool:

1948 ல் இருந்து இன்று வரை அடிமைகள் அதைத்தான் செய்து வருகிறார்கள் என்பது எல்லா மக்களும் அறிந்ததே. புலியை திட்டினால் ஐ.எஸ் இயக்கத்தைக்  கூட பாராட்டும் கும்பல் உங்களுக்கு பச்சை போட்டால் அது நியாயமான கருத்தாகிவிடுமா. 

சிங்களம் இலகுவாக தீர்வு தரும் என்றால் இவ்வளவு அழிவுகளுடன் யுத்தத்தை நடத்தாமல் தீர்வை தந்திருப்பார்கள் .

ஆழும் அரசுகள் எந்த நாட்டிலும் ஒரு அரசியல் தீர்வை அதற்காக போராடும் சிறுபான்மை இனங்களுக்கு கொடுத்ததாக வரலாறு இல்லை .தீர்வை பெற்றவர்களும் அரை குறை தீர்வுடன் நின்றவர்களும் இன்று வரை எதுவித தீர்வும் இல்லாமல் உலகில் இன்றும் பல போராட்டங்கள் தொடருது.

நாமும் எமக்கான தீர்விற்காக தொடர்ந்து போராடுவோம் .இடையில் ஒரு இருபது வருடங்கள் எமது இருண்ட காலங்களாக ஓடிவிட்டது ..

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

 

அந்த வன்முறையை கையில் எடுத்திராவிட்டால் 31வது வருடம் தீர்வு கிடத்திருக்குமா? தந்திருப்பார்களா?
அவர்கள் தருபவர்களாக இருந்தால் உலகமே போற்றும் மைத்திரி ஆட்சிக்கு வந்தவுடன் நற்சம்பவங்கள் நடந்திருக்க வேண்டுமல்லவா?

ஜனாதிபதி ஆட்சிமுறைய இந்தா முடிக்கிறன் கிழிக்கிறன் படுக்கவைக்கிறன் எண்டு வந்தவர்....இன்னும் ஒண்டையும் காணேல்லை :grin:

அதே வன்முறையை இன்னும் தொடரவிட்டிருந்தால் இப்ப தீர்வு எடுத்திருப்பார்களா? உலகம் வெறுக்கும் ஆனால் புலம்பெயர் அன்பர்கள் விரும்பும் மகிந்த தொடர்ந்திரிந்தால் இப்போது சற்று மூச்சுவிடக்கூடவாவது இருக்கும் நிலைமை ஏற்பட்டிருக்குமா? பல நல்ல செயற்பாடுகளுக்கு ஒரு சிறு தொடக்கப்புள்ளியாவது கிடைத்திருக்குமா? 

நிறைவேற்று அதிகாரமுள்ள சனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு பாராமன்றத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படும் என்பதே வாக்குறுதி. அதை அடுத்தவருடம் சமர்ப்பிக்கவுள்ள புதிய அரசியல் வரைபில் நிச்சயம் எதிர்பார்க்கலாம். 

அப்ப சட்டப்படி இலங்கையில் தமிழர் எண்றும் சிங்களவர் எண்றும் முஸ்லீம் எண்றும் தங்களை யாரும் அடையாளப்படுத்தி கொள்ள முடியாது...    தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெயர் இலங்கை கூட்டணி எண்றும் ,  தமிழரசு கட்சியின் பெயர்  இலங்கை அரசு எண்றும் மாற்றப்படுமோ...??  

சட்டப்படி மக்களே...??

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, காத்து said:

அப்ப சட்டப்படி இலங்கையில் தமிழர் எண்றும் சிங்களவர் எண்றும் முஸ்லீம் எண்றும் தங்களை யாரும் அடையாளப்படுத்தி கொள்ள முடியாது...    தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெயர் இலங்கை கூட்டணி எண்றும் ,  தமிழரசு கட்சியின் பெயர்  இலங்கை அரசு எண்றும் மாற்றப்படுமோ...??  

சட்டப்படி மக்களே...??

மாகாணசபையை ஏற்கவில்லை

ஆனால் இன்றைய தமிழரின் நிலையில் அபிவிருத்தியே முதல் தேவை

எனவே மாகாணசபைத்தேர்தலில் போட்டியிடுகின்றோம் என்றார்

எந்த அபிவிருத்தியையும் காணோம்

செய்த அபிவிருத்தியைவிட விட்ட அறிக்கைகளும்  உள்ளக முரண்பாட்டுச்செயல்களும் மிகமிக அதிகம்

இப்பொழுது மாகாணசபையிடம் வேலைத்திட்டங்கள் போய்விடக்கூடாது என்பதற்காகவே குழிபறிப்புக்கள் தொடர்கின்றன.

தமிழேண்டா...

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, காத்து said:

அப்ப சட்டப்படி இலங்கையில் தமிழர் எண்றும் சிங்களவர் எண்றும் முஸ்லீம் எண்றும் தங்களை யாரும் அடையாளப்படுத்தி கொள்ள முடியாது...    தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெயர் இலங்கை கூட்டணி எண்றும் ,  தமிழரசு கட்சியின் பெயர்  இலங்கை அரசு எண்றும் மாற்றப்படுமோ...??  

சட்டப்படி மக்களே...??

இதைத்தானே எண்பதுகளில் இருந்து சிங்களம் சொல்லி வருகிறது..!? நீங்கள் சிங்களவரும் இல்லை; தமிழரும் இல்லை; முஸ்லிம்களும் இல்லை; பறங்கியரும் இல்லை. மாறாக, நீங்கள் எல்லோரும் சிறீலங்கர்கள். சிங்களம் இங்கே முதன்மையான மொழி; பௌத்தம் முதன்மை மார்க்கம். தேசியம்: சிறீலங்கன்

இதில் தமிழருக்கென்று ஒருதீர்வு எனக் கேட்பவர்கள் அனைவருமே தமிழ் தேசியவாதிகளே.. ஏனெனில் அவர்கள் தமிழரைத் தனிமைப்படுத்தி ஒரு தீர்வினைக் கேட்கும்போது சிறீலங்கன் அடையாளத்தை மறுதலிப்பவர்கள் ஆகின்றார்கள். ஆனால் ஒரு சிலர் குழம்பி நின்றபடி தமிழ் தேசியத்தை எதிர்த்தவாறே தமிழருக்கென்று ஒரு தீர்வையும் கேட்பதுதான் விந்தையிலும் விந்தை. tw_blush:

Edited by இசைக்கலைஞன்
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, இசைக்கலைஞன் said:

இதைத்தானே எண்பதுகளில் இருந்து சிங்களம் சொல்லி வருகிறது..!? நீங்கள் சிங்களவரும் இல்லை; தமிழரும் இல்லை; முஸ்லிம்களும் இல்லை; பறங்கியரும் இல்லை. மாறாக, நீங்கள் எல்லோரும் சிறீலங்கர்கள். சிங்களம் இங்கே முதன்மையான மொழி; பௌத்தம் முதன்மை மார்க்கம். தேசியம்: சிறீலங்கன்

இதில் தமிழருக்கென்று ஒருதீர்வு எனக் கேட்பவர்கள் அனைவருமே தமிழ் தேசியவாதிகளே.. ஏனெனில் அவர்கள் தமிழரைத் தனிமைப்படுத்தி ஒரு தீர்வினைக் கேட்கும்போது சிறீலங்கன் அடையாளத்தை மறுதலிப்பவர்கள் ஆகின்றார்கள். ஆனால் ஒரு சிலர் குழம்பி நின்றபடி தமிழ் தேசியத்தை எதிர்த்தவாறே தமிழருக்கென்று ஒரு தீர்வையும் கேட்பதுதான் விந்தையிலும் விந்தை. tw_blush:

அந்தச்சிங்களவர் இப்ப இல்லையாம்

விலங்கிச்சா.....?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.