Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்கு ஒன்றும் தெரியாது

Featured Replies

எனக்கு ஒன்றும் தெரியாது
 

-எம்.றொசாந்த்

தனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படவுள்ளதாக கூறப்படுவது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வட மாகாண சபைக்குட்பட்ட உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் திணைக்களங்களின் ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்காக 700 பேருக்கு நியமனங்கள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் வியாழக்கிழமை (07) நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் வெளியில் வந்த முதலமைச்சரிடம், 'உங்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அது உண்மையா?' என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

- See more at: http://www.tamilmirror.lk/163263/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%92%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%AE-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%AF-%E0%AE%A4-#sthash.JXVG1TNO.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

இந்த நேரத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரவேண்டிய அவசியம் எவருக்கும் இல்லை. குறிப்பாக கூட்டமைப்புக்கு இல்லை, ஏனெனில் புதிய அரசியலமைப்பு மற்றும் தீர்வுத் திட்டம் வந்தவுடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகள் பதவியிழந்து போகும்.  இப்படியான பொய்ச்செய்தியினை மக்களால் நிராகரிக்கப்பட்ட சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றோரே தமக்கு ஆதாயம் தேடும் நோக்கில் பரப்பிவருகின்றனர். அரசியல் சாணக்கியரான சம்பந்தர் ஒருபோதும் இப்படியான் முடிவை எடுக்க மாட்டார் என நினைக்கின்றேன். இது விக்கி குறுப் மடியில் கனமிருப்பதால் "எங்கப்பன் குதிருக்குள் இல்லை" என்ற பாணியில் வெளியான செய்தியாகக் கூட இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாலி said:

இந்த நேரத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரவேண்டிய அவசியம் எவருக்கும் இல்லை. குறிப்பாக கூட்டமைப்புக்கு இல்லை, ஏனெனில் புதிய அரசியலமைப்பு மற்றும் தீர்வுத் திட்டம் வந்தவுடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகள் பதவியிழந்து போகும்.  இப்படியான பொய்ச்செய்தியினை மக்களால் நிராகரிக்கப்பட்ட சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றோரே தமக்கு ஆதாயம் தேடும் நோக்கில் பரப்பிவருகின்றனர். அரசியல் சாணக்கியரான சம்பந்தர் ஒருபோதும் இப்படியான் முடிவை எடுக்க மாட்டார் என நினைக்கின்றேன். இது விக்கி குறுப் மடியில் கனமிருப்பதால் "எங்கப்பன் குதிருக்குள் இல்லை" என்ற பாணியில் வெளியான செய்தியாகக் கூட இருக்கலாம்.

இலவுகாத்த கிளியின் அனுபவத்தின் 68வது வருடம்...... கொண்டாடுவோம்!! 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வாலி said:

 ஏனெனில் புதிய அரசியலமைப்பு மற்றும் தீர்வுத் திட்டம் வந்தவுடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகள் பதவியிழந்து போகும். 

ஒவ்வொருமுறையும் புதிய சிங்கள அரசு உருவாகும்போது சாதாரண தமிழ்மக்களின் மத்தியில் தோன்றும் இப்படியான  ஒரு எண்ணத்துடன் பல சகாப்தங்கள் ஓடிவிட்டன.

தீர்வுத்திட்டம் பலமுறை முன்வைக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

ஒவ்வொருமுறையும் புதிய சிங்கள அரசு உருவாகும்போது சாதாரண தமிழ்மக்களின் மத்தியில் தோன்றும் இப்படியான  ஒரு எண்ணத்துடன் பல சகாப்தங்கள் ஓடிவிட்டன.

தீர்வுத்திட்டம் பலமுறை முன்வைக்கப்பட்டுள்ளது.

சிங்களவனுக்குத்தெரியும்

தமிழர்களில் ஒரு சிலரை வைத்துக்கொண்டு

5 வருடத்தை இலகுவாக ஓட்டிவிடலாம் என்று.

ஏதாவது திட்டத்துக்கு உடன்பாட்டுக்குவர

அவன் அரசை மாற்றிவிடுவான்

மீண்டும்.....???

இது 60 வருட அருவரிப்பாடம்.....

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாத்தியார் said:

ஒவ்வொருமுறையும் புதிய சிங்கள அரசு உருவாகும்போது சாதாரண தமிழ்மக்களின் மத்தியில் தோன்றும் இப்படியான  ஒரு எண்ணத்துடன் பல சகாப்தங்கள் ஓடிவிட்டன.

தீர்வுத்திட்டம் பலமுறை முன்வைக்கப்பட்டுள்ளது.

வாத்தியார் ஸார், எல்லாம் வாஸ்தவம்தான், ஆனால் இப்போது (தமிழர் தரப்பில்) குழப்பங்காட்டிகள் எவரும் இல்லை. அந்த இடத்தினை விக்கி குறூப் அடையுமா என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். மற்றும்படி பன்னாட்டு சமுகமும் இந்தியாவும் இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு ஒன்றை பெற்றுக்கொள்வதில் முனைப்பாக இருக்கின்றன. எனவே ( அல்லது எனிவேய்ஸ்) இம்முறை 100% தீர்வு உத்தரவாதம்! 

விக்கியர் குழந்தை பிள்ளை போல கதைக்கின்றார் செயற்படுகின்றார் .

அடிக்கடி அழுகின்ற பிள்ளைக்கு இனி சூப்பி தான் வாங்கிகொடுக்கவேண்டும் போலிருக்கு .

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, arjun said:

விக்கியர் குழந்தை பிள்ளை போல கதைக்கின்றார் செயற்படுகின்றார் .

அடிக்கடி அழுகின்ற பிள்ளைக்கு இனி சூப்பி தான் வாங்கிகொடுக்கவேண்டும் போலிருக்கு .

குழந்தப்பிள்ளைக்காண்ணா

கூட்டமைப்பு

இந்தியா 

இந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்குது.....???

Edited by விசுகு

4 hours ago, வாத்தியார் said:

ஒவ்வொருமுறையும் புதிய சிங்கள அரசு உருவாகும்போது சாதாரண தமிழ்மக்களின் மத்தியில் தோன்றும் இப்படியான  ஒரு எண்ணத்துடன் பல சகாப்தங்கள் ஓடிவிட்டன.

தீர்வுத்திட்டம் பலமுறை முன்வைக்கப்பட்டுள்ளது.

மாற்றம் ஒன்றே மாறாதது .

முன்னரும் இப்படிதான் நடந்தது என்று இருந்தால் எந்த மாற்றமும் வராது நாங்கள் தான் மாற்றத்தை கொண்டுவர முயலவேண்டும்.

விடுதலை பெற்ற நாடுகள் எல்லாம் மாற்றம் எதுவும் வராது அரசுகள் ஏமாற்றும் என்று சொல்லிக்கொண்டு செயற்படாமல் இருந்திருந்தால் எவரும் விடுதலை பெற்றிருக்கமாட்டார்கள் . 

40.50 வருடங்களாக அரசியலில் இருப்பவர்கள் கூட இன்னமும் போராடுகின்றார்கள் ஆனால் ஓடி வந்தவர்களுக்கு தான் எப்பவும் சந்தேகம் .

தென்னாபிரிக்கா விடுதலை வரலாற்றை படியுங்கள் .

தாங்கள்  நினைத்தது நடக்கவில்லை எனவே இனி எதுவும் கிடைக்காது  என்பதுதான் பல புலிகளின் நிலைப்பாடு .ஆனால் உண்மை அதுவல்ல .

 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, arjun said:

மாற்றம் ஒன்றே மாறாதது .

முன்னரும் இப்படிதான் நடந்தது என்று இருந்தால் எந்த மாற்றமும் வராது நாங்கள் தான் மாற்றத்தை கொண்டுவர முயலவேண்டும்.

விடுதலை பெற்ற நாடுகள் எல்லாம் மாற்றம் எதுவும் வராது அரசுகள் ஏமாற்றும் என்று சொல்லிக்கொண்டு செயற்படாமல் இருந்திருந்தால் எவரும் விடுதலை பெற்றிருக்கமாட்டார்கள் . 

40.50 வருடங்களாக அரசியலில் இருப்பவர்கள் கூட இன்னமும் போராடுகின்றார்கள் ஆனால் ஓடி வந்தவர்களுக்கு தான் எப்பவும் சந்தேகம் .

தென்னாபிரிக்கா விடுதலை வரலாற்றை படியுங்கள் .

தாங்கள்  நினைத்தது நடக்கவில்லை எனவே இனி எதுவும் கிடைக்காது  என்பதுதான் பல புலிகளின் நிலைப்பாடு .ஆனால் உண்மை அதுவல்ல .

 

திரி நல்லாகத்தானே போய்க்கொண்டிருக்கு....

பின்னர் திண்ணையில் எதற்கு நீலிக்கண்ணீர்????

இணை தலைவர்கள் மூவர் இருக்க சுரேஷ்பிறேமசந்திரன் ஏன் பேச்சாளர் ஆக இருக்கிறார் இதேயும் குழப்பிவிடுவர் கனகாலம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, bismar said:

இணை தலைவர்கள் மூவர் இருக்க சுரேஷ்பிறேமசந்திரன் ஏன் பேச்சாளர் ஆக இருக்கிறார் இதேயும் குழப்பிவிடுவர் கனகாலம் இல்லை.

எம்பி பதவிக்கு கும்பிட்டுக் கூத்துமாடிப் பார்த்தார் கிடைக்கலியே!

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வாலி said:

ந்த இடத்தினை விக்கி குறூப் அடையுமா என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

பொறுத்திருந்து பார்த்து  பதில் எழுதுங்கள் வாலி. அதை விட்டு உங்கள் சொந்த அனுபவத்தை எழுதி மற்றவரைக் குழப்பாதீர்கள். 

7 hours ago, arjun said:

விக்கியர் குழந்தை பிள்ளை போல கதைக்கின்றார் செயற்படுகின்றார் .

அடிக்கடி அழுகின்ற பிள்ளைக்கு இனி சூப்பி தான் வாங்கிகொடுக்கவேண்டும் போலிருக்கு .

இங்கு கனபேர் தங்கள் பிள்ளைகளில் (குழந்தைகளில்) முதலமைச்சரைக் காணுகிறார்கள். சூப்பி, லொலிப்பொப்.
 "குழந்தையும், தெய்வமும் ஒன்று." முதலமைச்சரால் எந்த ஆபத்தும் வராது தமிழினத்துக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, arjun said:

முன்னரும் இப்படிதான் நடந்தது என்று இருந்தால் எந்த மாற்றமும் வராது நாங்கள் தான் மாற்றத்தை கொண்டுவர முயலவேண்டும்.

நல்லாய்ச் சொன்னீங்கள் அர்யுன். அழிவு என்கின்ற வட்டத்துக்க நிண்டு ஒப்பாரி வைச்சுக்கொண்டு நிக்கிறதாலை எதுவும் ஆகப்போவதில்லை. அந்த மாற்றத்தை உங்களில் இருந்து ஆரம்பியுங்கள். புது வருடத்தில் நல்லதோர் மாற்றம் உங்களில் தெரிகிறது. தொடருங்கள்.

5 hours ago, வாலி said:

எம்பி பதவிக்கு கும்பிட்டுக் கூத்துமாடிப் பார்த்தார் கிடைக்கலியே!

விழுந்தவனைப் பார்த்து நக்கலடிப்பவர்கள், ஓடுவதேயில்லை. ஓடியிருந்தால் தெரியும் வெற்றியும், தோல்வியும்  சாதாரணமென்று.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, arjun said:

 

 

விடுதலை பெற்ற நாடுகள் எல்லாம் மாற்றம் எதுவும் வராது அரசுகள் ஏமாற்றும் என்று சொல்லிக்கொண்டு செயற்படாமல் இருந்திருந்தால் எவரும் விடுதலை பெற்றிருக்கமாட்டார்கள் . 

40.50 வருடங்களாக அரசியலில் இருப்பவர்கள் கூட இன்னமும் போராடுகின்றார்கள்

 

 

இந்த விடயத்தில் தான் நானும் நீங்களும் வேறுபடுகின்றோம்.
கூட்டமைப்பு எந்த விதத்தில் இப்போது போராடுகின்றது ?
அப்படி அவர்கள் இன்றைய காலத்தில் செய்த போராட்டத்தில் ஒன்றையாவது உதாரணம் காட்டுங்கள்.
இணக்க அரசியல் மூலம் மட்டும் தீர்வு கிடைக்காது.

9 hours ago, வாலி said:

வாத்தியார் ஸார், எல்லாம் வாஸ்தவம்தான், ஆனால் இப்போது (தமிழர் தரப்பில்) குழப்பங்காட்டிகள் எவரும் இல்லை. அந்த இடத்தினை விக்கி குறூப் அடையுமா என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். மற்றும்படி பன்னாட்டு சமுகமும் இந்தியாவும் இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு ஒன்றை பெற்றுக்கொள்வதில் முனைப்பாக இருக்கின்றன. எனவே ( அல்லது எனிவேய்ஸ்) இம்முறை 100% தீர்வு உத்தரவாதம்! 

நம்பிக் கெட்ட  தமிழன்..... ரொம்ப நல்லவன்.....
எத்தனை தரம் அடித்தாலும் நம்பிக் கொண்டேயிருப்பான்....
தீர்வு கிடைக்கும் என்று....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, விசுகு said:

சிங்களவனுக்குத்தெரியும்

தமிழர்களில் ஒரு சிலரை வைத்துக்கொண்டு

5 வருடத்தை இலகுவாக ஓட்டிவிடலாம் என்று.

ஏதாவது திட்டத்துக்கு உடன்பாட்டுக்குவர

அவன் அரசை மாற்றிவிடுவான்

மீண்டும்.....???

இது 60 வருட அருவரிப்பாடம்.....

தேவை அல்லது அவசியம் வந்தால் சிங்களவன் இன்னொரு தடவை குதிரை வண்டில் இழுக்க தயார்.....

வரலாறு தெரிந்தவர்கள் இலகுவாக புரிந்து கொள்வார்கள்.

தெரியாதவர்கள் முள்ளிவாய்க்கால் தென்றலில் தெம்மாங்கு பாடட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, குமாரசாமி said:

தேவை அல்லது அவசியம் வந்தால் சிங்களவன் இன்னொரு தடவை குதிரை வண்டில் இழுக்க தயார்.....

வரலாறு தெரிந்தவர்கள் இலகுவாக புரிந்து கொள்வார்கள்.

தெரியாதவர்கள் முள்ளிவாய்க்கால் தென்றலில் தெம்மாங்கு பாடட்டும்.

எனண்ணை மறந்திருந்த முள்ளிவாய்க்காலை நினைவுபடுத்துறீங்கள்? நாங்கள் முள்ளிவாய்க்கால் தெம்மாங்கு பாடியிருக்காவிட்டால் முள்ளிவாய்க்கால் முகாரி பாடி காசு சேர்க்க லேசாக இருந்திருக்குமாக்கும்.  

குதிரை வண்டில் மட்டும் இழுக்கவில்லை ,

பல வீடுகளில் வேலைகாரர்கள் ,யாழ் இந்து கோஸ்டல் சமையல்காரன் பண்டா .

பல வேலை தளங்களில் எடுபிடிகள் 

அனைத்து சிங்கள இடங்களிலும் சின்ன வீடு 

பின்னர் சிங்களவன் மெல்ல மெல்ல முழிக்க தொடங்கினான் 

ஆனால் தமிழன் எந்த விதத்திலும் முழிக்கவில்லை முழிக்கவும் மாட்டான் .

இப்பவும் பொய்யும் புரட்டும் தான் அவன் அடையாளம் யாழே பல இடங்களில் சாட்சிதான் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குதிரை வண்டில் இழுத்த ஒரு சர்வதேச அரசியல் சாமாச்சாரத்தை கோழையா...மடையர் சமையல்காரன் சின்னவீடு பெரியவீடு வீட்டு வேலைக்காரன் எண்ட அடிமட்ட அரசியலே சம்பந்தப்படாத விசயங்களோடை ஒப்பிட்டு தங்களை தாங்களே திருப்திப்பட்டுக்கொண்டிருக்கினம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, arjun said:

குதிரை வண்டில் மட்டும் இழுக்கவில்லை ,

பல வீடுகளில் வேலைகாரர்கள் ,யாழ் இந்து கோஸ்டல் சமையல்காரன் பண்டா .

பல வேலை தளங்களில் எடுபிடிகள் 

அனைத்து சிங்கள இடங்களிலும் சின்ன வீடு 

பின்னர் சிங்களவன் மெல்ல மெல்ல முழிக்க தொடங்கினான் 

ஆனால் தமிழன் எந்த விதத்திலும் முழிக்கவில்லை முழிக்கவும் மாட்டான் .

இப்பவும் பொய்யும் புரட்டும் தான் அவன் அடையாளம் யாழே பல இடங்களில் சாட்சிதான் 

ஆட்டைக்கடித்து, மாட்டைக்கடித்து. இறுதியில் மனிதனையே கடிப்பதைப்போன்று....

காலைத்தூக்கி, வாந்தியெடுத்து, தமிழ்ப் போராளிகளை அசிங்கப்படுத்தி இறுதியில் ஒட்டுமொத்தத் தமிழனையும் கேவலப்படுத்தும் இந்தப் பின்னூட்டம் தெரிவிக்கும் செய்தி என்ன? இவர் யார்...??  :unsure:   

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Paanch said:

ஆட்டைக்கடித்து, மாட்டைக்கடித்து. இறுதியில் மனிதனையே கடிப்பதைப்போன்று....

காலைத்தூக்கி, வாந்தியெடுத்து, தமிழ்ப் போராளிகளை அசிங்கப்படுத்தி இறுதியில் ஒட்டுமொத்தத் தமிழனையும் கேவலப்படுத்தும் இந்தப் பின்னூட்டம் தெரிவிக்கும் செய்தி என்ன? இவர் யார்...??  :unsure:   

 முகவரி தெரியாத ஒருவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.