Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐரோப்பா செல்ல பணத்திற்கு பதில் மனைவியை பலாத்காரம் செய்ய அனுமதித்த சிரியா நபர்

Featured Replies

ஐரோப்பா செல்ல பணத்திற்கு பதில் மனைவியை பலாத்காரம் செய்ய அனுமதித்த சிரியா நபர்
 
 
தங்களது குடும்பத்தாரை ஐரோப்புவுக்கு அழைத்துச் செல்ல சிரியாவைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவியை பலாத்காரம் செய்ய ஒருவரை அனுமதித்துள்ளார். ஈராக் மற்றும் சிரியாவில் உள்நாட்டு பிரச்சனை வலுத்து வருவதால் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பாவில் குடியேறி வருகிறார்கள். அவர்களை கள்ளத்தனமாக ஐரோப்பாவுக்கு அழைத்துச் செல்பவர்கள் அதிக அளவில் பணம் வாங்குகிறார்கள்.

 

 இந்நிலையில் எப்படியாவது ஐரோப்பாவுக்கு சென்றால் போதும் என்ற நினைப்பில் சிரியாவைச் சேர்ந்த ஒருவர் செய்யக் கூடாத ஒன்றை துணிந்து செய்துள்ளார். சிரியாவைச் சேர்ந்த அந்த நபர் தனது 30 வயது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் பல்கேரியாவுக்கு கடந்த ஆண்டு தப்பியோடிவிட்டார்.

அங்கிருந்து ஜெர்மனி செல்ல விரும்பிய அவரிடம் போதிய பணம் இல்லை. தங்களை ஜெர்மனிக்கு அழைத்துச் செல்லும் நபருக்கு அளிக்க பணம் இல்லாததால் அவரை தனது மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ய அனுமதித்தார். பணத்திற்கு பதில் அந்த நபர் சிரியா நபரின் மனைவியை 3 மாத காலம் கிட்டத்தட்ட தினமும் பலாத்காரம் செய்துள்ளார். செய்வது அனைத்தையும் செய்துவிட்டு அந்த சிரியா நபர் தனது மனைவியை கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

 

அந்த பெண் தற்போது தனது குழந்தைகளுடன் பெர்லினில் வசிக்கிறார். மனைவியை அடுத்தவனுக்கு அளித்த நபர் ஜெர்மனியில் எங்கோ வசிக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

நம்மவர்கள் ஏஜென்சிக்காரங்களுக்கு முன்னர் பெண்களை தாரைவார்த்தார்களே.. கொழும்பு லொச்களில்.. மலேசியாவில்.. ஆபிரிக்க நாடுகளில்.. நடந்தவற்றை கேள்விப்பட்டால்... இதனை விடக் கொடுமைத்தனங்களை எல்லாம் வெளிநாட்டு மோகத்தில் நம்மவர்களும் அரங்கேற்றியுள்ளனர்.

எல்லாம்.. போர் தந்த விளைவு என்பதிலும் விட போர் ஏற்படுத்திக் கொடுக்கும் புதிச சூழல்கள்.. பலருக்கு பொருண்மிய மீட்சிக்கு உதவும் என்பதால்.. தலைகால் புரியாமல் நடந்துவிட்டு பின் காலம் கடந்த பின் அக்கரைக்கு இக்கரை பச்சை என்றதும்... மனக்குடைச்சலில்.. புழுங்கித் தவிக்கிறார்கள். :rolleyes:tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் கடந்து போகும்....

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

நம்மவர்கள் ஏஜென்சிக்காரங்களுக்கு முன்னர் பெண்களை தாரைவார்த்தார்களே.. கொழும்பு லொச்களில்.. மலேசியாவில்.. ஆபிரிக்க நாடுகளில்.. நடந்தவற்றை கேள்விப்பட்டால்... இதனை விடக் கொடுமைத்தனங்களை எல்லாம் வெளிநாட்டு மோகத்தில் நம்மவர்களும் அரங்கேற்றியுள்ளனர்.

எல்லாம்.. போர் தந்த விளைவு என்பதிலும் விட போர் ஏற்படுத்திக் கொடுக்கும் புதிச சூழல்கள்.. பலருக்கு பொருண்மிய மீட்சிக்கு உதவும் என்பதால்.. தலைகால் புரியாமல் நடந்துவிட்டு பின் காலம் கடந்த பின் அக்கரைக்கு இக்கரை பச்சை என்றதும்... மனக்குடைச்சலில்.. புழுங்கித் தவிக்கிறார்கள். :rolleyes:tw_angry:

முற்றிலும் உண்மை. இதை நாங்கள் எழுதியிருந்தால் ஒரு சிலர் சன்னதம் ஆடியிருப்பர். 

  • கருத்துக்கள உறவுகள்

தங்களைத் தற்காத்துக் கொள்ளமுடியாத சூழல் ஏற்படும்போது மனிதன் கனவிலும் நினைத்திராத செயல்களைச் செய்யும் நிலை வருகின்றது. இப்படியான சந்தர்ப்பங்களை தமது இச்சைகளைத் தீர்த்துக்கொள்ளப் பயன்படுத்துவோர் மனிதர்கள் இல்லை.

 

போர் சூழல் மாத்திரம் அல்ல வேறு பல சந்தர்பங்களும் இப்படியான நிலைக்கு மனிதர்களை தள்ளுகின்றது .

சத்தியராஜின் "ஒரு நாள் இரவு " படத்தில் நடித்த அந்த விபச்சாரி அன்று முழுவதும் எனது  நினைவில் நின்றார் .மிக நன்றாக வேறு நடித்திருந்தார் .

பணம் பணம் பணம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, வாலி said:

முற்றிலும் உண்மை. இதை நாங்கள் எழுதியிருந்தால் ஒரு சிலர் சன்னதம் ஆடியிருப்பர். 

நாங்கள் என்றால்  நீங்கள் யார்???? எப்படி எதனுடன் உங்களை வேறுபடுத்தி பார்க்கின்றீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் என்பது "தன்னிலைப் பன்மை". அது 'நான்'என்ற ஆணவம் இல்லாது எழுதும்போது அவையடங்கி எழுதப்படுவது. அதுபோக கத்தோலிக்க இறையியலின்படி ஏக இறைவனுக்குத் திரித்துவம் உள்ளது போன்று தனி ஒரு மனிதனுக்கும் திரித்துவம் உண்டு. அது ஆவி, ஆத்துமா, சரீரம் என்ற மூன்றுமாம்.  எனவே 'நாங்கள்'என்று இங்கு நான் எழுதுவது என்னை மையப்படுத்தியே என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். 

On 09/01/2016 at 7:20 AM, வாலி said:

நாங்கள் என்பது "தன்னிலைப் பன்மை". அது 'நான்'என்ற ஆணவம் இல்லாது எழுதும்போது அவையடங்கி எழுதப்படுவது. அதுபோக கத்தோலிக்க இறையியலின்படி ஏக இறைவனுக்குத் திரித்துவம் உள்ளது போன்று தனி ஒரு மனிதனுக்கும் திரித்துவம் உண்டு. அது ஆவி, ஆத்துமா, சரீரம் என்ற மூன்றுமாம்.  எனவே 'நாங்கள்'என்று இங்கு நான் எழுதுவது என்னை மையப்படுத்தியே என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். 

பரவாயில்லையே  வாலி

தமிழில் சும்மா பூந்து விளையாடி இருக்கிறீங்கள். பச்சை ஸ்ரொக் இல்லையாம் - வாழ்த்துக்கள்.

Your samalification is fantastic. :D:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.