Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

pain-1.jpg

 

அவனை எல்லாருக்கும் பிடிக்கும். ஏனென்றால் எப்போதும் அவன் மற்றவர் முன் முகம் சுளித்ததே இல்லை. எப்போது பார்த்தாலும் முகத்தில் ஒரு புன்சிரிப்பு. உதவி என்று கேட்கத் தேவையே இல்லை. அதை எந்தக் கஷ்டம் வந்தாலும் செய்து முடித்துவிட்டுத்தான்  மறு வேலை பார்ப்பான். யாருமே அவனை வெறுத்ததேல்லை. சிறு வயதில் இருந்தே கஷ்டப்பட்டும் இப்ப கொஞ்சக்காலம்தான் காசு கையில் தங்குகிறது.

சொந்தமாகக் கடை வைத்திருக்கிறான் தான். ஆனாலும் கடன் கேட்பவர்களுக்குக் குடுத்து, பிள்ளைகள் ஆசைப்பட்டது எல்லாம் வங்கிக் கொடுத்து, பிள்ளைகளுக்கு டியூசன் காசும் கட்டவே காசு கரைந்துவிடுகிறது. இத்தனை நாளும் இருந்தது வாடகை வீட்டில் தான். இவனுக்கேற்ற மனைவி பிள்ளைகள். சொந்த வீடு வேண்டும் என்று மனைவி என்றும் கேட்டதே இல்லை. ஆசை அவளுக்கும் இல்லாமல் இராது. இருந்தும் கணவனிடம் கேட்டும் பயன் இல்லை என்று அவளுக்குத் தெரிந்ததில் ஏன் கணவனின் மனதை நோகடிப்பான் என்று தன் ஆசையைத் தன்னுள்ளே புதைத்துக்கொண்டு இத்தனை நாள் இருந்துவிட்டாள். திருமணம் செய்தும் இப்ப இருபது ஆண்டுகள் முடியப்போகின்றன. பத்தொன்பது வயதில் மூத்த மகளும் பதினாறில் இரண்டாவதும் பதினொன்றும் மூன்றுமாக அடுத்த இரு ஆண் பிள்ளைகளுமாய்  வாழ்வு மகிழ்வாகத்தான் போய்க்கொண்டு இருக்கிறது.

ஒரேயொரு தங்கையும் அக்காவும். அக்கா வேறு நாட்டில் இருக்க தங்கை மட்டும் இவனுக்குக் கிட்ட இருக்கிறாள். ஒவ்வொருநாளும் தங்கை வீட்டுக்குப் போய் அவள் கையால் ஒரு தேநீர் வேண்டிக் குடிக்காவிட்டால் அவனுக்குப் பொச்சம் தீராது. தங்கையும் அண்ணனில் பாசம் தான். தன் பிள்ளைகளுக்கு என்ன வாங்கினாலும் அண்ணனின் பிள்ளைகளுக்கும் சேர்த்தே வாங்குவாள். சின்ன வயதிலேயே தந்தை இல்லாக் குறையை அண்ணன் தான் தீர்த்தான் என்று அவனில் அளவுக்கதிகமான அன்பு.

இப்ப கொஞ்ச நாட்களாக உடம்பைக் குறை அண்ணா என்று தங்கை திட்டவே தொடங்கிவிட்டாள். காசு சேரச் சேர வருத்தங்களும் சேரும் போல. உடம்பில் கொழுப்பும் கூடி உயர் இரத்த அழுத்தமும் ஏறி இருந்தது. வைத்தியர் மருந்துகள் குடுத்தார் தான் என்றாலும் அவனுக்கு மருந்து என்றாலே சத்திராதிதான். எல்லாரும் ஒருநாள் சாகிறது தானே என்பான். மனைவி மருந்தைக் கையில் எடுத்துக் குடுத்தால் மட்டும் வேறு வழியின்றிப் போட்டுக்கொள்வான்.

அவனின் தலை தெரிந்தாலே பொருட்கள் தேவை இல்லை என்றாலும் கூட சனம் கடைக்கு வந்து இவனின் முகத்துக்காக வாங்கிக்கொண்டு போகும். வேலை செய்பவர்களும் குட்டி அண்ணா என்று இவனில் அத்தனை உயிர் தான். எப்பிடி அந்தக் குட்டி என்ற பெயர் வந்தது என்று அவனுக்குத் தெரியாது. பெரும்பாலானவர்களுக்கு அவனின் சொந்தப் பெயர் கூடத் தெரியாது. இந்தப் பெயரே அவனுக்கு நிலைத்து விட்டது. குட்டி என்றவுடன் ஆள் எதோ சிறிதாக இருப்பான் என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். ஆள் பார்க்க வாட்டசாட்டமாக ஐந்து அடியில் கம்பீரமாக இருப்பான்.

******************************************

இப்ப கொஞ்ச நாட்களாகவே நெஞ்சில் ஒரே நோ. பாரங்களைத் தூக்க முடியாமல் எதற்கு எடுத்தாலும் எரிச்சல் எரிச்சலாக வர அவனுக்கே யோசனையாகத்தான் இருந்தது. ஒரே சளியாகவும் இருமலாகவும் இருக்க வைத்தியரிடம் சென்று தன நிலையைக் கூறினான். அவரும் குட்டியின் கையைக் கூடத் தொட்டுப் பாக்காமல் அன்ரிபயோரிக்கைக் கொடுக்க, வாங்கி வந்து இரண்டு நாள் எடுக்கக் கொஞ்சம் குறைந்துவிட்டது. மூன்றாம் நாள் மறந்துவிட நான்காம் நாள் மனைவி திட்டித்திட்டி மருந்தைக் குடுக்கக் குடிச்சிட்டுக்கடைக்குப் போனான். ஒரு கிழமையாகியும் நெஞ்சுநோக் குறையவில்லை. மீண்டும் நாளைக்கு அதே வைத்தியரிடம் நேரம் பதிவு செய்துவிட்டு "நாளைக்கு டொக்டரிட்டைப் போவேணும். மத்தியானம். ஞாபகப் படுத்து" என்று மனைவியிடம் கூறிவிட்டுப் போய்விட்டான். இரவு கடையைப் பூட்டிவிட்டு வர பன்னிரண்டு மணியாகிவிட்டது. வந்த களைப்புக்கு ஒரு தேத்தண்ணி குடிச்சால் நல்லாய் இருக்கும் என்று நினைத்தவன், அயர்ந்து தூங்கும் மனைவியை எழுப்ப மனமின்றிப் பக்கத்தில் சென்று படுத்துக்கொண்டான்.

காலை ஆறுமணிக்கு எழுந்த மனைவி பிள்ளைகளுக்கு சாப்பாடுகள் கட்டித் தயார் செய்து, ஒவ்வொருவர் ஒவ்வொருவராக எழுப்பிப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு எழுமணிக்குக் கோப்பி ஊத்திக்கொண்டு போய்க் கணவனை எழுப்ப, அவனுக்குக் கண்ணையே திறக்க முடியாமல் எதோ செய்தது. கடை திறக்க வேணும். எதோ செய்யுதடி என்றவன், கடைக்கு அருகே இருக்கும் இன்னொரு வேலையாளைக் கடை திறக்க ஏலுமோ என்று கேட்க, அவனும் சரியென்று கூற மனைவியிடம் கோப்பியை வங்கிக் குடிக்க, மூச்சு விட முடியாமல் நெஞ்சை எதோ செய்தது. அவன் மூச்செடுக்கச் சிரமப்படுவதைக் கண்டவள்  உடனே ஓடிப்போய் தன அஸ்மாப் பம்பை எடுத்து வந்து "இதை அடியுங்கோ அப்பா" என்று அவனை அடிக்க வைத்து நெஞ்சைத் தடவி அவனை மீண்டும் படுக்கையில் கிடத்திவிட்டு இண்டைக்கு நானும் உந்த மனிசனோட டொக்டரிட்டைப் போகவேணும் என்று எண்ணியபடி மிச்ச வேலையைப் பார்க்கப் போக, குட்டிக்கு மூச்சு சீராக வந்து தூங்கத் தொடங்கிவிட்டான்.

பதினொன்றரைக்கு டொக்டர். மூத்தவளுக்கு இண்டைக்கு பள்ளிக்கூடம் இல்லை. பதிநொண்டுக்குக் குட்டியை எழுப்பி பல்லைத் தீட்டச் சொல்லிப்போட்டு குசிணியைக் கூட்டிக்கொண்டிருந்தவளுக்கு எதோ அடிபட்ட சத்தம் கேட்க, என்னம்மா சத்தம் என்று படித்துக்கொண்டு இருந்த மகளைக் கேட்டாள். எனக்குத் தெரியேல்லை அம்மா என்றதும் இவள் தும்புத்தடியை வைத்துவிட்டு பாத்ரூம் கதவைத் தட்டி ஒகேயோ அப்பா என்று கேட்க்க எந்தச் சத்தமும் இல்லை. கதவைத் தள்ளித் திறந்தால் குட்டி நிலத்தில் விழுந்து கிடந்தான். "அய்யோ பிள்ளை ஓடி வாங்கோ. அப்பா விழுந்து போனார்" என்றுவிட்டு அவனுக்கு முகத்தில தண்ணி அடிச்சு கன்னத்தைத் தட்ட கண்கள் லேசாகத் திறக்க தாய்க்கும் பிள்ளைக்கும் நெஞ்சில் நின்மதி வந்தது.  உடன மகள் அம்புலன்சுக்கு போன்செய்து  விடயத்தைக் கூறிவிட்டு, தாயுடன் சேர்ந்து தந்தையை எழுப்பி ஒருவாறு கூட்டிக்கொண்டு வந்து கட்டிலில் கிடத்திவிட்டு ஒரு கொப்பி எடுத்து விசுக்கத்தொடங்க, நான் கொஞ்சம் சுடுதண்ணி கொண்டுவாறன் என்றுவிட்டு தாய் குசினிக்குள் போய் இரண்டு நிமிடமாகவில்லை வெளியே அம்புலன்சின் சத்தம் கேட்க மகளுக்கு ஆச்சரியமாகிவிட்டது.சாதாரணமா அரை மணித்தியாலமாவது செல்லும் உவங்கள் வாறத்துக்கு. இண்டைக்கு என்ன ஐந்து நிமிடத்திலையே வந்திட்டாங்களே என வியப்புடன் கதவைத் திறந்தாள். 

அவசரப்பட்டு இப்ப உவங்களுக்கு அடிச்சது. எனக்கு ஓகேதானே என்று குட்டி நினைத்துக்கொண்டிருக்கும் போதே அவர்கள் இருவர் உள்ளே வந்துவிட்டார்கள். "எனக்கு இப்ப கொஞ்ச நாளாவே நெஞ்சுநோ. போன கிழமை டொக்டர் அன்ரிபயோரிக் தந்தவர். இண்டைக்கும் திருப்ப அபொன்ற்மென்ட்இருக்கு" என்று கூறிக்கொண்டிருக்கும்போதே கண்கள் இருண்டு மயக்கம் வந்தது குட்டிக்கு. அவர்கள் குட்டியை படுக்கையிலிருந்து கீழே காபற்றில் கிடத்திவிட்டு கையில் ஊசியை ஏற்றி உடனேயே ஒரு மருந்தை ஏற்றிவிட்டு செலைனைத் தூக்கிப் பிடிக்கும்படி மனைவியின் கையில் கொடுத்துவிட்டு ரிப்போட்டை எழுதத் தொடங்கினர்.

மனைவி நீலாவுக்கு நெஞ்சு முழுதும் பயம் பரவி கைகால்கள் நடுக்கமெடுக்க, நடுங்கும் கைகளால் மருந்தை இறுக்கிப் பிடித்தபடி கண்களை நிறைக்கும் கண்ணீருடன் பார்த்துக்கொண்டு நின்றாள். ஒருநாளும் வருத்தம் எண்டு படுக்காத மனிசனுக்கு இப்பிடியாப் போச்சே என்று மனம் பதைத்தது. மாமிக்கு போன் செய்து சொல்லுங்கோ அம்மா உடன என்று மகளுக்குக் கூறிவிட்டு கீழே பார்க்க அவர்கள் குட்டியின் நெஞ்சைப் பிடித்து அழுத்திக்கொண்டிருந்தார்கள். போன் செய்து ஐந்து நிமிடத்தில் குட்டியின் தங்கையும் கணவனும் வந்துவிட நீலாவுக்குக் கொஞ்சம் தெம்பு வந்தது. அவனை உடனே வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல ஆயத்தப்படுத்தத் தங்கையின் கணவனும் நீலாவுடன் அம்புலன்சில் ஏற, தங்கை அண்ணன் மகளையும் கூட்டிக்கொண்டு பின்னாலேயே மருத்துவமனைக்குச் செல்லத் தயாரானாள்.

**********************************************

கண்விழித்த அவனுக்கு இருப்புக்கொள்ளவே இல்லை. வைத்தியசாலையில் ஐந்து  நாள் இருந்திருக்கின்றேனா. கடையை யார் பார்க்கிறார்கள் என்றும் தெரியவில்லை. வீட்டில் பார்த்தால் மனைவியைக் காணவில்லை. எங்கே போய்விட்டாளோ தெரியவிலையே. தங்கையின் வீட்டுக்கும் போய் ஐந்து நாட்களாகிவிட்டது. அவளுக்கும் என்னைக் காணாவிட்டால் சோறு தண்ணி இறங்காதே என தங்கை பற்றி என்னிக் கிலாகித்தவன் முதலில் அவள் வீட்டுக்குப் போய் வருவோம் என எண்ணினான். தங்கையின் மகளின் சாமத்தியவீட்டுக்  கொப்பி ஒரு வருடத்துக்குப் பிறகு இப்பதான் குடுத்திருக்கிறாங்கள். இண்டைக்கு அதைக் கட்டாயம் பார்த்திட வேணும். பிறகு எனக்கு நேரம் கிடைக்காது என்று எண்ணியவன், அட தங்கை வீட்டில் நிக்க மாட்டாளே என நினைத்தவனுக்கு அவள் வீட்டுத் திறப்பு தன்னிடம் இருப்பது  நினைவி வர உடனே அங்கு கிளம்பினான்.

கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தால் யாரும் இல்லை. உடனே வீடியோவைப் போட்டுவிட்டு கதிரையில் அமர்ந்து பார்க்கத் தொடங்கினான். தொலைக்காட்சியில் சத்தம் வரவே இல்லை. சத்தம் குறைக்கப்பட்டிருக்கும் என எண்ணி ரிமோட்டை எடுத்தவனுக்கு அதை எப்படிப் பாவிப்பது என்றும் தெரியவில்லை.வந்த எரிச்சலில் அதை கதிரையில் எறிந்துவிட்டுக் காட்சியை மட்டும் பார்க்கத் தொடங்கினான். எத்தனை அழகாக இருக்கிறாள் மருமகள். என் பிள்ளைகள் கூடத் தான் அழகாக இருக்கிறார்கள். காசு இருந்தால் யாரையும் அழகாக்கலாம் தான் என மனதில் எண்ணிச் சிரித்தவன் மனைவியின் அழகையும் இரசித்தான். எத்தனை அழகாக இருக்கிறாள். இவளுக்காகவாவது கட்டாயம் ஒரு வீட்டை வாங்கிக் குடுக்கத்தான் வேணும் என்று மனதில் உறுதி எடுத்தவனாக தொடர்ந்து பார்க்கத் தொடங்கினான். சொந்த பந்தங்கள் எத்தனை தேவை மனிதர்களுக்கு என எண்ணியபடியே அதில் லயித்துவிட்டான் அவன். 

************************************

அன்றுகாலை தங்கையின் வீட்டில் நிறையச் சனம். யேர்மனி சுவிசிலிருந்து எல்லாம் வந்திருக்கின்றனர். அண்ணன் மனைவி பிள்ளைகள் கூட இங்கே தான் நிக்கினம். ஒன்றுவிட்ட அண்ணா தான் நித்திரை மாடு. எட்டு மணியாகியும் எழும்பாமல் குறட்டை விட்டுத் தூங்கியபடி இருக்க, தங்கை நித்தியா சென்று அவனை எழுப்பிவிட்டு வந்தாள். பெண்கள் எல்லாரும் மேல் அறைகளில் படுத்துத் தூங்க ஆண்கள் நான்குபேரும் இரவு கோலுக்குள் தான் படுக்கை. ஒன்றுவிட்ட சகோதரர்கள் என்றாலும் சொந்தச் சகோதரர்கள் போலவே சிறுவயதில் இருந்து பழகுவது.

பல்லுத் தீட்டிவிட்டு வந்த ரவி அண்ணா குசினிக்குள் போனபோது அத்தான் தேநீர் குடித்தபடி இருந்தார். அத்தான் நீங்கள் ராத்திரி டிவியை நிப்பாட்ட மறந்து போனியளோ என்று கேட்க விசுக்கென நிமிர்ந்த அத்தானின் கண்களில் பயம் தெரிந்தது. நீயும் கண்டனியே. நான் போடேல்லையடா. எதோ காத்துப் பட்டதுபோல இருக்க கண்ணைத் திறந்து பார்க்க டிவி வேலை செய்யுது. தீபாவின்ர மகளின்ட வீடியோ கருப்பு வெள்ளையில ஓடிக்கொண்டு இருக்க நான் கண்ணை இறுக்கி மூடிக்கொண்டு பெட்சீற்றாலை முகத்தை மூடிக்கொண்டு படுத்தது தான் என்றார். உங்கடை கை தட்டுப் பட்டிருக்குமோ என்றவனுக்கு, வீடியோ இந்த அறையுக்குள்ள இல்லையே பெரியண்ணா என்று தங்கை கூற   மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றன.

அண்ணை தான் வீடியோ பார்த்திருக்கு. அண்ணை என்னை விட்டிட்டுப் போகாதே. சுத்திச்சுத்தி இங்கேயே நிக்குமே. அய்யோ அண்ணா ஏன் எங்கள் எல்லாரையும் இப்பிடித் தவிக்க விட்டுப் போனனீங்கள் என்று குளறி அழும் தங்கையை கண்களில் நீருடன் மற்றவர்களும் பார்த்துக்கொண்டே இருந்தனர் வேறு வழியின்றி.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சுவாரஸ்சியமாகக் கதையைச் சொல்லியிருக்கின்றீர்கள்..... பாராட்டுக்கள் சகோதரி....!!

Link to comment
Share on other sites

ம்...உண்மைக் கதை என்றபடியால் என்னத்தை எழுதுவது என்று தெரியவில்லை..... எல்லாம் தலைவிதி!!

கதை எழுதிய விதம் அழகு... கன காலத்துக்குப் பிறகு எழுதி இருக்கின்றீர்கள்.. தொடர்ந்து எழுதுங்கள்!! :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுவி அண்ணா மீனா புங்கை சேவியர் ஆகிய உறவுகளுக்கு.

Link to comment
Share on other sites

On 1/20/2016 at 6:01 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கண்விழித்த அவனுக்கு இருப்புக்கொள்ளவே இல்லை. வைத்தியசாலையில் ஐந்து  நாள் இருந்திருக்கின்றேனா. கடையை யார் பார்க்கிறார்கள் என்றும் தெரியவில்லை. வீட்டில் பார்த்தால் மனைவியைக் காணவில்லை. எங்கே போய்விட்டாளோ தெரியவிலையே. தங்கையின் வீட்டுக்கும் போய் ஐந்து நாட்களாகிவிட்டது. அவளுக்கும் என்னைக் காணாவிட்டால் சோறு தண்ணி இறங்காதே என தங்கை பற்றி என்னிக் கிலாகித்தவன் முதலில் அவள் வீட்டுக்குப் போய் வருவோம் என எண்ணினான். தங்கையின் மகளின் சாமத்தியவீட்டுக்  கொப்பி ஒரு வருடத்துக்குப் பிறகு இப்பதான் குடுத்திருக்கிறாங்கள். இண்டைக்கு அதைக் கட்டாயம் பார்த்திட வேணும். பிறகு எனக்கு நேரம் கிடைக்காது என்று எண்ணியவன், அட தங்கை வீட்டில் நிக்க மாட்டாளே என நினைத்தவனுக்கு அவள் வீட்டுத் திறப்பு தன்னிடம் இருப்பது  நினைவி வர உடனே அங்கு கிளம்பினான்.

கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தால் யாரும் இல்லை. உடனே வீடியோவைப் போட்டுவிட்டு கதிரையில் அமர்ந்து பார்க்கத் தொடங்கினான். தொலைக்காட்சியில் சத்தம் வரவே இல்லை. சத்தம் குறைக்கப்பட்டிருக்கும் என எண்ணி ரிமோட்டை எடுத்தவனுக்கு அதை எப்படிப் பாவிப்பது என்றும் தெரியவில்லை.வந்த எரிச்சலில் அதை கதிரையில் எறிந்துவிட்டுக் காட்சியை மட்டும் பார்க்கத் தொடங்கினான். எத்தனை அழகாக இருக்கிறாள் மருமகள். என் பிள்ளைகள் கூடத் தான் அழகாக இருக்கிறார்கள். காசு இருந்தால் யாரையும் அழகாக்கலாம் தான் என மனதில் எண்ணிச் சிரித்தவன் மனைவியின் அழகையும் இரசித்தான். எத்தனை அழகாக இருக்கிறாள். இவளுக்காகவாவது கட்டாயம் ஒரு வீட்டை வாங்கிக் குடுக்கத்தான் வேணும் என்று மனதில் உறுதி எடுத்தவனாக தொடர்ந்து பார்க்கத் தொடங்கினான். சொந்த பந்தங்கள் எத்தனை தேவை மனிதர்களுக்கு என எண்ணியபடியே அதில் லயித்துவிட்டான் அவன். 

************************************

அன்றுகாலை தங்கையின் வீட்டில் நிறையச் சனம். யேர்மனி சுவிசிலிருந்து எல்லாம் வந்திருக்கின்றனர். அண்ணன் மனைவி பிள்ளைகள் கூட இங்கே தான் நிக்கினம். ஒன்றுவிட்ட அண்ணா தான் நித்திரை மாடு. எட்டு மணியாகியும் எழும்பாமல் குறட்டை விட்டுத் தூங்கியபடி இருக்க, தங்கை நித்தியா சென்று அவனை எழுப்பிவிட்டு வந்தாள். பெண்கள் எல்லாரும் மேல் அறைகளில் படுத்துத் தூங்க ஆண்கள் நான்குபேரும் இரவு கோலுக்குள் தான் படுக்கை. ஒன்றுவிட்ட சகோதரர்கள் என்றாலும் சொந்தச் சகோதரர்கள் போலவே சிறுவயதில் இருந்து பழகுவது.

பல்லுத் தீட்டிவிட்டு வந்த ரவி அண்ணா குசினிக்குள் போனபோது அத்தான் தேநீர் குடித்தபடி இருந்தார். அத்தான் நீங்கள் ராத்திரி டிவியை நிப்பாட்ட மறந்து போனியளோ என்று கேட்க விசுக்கென நிமிர்ந்த அத்தானின் கண்களில் பயம் தெரிந்தது. நீயும் கண்டனியே. நான் போடேல்லையடா. எதோ காத்துப் பட்டதுபோல இருக்க கண்ணைத் திறந்து பார்க்க டிவி வேலை செய்யுது. தீபாவின்ர மகளின்ட வீடியோ கருப்பு வெள்ளையில ஓடிக்கொண்டு இருக்க நான் கண்ணை இறுக்கி மூடிக்கொண்டு பெட்சீற்றாலை முகத்தை மூடிக்கொண்டு படுத்தது தான் என்றார். உங்கடை கை தட்டுப் பட்டிருக்குமோ என்றவனுக்கு, வீடியோ இந்த அறையுக்குள்ள இல்லையே பெரியண்ணா என்று தங்கை கூற   மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றன.

அண்ணை தான் வீடியோ பார்த்திருக்கு. அண்ணை என்னை விட்டிட்டுப் போகாதே. சுத்திச்சுத்தி இங்கேயே நிக்குமே. அய்யோ அண்ணா ஏன் எங்கள் எல்லாரையும் இப்பிடித் தவிக்க விட்டுப் போனனீங்கள் என்று குளறி அழும் தங்கையை கண்களில் நீருடன் மற்றவர்களும் பார்த்துக்கொண்டே இருந்தனர் வேறு வழியின்றி.

 

 

1990 இல் வந்த "Ghost" ஆங்கிலப் படம் தான் நினைவுக்கு வருகின்றது... உண்மையில் இப்படி எல்லாம் ரி வி போட முடியுமா??? ஆவிகளுடன் அனுபவம் உள்ளவர்கள் எழுதுங்களேன்....

 

இங்கால் பக்கம் வரவும் பயமாய் இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றுமொரு பேய்க்கதை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதைக்கு நன்றி சுமே...

கிட்டத்தட்ட என் கதை தான்....

தொடர்ந்து எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்காச்சி ம் கதை சூப்பர் ??

உங்கள் பெயரை கொஞ்சம் சுருக்கலாமே??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்தில் கதையை வாசிக்கும் போது சுமோ தன்ட சொந்தக் கதை,சோகக் கதையை எழுதி இருக்கிறார் என்று நினைத்தேன். இடையில் வாசித்துக் கொண்டு போகும் போது முடிவை ஊகிக்க கூடியதாக இருந்தது. கதை ஓகே.ஏதோ ஒன்று கதையில் இல்லாத மாதிரிப் பட்டது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு நிகழ்வுக்கதை. வாழ்த்துக்கள் சுமேரி.....தொடர்ந்து எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்ரிமென்ற்ஸான கதையாக இருக்கு. 

நமக்கு நோ சென்ரிமென்ற்ஸ், நோ அற்சாச்மென்ற்ஸ் (உபயம்: காதல் கோட்டை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/01/2016 at 9:15 AM, putthan said:

மற்றுமொரு பேய்க்கதை

இது உண்மைக் கதை :unsure:

On 22/01/2016 at 5:52 PM, முனிவர் ஜீ said:

அக்காச்சி ம் கதை சூப்பர் ??

உங்கள் பெயரை கொஞ்சம் சுருக்கலாமே??

என் பெயரை ஏற்கனவே சுமே என்று சுருக்கித்தானே இருக்கினம்.

On 22/01/2016 at 8:43 PM, ரதி said:

ஆரம்பத்தில் கதையை வாசிக்கும் போது சுமோ தன்ட சொந்தக் கதை,சோகக் கதையை எழுதி இருக்கிறார் என்று நினைத்தேன். இடையில் வாசித்துக் கொண்டு போகும் போது முடிவை ஊகிக்க கூடியதாக இருந்தது. கதை ஓகே.ஏதோ ஒன்று கதையில் இல்லாத மாதிரிப் பட்டது

 

On 22/01/2016 at 5:21 PM, விசுகு said:

கதைக்கு நன்றி சுமே...

கிட்டத்தட்ட என் கதை தான்....

தொடர்ந்து எழுதுங்கள்.

நன்றி அண்ணா

On 22/01/2016 at 8:43 PM, ரதி said:

ஆரம்பத்தில் கதையை வாசிக்கும் போது சுமோ தன்ட சொந்தக் கதை,சோகக் கதையை எழுதி இருக்கிறார் என்று நினைத்தேன். இடையில் வாசித்துக் கொண்டு போகும் போது முடிவை ஊகிக்க கூடியதாக இருந்தது. கதை ஓகே.ஏதோ ஒன்று கதையில் இல்லாத மாதிரிப் பட்டது

எனக்கும் கதையில் எதோ குறை இருக்கு என்று தெரியுதுதான். என்ன எண்டுதான் விளங்குதில்லை. நீங்கள் யாரும் சொன்னால்த்தானே தெரியும்

On 23/01/2016 at 0:02 AM, குமாரசாமி said:

நல்லதொரு நிகழ்வுக்கதை. வாழ்த்துக்கள் சுமேரி.....தொடர்ந்து எழுதுங்கள்.

நன்றி குமாரசாமி

On 21/01/2016 at 11:35 PM, மீனா said:

1990 இல் வந்த "Ghost" ஆங்கிலப் படம் தான் நினைவுக்கு வருகின்றது... உண்மையில் இப்படி எல்லாம் ரி வி போட முடியுமா??? ஆவிகளுடன் அனுபவம் உள்ளவர்கள் எழுதுங்களேன்....

 

இங்கால் பக்கம் வரவும் பயமாய் இருக்கு

எனக்கும் உப்பிடியான கதைகள் விருப்பம் தான். face book கதை கேட்டால் சொல்லுவினம் பேய்க்கதை யார் சொல்லப்போயினம் tw_blush:

On 23/01/2016 at 5:08 PM, கிருபன் said:

சென்ரிமென்ற்ஸான கதையாக இருக்கு. 

நமக்கு நோ சென்ரிமென்ற்ஸ், நோ அற்சாச்மென்ற்ஸ் (உபயம்: காதல் கோட்டை)

ஒன்றில் கூடவா ???

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கருத்தை பார்த்து விட்டு அவரின் அடிப்பொடிகள் பிரஷர் குளுசையை போட்டு விட்டு படிக்க தொடங்குவது நல்லது 😀  ஸ்டாரட்  மியூசிக் .....   இவர் தமிழ்  அரசியலுக்கு வந்து தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை மாறாக சிங்களத்தையும் சிங்கள போர்க்குற்ற படைகளையும் விசாரணையில் இருந்து விடுவித்து அதில் வேறை பெருமை கொண்டாடியவர் . தமிழர்களின் அரசியலை சின்னாபின்னமாக்கி தள்ளியவர் இனி இவர் லண்டன் பக்கம் வெள்ளை கொடியுடன் தான் வரணும் .
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.