Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அல் ஹூசைன் வருகையை முன்னிட்டு முல்லைத்தீவில் இராணுவ முகாங்கள் அகற்றப்பட்டன!

Featured Replies

அல் ஹூசைன் வருகையை முன்னிட்டு முல்லைத்தீவில் இராணுவ முகாங்கள் அகற்றப்பட்டன!

 
 
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் வடகிழக்கிற்கு இன்று விஜயம் மேற்கொள்ளும் நிலையில் முல்லைத்தீவில் காணப்பட்ட முகாங்கள் பலவற்றை தற்காலிகமாக இராணுவத்தினர் அகற்றியுள்ளனர். 
 
மக்களின் சிவில் வாழ்வுக்கு இடையூறாக கடந்த காலத்தில் காணப்பட்ட இராணுவமுகாங்கள், காவலரண்கள், புலனாய்வு முகாங்களை இராணுவத்தினர் நேற்று முந்தினம் இரவு முதல் அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 
 
ஒட்டுசுட்டான் பகுதியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருக்கும் 64ஆவது படைப்பிரிவின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த சிவில் பாதுகாப்பு முகாமை படையினர் தற்காலிகமாக அகற்றியுள்ளனர். 
 
இதேவேளை முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிவில் பாதுகாப்பு இராணுவ முகாம்  மற்றும் புலனாய்வு இராணுவமுகாம் ஆகியவற்றையும் இவ்வாறு இராணுவத்தினர் அகற்றியுள்ளனர். 
 
சிவில் பாதுகாப்பு இராணுவ முகாங்களில் மக்கள் காண்காணிக்கப்பட்டு விசாரணைகள் செய்யப்படுதல், மற்றும் முன்னாள் போராளிகளை கண்காணித்தல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கபடுகின்றன.
 
இராணுவ முகாங்களை அகற்றி சிவில் சூழலை ஏற்படுத்துமாறு வட பகுதி மக்களும் தமிழ் அரசியல் தலைவர்களும் கோரிக்கை விடுத்து வந்தபோதும் அவை அகற்றப்படாத நிலையில் அல் ஹூசைனின் வருகையை முன்னிட்டு தற்காலிகமாக குறித்த முகாங்கள் பின்வாங்கப்பட்டுள்ளன.
 
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் வருகையை முன்னிட்டே இராணுவ முகாங்கள் தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளன என்ற உண்மையை, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன்  அவர்களுக்கு எடுத்துக் காட்டி, இந்த அரசினதும் அதன் இராணுவத்தின் செயற்பாடுகள் பற்றிய உண்மை நிலையை அறியச் செய்வதற்கு தகுதியும் அதிகாரமும் கொண்ட தமிழ்த் தலைவர்கள், அரசியல்வாதிகள் என எல்லோருமே புலம்பெயயர்ந்து சென்றுவிட்டனரா....??

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

உங்கள் வருகையை முன்னிட்டே இராணுவ முகாங்கள் தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளன என்ற உண்மையை, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன்  அவர்களுக்கு எடுத்துக் காட்டி, இந்த அரசினதும் அதன் இராணுவத்தின் செயற்பாடுகள் பற்றிய உண்மை நிலையை அறியச் செய்வதற்கு தகுதியும் அதிகாரமும் கொண்ட தமிழ்த் தலைவர்கள், அரசியல்வாதிகள் என எல்லோருமே புலம்பெயயர்ந்து சென்றுவிட்டனரா....??

எங்கள் ஐனாதிபதியின்

சொந்த அரசின்

திருகுதாளங்களை உலகறியச்செய்ய நாங்கள் தயாராக இல்லை..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, Paanch said:

உங்கள் வருகையை முன்னிட்டே இராணுவ முகாங்கள் தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளன என்ற உண்மையை, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன்  அவர்களுக்கு எடுத்துக் காட்டி, இந்த அரசினதும் அதன் இராணுவத்தின் செயற்பாடுகள் பற்றிய உண்மை நிலையை அறியச் செய்வதற்கு தகுதியும் அதிகாரமும் கொண்ட தமிழ்த் தலைவர்கள், அரசியல்வாதிகள் என எல்லோருமே புலம்பெயயர்ந்து சென்றுவிட்டனரா....??

 

10 hours ago, விசுகு said:

எங்கள் ஐனாதிபதியின்

சொந்த அரசின்

திருகுதாளங்களை உலகறியச்செய்ய நாங்கள் தயாராக இல்லை..

உங்கள் இரண்டு பேருக்கும் அறிவு காணாது.....

சிங்களம் மனித உரிமை மீறினதுக்கு புலியள் எல்லே காரணம்......அவங்கள் தானே நாட்டையும் வீட்டையும் சீரழிச்சது. நோமலாய் இண்டைக்கு சிலோன் சிங்கப்பூர் மாதிரி இருந்திருக்க வேணும்...எல்லாம் உவங்களாலைதானே வந்தது.
முல்லைத்தீவிலை ஆமிகாம்பே இல்லையெண்டுறன்....இதென்ன  அகற்றின கதை கதைக்கிறியள். :cool:

44 minutes ago, குமாரசாமி said:

 

சிங்களம் மனித உரிமை மீறினதுக்கு புலியள் எல்லே காரணம்......அவங்கள் தானே நாட்டையும் வீட்டையும் சீரழிச்சது. நோமலாய் இண்டைக்கு சிலோன் சிங்கப்பூர் மாதிரி இருந்திருக்க வேணும்...எல்லாம் உவங்களாலைதானே வந்தது.
முல்லைத்தீவிலை ஆமிகாம்பே இல்லையெண்டுறன்

புலி வாந்திய்லேயே எனக்கு பிடித்தது இது தான்

  • கருத்துக்கள உறவுகள்

உப்பிடி உருப்படியாய் நாலுபேர் அடிக்கடி வாங்கோ. உதெல்லாம் தானாய் காணமல்ப் போகும். ஒரு நப்பாசை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

உப்பிடி உருப்படியாய் நாலுபேர் அடிக்கடி வாங்கோ. உதெல்லாம் தானாய் காணமல்ப் போகும். ஒரு நப்பாசை.

காணமல் போய்விடும் என்றால் அவர்கள் வரமாடார்கள் 

ஆமியும் அடவடிதனங்களும் வந்து வந்து போகவேண்டும் 

அப்போதான் அவர்களும் வெள்ளையன் பிள்ளையாட்டம் 
வந்து போக முடியும். 

இவர்கள் இல்லை என்றால் அவர்கள் இல்லை ....
அவர்கள் இல்லை என்றால் இவர்களும் இல்லை .....

இதுதான் இன்றைய உலக உலா . 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.