Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டு எம்பி வியாளேந்திரன் சந்திப்பு

Featured Replies

யாழ் இந்து பழைய மாணவர்கள் மட்டகளப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாளேந்திரனுடன் ஒரு சந்திப்பை இராஜகுலசிங்கம் (பாபு ) வீட்டில் ஏற்பாடுசெய்திருந்தார்கள் .அரசியலுக்கு அப்பாற்பட்டு செயற்படும் எமது பழைய மாணவர் சங்கம் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரை சந்திப்பதற்கு என்ன தேவை என்று யோசிக்கலாம் .

நாம் படித்த பாடசாலைக்கு உதவுவதுடன் மட்டுமல்லாது நாட்டிலிலும் சில வேலைத்திட்டங்களை எமது பழையமாணவர் சங்கம் ஏற்கனவே செய்துவருகின்றது .அதைவிட கனடாவிலும் நடை பவனி போன்ற  நிதி சேர்ப்பு நிகழ்வுகள் மூலம் கனேடிய வைத்தியசாலைகளுக்கும் கடந்த காலங்களில் உதவி செய்துவந்தது .

தமிழர் மரபுரிமை விழாவிற்ககாக கனடா  வருகை தந்திருந்த வியாளேந்திரனின் கனேடிய நிகழ்வுகளில் பங்குபற்றிய சில பழைய மாணவர்கள் குறிப்பாக ஜெயானந்தசிவம் யுத்தத்தில் அதிகம் பாதிக்கபட்ட கிழக்கு மாகாணத்திற்கும் எமது பழைய மாணவர் சங்கம் உதவிகள் செய்யவேண்டும் என்ற  நோக்கில் தான் இந்த கூட்டம் ஏற்பாடுசெய்யபட்டது . சுமார் இருபது அங்கத்தவர்கள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் முதலில் தன்னை அறிமுகம் செய்து பின்னர் கிழக்கு மாகாண இன்றைய நிலவரம் பற்றி பேசினார் .

யாழ் இந்து பழைய மாணவர்கள் பலருக்கு கிழக்கு மாகாணத்தின் புவியியல் அமைப்பு, குடிசனபரம்பல்,சமூக பொருளாதார கட்டமைப்பு பற்றிய அறிவு பெரிதாக இல்லை .பல்கலைகழக விரிவுரையாளராக இருந்து அரசியலுக்கு வந்ததாலோ என்னவோ  வியாளேந்திரன்  எதுவித குறிப்புகளும் இல்லாமல் புள்ளிவிபரங்களுடன் மிக தெளிவான ஒரு உரையை ஆற்றினார் .

மட்டக்களப்பின் புவியியல் ,குடிசனபரம்பல் பற்றிய சிறு விளக்கத்துடன் தொடங்கிய அவர் உரை ,போருக்கு பின்னரான மட்டக்களப்பின் இன்றைய நிலையையும் அதற்கான தேவைகளையும் பற்றி அமைந்திருந்தது .

கணவனை இழந்த விதவைகள் ,புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள்,இவர்கள் பிள்ளைகள்  இந்த மூன்று பிரிவினருக்குமான உதவிகளும் வேலைத்திட்டங்களும் தான் மிக முக்கிய பிரச்சனைகள் என்றார்  .

வடக்கு மாகாணத்தை போலல்லாது கிழக்கு மாகாணம் பல்லின சமூகங்கள் கொண்டது (சிங்கள,தமிழ் ,முஸ்லிம் ) எனவே அங்குள்ள மக்கள்  வேறுவிதமான பல பிரச்சனைகளுக்கும் முகம்கொடுப்பதாக குறிப்பிட்ட அவர் அரசியல் தீர்வு வரும் என்று அதுவரை நாம் பொறுத்திராது எமது மக்களுக்கான பொருளாதார அபிவிருத்தி, அதற்கான வேலைத்திட்டங்கள் ,காணி பறி போவதை தடுக்கவேண்டிய அவசயம் பற்றியும் குறிப்பிட்டார் .

கிராமங்களில் இருக்கும் ஆசிரியர் தட்டுபாடு ,இயற்கை வளம் இருந்தும் பொருளாதார வசதியின்மையால் எதுவித தொழிலும் செய்யமுடியாமல் இருக்கும் மக்கள் ,பொருளாதரா நெருக்கடியால் இடைநிலையில் பாடசாலை படிப்பை கைவிட்டு வேலைக்கு செல்லும் சிறுவர்கள் ,கிராமங்கள் எங்கும் திறந்து வைத்திருக்கப்பட்டிருக்கும் மதுபான நிலையங்களால் குடித்து சீரழியும் குடும்பஸ்தர்கள் இளைஞர்கள் ,வறுமை காரணமாக சிறுவயதில் மூன்றாம் நாலாம் தரமாக வாழ்க்கைப்படும் சிறுமிகள் ,பண தேவைகளுக்காக மத்திய கிழக்கிற்கு வேலைக்கு சென்று வாழ்க்கையை சீரளிக்கும் யுவதிகள் இப்படியான ஒரு சூழலில் இன்று கிழாக்கு மாகாணம் சிக்கி தவிக்கின்றது என்றும் மிக மனவருத்துடன் கூறினார் .

மிகவும் பயனுள்ளதாக பலரின் கண்களை கலங்க வைத்த  இந்த சந்திப்பின் மூலம் முடிந்தவரை சில  வேலைத்திட்டங்களை தனிப்பட சில பழையமாணவர்களும் , பழைய மாணவர் சங்கமும் முன்னெடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரனிடம் உறுதி அளித்தார்கள்.

வருங்காலத்தில் நிட்சயம் நல்லது நடக்கும் என்றும் நம்புவோம் .

 

  

 

Edited by arjun

அர்ஜுன்,

இவரது உரையின் வீடியோ வடிவம் எவரிடமாவது இருந்தால் அதைப் பெற முடியுமா?

  • தொடங்கியவர்

தமிழர் மரபுரிமை தினத்தில் ஆற்றிய உரைக்கும் வேறு சில இடங்களில் ஆற்றிய உரைக்கும் வீடியோ வடிவம் இருக்கலாம் 

நான் அவரை சந்தித்த இரு சந்தர்ப்பங்களிலும் தயவு செய்து யாரும் ஒலிப்பதிவு செய்யவேண்டாம் என்று கேட்டுகொண்டார் காரணம் தான் உங்களுடன் பகிரும் சில விடயங்கள் தான் நாட்டிற்கு செல்ல பிரச்சனைகளை உண்டுபண்ணலாம் என்றார் .

வட -கிழக்கு மாகாண இணைப்பு முஸ்லிம்களின் அனுசரணையில்லாமல் இனி சாத்தியம் இல்லை எனவே  இங்கு உங்களுடன் நான் பகிரும் சில விடயங்கள் அதற்கு பாதகமாக  அமைந்துவிடக்கூடாது  என்றார் .விரிவாக அவர்களின் நிலை பற்றி பேசினார் தலையை சுற்றியது .எங்களை நம்பி அவர் சொன்னவற்றை எழுதக்கூடாது .

 

மூன்று மாதங்களுக்கு முன்பு லங்காசிறி நேர்காணல் ஒன்று .

  • கருத்துக்கள உறவுகள்

மக்களிடம் வாக்கு வேண்டி கதிரை ஏறினவர்கள் 
விமானம் ஏறி சமஸ்டி அளந்து திரிந்தால் 
மக்கள் நிலை எப்படி மாறும் ??

15 வருட பொருளாதார தடை இருந்தும் 
வன்னியில் ஒருமனிதன் பட்டினியால் சாகவில்லை.

இதை புலிகளுக்கான புகழ் பரப்புரையாக பாரது 
உண்மையை பாருங்கள் .

இப்போ விபச்சாரம் பட்டினி பசி நோய் 
வாழ்வாதார அடிப்பை இன்மை 

இப்போ தான் ஆயிரம் நிறுவனம் இருக்கு 
லட்சம் உதவி இருக்கு 
உரிய பயிருக்கு நீர் போகிறதா ?

இனத்தை விற்று 30 வருடம் வாழ்ந்த கூட்டம் 
சவ ஊர்வலத்திலும் ஏதும் புடுங்கவே பார்க்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் தேசத்திலள்ள பழைய மாணவர் அமைப்புக்கள் நிறையவே செய்யமுடியும்

செய்கின்றன.

பிரான்சிலுள்ள தெல்லிப்பளை மகாஐனா கல்லூரி பழைய மாணவர் அமைப்பு

தாயகத்தில் நிறையவே செய்கிறார்கள்

அவர்களுடன் ஒப்பிடும் போது யாழ் இந்து பழைய மாணவர் அமைப்பு மிகவும் பெரியதும் வசதியானதுமாகும்.

மிகுந்த எதிர்பார்ப்போடு இந்த சந்திப்பை வரவேற்கலாம்.

நன்றி.

  • தொடங்கியவர்

யாழ் இந்து லண்டன் கனடா அமைப்புகள் பாடசாலை தவிர்ந்து பல விடயங்கள் செய்துள்ளோம் .

பொதுவெளியில் அவற்றை எழுதி ஏதும் பிரச்சனை பட நான் விரும்பவில்லை,

எமக்கென்று ஓர் இணையம் இருக்கு அதில் சில விபரங்களும் இருக்கு விரைவில் புதிய இணையம்  அனைத்து விடயங்களுடனும் எதிர்பார்க்கலாம் .

2 hours ago, arjun said:

யாழ் இந்து லண்டன் கனடா அமைப்புகள் பாடசாலை தவிர்ந்து பல விடயங்கள் செய்துள்ளோம் .

பொதுவெளியில் அவற்றை எழுதி ஏதும் பிரச்சனை பட நான் விரும்பவில்லை,

எமக்கென்று ஓர் இணையம் இருக்கு அதில் சில விபரங்களும் இருக்கு விரைவில் புதிய இணையம்  அனைத்து விடயங்களுடனும் எதிர்பார்க்கலாம் .

வாழ்த்துக்கள், தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, arjun said:

யாழ் இந்து லண்டன் கனடா அமைப்புகள் பாடசாலை தவிர்ந்து பல விடயங்கள் செய்துள்ளோம் .

பொதுவெளியில் அவற்றை எழுதி ஏதும் பிரச்சனை பட நான் விரும்பவில்லை,

எமக்கென்று ஓர் இணையம் இருக்கு அதில் சில விபரங்களும் இருக்கு விரைவில் புதிய இணையம்  அனைத்து விடயங்களுடனும் எதிர்பார்க்கலாம் .

பொது அமைப்பு தனது நிலைப்பாட்டில் தெளிவாக இருந்தால்

எங்கும் எழுதலாம்.

புலம் பெயர் அமைப்புக்கள் தாம்  செய்தவற்றை வெளியில் கொண்டு வரணும்

இதன் மூலம் தகவல்களைப்பெறலாம்

ஒரே விடயத்தை பலரும் செய்வதைத்தடுக்கலாம்

புலம் பெயர் அமைப்பக்களிடையே ஒரு பொறுப்பையும் போட்டியையும் உருவாக்கலாம்

செய்யாத அமைப்புக்களை மக்கள் இனம் காணவும் அவர்களையும் இதற்குள் கொண்டுவரவும் உதவும்

தாயகத்தில் சிலரது ஏமாற்றுத்தனங்களை தடுக்கலாம்..

மகாஐனா விடயத்தை அதற்காகத்தான் இங்கு பதிந்தேன்.

பிரான்சிலுள்ள மகாஐனா பழைய மாணவர் சங்கம் 

தாயகத்திலுள்ள 250 பாடசாலைப்பிள்ளைகளுக்கு மாதாமாதம் 1000ரூபாக்களை கொடுப்பதற்கான திட்டத்தை தொடக்கி

150 பிள்ளைகளுக்கான கொடுப்பனவை கொடுக்கத்தொடங்கிவிட்டார்கள்.

(போரால் பாதிக்கப்பட்டு அடிப்படை வசதிகள் இல்லாத குடும்பப்பிள்ளைகள்)

இதற்கான ஆரம்பம்

ஒரு தேத்தண்ணிக்கடையில் மகாஐனாவின் பழைய மாணவரான எனது நண்பர் ஒருவருக்கு

கிளிநொச்சியில் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் செய்யும் திட்டத்தின் வீடியோவை நான் போட்டுக்காட்டியதுடன் தொடங்கியது....

எனவே வெளிக்கொண்டு வருதல் பலரையும் இணைக்கும்

பலரையும் இது சார்ந்து உணரத்தூண்டும்..

 

 

Edited by விசுகு

  • தொடங்கியவர்

அதற்கான இணையத்தில் அதற்கு பொறுப்பானவர்கள் விபரங்களை போடுவார்கள் .

நடக்கும் கலை நிகழ்வையோ அல்லது இரவு விருந்தையோ பற்றி எனது விமர்சனத்தை  எழுத முடியும் ஆனால்  அமைப்பின் செயற்பாடுகளை நான் எழுந்தமானமாக எங்கும் எழுத முடியாது நான் எழுதவும் விரும்பவில்லை .

"பொது அமைப்பு தனது நிலைப்பாட்டில் தெளிவாக இருந்தால்

எங்கும் எழுதலாம்."

தெளிவாக இருப்பதால் தான் எழுதவிரும்பவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் ஒரே  ஒரு முத்து என்பதை மட்டும் உறுதியாக  சொல்லிக்கொள்ளலாம். ஆசிரியனாக, பாராளுமன்ற உறுப்பினராக,தேசத்தொண்டனாக .... நாமும் இவரும் மலையும் மடுவும் தான்.

  • தொடங்கியவர்

 

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் அவர்களின் சுருக்கமான, தெளிவான நேர்முகம். கிழக்கின் தமிழ்ச் சமூகங்களுக்கு உடனடியாக என்ன தேவை என விபரிக்கிறார். 1. முப்பது வயதுக்குக் குறைந்த 30,000 பெண்கள் தமது கணவன்மாரை இழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானொர் "காணாமல்" போனவர்கள். 2. இரண்டாயிரம் சிறுவர்கள் பாடசாலைகளில் இருந்து இடை விலகுகிறார்கள். காரணம் வறுமை. 3. கல்வியில் வீழ்ச்சி.4. மாகாண அரசும் மத்திய அரசும் தரும் உதவிகள் போதா. 4. தமிழ்க் கிராமங்களில் நிலைமை மோசம்.// A short and staright interview in Tamil with the Member of Parliament, Batticaloa, Sathasivam Viyalendran. I am sorry I do not ave the English version. The gist of what he says is : There are 30,000 widows who are 3o years or younger. Their husbads have been kiled off or disapperaed. More than 2000 kids drop out from schools. The main reason is poverty. "Rhabilated" Tamil militants are having a very difficult time because most of them are disabled and cannot find any work. There are also other difficulties.
With thanks to Canadian Tamil Congress for the video clip.

15 hours ago, nunavilan said:

கூட்டமைப்பின் ஒரே  ஒரு முத்து என்பதை மட்டும் உறுதியாக  சொல்லிக்கொள்ளலாம். ஆசிரியனாக, பாராளுமன்ற உறுப்பினராக,தேசத்தொண்டனாக .... நாமும் இவரும் மலையும் மடுவும் தான்

நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, arjun said:

 

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் அவர்களின் சுருக்கமான, தெளிவான நேர்முகம். கிழக்கின் தமிழ்ச் சமூகங்களுக்கு உடனடியாக என்ன தேவை என விபரிக்கிறார். 1. முப்பது வயதுக்குக் குறைந்த 30,000 பெண்கள் தமது கணவன்மாரை இழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானொர் "காணாமல்" போனவர்கள். 2. இரண்டாயிரம் சிறுவர்கள் பாடசாலைகளில் இருந்து இடை விலகுகிறார்கள். காரணம் வறுமை. 3. கல்வியில் வீழ்ச்சி.4. மாகாண அரசும் மத்திய அரசும் தரும் உதவிகள் போதா. 4. தமிழ்க் கிராமங்களில் நிலைமை மோசம்.// A short and staright interview in Tamil with the Member of Parliament, Batticaloa, Sathasivam Viyalendran. I am sorry I do not ave the English version. The gist of what he says is : There are 30,000 widows who are 3o years or younger. Their husbads have been kiled off or disapperaed. More than 2000 kids drop out from schools. The main reason is poverty. "Rhabilated" Tamil militants are having a very difficult time because most of them are disabled and cannot find any work. There are also other difficulties.
With thanks to Canadian Tamil Congress for the video clip.

முக்கியமான விடயங்களை நீட்டி முழங்காமல் அருமையாக அழகாக சொல்லியுள்ளார். சுமந்திரன் போல் ஒருதலைபட்சமல்லாமல் பரந்துபட்டு பொதுவான ஒரு விடயத்தை பட்டும் படாமலும் தெரிவித்துள்ளார். 
இதுதான் உண்மையான அரசியல்வாதிக்கு அழகு.

கேள்வி:- ஓடிவந்த புலம்பெயர் தமிழர்களும் இதற்கு உதவலாமா?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

 

கேள்வி:- ஓடிவந்த புலம்பெயர் தமிழர்களும் இதற்கு உதவலாமா?

வை நொட்? தாராளமாக உதவலாம்.....பட் நோ புலிவாசம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.