Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொது மக்களை நினைவுகூரலாம், புலிகளை நினைவுகூர முடியாது'

Featured Replies

பொது மக்களை நினைவுகூரலாம், புலிகளை நினைவுகூர முடியாது'

150206150030_ruwan_wijewardene_512x288_r

 பாதுகாப்பு (ராஜாங்க) அமைச்சர் ருவன் விஜேவர்தன

இலங்கையில் போரில் உயிரிழந்த மக்களை நினைவுக்கூர உறவினர்களுக்கு எந்தத் தடையும் இல்லை என்று தெரிவித்துள்ள பாதுகாப்பு (ராஜாங்க) அமைச்சர் ருவன் விஜேவர்தன, விடுதலைப் புலிகளை நினைவுக்கூரும் நடவடிக்கைகளை அனுமதிக்கப்போவதில்லை என்று கூறியுள்ளார்.

போரில் கொல்லப்பட்டவர்களுக்காக ஒருவார கால நினைவு தினம் அனுசரிக்கப்படும் என்று வட-மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளமை தொடர்பில், கொழும்பில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, அமைச்சர் ருவன் விஜேவர்தனவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

முள்ளிவாய்க்காலில் பலியானவர்களின் நினைவாக ஒருவார கால நினைவு அனுஷ்டிக்கப்படவுள்ளதாக வட-மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் யாழ்ப்பாணத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்திருந்தார்.

'12ஆம் தேதியிலிருந்து வரும் 18ஆம் தேதி வரை அனுஷ்டிக்கப்படவுள்ள இந்த நினைவு வாரத்தில் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்கள் உட்பட 1948ஆம் ஆண்டு சுதந்திரத்திற்கு பின்னரான காலப்பகுதியில் கொல்லப்பட்ட தமிழர்கள் அனைவரும் நினைவுக்கூரப்படுவார்கள்' என்று சிவாஜிலிங்கம் கூறியிருந்தார்.

இறுதிப்போரின்போது கொல்லப்பட்ட மக்களின் ஏழாவது ஆண்டு நினைவாக மே 18-ம் தேதி முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்படும் என்றும் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கூறினார்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2016/05/160512_lanka_mullivaikal

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, நவீனன் said:

பொது மக்களை நினைவுகூரலாம், புலிகளை நினைவுகூர முடியாது'

150206150030_ruwan_wijewardene_512x288_r

 பாதுகாப்பு (ராஜாங்க) அமைச்சர் ருவன் விஜேவர்தன

இலங்கையில் போரில் உயிரிழந்த மக்களை நினைவுக்கூர உறவினர்களுக்கு எந்தத் தடையும் இல்லை என்று தெரிவித்துள்ள பாதுகாப்பு (ராஜாங்க) அமைச்சர் ருவன் விஜேவர்தன, விடுதலைப் புலிகளை நினைவுக்கூரும் நடவடிக்கைகளை அனுமதிக்கப்போவதில்லை என்று கூறியுள்ளார்.

மிழினத்தை அழித்துவிடும் சிங்களத்தின் செயற்பாடுகளே தமிழர் என்றால் புலிகள், புலிகள் என்றால் தமிழர் என உலகத்தில் பதிவாகி அது சரித்திரமாகிவிட்டது. நீங்கள் அனுமதித்தாலும் அனுமதிக்காவிட்டாலும் நினைவுகூரப்படுவது தமிழர்கள் என்ற புலிகளே.  
 

  • கருத்துக்கள உறவுகள்

யாரால் கொல்லபட்டார்கள் என்பதையும் நினைவு கூறலாமா ??

அல்லது அதற்கும் தடையா ??

10 minutes ago, Maruthankerny said:

யாரால் கொல்லபட்டார்கள் என்பதையும் நினைவு கூறலாமா ??

அல்லது அதற்கும் தடையா ??

:grin:

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு ஆரம்ப சுடரினை ஏற்றும் நிகழ்வு செம்மணியில் இடம்பெற்றது

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு ஆரம்ப சுடரினை ஏற்றும் நிகழ்வு செம்மணியில் இடம்பெற்றது:-

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு ஆரம்ப சுடரினை ஏற்றும் நிகழ்வு யாழ்.மாவட்டத்தில் அதிகளவானவர்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட செம்மணி பகுதியில் இன்று காலை 10 மணிக்கு இடம்பெற்றது.

வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

 

 

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/132080/language/ta-IN/article.aspx

இந்த படுகொலைகளையும் புலியில் தலையில் கட்டிவிட வேண்டும்....
இது எங்கள் சிறப்பு படையினர் செய்தது போல ஒரு மாய நிலை தொடர்கிறது.

இதற்கு கே பி ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டால் நன்றாக இருக்கும்.
பிரபாகரன் தொலைபேசியில் சொன்னார் .....
நாங்கள் மக்களை கொன்று கொன்று செம்மணியில் புதைத்து கொண்டு 
இருக்கிறோம் என்று.......
இப்படியே சுதி மாறாமல் இழுத்தால் ....

இங்கின திரியிற செம்பு கூட்டமும் பல உண்மைகளை 
படித்து அறிவார்கள்!

அப்பாவி மக்களுக்கு கட்டாயம் அஞ்சலி செய்யவேண்டும் .

 

புலிகளுக்கு அஞ்சலி செய்ய அரசு ஒரு போதும் அனுமதிக்கபோவதில்லை.

போராட சென்ற அனைவருக்கும் வெளிப்படையாக இல்லாமல் என்றாலும்  அவர்களும் அஞ்சலி செய்யவேண்டும் .

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, arjun said:

அப்பாவி மக்களுக்கு கட்டாயம் அஞ்சலி செய்யவேண்டும் .

 

புலிகளுக்கு அஞ்சலி செய்ய அரசு ஒரு போதும் அனுமதிக்கபோவதில்லை.

போராட சென்ற அனைவருக்கும் வெளிப்படையாக இல்லாமல் என்றாலும்  அவர்களும் அஞ்சலி செய்யவேண்டும் .

அழிந்த போன மக்களுக்கும், போராட்டம் என்று கிளம்பி அழிந்து போன சகலருக்கும் சேர்த்து ஒரு அஞ்சலி செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்.

இறந்தவர்கள் மேல் என்ன, புலி, புளாட், டெலோ போன்ற பிரிவினை..??

அரசாங்க அனுமதியே தேவை? .... ஒரு விளக்கு எரித்து, பூ ஒன்று வைக்க? என்னன்ன?

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது. புலிகளும் தமிழ் பேசும் மக்கள் என்ற வகையில்.. சிங்களப்படைகளால்.. ஹிந்தியப் படைகளால்.. இதர துணை இராணுவக் குழுக்களால்.. இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் பேசும் மக்களுக்கு செய்யும் அஞ்சலி என்பது அவசியமே.

அதேபோல்.. போர் காலத்தில் உயிர் நீத்த.. சிங்களப் பொதுமக்களுக்கு சிங்கள மக்கள் அஞ்சலி செய்யலாம். சிங்கள முப்படையினருக்கு.. மற்றும் அவர்கள் சார்ந்த வெற்றி நிகழ்வுகளுக்கு.. நினைவுத் தூபிகளுக்கு வடக்குக் கிழக்கில் இடமில்லை. அவை அனைத்தும் பாரபட்சமின்றி இதே அமைச்சரால் இடித்து அகற்றப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும்.

இனப்படுகொலைக்குள்ளான தமிழ் மக்களுக்கு அஞ்சலிக்கு அனுமதி என்பது போல்.. போரின் போது உயிரிழந்த சிங்கள மக்களுக்கு அஞ்சலிக்கு அனுமதி அளிக்கலாம். ஆனால் சிங்கள முப்படைகளுக்கும் துணை இராணுவக் குழுக்களுக்கும் அனுமதி அளிக்கக் கூடாது. வெற்றி விழாக் கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கனும். அதில் அரசுத் தலைவர்கள்.. கட்சிகள் பங்குபெற்றவும் தடை வர வேண்டும். அதைச் சிங்களம் செய்யுமா..?/! 

ஆளுக்கொரு சட்டம் கூடாது சிங்கள இராணுவ அமைச்சரே..!:rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சொறிலங்காவில் இதையெல்லாம் எதிர்பார்க்கலாமா?
உலகிலேயே சிறந்த ராணுவம் அல்லவா சொறிலங்கா ராணுவம்
சொறிலங்கா புலிகளுடனான யுத்தத்தில் இன்னும் வெற்றிபெறவில்லை.
அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜேவிபியினர் நினைவுகூர முடியுமானால் ஏன் புலிகளை நினைவுகூர முடியாது? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.