Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் பகுதிகளில் யுத்த வெற்றிச் சின்னங்களும் இல்லாத நிலை வேண்டும்

Featured Replies

தமிழ் பகுதிகளில் யுத்த வெற்றிச் சின்னங்களும் இல்லாத நிலை வேண்டும்
 
 

article_1463128031-aaaaaaaaa.jpg

கடந்த காலங்களைப் போன்று யுத்த வெற்றி விழாக்கள் இனி நமது நாட்டில் கொண்டாடப்படமாட்டாதென அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானமானது வரவேற்கத்தக்கது. அதேபோன்று தமிழ்ப் பகுதிகளில் யுத்த வெற்றிச் சின்னங்களாகக் கருதப்பட்டு, பராமரிக்கப்பட்டு, பாதுகாத்து வரக்கூடிய அனைத்தையும் அகற்றவும் அரசாங்கம் முன்வர வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

“யுத்த வெற்றி விழாக்கள் கடந்த காலங்களில் கொண்டாடப்பட்டு வந்த நிலையில், கடந்த கால யுத்தம் தொடர்பான ஞாபகார்த்த நிகழ்வுகள் எவையாயினும். அவற்றால் தமிழ் பேசும் மக்களின் உணர்வுகள் புண்படக்கூடாது என்ற விடயத்தை நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்துள்ளோம்.

எமது இந்த நிலைப்பாட்டை இந்த அரசாங்கம் அவதானத்தில் எடுத்து, அதனை நடைமுறைப்படுத்தியிருப்பதானது, தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான நல்ல ஆரம்பங்களில் ஒன்றாகுமென நாம் கருதுகின்றோம்.

அதேநேரம், கடந்த கால யுத்தம் காரணமாக இறந்த எமது உறவுகளை நினைவுகூறும் முகமாக ஒரு நினைவுத்தூபியும் நினைவுச் சதுக்கமும் வடக்கில் அமைக்கப்பட வேண்டும் என்ற விடயத்தையும் நாம் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி இருந்தோம். அதற்கும் இந்த அரசாங்கம் இணக்கம் கண்டிருப்பதை நாம் வரவேற்கின்றோம்.

அத்துடன்,  தமிழ்ப் பகுதிகளில் யுத்த வெற்றிச் சின்னங்களாக சில அழிவுச் சின்னங்கள் பாதுகாத்து, பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவை எமது மக்களின் உணர்வுகளைப் பெரிதும் பாதிக்கின்ற ஒரு விடயமாகுமென்பதையும் நாம் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி வருகின்றோம்.

எனவே, அவை அனைத்தையும் அப்புறப்படுத்திவிட்டு, அந்த இடங்களை ஆக்கப்பூர்வமான வகையில் பயன்படுத்த இந்த அரசு முன்வர வேண்டும்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

- See more at: http://www.tamilmirror.lk/172166/%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%B4-%E0%AE%AA%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B2-%E0%AE%AF-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%9A-%E0%AE%9A-%E0%AE%A9-%E0%AE%A9%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AE-%E0%AE%87%E0%AE%B2-%E0%AE%B2-%E0%AE%A4-%E0%AE%A8-%E0%AE%B2-%E0%AE%B5-%E0%AE%A3-%E0%AE%9F-%E0%AE%AE-#sthash.Xw1fglMk.dpuf
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, நவீனன் said:

கடந்த காலங்களைப் போன்று யுத்த வெற்றி விழாக்கள் இனி நமது நாட்டில் கொண்டாடப்படமாட்டாதென அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானமானது வரவேற்கத்தக்கது. அதேபோன்று தமிழ்ப் பகுதிகளில் யுத்த வெற்றிச் சின்னங்களாகக் கருதப்பட்டு, பராமரிக்கப்பட்டு, பாதுகாத்து வரக்கூடிய அனைத்தையும் அகற்றவும் அரசாங்கம் முன்வர வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதை மகிந்தவோடை உரஞ்சிக்கொண்டு திரியேக்கையே சொல்லியிருக்கலாமே.....அதென்ன இப்ப புதிசாய் சுடலை ஞானம்???? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, குமாரசாமி said:

இதை மகிந்தவோடை உரஞ்சிக்கொண்டு திரியேக்கையே சொல்லியிருக்கலாமே.....அதென்ன இப்ப புதிசாய் சுடலை ஞானம்???? :cool:

உரசும் போது யாருக்கண்ணே அறிவு வேலைசெய்யுது.

வேற வழி என்ன ...அண்ணருக்கு இப்ப ஆப்பிழுத்த குரங்கு போல நிற்கிறார் ...இப்படி ஏதும் சொன்னால் தான் அவர் தலை காட்டலாம் 

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த.. பசில்..கோத்தவோடு..கூடத் திரிஞ்சு இவற்றை உருவாக்கி திறந்து வைச்ச இவரே.. இப்ப அவற்றை அகற்ற வேண்டுகோளும் விடுக்கிறாராம்.

தமிழகத்தில் ------------  ---------------- செய்வதை.. ஈழத்தில் ஒட்டுக்குழு ------------------- செய்கின்றன. :rolleyes:

Edited by நிழலி
அவச்சொற்கள் நீக்கப்பட்டன

போராட்டம் என்றவுடன் தலைகால் தெரியாமல் நாட்டை விட்டு ஓடியவர்கள் போராட்டகாலம் முழுக்க நாட்டிலேயே இருந்து பயணித்த டக்கிளசை பார்த்து விமர்சனம் அதுவும் இணையத்தில் மட்டும் தான் .

டக்கிலஸ் கடந்த தேர்தலிலும் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினர் .இன்றும் பல நல்லவிடயங்கள் பிற்படுத்தபட்ட மக்களுக்கு செய்வது டக்கிலஸ் தான் .

இப்படியே ------------மாதிரி இணையத்திலே கத்தி ---------------------- போடவேண்டியதுதான் .

எவ்வளவு கனவுகளுடன் தொடங்கிய போராட்டம் ---------------------- நாசமாக போனதையும் மக்கள் மறக்கமாட்டார்கள் 

Edited by நிழலி
மட்டுறுத்தப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, arjun said:

போராட்டம் என்றவுடன் தலைகால் தெரியாமல் நாட்டை விட்டு ஓடியவர்கள் போராட்டகாலம் முழுக்க நாட்டிலேயே இருந்து பயணித்த டக்கிளசை பார்த்து விமர்சனம் அதுவும் இணையத்தில் மட்டும் தான் .

டக்கிலஸ் கடந்த தேர்தலிலும் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினர் .இன்றும் பல நல்லவிடயங்கள் பிற்படுத்தபட்ட மக்களுக்கு செய்வது டக்கிலஸ் தான் .

இப்படியே ------------மாதிரி இணையத்திலே கத்தி ---------------------- போடவேண்டியதுதான் .

எவ்வளவு கனவுகளுடன் தொடங்கிய போராட்டம் ---------------------- நாசமாக போனதையும் மக்கள் மறக்கமாட்டார்கள் 

 யாரைப்பார்த்து யார் சொல்லும் கதை இது? நான் ஏன் ஊருக்குப் போகவேணும்? எப்போதும் தொடர்பில் இருக்கிறேன் என்று குறிப்பிட்டது இவரின் தொடர்பையா? இவர்  நாட்டில் இருந்து பயணித்தாரா? அங்குள்ளவர்களுக்கு பாடை கட்டினாரா?  அநிஞாயத்துக்கும், சமூகச் சீர் கேடுகளுக்கும் வக்காலத்து வாங்குகிறீர்களே. உங்களை என்னெண்டு அழைப்பது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 14.5.2016 at 3:08 PM, arjun said:

போராட்டம் என்றவுடன் தலைகால் தெரியாமல் நாட்டை விட்டு ஓடியவர்கள் போராட்டகாலம் முழுக்க நாட்டிலேயே இருந்து பயணித்த டக்கிளசை பார்த்து விமர்சனம் அதுவும் இணையத்தில் மட்டும் தான் .

டக்கிலஸ் கடந்த தேர்தலிலும் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினர் .இன்றும் பல நல்லவிடயங்கள் பிற்படுத்தபட்ட மக்களுக்கு செய்வது டக்கிலஸ் தான் .

இப்படியே ------------மாதிரி இணையத்திலே கத்தி ---------------------- போடவேண்டியதுதான் .

எவ்வளவு கனவுகளுடன் தொடங்கிய போராட்டம் ---------------------- நாசமாக போனதையும் மக்கள் மறக்கமாட்டார்கள் 

இதை சொல்ல உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கு? 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இதை சொல்ல உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கு? 

பலர் போராட்டம் என்றவுடன் நாட்டைவிட்டு ஓடியபோது, அர்ஜுன் அண்ணா இலண்டனில் இருந்து போராட்டத்தில் இணைந்துகொள்ள இந்தியாவுக்குப் போனவர். தாயகத்தில் காலடி எடுத்துவைத்திருப்பார் என்றோ, முள்ளிக்கம்பிகள் கிழிக்க வேலிகள் எல்லாம் பாய்ந்து ஓடியும், வெட்டைகளில் படுத்துறங்கியும் இருப்பார் என்றோ நான் நினைக்கவில்லை. அவரும் சொன்னதாக நினைவில்லை. சிலநேரம் இந்தியா போய் சென்னையிலும், டெல்கியிலும் மீற்றிங்களில் ஒரு கதிரையை சூடாக்கியிருப்பார். அதுதான் இருக்கும் யோக்கியதை.

இலண்டனில் இருந்து போராட்டத்தில் இணைந்துகொள்ள போய் புலிகளின் விமானப்படையை உருவாக்கிய கேர்ணல் சங்கரைப் பற்றித் தெரியும்.

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இதை சொல்ல உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கு? 

உங்களுக்கு முதல் ஓடி வந்தவர் என்ற தகுதி. 

8 hours ago, கிருபன் said:

பலர் போராட்டம் என்றவுடன் நாட்டைவிட்டு ஓடியபோது, அர்ஜுன் அண்ணா இலண்டனில் இருந்து போராட்டத்தில் இணைந்துகொள்ள இந்தியாவுக்குப் போனவர். தாயகத்தில் காலடி எடுத்துவைத்திருப்பார் என்றோ, முள்ளிக்கம்பிகள் கிழிக்க வேலிகள் எல்லாம் பாய்ந்து ஓடியும், வெட்டைகளில் படுத்துறங்கியும் இருப்பார் என்றோ நான் நினைக்கவில்லை. அவரும் சொன்னதாக நினைவில்லை. சிலநேரம் இந்தியா போய் சென்னையிலும், டெல்கியிலும் மீற்றிங்களில் ஒரு கதிரையை சூடாக்கியிருப்பார். அதுதான் இருக்கும் யோக்கியதை.

இலண்டனில் இருந்து போராட்டத்தில் இணைந்துகொள்ள போய் புலிகளின் விமானப்படையை உருவாக்கிய கேர்ணல் சங்கரைப் பற்றித் தெரியும்.

 

 

லண்டனில் இருந்து மட்டும் அல்ல புலம்பெயர்நாடுகளில் இருந்து அனைத்து இயக்கங்களுக்கும் பலர் வந்தார்கள் ,

ஈரோஸ் ரட்ணா ,ராஜி ,ஈபி நாபா சாந்தன் புளொட் கிருஷ்ணன் சித்தர்,சிறினி டெலோ சார்ல்ஸ் ,புலிகள் பாலசிங்கம் யோகி பகீர் குமரப்பா வரை வெளிநாட்டில் இருந்து வநதவர்கள் தான் .

புளொட்டில் பாலஸ்தீன பயிற்சிக்கு போன முப்பது பேருக்கு கிட்ட அதைவிட டெல்கி தமிழ் நாட்டு பயிற்சிக்கு என்று இருநூறுக்கு மேற்பட்டவர்கள் வந்தார்கள் (ஆக கூடியது என்று நினைகின்றேன் )

துவக்கை தூக்கி நாலு பேரை சுடுவது ,முள்ளுகம்பிக்கால் பாய்வது இறந்த போராளிகளையும் முதுகில் கொண்டு அலைவது இதுதான் விடுதலை போராட்டம் என்று அன்றுவரை இன்றும் கூட பலர் நம்புகின்றார்கள் .

முருகன் உலகை வலம் வர பிள்ளையார் சிவன் சக்தியை சுற்றி வந்து மாம்பழம் பெற்ற  கதையே விளங்காத கூட்டம் அது  இன்றும் கொடியுடன் வீதிகளில் அலைகின்றார்கள் .

அரசியல் என்பது அதை விளங்கியவர்களுக்கு மட்டும் தான் இல்லாவிடில் முள்ளிவாய்கால் தான் . 

 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, arjun said:

.

முருகன் உலகை வலம் வர பிள்ளையார் சிவன் சக்தியை சுற்றி வந்து மாம்பழம் பெற்ற  கதையே விளங்காத கூட்டம் அது  இன்றும் கொடியுடன் வீதிகளில் அலைகின்றார்கள் .

அரசியல் என்பது அதை விளங்கியவர்களுக்கு மட்டும் தான் இல்லாவிடில் முள்ளிவாய்கால் தான் . 

அதாவது சிவ‌ன்சக்தியாகிய இந்தியாவை சுற்றி மாகாணசபையை பெற்றுக்கொள்ளவேண்டும் என்றீயள் ....அதற்கு மேல் ஆசைப்படக்கூடாது......முருகனுக்கு சமனாகத்தான் பிள்ளையாரையும் வழிபடியினம்....

7 hours ago, arjun said:

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இல்லப் புத்தண்ணா.. நாங்க நோகாமல் நொங்கு குடிக்கனும்... அதுவும் சும்மா இல்ல.. மக்களை மடையர்களாக்கி. tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.