Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு மாகாணத்தில் நெல்லுற்பத்தியை அதிகரிக்க 54 இயந்திரங்களை வழங்கியது வடமாகாண சபை

Featured Replies

வடக்கு மாகாணத்தில் நெல் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் நெல் நாற்று நடும் இயந்திரங்களையும் நெல் களைகட்டும் இயந்திரங்களையும் ஒருங்கிணைந்த பண்ணையாளர்கள் சங்கம் மற்றும் இளைஞர் விவசாயக் கழகங்களிடம் கையளிக்கும் நிகழ்ச்சி இன்று வவுனியாவில் நடைபெற்றுள்ளது.

வவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு இயந்திரங்களை வழங்கி வைத்துள்ளார்.

625.0.560.320.500.400.197.800.1280.160.9

 

வடக்கு மாகாண விவசாய அமைச்சு 2016ம் ஆண்டின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் 19 மில்லியன் ரூபாவை வடக்கில் நெல் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் திட்டத்துக்கென ஒதுக்கீடு செய்துள்ளது.

இதில் 18 நெல் நாற்று நடுகை செய்யும் இயந்திரங்களும் 36 களைகட்டும் இயந்திரங்களும் கொள்வனவு செய்து வழங்கப்பட்டுள்ளன. இவற்றின் மொத்தப் பெறுமதி 13 மில்லியன் ரூபாய்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார் தலைமையில் நடைபெற்ற இயந்திரங்களை வழங்கி வைக்கும் நிகழ்ச்சியில், வடமாகாண சபை உறுப்பினர்கள் ம.தியாகராசா, இ.இந்திரராசா, அ.ஜெயதிலக, விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், பிரதி விவசாயப் பணிப்பாளர்கள் அ.செல்வராஜா, அஞ்சனாதேவி ஸ்ரீரங்கன், தெ.யோகேஸ்வரன், பொ.அற்புதச்சந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

http://www.tamilwin.com/development/01/106618

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல்... வயல்காட்டில், பாட்டுப் பாடி.... நாற்று நடும் பெண்களை,  
காணமுடியாமல் போகப் போகின்றதே... என்ற ஏக்கம் இருந்தாலும், மகிழ்ச்சியான செய்தி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, தமிழ் சிறி said:

இனிமேல்... வயல்காட்டில், பாட்டுப் பாடி.... நாற்று நடும் பெண்களை,  
காணமுடியாமல் போகப் போகின்றதே... என்ற ஏக்கம் இருந்தாலும், மகிழ்ச்சியான செய்தி.

ஊரிலை நெல்லு விதைக்கிறவையெல்லோ....நடுறேல்லையே. :rolleyes:......என்ன கோதாரியெண்டாலும் நல்லது நடந்தால் சரிtw_smiley:

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

ஊரிலை நெல்லு விதைக்கிறவையெல்லோ....நடுறேல்லையே. :rolleyes:......என்ன கோதாரியெண்டாலும் நல்லது நடந்தால் சரிtw_smiley:

உஸ்....... 
நீங்கள், வெளிநாட்டுக்கு வந்த பிறகு, 
பெண்களை வைத்து,  நட்டுப் பார்த்த பின் தான்....
"மெசின்" வாங்க,  முடிவு எடுத்திருக்கின்றோம்.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
12 hours ago, தமிழ் சிறி said:

இனிமேல்... வயல்காட்டில், பாட்டுப் பாடி.... நாற்று நடும் பெண்களை,  
காணமுடியாமல் போகப் போகின்றதே... என்ற ஏக்கம் இருந்தாலும், மகிழ்ச்சியான செய்தி.

நீங்கள் மீண்டும் வந்தால் நாற்று நடும் பெண்களை காணலாம்!
இப்ப அவர்களைப் பார்க்க ஒருத்தரும் இல்லை என்டுதான் மிசின் வருது.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, போல் said:

நீங்கள் மீண்டும் வந்தால் நாற்று நடும் பெண்களை காணலாம்!
இப்ப அவர்களைப் பார்க்க ஒருத்தரும் இல்லை என்டுதான் மிசின் வருது.

இப்ப எங்கே பெண்கள் வயலில் வேலை பார்க்கிறார்கள் நாம் தான் நெல்லை ஊறவைத்து முளை வந்த  பின் வயலில்  எறிவது☺

  • தொடங்கியவர்
8 minutes ago, முனிவர் ஜீ said:

இப்ப எங்கே பெண்கள் வயலில் வேலை பார்க்கிறார்கள் நாம் தான் நெல்லை ஊறவைத்து முளை வந்த  பின் வயலில்  எறிவது☺

விஸ்வமடு, ஸ்கந்தபுரம் பகுதிகளில் நாற்று நடுவதை, களை எடுப்பதை இன்றும் காணலாம்.
அறுவடைக்கு மிசின் வந்துவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, போல் said:

விஸ்வமடு, ஸ்கந்தபுரம் பகுதிகளில் நாற்று நடுவதை, களை எடுப்பதை இன்றும் காணலாம்.
அறுவடைக்கு மிசின் வந்துவிட்டது.

கிழக்கு பக்கம் இல்லை எல்லாம்  ஆண்கள் தான் உப்பட்டி பிரட்ட கூட ஆட்கள் இல்லை மெசின் போக முடியாத இடத்தில் ?

  • கருத்துக்கள உறவுகள்

தேவையான இடத்தில் நவீனத்துவத்தைப் புகுத்துவது தவறல்ல. ஆனால் பாரம்பரிய முறைகளுக்கும் போதிய முக்கியம் அளிக்கனும். அப்போது தான் அடுத்தவர் தயவில் எம் நில விவசாயம் தங்கி நிற்பதையும் இயற்கை வள இழப்பையும் தடுக்க முடியும். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, nedukkalapoovan said:

தேவையான இடத்தில் நவீனத்துவத்தைப் புகுத்துவது தவறல்ல. ஆனால் பாரம்பரிய முறைகளுக்கும் போதிய முக்கியம் அளிக்கனும். அப்போது தான் அடுத்தவர் தயவில் எம் நில விவசாயம் தங்கி நிற்பதையும் இயற்கை வள இழப்பையும் தடுக்க முடியும். tw_blush:

வரம்பு கட்ட ஓர் ஆள் வேண்டும் எப்ப வாறியள் இலங்கைக்கு?

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, முனிவர் ஜீ said:

வரம்பு கட்ட ஓர் ஆள் வேண்டும் எப்ப வாறியள் இலங்கைக்கு?

பேராசிரியர் துரைராஜா எல்லாம் விடிய தோட்டத்துக்கு தண்ணி ஊத்திட்டு தான் பருத்துறையில் இருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் போனவர். அதுவும் சுப்பர்சொனிக் அடியெல்லாம் பார்த்துக் கடந்து. அப்படியும் ஆக்கள் வாழ்ந்திருக்கினம்.. வழிகாட்டி இருக்கினம். அது புலிகளின் காலம். 

அதற்காக வாயைப் பிளந்து கொண்டிருக்கும்.. ஒரு ஆக்கிரமிப்பு முதலையின் வாய்க்குள் நின்று கொண்டு.. நாம் அதிகம் சந்தோசப்பட முடியாது நண்பா. அது எப்ப வாய் மூடுதோ அப்ப தொலைய வேன்டியான். முதலில் உந்த முதலையை அகற்றனும். அது தான் எங்கள் தேவை இப்ப. அதை அகற்றாமல்.. வரம்பைக் கட்டி வீட்டைக்கட்டி தற்காலிகமாக வாழ்வை தக்க வைக்கலாமே தவிர நிரந்தரமாக எம் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது. தற்காலிகத்தை தக்க வைச்சுக் கொண்டு நிரந்தரத்தை நிரந்தரமாக்கவும் பாடுபடனும். தற்காலிகமே நிரந்தரம் என்று ஆகி நிற்கக் கூடாது. இதனைக் களைய பல செயற்பாட்டுத் தளங்கள அவசியம். எதிரி ஒன்னும் லேசான ஆளில்லை. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nedukkalapoovan said:

பேராசிரியர் துரைராஜா எல்லாம் விடிய தோட்டத்துக்கு தண்ணி ஊத்திட்டு தான் பருத்துறையில் இருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் போனவர். அதுவும் சுப்பர்சொனிக் அடியெல்லாம் பார்த்துக் கடந்து. அப்படியும் ஆக்கள் வாழ்ந்திருக்கினம்.. வழிகாட்டி இருக்கினம். அது புலிகளின் காலம். 

அதற்காக வாயைப் பிளந்து கொண்டிருக்கும்.. ஒரு ஆக்கிரமிப்பு முதலையின் வாய்க்குள் நின்று கொண்டு.. நாம் அதிகம் சந்தோசப்பட முடியாது நண்பா. அது எப்ப வாய் மூடுதோ அப்ப தொலைய வேன்டியான். முதலில் உந்த முதலையை அகற்றனும். அது தான் எங்கள் தேவை இப்ப. அதை அகற்றாமல்.. வரம்பைக் கட்டி வீட்டைக்கட்டி தற்காலிகமாக வாழ்வை தக்க வைக்கலாமே தவிர நிரந்தரமாக எம் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது. தற்காலிகத்தை தக்க வைச்சுக் கொண்டு நிரந்தரத்தை நிரந்தரமாக்கவும் பாடுபடனும். தற்காலிகமே நிரந்தரம் என்று ஆகி நிற்கக் கூடாது. இதனைக் களைய பல செயற்பாட்டுத் தளங்கள அவசியம். எதிரி ஒன்னும் லேசான ஆளில்லை. tw_blush:

பேரினவாத அரசு தான் நண்பா  இப்போது  இருக்கிற ஆட்சி கூட அப்படியே  அது சிங்கள ஆதிக்கத்தைதான் திணிக்கிறது ஏற்றுக் கொள்கிறேன் முந்தைய ஆட்சியை விட கொஞ்சம் விட்டு கொடுத்து செல்கிறது  தமிழ் மக்களுக்கு இது கூட ஒரு விட் டு பிடிப்புத்தான் அதை நாம் ஏன் பயன் படுத்த கூடாது.  இலங்கை முழுவதுமே அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது  தனித்து நின்று என்ன பயன்.  இன்றைய நிலையில் வல்லரசு நாடுகளின் இலங்கைக்கான போட்டி

வடக்கில் கிழக்கில் யுத்த காலத்தில் இருந்த படிப்பின் வேகம் யுத்தம் முடிந்த பிறகு விழ்ச்சி அந்தக் காலத்தில் பிரபலமான வைத்தியர்கள் ஆசிரியர்கள் எல்லோரும் எவ்வளவு பாடு பட்டு வேலை செய்து படித்தார்கள் என்பது எமக்கு தெரியாததா என்ன ☺

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.