Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"நான் ஜனாதிபதியாக வேண்டுமென மக்கள் விரும்புகின்றார்கள்" - கோதபாய ராஜபக்ஸ:

Featured Replies

"நான் ஜனாதிபதியாக வேண்டுமென மக்கள் விரும்புகின்றார்கள்" - கோதபாய ராஜபக்ஸ:

 

"நான் ஜனாதிபதியாக வேண்டுமென மக்கள் விரும்புகின்றார்கள்" - கோதபாய ராஜபக்ஸ:



பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தாம் ஜனாதிபதியாக வேண்டுமென விரும்புகின்றனர் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அடுத்த ஜனாதிபதியாக தாம் நாட்டில் பதவி வகிக்க வேண்டும் என்பதே பலரின் நோக்கமாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு இலங்கையைச்சேர்ந்த மக்களும் வெளிநாட்டு வாழ் இலங்கையர்களும் கோரி நிற்பதாகத் தெரிவித்துள்ளார்.

நாடு இன்று ஸ்திரமற்ற ஓர் குழப்ப நிலையில் காணப்படுவதாகவும் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டால் அனைத்து விடங்களையும் சரி செய்து விட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதாரமும் அபிவிருத்தியும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பதனை தாம் இன்னமும் தீர்மானிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது ஒர் தலைமைத்துவம் இல்லை என்றே மக்கள் கருதுகின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தமது கருத்து அல்ல எனவும் மக்களின் கருத்து எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்ஸக்களே இன்றைய ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் சென்று உரையாற்ற சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.
 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/133083/language/ta-IN/article.aspx

கோதபாயா போன்ற போர்க் குற்றவாளிகள், கொடூர சிங்கள-பௌத்த இனமதவெறியர்கள் ஜனாதிபதியாக வந்தால் நல்லது தான். அது சிங்கள பௌத்தர்களின் ஒட்டு மொத்த அழிவில் போய் முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

பெரும் எண்ணிக்கையளவு என்றால்,,,,  என்ன ஒரு 20, 30 சொந்தக்காரர் சூழ இருந்து அண்ணைக்குச் சூனியம் வைக்கின்றார்களோ

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா, அம்சம்..

நெனைப்புத் தான் பொழப்பைக் கெடுக்கும். இவர், உள்ள போற நிலைமை வர முதல் அரசியலுக்க பூர முயல்கிறார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, நவீனன் said:

நாடு இன்று ஸ்திரமற்ற ஓர் குழப்ப நிலையில் காணப்படுவதாகவும் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டால் அனைத்து விடங்களையும் சரி செய்து விட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாங்கோ...வாங்கோ நீங்கள் ஆரெண்டு மைத்திரிக்கு ஒருக்கால் காட்டுங்கோ :grin:

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இனவெறி மக்கள் இவரை நிட்சயம் ஜனாதிபதியாக்குவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஏதாவது நடந்து அங்கை தமிழருக்கு பிரச்சனை இருந்தால் தானே நாம் எமது வாழ்வை நியாயப்படுத்தலாம்.இப்ப மட்டும் என்ன பலாறு ஓடுதோ என்டு கேட்க் கூடாது.ஆனால் சனம் கொஞ்சம்நிம்மதியாக இருக்குதுகள்.

9 hours ago, சுவைப்பிரியன் said:

இப்படி ஏதாவது நடந்து அங்கை தமிழருக்கு பிரச்சனை இருந்தால் தானே நாம் எமது வாழ்வை நியாயப்படுத்தலாம்.

இதை தாய் மண்ணில் வாழ்ந்தபடி சொல்லியிருந்தால் பெறுமதியான கூற்று!

9 hours ago, சுவைப்பிரியன் said:

ஆனால் சனம் கொஞ்சம்நிம்மதியாக இருக்குதுகள்.

எந்த சனம் நிம்மதியா இருக்கு? இடம் பெயர்ந்து முகாம்களில் வாழ்பவர்களா? அல்லது உறவுகளை தொலைத்தவர்களா? தங்கள் காணிகளை இழந்தவர்களா?  பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களா? ஏன் ஆண் பிள்ளைகளைப் பெற்றவர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரதி said:

சிங்கள இனவெறி மக்கள் இவரை நிட்சயம் ஜனாதிபதியாக்குவார்கள்

மகிந்தவான மகிந்தவே, இவரது அடாவடிகளினாலே தூக்கி வீசப்பட்டார்... ஒரு முறை அல்ல, இரு முறை... (இரண்டாவது முறை, பிரதமராக முடியவில்லை).

இவர் எப்படி?

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி,தமிழர்கள் மைத்திரிக்கு வோட் போட்டு இருக்கா விட்டால் அவர் வென்றிருப்பாரா?...சிங்களவர்களது வேட்டு மகிந்தாவுக்கு தான். தமிழர்கள் மைத்திரிக்கு வோட் போட்டு இருக்கா விட்டால் மகிந்தா தான் இப்பவும் அரியாசனத்தில் அமர்ந்திருப்பார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.